Monday, February 28, 2011

கீழக்கரையில் கவுன்சிலர் தொடர்ந்த வழக்கில் சாலை பணிகளை தொடர தடை!






கீழக்கரை.பி28.சிறப்புச்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீ்ழ் 2010- 2011ம்ஆண்டுக்கு அரசு ரூபாய் 2கோடியே 10லட்சம் நிதி வழங்கியது.இந்த நிதியில் 14 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.இந்நிலையில் கீழக்கரை 18வது வார்டு கவுன்சிலர் எம்.எம்.கே.முகம்மது ஜமால் இப்ராகிம் குடிநீர் குழாய்கள் பதிக்காமல் சாலை பணிகள் நடைபெறுவதால் சாலை பணிக்கு தடை விதிக்க கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இதனை ஏற்று அவ்வழக்கில் பால் வசந்த குமார் மற்று சுப்பையா ஆகி்யோர்
அடங்கிய நீதிபதிகள் சாலை பணிகளை தொடர்வதற்க்கு தடை விதித்தனர்.இதை தொடர்ந்து கவுன்சிலர்எம்.எம்.கே.ஜமால் சாலை பணிகள் நடைபெறுமிடங்களில் நீதிமன்ற உத்தரவை காண்பித்து சாலை அமைக்கும் பணிகளை நிறுத்தும்படி தெரிவித்துள்ளார்.ஆனால் நகராட்சி அலுவலகத்திலிருந்து எவ்வித தகவல்களும் வரவில்லை என்று கூறி பணியை தொடர்ந்து செய்தனர்.இதை தொடர்ந்து 18வது வார்டு கவுன்சிலர் ஜமால் கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சாலை அமைக்கும் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சாலைகளை அமைப்பதற்கு பழைய சாலைகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதால் கருங்கற்கள் சாலைகளில் குவிந்து நடந்து செல்வதற்கே முடியாத சூழநிலை உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அன்புநகர் முன்னேற்ற சங்க தலைவர் தங்கம் ராதாகிருஸ்ணன் கூறியதாவது,
கீழக்கரையி்ல் அன்பு நகரி்ல் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடந்து வந்தது.தற்போது பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாள் குழந்தைகளு்ம்,முதியோர்களும் நடந்து செல்ல முடியாத அளவிற்கு ரோடுகளில் கற்கள் சிதறி கிடக்கின்றன.
விரைவி்ல் இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டு்ம் என்றார்.

இதுகுறித்து நகராட்சி செயல் அலுவலர் கூறும் போது, 18வது வார்டு கவுன்சிலர் இடைக்கால தடை பெற்றுள்ளார்.அதை சட்டப்படி நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவை நீக்கி வி்ரைவில் சாலை அமைக்கும் பணிக்கான ஏற்பாடுகளை செய்வோம் என்றார்.


Sunday, February 27, 2011

Page not available - Blogger Help

Page not available - Blogger Help

துபாயில் 40 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த கீழக்கரை சகோதரர்கள்



பட விளக்கம்:- துபாயில் 40ஆண்டுக்கு பிறகு சந்தித்த சகோதரர்கள் முஜம்மில் மற்றும் கொழும்பு ஜம் ஜமி

கீழக்கரை.பி.27.துபாயில் இணைந்த கீழக்கரை சகோதரர்கள் கீழக்கரையை சேர்ந்தவர் மறைந்த முகைதீன் இப்ராகிம் நெய்னா மகன் முஜம்மில் இவர் சென்னை புரசைவாக்கத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.இவர்கள் குடுமபத்துடன் சென்னையில் வசித்து வருகின்றனர். முஜம்மில் வியாபார நிமித்தமாக ஒரு வார காலத்திற்க்கு துபாய் சென்றிருந்தார்.

