Thursday, November 29, 2012

கொசும‌ருந்து இய‌ந்திர‌ங்க‌ள் முறையாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப‌டுகிறது!நக‌ராட்சி த‌லைவ‌ர் ப‌தில்!


கீழ‌க்க‌ரையில் கொசும‌ருந்து இய‌ந்திர‌ங்க‌ள் முறையாக‌ ப‌யன்ப‌டுத்தப்ப‌டுவ‌தில்லை என‌ க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் குற்ற‌ஞ்சாட்டியிருந்தார்.

இது குறித்து கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியின் சுகாதார‌ ஊழிய‌ர் கூறுகையில்,

அனைத்து வார்டுக‌ளுக்கும் ஒரே நாள் கொசும‌ருந்து அடிப்ப‌தில்லை.அர‌சின் சுகாதார‌த்துறை ப‌ணிக‌ளின் வ‌ழிகாட்டுத‌லின் ப‌டி ஒவ்வொரு வார்டாக‌ நேர‌ம் நிர்ண‌யித்து முறையாக‌ கொசும‌ருந்து அடித்து வ‌ருகிறோம் அதும‌ட்டுமில்லாம‌ல் அந்த‌ந்த‌ வார்டு பிர‌திநிதிக‌ளிட‌ம் கொசும‌ருந்து அடித்து விட்டு ஒப்புத‌ல் கையெழுத்தும் பெறுகிறோம்.எவ்வித‌ தொய்வில்லாம‌ல் முறையாக‌ கொசும‌ருந்து அடிக்க‌ப்ப‌டுகிற‌து என்றார்.

இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா கூறுகையில்,
அந்த‌ந்த‌ வார்டுக‌ளுக்கு முறையாக‌ கொசும‌ருந்து அடிக்க‌ப்ப‌டுகிற‌து.ந‌க‌ரில் சுகாதார‌ப்ப‌னி செம்மையாக‌ ந‌டைபெறுகிற‌து.க‌வுன்சில‌ரின் குற்றாச்சாட்டில் உண்மையில்லை என்றார்.

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் காட்சிபொருளாக‌ கொசும‌ருந்து இய‌ந்திர‌ங்க‌ள்!க‌வுன்சில‌ர் குற்ற‌ச்சாட்டு!

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் கொசும‌ருந்து அடிக்கும் மிசின்க‌ள் இருந்தும் முறையாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தில்லை என‌‌ ந‌க‌ராட்சி க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் குற்ற‌ஞ்சாட்டியுள்ளார்.

மேலும் அவ‌ர் கூறிய‌தாவ‌து, கீழ‌க்க‌ரையில் பொதும‌க்க‌ள் மலேரியா,டெங்கு காய்ச்ச‌ல் என்று அவதிப‌ட்டு வ‌ருகிறார்க‌ள்.இந்த‌ ச‌ம‌ய‌த்தில் வேக‌மாக‌ செயல்ப‌ட்டு காய்ச்ச‌ல் ப‌ர‌வாம‌ல் த‌டுப்ப‌த‌ற்கு  ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்.

அத‌ற்கு நேர்மாறாக‌ இப்ப‌ணிக‌ள் மிக‌வும் தொய்வாக‌வே ந‌டைபெறுகிற‌து.அத‌ற்கு உதார‌ண‌ம் கொசு ம‌ருந்து அடிக்கும் மிஷின்க‌ள் இருந்தும் நீண்ட‌ நாட்க‌ளாக‌ கீழ‌க்க‌ரை ப‌குதி முழுவ‌தும் கொசு ம‌ருந்து அடிக்காம‌ல் காட்சி பொருளாக‌ ந‌க‌ராட்சி அலுவ‌ல‌க‌த்தில் வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

ந‌க‌ராட்சி அலுவ‌ல‌ர்க‌ளிட‌ம் கேட்டால் ம‌ருந்தில்லை,ஆள் ப‌ற்றாக்குறை என‌ ப‌ல‌ கார‌ணங்க‌ளை கூறுகின்ற‌ன‌ர்.அப்ப‌டியே ப‌ய‌ன்ப‌டுத்தினாலும் பேருக்காக‌ கீழ‌க்க‌ரையில் ஏதாவ‌து  ஒரு ஏரியாவிற்கு ம‌ட்டும் கொசு ம‌ருந்து அடிக்கின்ற‌ன‌ர்.

சுகாதார‌ ப‌ணிக‌ளை வேக‌மாக‌ முடுக்கி விட‌ வேண்டிய ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் ‌ இதுபோன்ற‌ குறைபாடுக‌ளை க‌ண்டுகொள்ளாம‌ல் இருப்ப‌து
 ம‌க்க‌ளிடையே அதிருப்தியைதான் ஏற்ப‌டுத்தும் என்றார்.



 

தேசிய கராத்தே போட்டியில் மாண‌வ‌ர் ஜ‌மாலுதீன் சாத‌னை! முத‌லிட‌ம் பெற்று தங்கம் வென்றார்!



தேசிய கராத்தே போட்டியில்  ஏர்வாடி பள்ளி மாணவர் சாதனை

தேசிய கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த ஏர்வாடி மெட்ரிக். பள்ளி மாணவரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் ஏர்வாடி எலைட் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து தேசிய போட்டிக்கு தகுதி பெற்றிருந்த‌ன‌ர்.

இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் ஜெ.ஜெ. உள் அரங்கில் தேசிய போட்டி நடந்தது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மணிப்பூர் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 15 வயதிற்குட்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஏர்வாடி எலைட் மெட்ரிக். பள்ளி 10ம் வகுப்பு மாணவர் செய்யது ஜமாலுதீன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

மாவட்ட அளவிலான போட்டியில் இப்பள்ளி 8ம் வகுப்பு மாணவர் மணிபாரதி முதலிடம், 7ம் வகுப்பு மாணவர் செய்யது அபுதாகிர் 3ம் இடம் பிடித்து பதக்கம் பெற்றனர்.

 சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் முகமது அலிஜின்னா, முதல்வர் ஷேக்மஜீது, துணை முதல்வர் சிவசுப்ரமணியன், கராத்தே பயிற்சியாளர் கண்ணன் ஆகியோர் பாராட்டினர்.

Wednesday, November 28, 2012

ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்தில் கால்ந‌டைக‌ள் மூல‌ம் ப‌ர‌வும் புதிய‌ நோய்!சுகாதார‌த்துறை துணை இய‌க்குந‌ர் பேட்டி!


ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்தில் க‌ட‌ந்த‌ சில மாத‌ங்க‌ளாக‌ டெங்கு காய்ச்ச‌லால் ப‌ல‌ரும் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர் மேலும் ம‌ர்ம‌ காய்ச்ச‌லும் ப‌ர‌வி ப‌ல‌ரும் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.குறிப்பாக‌ க‌ட‌லோர‌ மாவ‌ட்ட‌ங்க‌ளில் காய்ச்ச‌லின் பாதிப்பு அதிக‌ள‌வில் உள்ள‌து.டெங்கு பாதித்த‌வ‌ர்க‌ளுக்கு தொடர் காய்ச்ச‌ல்,க‌ண்ணுக்குள் வ‌லி போன்ற‌ அறிகுறிக‌ள் தென்ப‌டுகிறது.
 மாவ‌ட்ட‌த்தின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ தொட‌ர் காய்ச்ச‌லால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்ப‌ட்டுள்ள‌தோ என்று ப‌ரிசோதித்த‌ன‌ர்.அதில் சில‌ருக்கு க‌ல்லீர‌ல் மூளை உள்ளிட்ட‌வைக‌ள் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து தெரிய‌ வ‌ந்தது.என‌வே இது டெங்கு அல்லாத‌ புதிய‌ நோய் பாதித்து உள்ள‌தோ என்ற‌ ச‌ந்தேக‌ம் உருவான‌து. 

இது குறித்து ராம‌நாத‌புர‌ம் சுகாதார‌த்துறை துணை இய‌க்குந‌ர் பால‌சுப்பிர‌ம‌ணிய‌ன் கூறிய‌தாவ‌து,

ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்தில் டெங்கு பாதிப்பு இல்லாத‌ அறிகுறிகளுட‌ன் சில‌ நோயாளிக‌ள் இருந்த‌தால் அவ‌ர்க‌ளுக்கு ர‌த்த‌ ப‌ரிசோத‌னை மேற்கொள்ள‌ முடிவு செய்ய‌ப்ப‌ட்ட‌து.இத‌ன் ப‌டி போக‌லூர் வ‌ட்டார‌த்தில் 10 பேருக்கும், ந‌யினார்கோவில் வ‌ட்டார‌த்தில் 15 பேருக்கும் ர‌த்த‌ மாதிரி எடுக்க‌ப்ப‌ட்டு ஓசூரில் உள்ள‌ ர‌த்த‌ ப‌ரிசோத‌னை மைய‌த்துக்கு அனுப்பி வைக்க‌ப்ப‌ட்ட‌து.


இந்த‌ சோத‌னை முடிவில் ந‌யினார் கோவிலில் 2 பேருக்கும்,போக‌லூரில் 6 பேருக்கும் மாட்டு உண்ணிக‌ள் மூல‌ம் ப‌ர‌வ‌க்கூடிய‌  ரிக்க‌ட்சியல்  என‌ப்ப‌டும் புதிய‌ நோய் பாதிப்பு இருப்ப‌து தெரிய‌ வ‌ந்த‌து. இந்த‌ கிருமி உண்ணி ஆடு,மாடுக‌ளை தாக்கி அத‌ன் மூல‌ம் ம‌னித‌ர்க‌ளுக்கு ப‌ர‌வி உள்ள‌து.ம‌னித‌ர்க‌ளின் உட‌லில் இந்த‌ உண்ணி ஒட்டி கொண்டு தோல் ப‌குதி வ‌ழியாக‌ கிருமிக‌ளை செலுத்தும்.இத‌னால் ரிக்க‌ட்சிய‌ல் நோய் பாதிப்பு ஏற்ப‌ட்டு தொட‌ர் காய்ச்ச‌ல் க‌ல்லீர‌ல் பாதிப்பு, மூளை பாதிப்பு உள்ளிட்ட‌வை ஏற்ப‌டுகிற‌து.

இத‌ற்கு அர‌சு ம‌ற்றும் த‌னியார் ஆஸ்ப‌த்திரிக‌ள் உள்ள‌ ப‌ரிந்துறைக்க‌ப்ப‌ட்ட‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் மூல‌ம்  உரிய‌ மாத்திரைக‌ளை முறையாக எடுத்து கொண்டால் 48 ம‌ணி நேர‌த்திலேயே குண‌ப்ப‌டுத்தி விட‌ முடியும்.இந்த‌ ரிக்க‌ட்சிய‌ல் கிருமி பொதுவாக‌ எலிக‌ளைத்தான் தாக்கும்.

க‌ட‌ந்த‌ 1808ம் ஆண்டு ஜ‌ப்பான் நாட்டில் உருவான‌ இந்த‌ நோயின் பாதிப்பு க‌ட‌ந்த‌ 2003ம் ஆண்டு தொட‌க்க‌த்தில் தென்னிந்தியாவில் ப‌ர‌வ‌ தொட‌ங்கிய‌து.த‌மிழ‌க‌த்தில் குறிப்பாக‌ ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்தில் இத‌ற்கு முன்பு இந்த‌ நோய் பாதிப்பு இருந்த‌தாக‌ எவ்வித‌ குறிப்புக‌ளும் இல்லை.என‌வே இப்ப‌குதியில் முத‌ல் முதாலாக‌ ஏற்ப‌ட்டு இந்நோயை உரிய‌ சிகிச்சை மேற்கொண்டால் குண‌ப்ப‌டுத்தி விடலாம் என‌வே பொதும‌க்க‌ள் அச்ச‌ம‌டைய‌ தேவையில்லை.


மாவ‌ட்டம் முழுவ‌தும் டெங்கு அல்லாம‌ல் ரிக்க‌ட்சியல் நோய் பாதிப்பு உள்ள‌தா என‌ க‌ண்ட‌றிய‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.மேலும் பொது டெங்கு கொசு உருவாகாத‌ வ‌கையில் சுற்றுப்புற‌ங்க‌ளை வைத்து கொள்ள‌ வேண்டும்.கால்ந‌டைக‌ளை சுத்த‌மாக‌ வைத்து கொள்ளுங்க‌ள்.குடிநீரை காய்ச்சிய‌ பின்தான் குடிக்க‌ வேண்டும்.இவ‌ற்ற‌ க‌டைபிடித்தாலே நோய்க‌ளை த‌விர்த்து கொள்ள‌ முடியும் என்றார்.
 

100க்கும் மேற்ப‌ட்ட‌ கீழ‌க்க‌ரை க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் ர‌த்த‌தான‌ம்!


கீழ‌க்க‌ரை முக‌ம்மது ச‌த‌க் பொறியிய‌ல் க‌ல்லூரி நாட்டு ந‌ல‌ப்ப‌ணிதிட்ட‌ம் ம‌ற்றும் ராம‌நாத‌புர‌ம் அர‌சு ம‌ருத்துவ‌ம‌னை இணைந்து ந‌ட‌த்திய‌ ர‌த்த‌தான‌ முகாம் க‌ல்லூரி வளாக‌த்தில் நடைபெற்ற‌து.

க‌ல்லூரி முத‌ல்வ‌ர் ஜகாப‌ர் த‌லைமை வ‌கித்தார்.துறை த‌லைவ‌ர்க‌ள் பீர் ஒலி,கார்த்திக்கேய‌ன்,திட்ட‌ அலுவ‌ல‌ர்க‌ள் சிவ‌பால‌ன்,முத்துவேல் உள்ளிட்டோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.மேலும் ராம‌நாத‌புர‌ம் அர‌சு ம‌ருத்துவ‌ம‌னை ம‌ருத்துவ‌ர் க‌ருப்ப‌சாமி த‌லைமையில் ம‌ருத்துவ‌ குழுவின‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். நூற்றுக்கும் மேற்ப‌ட்ட‌ மாண‌வ‌ர்கள் ர‌த்த‌தான‌ம் செய்த‌ன‌ர். ஏற்பாடுக‌ளை மீனாட்சி சுந்த‌ர‌ம்,முத்து இப்ராகிம் உள்ளிட்டோர் செய்திருந்த‌ன‌ர்.
 

Tuesday, November 27, 2012

பொள்ளாச்சி போலி ம‌ந்திர‌வாதியை குண்ட‌ர் த‌டுப்பு ச‌ட்ட‌த்தில் அடைக்க‌ வ‌லியுறுத்த‌ல்!