இந்நிலையில் அவரது தந்தையின் சகோதாரர் பாரூக் அவர்கள் குடும்பத்துடன் வியாபார நிமித்தமாக கொழும்பு சென்று கொழும்பிலேயே அந்நாட்டின் குடியுரிமை பெற்று தங்கி விட்டனர். இதனால் இரு சகோதார்களின் குடும்பத்தினரும் 40 வருடமாக நேரில் சந்தித்து கொள்ளும் சூழ்நிலை அமையாமல் இருந்து வந்தது.கொழும்பில் வசித்து வரும் பாருக் மகன் ஜம் ஜமி(40) துபாயில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் துபாய் ஹோட்டலில் உணவுக்காக சென்றிருந்த முஜம்மில் யதார்த்தமாக தனது இளைய தந்தையின் மகன் ஜம் ஜமியை சந்திக்க நேர்ந்தது.அப்போது இருவரும் உரையாடிய போது இருவரும் சகோதரர்கள் என்பதை தெரிய வந்த போது இருவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.சகோத்ரர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் தாங்கள் சந்தித்த மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர்.

இது குறித்து முஜம்மில் கூறியதாவது, வியாபார நிமித்தமாக துபாய் வந்த எனக்கு 35 வருடத்திற்கு பிறகு எனது சகோதரரை சந்தித்தது மனதுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது.விரைவில் கொழும்பு சென்று எனது குடும்பத்தாரை சந்திக்கவுள்ளேன் என்றார்

Saturday, February 26, 2011

கீழக்கரை கல்லூரியில் நுகர்வோர் தின விழா


கீழக்கரை, பிப். 26&ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர் தினவிழா நடந்தது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் அபுல் ஹசன் சாதலி தலைமை வகித்தார். பேராசிரியர் ஷேக் அப்துல்லா வரவேற்றார். நுகர்வோர் விழிப்புணர்வு கண்காட்சியை ராமநாதபுரம் மாவட்ட வழங்கல் அலுவலர் நெல்லை வேந்தன் திறந்து வைத்தார். அக்மார்க் தரம் பிரித்தல், உணவு பொருளில் கலப்படம், நுகர்வோரின் கடமைகள், உரிமைகள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக புகார்கள், தீர்வுகள் குறித்து முதுநிலை விற்பனை அலுவலர் அய்யப்பன், பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழக உறுப்பினர் புரோஸ்கான், தமிழக அரசு மாநில நுகர்வோர் பாதுகாப்புக்குழு உறுப்பினர் மாதவன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் போஸ், ஜெயகாந்தன், கரீம்கனி ஆகியோர் பேசினர்.
பரமக்குடி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பாண்டி தலைமையில் நடந்த பட்டிமன்றத்தில் பேராசிரியர்கள் கதிஜாபேகம், சேகு சகுபான் பாதுஷா, சதீஷ்குமார், நாசர் மாணவர் அப்துல் வாகித் மவுலானா, மாணவி கதீஜா பீவி ஆகியோர் பேசினர். போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் துரைசிங்கம் பரிசு வழங்கினார். பேராசிரியர் நாசர் நன்றி கூறினார். குடிமக்கள் நுகர்வோர் கழக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாலகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

கீழக்கரையில் மாதம் 5 நாட்கள் மட்டும் பணிக்கு வரும் நகராட்சி கமிஷனர்!


பட விளக்கம்( பழைய படம் ):- சென்ற வருடம் ஆகஸ்ட் 30ந் தேதி கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி.கலாவதி தலைமையில் போலீசார் சோதனை நடத்திய போது எடுத்த படம்


கீழக்கரையில் மாதம் 5 நாட்கள் மட்டும் பணிக்கு வரும் நகராட்சி கமிஷனர்!

கீழக்கரை.பிப்.26 கீழக்கரை நகராட்சி அலுவலகத்திற்கு ,கடந்த சில மாதங்களுக்கு முன் ராமேஸ்வரத்தில் பணிபுரிந்த போஸ் கீழக்கரை நகராட்சி ஆணையாளராக மாறுதலாகி வந்தார்.இவர் மாதத்தில் 5 நாட்கள் மட்டும்தான் பணிக்கு வருகிறார். மீதி நாட்கள் சொந்த ஊரிலேயே தங்கி விடுகிறார்.இதனால் நகராட்சி பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கீழக்கரை நகராட்சியில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் அலுவலர்களில் ஒரு சிலர் சரி வர பணிபுரிவதில்லை மேலும் ஏழைகளில் வறுமையை பயன்படுத்தி வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து கந்து வட்டி தொழிலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. கந்து வட்டியில் கொழிக்கும் இந்த அலுவலர்கள் அரசின் முழு சம்பளத்தை பெறுகிறார்கள் ஆனால் இவர்கள் பகுதி நேரமாகத்தான் நகராட்சியில் பணியாற்றுகிறார்கள்.