மேலுள்ள‌ ப‌ட‌ங்க‌ள்:‍‍கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ பொள்ளாச்சி இப்ராகிம்
 
பெண்க‌ளிட‌ம் ஆபாச‌மாக‌ பேசுத‌ல், ஏமாற்றுத‌ல் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு குற்ற‌சாட்டுக‌ளை தொட‌ர்ந்து தமிழ்நாடு த‌‌வ்ஹீத் ஜ‌மாத் சார்பில் காவ‌ல்துறையில் கொடுத்த‌ புகாரில் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ போலி ம‌ந்திர‌வாதி பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டைச் சேர்ந்த அப்துல் ஜபார் என்பவரது மகன் முகமது இப்ராஹிம் (40) ஜாமீன் பெற்று விடுத‌லையாவ‌த‌ற்கு முய‌ற்சிக‌ளை தொட‌ர்ந்து வ‌ருவ‌தாக‌  செய்திக‌ள் வெளியாகியுள்ள‌து.மேலும் ஆன்மீக‌த்தின் பெய‌ரில் ப‌ல்வேறு ஆபாச‌ங்க‌ளிலும், மோச‌டிக‌ளிலும் ஈடுப‌ட்டதாக‌ கூற‌ப்ப‌டும் இவ‌ரை குண்ட‌ர் த‌டுப்பு ச‌ட்ட‌த்தின் கீழ் கைது செய்ய‌ வேண்டும் என‌ ப‌ல்வேறு த‌ர‌ப்பின‌ரும் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

இது குறித்து இந்திய‌ த‌வ்ஹீத் ஜ‌மாத் வ‌ளைகுடா பொறுப்பாள‌ர் கீழை ஜ‌மீல் கூறிய‌தாவ‌து,
இஸ்லாமிய மார்க்க‌த்திற்கு விரோத‌மாக‌ செய்வினை,சூனிய‌ம், என்ற‌ பெய‌ரிலும் ,ஆன்மீக‌ ம‌ருத்துவ‌ம் என்ற‌ பெய‌ரில் பெண்க‌ளிடம் ஆபாச‌மாக‌ பேசிய‌து,பொது ம‌க்க‌ளை ஏமாற்றிய‌து உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ச‌ட்ட‌ விரோத‌ செய‌ல்க‌ளை செய்த‌தாக‌ கூற‌ப்ப‌டும் இவ‌ரை ஜாமீனில் வெளி வ‌ர‌ விடாம‌ல் அர‌சாங்க‌ம் த‌டுக்க‌ வேண்டும்.மேலும்  இவ‌ரை ஜாமீன் பெற‌ முடியாத‌ வ‌கையில் குண்ட‌ர் த‌டுப்பு ச‌ட்ட‌த்தின் கீழ் நட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்.







                              
   ச‌மூக ஆர்வ‌ல‌ர் முஜீப் கூறுகையில்,

இவ‌ரின் ஜாமீன் ம‌னு 3 முறை நிராக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌தாக‌ கேள்விப‌ட்டேன்.இவ‌ர் ஜாமீனில் வெளியே வ‌ந்தால் இன்னும் ப‌ல‌ அக்கிர‌ம‌ங்க‌ளை செய்வார் பொதும‌க்க‌ள் ம‌த்தியில் கொந்த‌ளிப்பு ஏற்ப‌டும்.ந‌‌ல்ல‌வ‌ர் போல் ந‌டித்து மிக‌ வ‌க்கிர‌மாக‌ செய‌ல்பட்ட‌ இவ‌ரை குண்ட‌ர் த‌டுப்பு ச‌ட்ட‌த்தில் அடைக்க‌ மாவ‌ட்ட‌ நிர்வாக‌ம் நட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்.

 

கீழ‌க்க‌ரை ம‌ற்றும் சுற்றுப‌குதிக‌ளில் குவியும் வெளிநாட்டு ப‌ற‌வைக‌ள்!

ராமநாதபுரம் மாவட்டத்தில்  ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை சமயங்களில் நீர்நிலைகளை தேடி கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டு பற வைகள் கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம். இந்த பற வைகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழ‌க்க‌ரை ம‌ற்றும் அத‌ன் சுற்றுப்புற‌ ப‌குதி,புல்ல‌ந்தையை அடுத்த‌ சிறு க‌ண்மாய்,ச‌க்க‌ரைகோட்டை க‌ண்மாய்,சாய‌ல்குடி அருகே ப‌ற‌வைக‌ள் ச‌ர‌ணால‌ய‌ம் ம‌ற்றும் நீர்நிலைகளில் உள்ள மரங்களில் கூடு கட்டி இனப் பெருக்கம் செய்து பருவகாலம் முடிந்ததும் மீண்டும் சொந்த நாடுகளுக்கே திரும்பி சென்று விடும்.
இவ்வாறு ஆண்டுதோறும் தாரா, வடுகன்தாரா, உள் ளான், சிறகி, கூலைக்கிடா, செங்கால்நாரை, நத்தை கொத்திநாரை, கிளிமூக்கு நாரை உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த வெளிநாட்டு பறவைகளை காப்பதற்கும், அவற்றின் வருகையை அதிகரிக்கவும் வனத் துறை சார்பில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளிட்ட நிர்நிலைகளில் உரிய ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள தால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கி யுள்ளன. இந்த பறவைகளில் நீர்நிலைகளில் உள்ள மரங்களில் தங்கியிருந்து குரல் எழுப்புவது ரம்மியமாக உள்ளது.
இறைச்சிக்காக‌ இப்ப‌றவைக‌ளை வேட்டையாடுவோர் மீது க‌டும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌டும் வன‌த்துறை சார்பில் அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ளது.

 

கீழ‌க்க‌ரையில் நாளை(28 ந‌வ)காலை 9முத‌ல் மாலை 5 வ‌ரை மின் த‌டை!மின்சார‌த்துறை அறிவிப்பு!

 
கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, கீழக்கரை, ஏர்வாடி த‌ர்ஹா, முஹம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், காஞ்சிரங்குடி,  மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் புத‌ன்கிழ‌மை(ந‌வ‌.28) காலை 9 மணி முதல் மாலை 5 ம‌ணி வரை மின் தடை ஏற்படும் என்று ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் க‌ங்காத‌ர‌ன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர் செய்யது இப்ராகிம் கூறுகையில் , ஏற்கென‌வே தின‌மும் 16 ம‌ணி நேர‌த்திற்கு மேல் மின் த‌டை ஏற்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து.அந்த‌ ச‌ம‌ய‌த்தில் பராம‌ரிப்பு ப‌ணிக‌ளை மேற்கொள்ளலாம்.இத‌ற்கென‌ த‌னியாக‌ மின்த‌டை ஏற்ப‌டுத்த‌ வேண்டுமா? என்றார்.



Monday, November 26, 2012

ஏர்வாடியில் ம‌ர‌த்த‌டியில் க‌ல்வி க‌ற்கும் மாண‌வ‌ர்க‌ள்!ஆமை வேக‌த்தில் அர‌சுப‌ள்ளி க‌ட்டிட‌ப‌ணி!

ஒரு புற‌ம் டிஜிட்ட‌ல் வ‌குப்பு,ஸ்மார்ட் வ‌குப்பு,கரும்பலகைக்கு பதில் டிஜிட்டல் திரை பொருத்தி,  பாட‌ங்க‌ள் தொடர்பான வீடியோ கிளிப்பிங்ஸ்,தொடுதிரை என்றெல்லாம் ப‌ள்ளிக‌ளை ந‌வீன‌ம‌யமாக்கும் திட்ட‌ங்க‌ளை  அர‌சாங்க‌ம் அறிவித்து கொண்டிருக்கிற‌து. ஆனால் ம‌ற்றோரு புற‌ம் ஏர்வாடி போன்ற‌ கிராம‌ ப‌ள்ளிக‌ளில் மாண‌வ‌ர்க‌ள் இன்ன‌மும் ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ வெயிலிலும்,ம‌ழையிலும் ம‌ர‌த்த‌டியில் க‌ல்வி க‌ற்று கொண்டிருக்கிறார்க‌ள் .

ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் கடலாடி ஒன்றியம் ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்து 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். போதுமான வகுப்பறைகள் இல்லாமல் நெருக்கடியில் அவதிப்பட்டு வந்தனர். 2008ல் நபார்டு திட்டத்தில் பள்ளியில் கூடுதலாக 24 வகுப்பறைகள், சுற்றுச்சுவர், கழிப்பறை கட்டுவதற்கு ரூ. 2.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது

 பொதுப்பணித்துறை சார்பில் ஆமை வேகத்தில் நடந்து வந்த இப்பணி, கடந்த மாதம் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் தொட‌ர்ந்து மாணவ, மாணவிகள் வகுப்பறையின்றி மரத்தடி நிழலில் படிக்கும் அவலநிலை ஏற்ப‌ட்டு உள்ளது.
பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பசாமி கூறியதாவது;இந்த விபரம் சரிவர தெரியவில்லை. பணி நடக்காதது குறித்துபொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளேன், என்றார்

 பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துல்கருணை பாட்சா கூறியதாவது,
காண்ட்ராக்ட‌ரி அலட்சியத்தால் கட்டுமான பணி நிறைவடையாமல் உள்ளது. இஷ்டம் போல் வேலை செய்கின்றனர். அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. போதிய வகுப்பறை இன்றி மரத்தடியில் வகுப்புக்கள் நடத்தப்படுவதால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாக உள்ளது, என்றார்.

பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் குணசேகரன் கூறியதாவது,


தலைமை ஆசிரியரிடம் விசாரித்து, கட்டுமான பணி உடனடியாக துவங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Saturday, November 24, 2012

ராமநாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்தில் புதிய‌ தொழில் தொட‌ங்க‌ வ‌ர‌வேற்பு!மானிய‌ம் ம‌ற்றும் க‌ட‌ன் வ‌ழ‌ங்க‌ அர‌சு ஏற்பாடு!



புதிய தொழில் தொடங்க ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழில்முனைவோரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது என கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
படித்த தலைமுறையினர் தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.

இத்திட்டதின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு குறைந்த பட்சம் ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான தொழில் திட்டங்கள் முதல் அதிக பட்சம் ரூ.1 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு கடன் வசதி வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் வழங்க பரிந்துரை செய்யப்படும்.

பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு முதல் அங்கீரிக்கப்பட்ட தொழிற் பயிற்சி நிறுவனங்கள் மூலம் தொழிற் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொது பிரிவை சார்ந்தோர் 35 வயதிற்கு மிகாமலும், சிறப்பு பிரிவினர் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் சார்ந்தவராக இருப்பின் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். வருமான வரம்பு இல்லை. முன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

சொந்த முதலீடு திட்ட மதிப்பீட்டில் தொழில் நுனைவோர் பொதுப்பிரிவினராக இருந்தால் 10 சதவீதம், மற்றும் சிறப்பு பிரிவினராக இருந்தால் 5 சதவீதம் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் துவங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதமும், அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலமாக வழங்கப்படும் கடனுக்கு 3 சதவீதம் பின்முனை வட்டி மானியம் வழங்கப்படும்.

பங்குதாரர் நிறுவனங்களும் இத்திட்டத்தில் சேர்ந்த பயனடையலாம். தொழில் முனைவோரிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் கலெக்டரின் தலைமையில் பெறப்பட்டு நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு வங்கி மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு கடன் வழங்க பரிந்துரைக்கப்படும்.
கடன் பெறும் பயனாளிகளுக்கு தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின்¢ மூலம் ஒருமாதம் பயிற்சி அளிக்கப்படும். சிட்கோ தொழிற்பேட்டையில் முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு மனைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டம் குறித்து விபரங்களை ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையத்தை அணுகி விபரம் பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

சில்ல‌ரை வ‌ர்த்த‌க‌த்தில் அந்நிய‌ முத‌லீட்டை எதிர்த்து கீழ‌க்க‌ரையில் ம‌ம‌க‌ நோட்டீஸ் விநியோக‌ம்!



ம‌த்திய‌ அர‌சு அறிமுக‌ப‌டுத்தியுள்ள‌ சில்லறை வணிகத்தில் 51% அந்நிய முதலீடு என்ற‌ கொள்கையை எதிர்த்து கீழக்கரையில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில்  துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.

இத‌ற்கான‌  விழிப்புணர்வு பிர‌ச்சார‌த்தில் கீழக்கரை நகர் நிர்வாகிகள் ஈசி ஜெராக்ஸ் சாதிக் ,இக்பால், மாவட்ட தலைவர் சாதிக் பாஷா, மமக மாவட்ட செயலாளர் அன்வர்  அலி மாவட்ட நகர் நிர்வாகிகளும் கலந்துகொண்ட‌ன‌ர்.
இவர்க‌ள் கீழ‌க்க‌ரையில் ப‌ல் வேறு இட‌ங்க‌ளுக்கு ந‌டை பய‌ண‌மாக‌ சென்று வணிகர்களுக்கும்,பயனாளிகளுக்கும்,பொதுமக்களுக்கும் துண்டு பிர‌சுர‌ங்க‌ளை வழங்கினார்கள்.


செய்தி ம‌ற்றும் ப‌ட‌ம் : ந‌க‌ர் த‌முமுக‌

Friday, November 23, 2012

கீழ‌க்க‌ரை ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளியின் ஜ‌மாத் த‌லைவ‌ராக‌ துணை சேர்ம‌ன் ஹாஜா முகைதீன் தேர்வு!



















கீழ‌க்க‌ரை ப‌ழ‌ம் பெருமை மிக்க‌ ஜமாத்க‌ளில் ஒன்றான‌ பழைய‌ குத்பா ப‌ள்ளியின் பொதுக்குழு கூட்ட‌ம் ம‌ற்றும் புதிய‌ நிர்வாகிக‌ள் தேர்வு ஜமாத்தார்க‌ள் முன்னிலையில் ந‌டைபெற்ற‌து.இப்திகார் ஹ‌ச‌ன் ம‌ற்றும் மேற்பார்வையாள‌ராக‌ ராம‌நாத‌புர‌ம் வ‌க்பு போர்டு அதிகாரி உள்ளிட்டோரும் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

கூட்டத்தில் ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளியின்
புதிய‌ ஜ‌மாத் த‌லைவ‌ராக‌ ,ஹாஜா முகைதீன்(ந‌க‌ராட்சி துணை சேர்ம‌ன்),

துணை தலைவ‌ராக கிதுர் முக‌ம்ம‌து,

செய‌லாள‌ராக‌ இஸ்மாயில்,

துணை செய‌லாள‌ராக‌ சீனி சுல்தான் முகைதீன்,

பொருளாள‌ராக‌ சுல்தான் ஆரிபு,

துணை பொருளாள‌ராக‌ லுக்மான் ஹ‌க்கீம், ம‌ற்றும் நிர்வாக‌ குழு உறுப்பின‌ர்க‌ள் தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

மேலும் இது குறித்து ஜமாத் த‌லைவ‌ராக‌ தேர்வு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ துணை சேர்ம‌ன் ஹாஜா முகைதீன்  கூறியதாவ‌து,

 ந‌ம‌து முன்னோர்க‌ளான‌ ஆன்றோர்க‌ளும்,சான்றோர்க‌ளும் அல‌ங்க‌ரித்த‌ பொறுப்பு மிகுந்த‌ இந்த‌ ஜ‌மாத் த‌லைவ‌ர் பொறுப்புக்கு என்னை தேர்வு செய்த‌ அனைவ‌ருக்கும் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி !இன்ஷா அல்லாஹ் உங்க‌ளின் அனைவ‌ரின் ஒத்துழைப்புட‌ன் சிற‌ப்பான‌ முறையில் செய‌ல்ப‌டுவேன் என‌ உறுதி கூறுகிறேன் என்றார்

செய்தி தொகுப்பு: முகைதீன் இப்ராகிம்,கீழ‌க்க‌ரை

சாய்ந்து நிற்கும் மின்கம்பம் மாற்றித்தர மக்கள் கோரிக்கை

சாய்ந்து நிற்கும் மின்கம்பம் மாற்றித்தர மக்கள் கோரிக்கை
 
கீழக்கரை வடக்குத்தெரு கொந்தகருணை அப்பா தர்ஹா ரோட்டில் தர்ஹாவின் அருகில் உள்ள மின்கம்பம் சாய்ந்து தர்ஹாவின் சுற்றுச்சுவரின் தாங்களில் நிற்கிறது. கீழே விழுந்தால் பலத்த சேதம் ஏற்படும் நிலை உள்ளது. உடனே மின்கம்பத்தை மாற்றித் தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
வடக்கு தெருவில் மகான் கொந்தகருணை அப்பா தர்ஹா உள்ளது. இப்ப‌குதிக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தர்ஹாவின் அருகில் உள்ள மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.
இந்த மின்கம்பம் தர்ஹா சுற்றுச்சுவரில் சாய்ந்து நிற்கிறது. இதனால் சுற்றுச் சுவரும் கீழே விழும் நிலை உள்ளது. இதனால் அருகில் கடை வைத்திருப்பவர்கள் மற்றும் அப்ப‌குதி ம‌க்க‌ளுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படும் அபாயம் உள் ளது.
 
இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சி நகர் செயலாளர் பந்தே நவாஸ் கூறுகையில், ‘கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சாய்ந்த மின்கம்பத்தை மாற்றித் தரவேண்டும் என்று மின்வாரியத்தில் பலமுறை புகார் செய்தோம். புகார் கொடுத்த இரண்டு நாளில் அதிகாரிகள் வந்து பார்வையிட்டுச் சென்றனர். அத்துடன் சரி. எந்த நடவடிக்கையும் இல்லை. மின்கம்பம் விழுந்து பலத்த சேதம் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை மாற்ற வேண்டும்’ என்றார்.

கீழ‌க்க‌ரையில் பிளாஸ்டிக் பைக‌ள் ப‌றிமுத‌ல்!டிச‌ 10 வ‌ரை கால அவகாச‌ம்!



 கீழக்கரை நகராட்சியில் த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கீழக்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பை மற்றும் கப்கள் விற்பனை  என்ற தலைப்பில் சில தினங்களுக்குமுன் செய்திக‌ள் வெளியானது. இதைத்தொடர்ந்து நகராட்சி கமிஷனர் முகமது முகைதீன் உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளர் மூர்த்தி மற்றும் அலுவலர் கள் கீழக்கரை நகர் முழுவ தும் அதிரடி ஆய்வு நடத்தி பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து வியாபாரி சங்க தலைவர் அகமது சகாப்தீன், செயலாளர் சுப்ரமணியன், பொருளா ளர் சந்தாண கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கமிஷ னரை சந்தித்து பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பதற்கு மொத்த வியாபாரிகளுக்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 10ம் தேதிவரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள் ளது.

இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் மூர்த்தி கூறுகையில், ‘இந்த கால அவகாசம் மொத்த வியாபாரிகளுக்குத்தான் பொருந்தும். சிறு வியாபாரிகள் வைத்திருக்கும் பைகளில் 41 மைக்ரான் என்று சீல் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மைக்ரான் குறையாகவே உள்ளது. ஆகவே சிறு வியாபாரிகள் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ பறிமுதல் செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

டீக்கடை, ஓட்டல்களில் பலகாரங்கள், உணவு பண்டங்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்தால் அந்த பொருளை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்’ என்றார்.
 

Thursday, November 22, 2012

க‌ருத்த‌ர‌ங்க‌ம்!கீழக்கரை ச‌தக் கல்லூரி மாணவி முத‌ல் ப‌ரிசு பெற்று சாத‌னை


மும்பை இந்திய தொழில் நுட்பக்கழகம், "வெஜிலன்ட் நெட் சொல்யூசன்' மற்றும் கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி சார்பில் மண்டல அளவிலான "எத்திக்கல் ஹாக்கிங்' ச‌ம்ப‌ந்த‌மாக‌ கருத்தரங்கு நடந்தது.

இதில் கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினிய‌ரிங் கல்லூரி கம்ப்யூட்டர் பொறியியல் துறை நான்காம் ஆண்டு மாணவி ஆர்த்தி முதல் பரிசு பெற்றார். முதல்வர் முகம்மது ஜகாபர் பரிசு தொகை ரூ. 10 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார். கல்லூரி தலைவர் ஹமீது அப்துல் காதர், தாளாளர் யூசுப் சாகிப், இயக்குனர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா பாராட்டினர்.

Wednesday, November 21, 2012

த‌னியார் டிர‌ஸ்ட் வ‌ழ‌ங்கிய‌‌ வாக‌ன‌ம் மூல‌ம் சுகாதார‌ ப‌ணி துவ‌ங்கிய‌து!













கீழ‌க்க‌ரை எஸ்.எஸ்,.முக‌ம்ம‌து யூசுப் ‍ கே.எம்.எஸ் ர‌சீனா பீவி அற‌க்க‌ட்ட‌ளை சார்பாக‌ வ‌ட‌க்குதெரு ஜ‌மாத் மூல‌மாக‌ 18,19,20,21வ‌து ஆகிய‌ வார்டு ம‌க்க‌ளுக்காக‌  திட‌க்க‌ழிவு அக‌ற்றும் ஹைட்ராலிக் வாக‌ன‌ம் அர்ப‌ணிக்க‌ப்பட்ட‌து.
http://keelakaraitimes.blogspot.com/2012/11/blog-post_9.html

இந்த‌ வாக‌ன‌த்தின் மூல‌ம் அந்த‌ந்த‌ வார்டுக‌ளில் குப்பைக‌ள் அக‌ற்றும் ப‌ணி துவ‌ங்கிய‌து.ம‌க்க‌ளுக்கு ப‌ய‌ன்ப‌டும் வ‌கையில் வாக‌ன‌ம் வ‌ழ‌ங்கிய‌ த‌னியார் தொண்டு நிறுவ‌ன‌த்திற்கு க‌வுன்சில‌ர்க‌ள் ஜெய‌பிர‌காஷ்,முகைதீன் இப்ராகிம்,இடிமின்ன‌ல் ஹாஜா,,அருசியாபேக‌ம் உள்ளிட்டோர் ந‌ன்றி தெரிவித்த‌ன‌ர்.


 

கீழ‌க்க‌ரையில் க‌ர‌ண்ட் வ‌ந்தாலும் பிர‌ச்ச‌னை!மின்சாத‌ன‌ பொருட்க‌ள் சேத‌ம்!


கிழ‌க்க‌ரையில் நாளென்றுக்கு 16 ம‌ணி நேர‌ம் மின்சார‌ம் துண்டிக்கப்ப‌டுகிற‌து. 8 ம‌ணி நேர‌ம் ம‌ட்டும்தான் மின்சார‌ம் மின்சாரம் விநியோகிக்க‌ப்ப‌டுகிற‌து. இந்நிலையில்  கீழக்கரை தட்டாந்தோப்பில் நேற்றிரவு, உயர் அழுத்த மின்சாரத்தால் பல வீடுகளில் மின் விளக்குகள் வெடித்தன. மின் சாதன பொருட்கள் சேதமடைந்தன.

இது குறித்து ந‌யினார் என்ப‌வ‌ர் கூறுகையில்,ஏற்கென‌வே ப‌ல‌ ம‌ணி நேர‌ம் மின் வெட்டால் அவ‌திப்ப‌ட்டு வ‌ருகிறோம் அப்ப‌டியே மின்சார‌ம் வ‌ந்தாலும் அடிக்க‌டி இதுபோன்று உய‌ர் அழுத்த‌ மின்சார‌ம் வருவ‌தால் மின்சாத‌ன‌ பொருட்க‌ள் சேத‌ம‌டைகின்ற‌ன‌.என்ன‌ சொல்வ‌தென்றே தெரிய‌வில்லை என்றார்.

உதவி மின்பொறியாளர் பால்ராஜ் கூறுகையில், "" மின் லைனில், "நியூட்ரல்' துண்டிக்கப்பட்டு, உயர் அழுத்தம் மின்சாரம் சப்ளையானது. தற்போது சரி செய்யப்பட்டு விட்டது,'' என்றார்.



 

Monday, November 19, 2012

செஸ் போட்டி!கீழ‌க்க‌ரை ப‌ள்ளி மாண‌வி மாநில‌ அள‌வில் த‌குதி பெற்று சாத‌னை!