அது மட்டுமின்றி கட்டிட வரைபடம் அனுமதி பெறுவதற்கும்,வரி மாற்றுவதற்கும்,பணிகளை விரைவாக முடிப்பதற்க்கு பொதுமக்களிடம் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக கேட்பதாக கூறப்படுகிறது.பணம் கொடுக்க மறுப்பவர்களுக்கு பணிகள் தாமதப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.இவர்களை போன்ற ஒரு சிலர் செய்யும் தவறால் நேர்மையாக பணி புரியும் மற்ற அலுவலர்களுக்கும்தொந்தரவு ஏற்படுகிறது.லஞ்சம் வாங்குவதும் ,கொடுப்பதும் குற்றம் என்று கொட்டை எழுத்தில் பலகையில் எழுதி நகராட்சி அலுவகத்தி நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.இது இவர்களுக்கு பொருந்தாது போலும்.


இது குறித்து கீழக்கரையை சேர்ந்த மூதாட்டி செய்யதலி பாத்திமா கூறியதாவது, வரி மாற்றம் செய்வதற்கு பல முறை நகராட்சி வந்து விட்டேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை ,நாளை,நாளை என்று நாட்களை கடத்துகிறார்கள்.பணம் கொடுத்தால்தால் வேலை சீக்கிரம் நடக்கும் என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் சொல்கிறார்கள் ஆனால் என்னிடம் வசதி இல்லை. என்கிறார் வருத்ததோடு...

இது குறித்து மாவட்ட நிர்வாகம் ரகசியமாக கண்காணித்து சட்டத்திற்க்கு விரோதமாக செயல்படும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த வருடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கீழக்கரை நகராட்சியி அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தி 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து சம்பந்தபட்டவர்களை பணி இடை நீக்கம் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.




Thursday, February 24, 2011

மக்கள் குறை தீர்க்கும் நாள்! அமைச்சர் தங்கவேலன்,ரித்தீ்ஸ்.எம்.பி பங்கேற்பு


திருப்புல்லாணியில் மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியி்ல் அமைச்சர் சுப.தங்கவேலன் மற்று்ம் ரித்தீஸ்.எம்.பி கலந்து கொண்டனர்.

கீழக்கரை டி.எஸ்.பி. பணி இட மாற்றம்


கீழக்கரை சரக காவல் துறை டி.எஸ்.பி்யாக பணியாற்றிய பெரு்மாள் ராமானுஜம் பணி இடம் மாறுதல் செய்யப்பட்டு நேற்று கீழக்கரை சரகத்திலிருந்து விடை பெற்றார். இவர் சிவகாசி் சரக டி.எஸ்.பியாக பொ்றுப்பேற்கிறார்.

Wednesday, February 23, 2011

கீழக்கரை நகருக்கு்ள் மீண்டும் மின் கட்டண அலுவலகம்! நகராட்சி தலைவர் குற்றச்சாட்டு


கீழக்கரை நகராட்சி தலைவர் பசீர் அகமது நிருபர்களிடம் மி்ன் துறை அதிகாரிகளின் பணிகளில் அதிருப்தி தெரிவித்தார் .அவர் கூறுகையில், கீழக்கரையில் சாலைகளில் மின் கம்பங்கள் மற்றும் மி்ன் இணைப்புகள் மிகவும் தாழ்வாக இருப்பதால் இப்பகுதியி்ல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.சில தினங்களுக்கு முன் உயர் அழுத்த மின் கம்பியில் லாரி உரசியதால் மின் கம்பி அறுந்து கண்ணன் என்ற வாலிபர் உயிரழந்தார்.இவ்விபத்து நடப்பதற்கு முன்பு இது குறித்து கீழக்கரை மி்ன்சார அதி்காரிகளிடம் நடவடிக்கை எடுக்க பலமுறை வலியுறுத்தியும் இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை மறுபடியு்ம் ஒரு விபத்து நடப்பதற்கு முன் நடவடிக்கை தேவை .