மண‌ட‌ல‌ அள‌விலான‌ ச‌துர‌ங்க‌ போட்டி ராம‌நாத‌புர‌ம் முக‌ம்ம‌து த‌ஸ்த‌கீர் மெட்ரிகுலேஷ‌ன் மேல்நிலைப‌ள்ளியில் நடைபெற்ற‌து.இதில் கீழ‌க்க‌ரை இஸ்லாமியா மேல்நிலைப‌ள்ளி மாண‌வி எஸ்.சாலோம் 19 வ‌ய‌திற்குட்ப‌ட்டோர் பிரிவில் முத‌லிட‌ம் பிடித்து மாநில‌ அள‌விலான‌ போட்டிக்கு த‌குதி பெற்றுள்ளார். இவ‌ரையும் ப‌யிற்சி அளித்த‌ ஆசிரிய‌ர்க‌ள் ச‌சிகுமார்,ஜெயா ஆகியோரை ப‌ள்ளி தாளாள‌ர் முகைதீன் இப்ராகிம் முத‌ல்வ‌ர் மேப‌ல் ஜ‌ஸ்ட‌ஸ் பாராட்டினார்க‌ள்.

முத‌ல் முறையாக‌ ப‌ல்வேறு போட்டிக‌ளுக்கு இப்ப‌ள்ளியின் மாண‌வ‌ர்க‌ள் மாநில‌ அள‌வில் த‌குதி பெற்றுள்ள‌ன‌ர் என்ப‌து குறிப்பிட‌த‌க்க‌து.

ச‌ட்ட‌விரோத‌ வ‌சூல்!ந‌க‌ராட்சிக்கு ல‌ட்ச‌க்க‌ண‌க்கில் ந‌ஷ்ட‌ம்!க‌வுன்சில‌ர் குற்ற‌ச்சாட்டு!










21வ‌து வார்டு க‌வுன்சில‌ர் ஜெய‌பிர‌காஷ் வெளியிட்டுள்ள‌ அறிவிப்பில் கூறியிருப்ப‌தாவ‌து,

உள்ளாட்சி ச‌ட்ட‌ப்ப‌டி நக‌ராட்சிக்குட்ப‌ட்ட‌ ப‌குதிக‌ளில் க‌டைக‌ள் உள்ளிட்ட‌ தொழில்க‌ள் ந‌ட‌த்துவ‌த‌ற்கு ந‌க‌ராட்சி நிர்வாக‌த்திட‌ம் உரிம‌ம் பெற்றிருக்க‌ வேண்டும்.

ந‌ம‌தூரில் பெட்டிக்க‌டை ,டீக்க‌டை,ஓட்ட‌ல்,லேத் ப‌ட்ட‌ரை,அறுவை மில்க‌ள் உள்ளிட்ட‌ ஆயிர‌த்து 500க்கும் மேற்ப‌ட்ட‌ க‌டைக‌ள் உள்ள‌ன‌. ஆனால் ந‌க‌ராட்சி சார்பில் சுமார் 700 க‌டைக‌ளுக்கு ம‌ட்டுதான் முறையான‌ உரிம‌ம் வ‌ழ‌ங்கி அத‌ற்கான‌ தொகை வ‌சூல் செய்ய‌ப்ப‌டுகிற‌து.மீத‌முள்ள‌ க‌டைக‌ள் , சிறு தொழிற்கூட‌ங்க‌ள்,அறுவை மில்க‌ள்,‌ கிரில் ப‌ட்ட‌ரைக‌ளுக்கு முறையான‌ உரிம‌ம் வ‌ழ‌ங்காம‌ல் பாதி தொகையை ம‌ட்டும்("உதார‌ண‌த்திற்கு" அர‌சின் உரிம‌ம் நிர்ண‌ய‌ தொகை ரூ3000 என்றால் ரூ1500 ம‌ட்டும்) வியாப‌ர‌ம் செய்ப‌வ‌ர்க‌ளிட‌ம் ந‌கராட்சி ஊழிய‌ர்க‌ள் வ‌சூல் செய்து கொண்டு ர‌சீது கொடுப்ப‌தில்லை.இப்ப‌டி ச‌ட்ட‌விரோத‌மாக‌ வ‌சூல் செய்யும் ப‌ண‌ம் எங்கு செல்கிற‌து என்று தெரிய‌வில்லை  இத‌னால் ல‌ட்ச‌க்க‌ண‌க்கில் ந‌க‌ராட்சிக்கு வ‌ருவாய் இழ‌ப்பு ஏற்ப‌டுகிற‌து.

என‌வே இது குறித்து ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்கள் உட‌ன‌டி ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்.இவ்வாறு அவ‌ர் கூறியுள்ளார்.

 

கீழ‌க்கரையில் த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ பிளாஸ்டிக் பைக‌ள் ப‌ய‌ன்பாடு அதிக‌ரிப்பு!

 


 
சுற்றுசூழ‌ல் பாதிப்பை த‌டுக்கும் வித‌த்தில் கீழக்கரை நகராட்சியில் கடந்த பிப்ரவரி 2 முதல் பிளாஸ்டிக் பை மற்றும் கப்களுக்கு தடைவிதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது முதல் ஒருமாத காலத்திற்கு கடைகளில் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து விற்பனை செய்யும் பைகளை பறிமுதல் செய்து வந்தனர். இதனால் பிளாஸ்டிக் பை மற்றும் கப்களின் புழக்கம் குறைந்து வந்தது. கண்காணிப்பு பணியை அதிகாரிகள் தொடர்ந்து செய்யாததால் மீண்டும் அதிகளவில் பிளாஸ்டிக் பை விற்பனைக்கு வந்துவிட்டது.
 
ஆட்டு இறைச்சிக்கடை, மீன்கடை, காய்கறி கடை மற்றும் டீக்கடை, ஓட்டல் ஆகியவற்றில் அதிகளவில் பிளாஸ்டிக் பை உபயோகம் உள்ளது. டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் கப்கள் பயன் படுத்துகின்றனர். இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை   என  குற்ற‌ச்சாட்டு முன்வைக்க‌ப்ப‌டுகிற‌து
 
இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு கழக பொருளாளர் செய்யது இபுராகிம் கூறுகையில்,
‘கீழக்கரையில் பிப்ரவரி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால் இதை செயல்படுத்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. புகார் செய்தால் ஆய்வு என்ற பெயரில் ஒருசில சில்லரை கடைகளில் மட்டும் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்கின்றனர். மொத்த வியாபாரிகளை கண்டு கொள்வதில்லை. பிளாஸ்டிக் பைகள் மொத்த கடைகளில் விற்பனை செய்வதால்தான் சிறுவியாபாரிகள் வாங்கி பொது மக்களுக்கும் கொடுக்கின்றனர். மொத்த விற்பனையை தடுப்பதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.
 
இது குறித்து ஜ‌லாலுதீன் என்ப‌வ‌ர் கூறுகையில்,
 பொதும‌க்க‌ளிட‌ம் பிளாஸ்டிக் த‌டை ச‌ம்ப‌ந்தமாக‌ விழிப்புண‌ர்வு ஏற்ப‌டுத்த வேண்டும்.பிளாஸ்டிக் பைக‌ளுக்கு மாற்றாக‌ ச‌ண‌ல் பை,காகித‌ பை ம‌ற்றும் துணிப்பைக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்தலாம் இத‌ற்கான‌ செல‌வு அதிக‌மாக‌ இருப்பதால் க‌டைக்காரார்க‌ள் இதை த‌விர்ப்பார்க‌ள் என்வே இத‌ற்கு அர‌சாங்க‌ம் மானியம் வ‌ழ‌ங்கி ஊக்க‌ப்ப‌டுத்த‌ வேண்டும்.வெறும் ச‌ட்ட‌ங்க‌ளால் ம‌ட்டும் பிளாஸ்டிக் ப‌ய‌ன்பாட்டை த‌டுத்து விட‌ முடியாது.மாற்று ஏற்பாடுக‌ளையும் அராசாங்க‌ம் வ‌ழிகாட்டினால் இதை முழுமையாக‌ ஒழிக்க‌ முடியும் என்றார்.
 