மேலும் கீழக்கரையில் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள மின் கட்டண அலுவலகம் மாற்றல் விசயத்தில் ,கட்டிட உரிமையாளர் காலி செய்ய சொன்னதால். ஊருக்கு வெளியே மாற்றப்பட்ட மின் கட்டண அலுவலகத்தை மீண்டும் கீழக்கரை நகருக்கு்ள் அமைப்பதற்கு ,நடுத்தெரு ஜும்மா பள்ளி ஜமாத்தார்கள் ஒத்துழைப்புடன் ஜமாத்துக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு இடம் பெறப்பட்டு விட்டது.மேலும் அமைச்சர் சுப.தங்கவேலன் முயற்சியில் மீண்டு்ம். ஊருக்குள் மாற்றுவதற்கான அரசு தரப்பிலான ஒப்புதல் பெறப்பட்டிருந்தாலும் ஒரு சில மின்துறை அதிகாரிகளின் மந்தமான நடவடிக்கைகளா்ல் இடமாறுதலுக்கான பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.இது குறித்து நகராட்சி சார்பில் பலமுறை சென்று கீழக்கரை மி்ன்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியு்ம் எந்த பலனும் ஏற்படவில்லை.இது போன்ற மக்களி்ன் அத்தியவசிய பிரச்சினைகளி்ல் அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும் என்றார்

கீழக்கரையில் டீக்கடைகளில் மது விற்பனை ! போலீஸ் டி.எஸ்.பி எச்சரிக்கை.

கீழக்கரை.பிப்.23.கீழக்கரையி்ல் ஒரு சில டீக்கடை என்ற போர்வையில் கடைகளில் மது விற்பதாக செய்தி வெளியானதை தொடர்ந்து போலீசார் சந்தேகப்படும் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.இது குறித்து டி.எஸ்.பி பெருமாள் ராமனுஜம் கூறியதாவது,இது போன்ற சமூக விரோத செயல்களி்ல் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படு்ம் என்றார்

சம்பளம் ரூ30000 ! ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை!


கீழக்கரை.பி.23.ராமாநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமான லாரிகள் இயக்கப்படுகின்றன.உணவு பொருள்களை சுமந்து செல்வதற்கும்,குறிப்பாக சிமெண்ட்,செங்கல் ,மண் என்று கட்டுமான துறைக்கு தேவையான பொருள்களை எடுத்து செல்வதற்கும் லாரிகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன.இதனால் லாரி ஓட்டுநர்கள் இப்பகுதிகளில் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள்.ஆனால் ஓட்டுநர்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது பெரும் பாலானவர்கள் மினி வேன்,ஆட்டோ, போன்ற சிறிய ரக வாகனங்கள் ஓட்டுவதில் ஆர்வம் செலுத்துவதால் இப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து லாரி உரிமையாளர் சண்முகம் கூறியதாவது, சம்பளமாக ரூ25 ஆயிரத்திலிருந்து 30ஆயிரம் வரை மாத சம்பளமாக கொடுக்க தயாராக இருந்தும் ஆள் கிடைப்பத்தில்லை.இதானால் ஒரு நாள சம்பளம் என்ற அடிப்படையில்தான் டிரைவர்கள் கிடைக்கிறார்கள்.இதனால் மாதத்தில் 10 நாட்கள் தான் லாரிகளை இயக்க முடிகிறது என்றார். பட விளக்கம் :-பத்திரிகைகளில் வெளி வந்த ஓட்டுனர் தேவை விளம்பரம்

Monday, February 21, 2011

டீக்கடைகளில் 'சரக்கு' சப்ளை ! தேவை நடவடிக்கை


பார்களுகளுக்கு சென்று உற்சாகம் ஏற்ற பயப்படும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து,கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் டீ கடைகள் மினிபார்களாக மாறும் விபரீதம் நிலவுகிறது. கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதுகளில் ஏராளமான பள்ளி ,கல்லூரி மாணவர்களை தவறான வழிக்கு திருப்பும் வகையில் இந்த பகுதிகளில் உள்ள ஒரு சில டீக்கடைகளில் காபி ,டீ தவிர "மதிப்புகூடுதல் சேவையாக" சரக்கு விற்பனையும் நடக்கிறது