சாலையில் வீச‌ப்ப‌டும் பிளாஸ்டிக் பைக‌ள்,க‌ப்க‌ளில் தேங்கும் த‌ண்ணீரில் டெங்கு கொசு உருவாகும் வாய்ப்புள்ள‌து எனவே அதை த‌விர்க்க‌ வேண்டும் என‌ மாவ‌ட்ட‌ சுகாதார‌த்துறை துணை இய‌க்குந‌ர் வேண்டுகோள் விடுத்திருந்தார்
 
 

Sunday, November 18, 2012

பெரும் சுகாதார‌கேட்டில் பேருந்து நிலைய‌ம்!க‌வுன்சில‌ர்க‌ள் குற்ற‌ச்சாட்டு!




கீழ‌க்க‌ரை பேருந்து நிலைய‌த்திற்கு நாளொன்றுக்கு ஏராள‌மான‌ ம‌க்க‌ள் வ‌ந்து செல்கின்றன‌ர்.ஆனால் பேருந்து நிலையத்தின் ஒரு புற‌ம் குப்பைக‌ள் நிறைந்தும்,ம‌றுபுற‌ம் க‌ழிவுநீர் தேங்கிய‌ நிலையில் பெரும் அசுத்த‌மாக‌ உள்ள‌து.இத‌னால் ம‌லேரியா உள்ளிட்ட‌ நோய்க‌ள் ப‌ர‌வும் வாய்ப்புள்ள‌தாக‌வும் என‌வே உட‌ன‌டி நட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.
மேலும் கீழ‌க்க‌ரையில் ப‌ல‌விதமான‌ ம‌ர்ம‌ காய்ச்ச‌ல் ப‌ர‌வி கொண்டிருக்கிற‌து.இதுவ‌ரை குப்பைக‌ள் கொட்டுவ‌த‌ற்கு இட‌மில்லை என்று கூறி வ‌ந்த‌ன‌ர்.ஆனால் த‌ற்போது கீழ‌க்க‌ரைக்கென்று த‌னியாக‌ குப்பை போடுவத‌ற்கு உர‌க்கிட‌ங்கு கோடிக்கு மேல் செல‌வு செய்து த‌யாராக‌ உள்ள‌து.ஆனால் துப்புர‌வு ப‌ணியாள‌ர்க‌ளை க‌ண்காணிக்க‌ வேண்டிய‌ மேஸ்திரிக‌ள் ச‌ரியான‌ முறையில் க‌ண்காணிக்காத‌தால் சாலைக‌ளில் குப்பைக‌ள் அக‌ற்ற‌ப்ப‌டாம‌ல் குவிந்து கிட‌க்கின்ற‌ன‌.என‌ க‌வுன்சில‌ர்க‌ள் குற்ற‌ஞ்சாட்டுகின்ற‌ன‌ர்.ப‌ஸ் நிலையம் 5 ம‌ற்றும் 6வ‌து வார்டு ப‌குதி உட்ப‌ட்ட‌து.


இது குறித்து க‌வுன்சில‌ர்க‌ள் 6வ‌து வார்டு த‌ங்க‌ராஜ் ம‌ற்றும் 5வ‌து வார்டு சாகுல் ஹ‌மீது ஆகியோர் மேலும் கூறுகையில்,

எங்க‌ள‌து வார்டு ப‌குதியில் துப்புர‌வு ப‌ணி ச‌ரியாக‌ ந‌டைபெறுவ‌தில்லை.இத‌னால் இப்ப‌குதியில் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ள‌து.மேலும் சில‌ தின‌ங்க‌ளுக்கு முன் அன்பு ந‌க‌ரில் ம‌ர்ம‌ காய்ச்சலுக்கு சிறுவ‌ன் ப‌லியானான். 20வ‌து வாலிப‌ர் ஒருவ‌ரும் காய்ச்ச‌லில் ப‌லிய‌னார்.இந்நிலையில் ப‌ஸ் ஸ்டாண்ட் இப்ப‌டி சுகாதார‌ கேடாக‌ இருப்ப‌தால் என்னென்ன‌ நோய்க‌ள் வ‌ர‌ போகிற‌து என்று தெரிய‌வில்லை.ப‌ஸ் ஸ்டாண்டுக்கு நுழையும் வ‌ழியில் குப்பைக‌ள் ப‌ல‌ நாட்க‌ளாக‌ அக‌ற்ற‌ப்ப‌டாம‌ல் உள்ள‌து.மேலும் க‌ழிவு நீர் தேங்கி நின்று நோய் கிருமிக‌ள் ப‌ர‌வுகிற‌து.வேக‌மாக‌ ந‌ட‌வ‌டிக்க‌ எடுக்க‌ வேண்டிய‌ இந்த ச‌ம‌ய‌த்தில் துப்புர‌வு ப‌ணிக‌ளில் தொய்வு ஏற்ப‌ட்டுள்ள‌து.உயிர்க‌ள் ப‌லியாவ‌த‌ற்கு முன் உட‌ன‌டி ந‌ட‌வடிக்கை வேண்டும் என்ற‌ன‌ர்.

டெங்கு! ஆறுமாத குழந்தை உயிரிழப்பு! ஏர்வாடி தர்காவில் துய‌ர‌ம்!


டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஆறு மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் ஏர்வாடி தர்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொசுக்களின் ‘விறுவிறு’ இனப்பெருக்கம், சுற்றுப்புற சுகாதாரச் சீர்கேடுகள் காரணமாக தமிழகத்தில் பல்வேறு தொற்றுநோய்கள், மர்மக்காய்ச்சல்கள் பரவுகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, மதுரை மாவட்டத்தில் மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே ஏர்வாடி தர்கா பகுதியில் டெங்கு, மலேரியா காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இது தொட‌ர்பாக‌ செய்திகள் வெளியாகின. ஆனாலும், அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்காததால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. தற்போது ஆறு மாத குழந்தை டெங்குவுக்கு பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏர்வாடி தர்கா, தண்ணீர் பந்தல் முதல் தெருவை சேர்ந்தவர் நஜ்முதீன். இவரது ஆறு மாத ஆண் குழந்தை ஹசீன் ஒரு வார காலமாக டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டது. மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்தக் குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தது.
மேலும், இதே பகுதியில் சேகு இபுராகிம் என்பவரது பத்து மாத பெண் குழந்தை ரைகானா பாத்திமா, அகமது இபுராகிம் என்பரது மகன் முர்சல் இபுராகிம்(19) உள்பட ஏராளமானோர் டெங்கு பாதிப்பால் ராமநாதபுரம் மற்றும் மதுரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநில‌ அள‌வில் த‌குதி பெற்ற‌ கீழ‌க்க‌ரை ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ள்!