டாஸ்மாக் கடைகளில் இருந்து மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி இந்த கடைகளில் ஸ்டாக் வைத்து கொள்கிறார்கள். கடைக்கு வரும் 'ரெகுலர் கஸ்டமர்களுக்கு'அதற்கென உள்ள தனி டேபிளில் சகல வசதிகளுடன் 'கவனிப்பு' நடக்கும்.ஒரு வாய் உள்ளே சென்றதும் கடிக்க ,கொறிக்க சகலமும் டேபிளுக்கு வந்து சேர்வதால் 'குடிமகன்கள்' எந்த கவலையுமின்றி பரிபூரண 'மிதப்பு நிலையை எட்டுகின்றனர்' குடிமகன்கள் தவிர வெளியூரில் இருந்து இங்கு தங்கி கல்லூரிகளில் படிக்கும் சில மாணவர்களும் இங்கு வருகின்றனர்.வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு படித்து களைத்த மாணவர்கள் பாவம்... தேநீர் குடிக்கிறார்கள் என்கிற தோற்றம் தான் தெரியும்.

இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில் ,டீ கடைகள் என்ற போர்வையில் நடக்கும் இந்த செயல்களை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் ஒரு சில கடைகளில் நடக்கும் இந்த செயல்களால் ஊரில் உள்ள அத்தனை டீக்கடைகளுக்கும் கெட்ட பெயர் வந்து சேரும்.அப்பாவி மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். மதுக்கடைக்கு சென்றால் ,மற்றவர்களுக்கு தெரிந்து விடும் என்று ஒதுங்கி இருக்கும் ஒரு சில பெரிய மனிதர்களும் இங்கு வந்து குடிக்கிறார்கள் .உடனடி நடவடிக்கை அவசியம் என்றார்

கீழக்கரை என்ற சட்டசபை தொகுதி உருவாக்கபட வேண்டும் ! கீழை ஜ‌மீல் கோரிக்கை


கீழக்கரை என்ற சட்டசபை தொகுதி உருவாக்கபட வேண்டும் .இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் வளைகுடா பொறுப்பாளர் கீழை ஜ‌மீல் கோரிக்கை


ராமாநாத‌புர‌ம் மாவட்டத்திற்கு 5 சட்டமன்ற தொகுதிகள் கடந்த தேர்தல் வரை இருந்ததை நாம் அனைவரும் அறிந்ததே. அவைகள் முறையே, கடலாடி, இராமநாதபுரம், பரமக்குடி, முதுக்குளத்தூர் மற்றும் திருவாடனை. ஆனால் தேர்தல் கமிசன் செய்த தொகுதி மறு சீரமைப்பில் நாம் ஒரு தொகுதியினை இழந்து விட்டோம்.நம் மாவட்டத்தில் மொத்தம் வாக்காளர் எண்ணிகை 8,86,659 ஆகும். இந்த 4 தொகுதியும் 2 இலட்த்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்டுள்ளது.
முதுகுளத்தூர் - 254,552
இராமநாதபுரம் - 218,330
பரமக்குடி - 201,912
திருவாடனை - 211,865

ஆனால் இராமநாதபுரம் மாவட்டத்தை அடுத்துள்ள விருதுநகரின் வாக்காளர் எண்ணிக்கை 12,32,249 ஆகும். இத்தனை வாக்காளர்கள் கொண்ட இந்த மாவட்டத்திற்கு ராஜ பாளையம், ஸ்ரீவல்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக் கோட்டை, திருச்சுளி என 7 சட்டமன்ற தொகுதிகளாம். ஒவ்வொரு தொகுதியும் சுமார் 1 இலட்சத்தி 80 ஆயிரம் வாக்காளர்களுக்கும் கீழ்தான் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக விருதுநகர் தொகுதி 1 இலட்சத்தி 65 ஆயிரம் வாக்காளர்களைதான் கொண்டு உள்ளது.

ஆனால் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள எல்லா தொகுதிகளும் 2 இலட்சத்தி 10 ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் கொண்டுள்ளது. அதிலும் முதுகுளத்தூர் தொகு 2 இலட்த்தி 54 ஆயிரம் வாக்காளர்களை கொண்டு இருக்கிறது.
விருதுநகர் மட்டும் அல்ல, பிரபலங்கள் போட்டியிடும் சென்னையிலுள்ள பல தொகுதிகளும் வாக்காளர்கள் மிக குறைவாக இருக்கின்றனர். (உ-ம்) எக்மோர், துறைமுகம், ராயபுரம் போன்ற தொகுதிகள். ராயபுரம் தொகுதி வெறும் 1 இலட்சத்தி 45 ஆயிரம் வாக்காளர்களை மட்டுமே கொண்டுள்ளது.

10,24,119 வாக்காளர்களை கொண்ட நாகப்பட்டிணம் மாவட்டத்திற்கு 6 தொகுதிகள். அதில் 3 தொகுதிகள் 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் குறைவே. கிள்வலூர் தொகுதியில் 1 இலட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.

12 இலட்சம் வாக்காளர்கள் கொண்ட மாவட்டத்திற்கு 7 தொகுதிகள், 10 இலட்சம் வாக்காளர்கள் கொண்ட மாவட்டங்களுக்கு 6 தொகுதிகள். ஆனால் எட்டரை இலட்சம் வாக்காளர்கள் உள்ள நம் இராமநாதபுரத்திற்கும் மட்டும் 4 தொகுதிகள் மட்டும்?

இராமநாதபுரம் மாவட்டத்தின் மீது மட்டும் அரசுக்கு என்ன கோபம்? இது குறித்து ஏன் யாரும் அக்கறை செலுத்தவில்லை? ஒரு தொகுதியினை இழப்பதால் நாம் அரசின் அத்தனை நலத்திட்டங்களையும் இழக்கின்றோம். மிகவும் பின் தங்கிய, வறட்சி மாவட்டம் என பெயர் எடுத்த நம் மாவட்டத்தை புறம் தள்ளுவது ஏன்?

விருதுநகர் மாவட்டத்தில் ப.சிதம்பரம், வைகோ உள்ளிட்ட பிரபலங்கள் போட்டியிட்டு வெற்றி பெறும் தொகுதிகள் இருப்பதால் அந்த மாவட்டத்திற்கு கூடுதல் தொகுதிகளோ...

விருதுநகர் மாவட்டம் போல், தொகுதிக்கு 1 இலட்சத்து 75 ஆயிரம் பேர் என எடுத்தால், இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் 5 தொகுதி ஒதுக்கி இருக்கலாம். மாவட்டத்திற்கு அதிக வருமானம் தரும் கீழக்கரை நகராட்சியினை புதிய தொகுதியாக அறிவித்து இருக்கலாம்.

தேர்தல் நெருங்கி விட்ட காரணத்தால் இகோரிக்கையை நிறைவேற்ற‌ முடியாது. என்றாலும் இத்தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டம் இழந்த ஒரு தொகுதியினை மீண்டும் கொண்டு வர யார் முன் வருகிறார்களோ அவர்களுக்கே எங்கள் ஓட்டு? என்ற கோரிக்கையை இராமநாதபுரம் மாவட்ட மக்கள் முன் வைத்தால்.... பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு.
இது குறித்து கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ ர‌சூல் தீன் கூறிய‌தாவ‌து, ஜ‌மீல் அவ‌ர்க்ள் வைத்த‌ கோரிகையை அடுத்த‌ தேர்த‌லிலாவ‌து அர‌சு ப‌ரீசிலிக்க‌ வேண்டுன் என்றார்

கீழக்கரையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை ஒருவர் கைது;2 பேர் மீது வழக்கு

கீழக்கரையில் தடை செய்யப்பட்ட லாட்டரியை விற்பனை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இந்து பஜாரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர் ராமநாதன், போலீசாருடன் அந்த பகுதியில் “திடீர்” சோதனை நடத்தினார். அப்போது 200 லாட்டரி சீட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தார். இதுதொடர்பாக கோகுல்நகரைச் சேர்ந்த முகமது இப்ராகிம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அஸ்கர், சங்குதுரை ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

கீழக்கரையில் அனைத்து ஜமாத் சார்பில் மீலாது விழா சிறப்பாக நடைபெற்றது

கீழக்கரையில் அனைத்து ஜமாத்களும் ஒருங்கிணைந்து கண்ணாடி வாப்பா மகாலில் மிலாது நபி விழா நடைத்தப்பட்டது. நகராட்சி முன்னாள் தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். நகர் அனைத்து ஜமாத்துகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.கடற்கரை ஜமாத் தலைவர் சாகிபு வரவேற்றார்.கிழக்கு தெரு ஜமாத் இமாம் சம்சுதீன் கிராஅத் ஒதினார்.வேலூர் பாக்கியத்துஸ்ஸாலிஹாத் அரபிக் கல்லூரி பேராசிரியர் அப்துல் ஹமீது பாக்கவி பேசினார். ஹசன் அலி ம்.எல்.ஏ.,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி,நகராட்சி தலைவர் பஷீர் அகமது,மதுரை மண்டல இ.யூ.,முஸ்லிம் லீக் அமைப்பு செயலாளர் ஜஹாங்கீர் அரூஸி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.மின்ஹாஜ் பள்ளி ஜமாஅத் தலைவர் செய்யது இபுராகிம் நன்றி கூறினார். உலக மக்களின் அமைதி,சமூக நல்லிணக்கம் தொடர வேண்டி கீழக்கரை டவுன்காஜி காதர்பக்ஷ் ஹுசைன் சித்திகி துஆ ஓதினார்.


Sunday, February 20, 2011

கீழக்கரையில் வண்ணாந்துறை அருகே மீண்டும் விபத்து


கீழக்கரையில் துணை மின் நிலையம் வண்ணாந்துறை அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.வேனில் பயணம் செய்த 6க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இது வரை 50க்கும் மேற்பட்ட விபத்துக்கள் இப்பகுதியில் நடந்துள்ளன.தொடரும் விபத்துக்களால் இப்பகுதியை விபத்து பகுதியாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

வீடுகளில் திருடும் டிப் டாப் ஆசாமிகள்

பிப்.20கீழக்கரையில் கடந்த சில தினங்களாக லாப் டாப் சகிதம் டிப் டாப்பாக உடை அணிந்து கொண்டு எலக்ட்ரிக் பொருள்கள் மற்றும் கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்து தருகிறோம் என்ற பெயரில் ஆசாமிகள் சிலர் வீடுகளில் திருடி வருகிறார்கள்.இது சம்பந்தமாக வந்த புகாரின் பெயரில் டிப் டாப் ஆசாமி ஒருவரை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.இது குறித்து இன்ஸ்பெக்டர் பால் பாண்டி கூறியதாவது,வீட்டில் புகுந்து செல்போன் திருடிய ஒருவரை விசாரித்து வருகிறோம் .இக்கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இது குறித்து சமுக ஆர்வலர் முகைதீன் இப்ராகிம் கூறியதாவது, முன் பின் தெரியாதவர்களிடம் பொதுமக்கள் எச்சரிகையாக இருக்க வேண்டும் என்றார்.

கீழக்கரையில் குழந்தைகளை பிச்சை எடுக்க கட்டாயப்படுத்தும் கும்பல்



கீழக்கரை பகுதியில் கடந்த சில வாரங்களாக ஏராளமான சிறுவர் ,சிறுமிகள் பிச்சை எடுத்து வருகின்றனர்.மிகவும் சோர்ந்து பரிதாப நிலையில் உள்ள இக்குழந்தைகள் தெருக்கள், கடைகள் ஆகிய இடங்களில் பிச்சை எடுக்கின்றனர். கூட்டம் கூட்டமாக குழந்தைகளை அழைத்து வரும் இக்கும்பல் ஒவ்வொரு பகுதிக்கு 2 குழந்தைகள் வீதம் பிச்சை எடுக்க சொல்லி வற்புறுத்துகிறது.ஒரு நாள் முழுவதும் பிச்சை எடுத்த பின் குழந்தைகளிடம் சேர்ந்துள்ள பணத்தை இவர்கள் பிடுங்கி கொள்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் கை,கால்களில் சூடு போடப்பட்ட தடம் உள்ளது.பிச்சை எடுக்க வெளீயூரிலிருந்து சிறுவர்,சிறுமிகள் வேன்,மற்றும் பஸ்களில் அழைத்து வரப்படுகிறார்கள்.பின்னர் அவர்கள் வேறு ஒரு பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.இப்பகுதியில் குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கு கும்பல் நடமாடுவதால் இப்பகுதியில் உள்ள பெற்றோர் பீதி அடைந்து உள்ளனர்.

இது குறித்து சதக் இப்ராகிம் கூறியதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன் ஏர்வாடியில் இதே போல் ஒரு கும்பல் செயல் பட்டது.போலீசாரின் நடவடிக்கையால் அங்கிருந்து காலி செய்து விட்டு ஓடினார்கள்,தற்போது கீழக்கரையில் செய்ல்பட தொடங்கி விட்டார்கள். போலீசார் சிறுவர்,சிறுமிகளை பிச்சை எடுக்க வைக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ரூ300 கோடியில் திட்டம் ! கீழக்கரைக்கும் வாய்ப்பு தாருங்கள்

கீழக்கரை.பிப்.21இந்தியாவில் உள்ள 13 கலங்கரை விளக்கங்களை மேம்படுத்தி சுற்றுலாதலமாக்கும் திட்டத்தைமத்திய அரசு சமீபத்தில் துவக்கியது.தமிழகத்தின் மாமல்லபுரம்,ராமேஸ்வரம்,கன்னியாக்குமரி,முட்டம்

சென்னை மெரினா ஆகிய பகுதிகளிலுள்ள கலங்கரை விளக்கங்கள் இத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.ரூ 300 கோடி மதீப்பீட்டிலான மத்திய கபபல் துறை அமைச்சர் வாசன் கடந்த 12ம் தேதி துவக்கி வைத்தார்.மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தில் பாரம்பரிய அருங்காட்சியகம் அமைத்தல்,சென்னை மெரினாவில் கலங்கரை விளக்க அருங்காட்சியகம் அமைத்தல் என பணிகள் நடைபெற உள்ளன. சுற்றுலாதொழிலை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள கலங்கரை விளக்கமும் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சென்னை கலங்கரை விளக்க மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் ,கீழக்கரை கலங்கரை விளக்கம் 1979ம் ஆண்டு அமைக்கப்பட்டது.இது 35 மீட்டர் உயரம் கொண்டது பரந்து விரிந்த நீலக்கடலோரத்தில் மைந்துள்ள கீழக்கரையையோட்டி ,அப்பாத்தீவு உள்பட ஏராளமான குட்டி தீவுகள் உள்ளன.கடற்கரையை ஓரம் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன.வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் இப்பகுதிக்கு சுற்றுலா வநது செல்கினறனர்.

கீழக்கரையை சுற்றுலாத்தலமாக அறிவித்து அருகே அமைந்துள்ள குட்டி தீவுகளுக்கு சென்று வர கண்ணாடி இழை படகுகள் விட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதோடு மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள கலங்கரை விளக்கங்களை மேம்படுத்தி சுற்றுலா தலமாக்கும் திட்டத்தில் கீழக்கரையையும் இணைக்க வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

இது குறித்து கீழக்கரையை சேர்ந்த ஹாஜா கூறியதாவது, இது வரை அரசு சார்பில் தொழில் வாய்பை ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டமும் கீழக்கரையில் செயல்படுத்தபடவில்லை .இந்த திட்டத்திலாவது கீழக்கரை இணைக்கப்பட்டு இப்பகுதியில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு சுற்றுலாதலமாக்கும் பட்சத்தில் இப்பகுதியில் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் .மேலும் கடல் பகுதி சுத்தாமவதற்கும் இது ஒரு வாய்ப்பாகும். இது தொடர்பாக ராமநாதபுரம் எம்.எல். அசன் அலி, ரித்தீஸ் .எம்பி,அமைச்சர் சுப.தங்கவேலன் போன்றோர் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.