ம‌ண்ட‌ல‌ அள‌விலான‌ குத்துச‌ண்டை ம‌ற்றும் டேக்வான்டோ போட்டி ராம‌நாத‌புர‌ம் சீத‌க்காதி சேதுப‌தி விளையாட்டு அர‌ங்கில் நடைபெற்ற‌து.இதில் இஸ்லாமியா மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வ‌ர் முக‌ம்ம‌து பாசித் 17 வ‌ய‌திற்குட்ப‌ட்டோர் குத்துச‌ண்டையில் வெற்றி பெற்று முத‌லிட‌த்தை பெற்றார்.  மேலும் முக‌ம்ம‌து முச‌ம்மில் ம‌ற்றும் ச‌தாம் ஹீசைன் ஆகிய‌ இருவரும் 14 வ‌ய‌திற்குட்ப‌ட்டோர் பிரிவில் டேக்வாண்டோ போட்டியில் முத‌லிட‌த்தை பிடித்து மாநில‌ அள‌விலான‌ போட்டிக்கு த‌குதி பெற்றுள்ள‌ன‌ர். ம‌ற்றொரு போட்டியில் அக‌ம‌து அசீம் இர‌ண்டாம் இட‌த்தையும் பிடித்துள்ளார்

ப‌ரிசுக‌ளை வென்று பெருமை சேர்த்த‌ மாண‌வ‌ர்க‌ளையும்,பயிற்சி அளித்த‌ ஆசிரிய‌ர்க‌ள் ச‌சிகுமார்,ஜெயா ஆகியோரை ப‌ள்ளிக‌ளின் தாளாள‌ர் முகைதீன் இப்ராகிம் ,முத‌ல்வ‌ர் மேப‌ல் ஜஸ்ட‌ஸ் ஆகியோர் பாராட்டின‌ர்.
 

கீழ‌க்க‌ரையில் மின்சார‌ விப‌த்து!மின்சார‌ ஊழிய‌ர் உயிர‌ழந்தார்!


கீழக்கரையில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் பலத்த காயமடைந்தார்.
 கீழக்கரையைச் சேர்ந்த பாலாறு மகன் கோவிந்தன். இவர் கீழக்கரை மின்வாரிய அலுவகத்தில் ப‌ணியாற்றுகிறார்.
வியாழக்கிழமை இரவு புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள டிராண்ஸ்பார்ம‌ரில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காக அவர் மேலே ஏறியபோது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மருத்துவர்கள் ஆலோசனையின்பேரில், அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.அங்கு சிகிச்சை பல‌னின்றி உயிர‌ழந்தார்
 இதுகுறித்து கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

 

தொட‌ரும் பைக் விப‌த்து! கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ ஒருவ‌ர் உயிர‌ழ‌ந்தார்


சில‌ நாட்க‌ளுக்கு (ந‌வ‌ம்ப‌ர் 14) முன் கீழ‌க்க‌ரை‍ ராம‌நாத‌புர‌ம் இ.சி.ஆர். சாலையில் உள்ள‌ பெட்ரோல் ப‌ங்க் அருகில் கீழ‌க்க‌ரை அண்ணாந‌க‌ரை சேர்ந்த‌ க‌ண்ண‌ன்(27) ம‌ற்றும் கீழ‌க்க‌ரை புதுத்தெருவை சேர்ந்த‌ செய்ய‌து இப்ராகிம் ம‌க‌ன் சுலைமான்(41) என்ப‌வ‌ரும் பைக்கில் நேருக்கு நேர் மோதி கொண்ட‌தில் இருவ‌ரும் ப‌ல‌த்த‌ காய‌ம‌டைந்து ம‌துரை மருத்துவ‌ம‌னையில் சிகிச்சை பெற்று வந்தன‌ர்.
இந்நிலையில் சிகிச்சை ப‌ல‌னின்றி நேற்று முன் தின‌ம் நூருல் சுலைமான் உயிர‌ழ‌ந்தார்.ப‌டுகாய‌ம‌டைந்த‌ க‌ண்ண‌ன் என்பருக்கு சிகிச்சை அளிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.

நூருல் சுலைமானின் ம‌றைவு அப்ப‌குதியில் பெரும் சோக‌த்தை ஏற்ப‌டுத்தியுள்ள‌து.

கீழ‌க்க‌ரை ராம‌நாத‌புர‌ம் சாலையில்‍ சில‌ வார‌ங்க‌ளில் நிக‌ழ்ந்த‌ வெவ்வேறு  பைக் விப‌த்துக‌ளில் தொட‌ர்ச்சியாக‌  4 க்கும் மேற்ப‌ட்டோர் உயிர‌ழ‌ந்திருப்ப‌து இப்ப‌குதி ம‌க்க‌ளிட‌ம் மிகுந்த‌ அதிர்ச்சியையும் ,பெரும் வேத‌னையையும் ஏற்ப‌டுத்தியுள்ள‌து.

Thursday, November 15, 2012

கீழ‌க்க‌ரை அருகே ஊர‌ணியில் முத‌லை!

ராமநாதபுரம் அருகே பெரியபட்டிணத்தில் உள்ள பண்ணக்கரை ஊரணியில் சுமார் ஆறரை அடி நீளமுள்ள பெண் முதலையை புதன்கிழமை பொதும‌க்க‌ள்,வனத்துறையினரும், மீனவர்களும் இணைந்து 10 மணி நேரம் போராடி உயிருடன் பிடித்ததாக‌ வ‌ன‌த்துறையின‌ர் தெரிவித்த‌ன‌ர்.
ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டிணத்தில் பண்ணக்கரை ஊரணியில் முதலை ஒன்று இருப்பதாகவும், அது அப்பகுதி மீனவர்களுக்கு மீன்பிடிக்க இடையூறாகவும்,
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார்கள் செய்திருந்தனர். அதன்படி ஊரணியில் முதலை இருக்கும் இடத்தை துல்லியமாக அறிந்து கொண்டு பெரியபட்டிணம் பகுதி எஸ்.டி.பி.ஐ அமைப்பின‌ர்,மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் வனச்சரகர்கள் எஸ். ஜெயராமன்(கீழக்கரை), எஸ். கணேசலிங்கம்(ராமநாதபுரம்), வனவர் பழனிக்குமார், வனக்காப்பாளர்கள் காதர் மஸ்தான், பாலகிருஷ்ணன், ரவிக்குமார் ஆகியோரும் இணைந்து மீன்பிடி வலை மூலம் முதலையை உயிருடன் பிடித்தனர்.
முதலையைப் பிடிப்பதை, அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். உயிருடன் பிடிக்கப்பட்ட முதலையை வனத்துறை அதிகாரிகள் கயிற்றால் கட்டி ஜீப்பில் ஏற்றி ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து மாவட்ட வன உயிரினக் காப்பாளர் எஸ். சுந்தரக்குமார் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலைகள் கடல் பகுதியிலோ அல்லது ஊரணியிலோ இருக்க வாய்ப்பில்லை. இப்போது பிடிபட்டிருப்பது தான் முதல் முறையாகும். வெள்ளப்பெருக்கு காலங்களில் அடித்து வரப்பட்டு நதிப்பகுதி வழியாக பண்ணைக்கரை ஊரணிக்குள் வந்திருக்கும்.
மழைக்காலமாக இருப்பதால் அதிகளவில் மீன்கள் கிடைத்து, அதனை உண்டு உயிர் வாழ்ந்திருக்கும். கடந்த 3 மாதமாக பெரியபட்டிணம் பகுதியில் பொதுமக்களை துன்புறுத்தி வருவதாக புகார்கள் வந்தன. எனவே மீனவர்கள், பெரியபட்டிணம் பகுதி பொதுமக்கள் ஆகியோரின் உதவியுடன் முதலையை உயிருடன் பிடிப‌ட்டுள்ள‌து. இது பெண் முதலை ஆகும்.
சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக போராடி முதலையை பிடிக்க ஒத்துழைத்த மீனவர்கள், பொதுமக்கள், வனத்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

அப்ப‌குதியை சேர்ந்தோர் கூறிய‌தாவ‌து,
வ‌ன‌த்துறையினரிடம் ப‌ல‌முறை புகார் தெரிவித்தும் எவ்வித‌ ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்க‌வில்லை.இத‌னால் இப்ப‌குதி எஸ்.டி.பி.ஐ அமைப்பின‌ர் உள்ளிட்ட‌ இப்ப‌குதி ம‌க்க‌ள் முய‌ற்சியால் முத‌லை பிடிக்க‌ப்ப‌ட்டு இப்ப‌குதி ம‌க்க‌ளின் அச்ச‌ம் அக‌ற்ற‌ப‌ட்ட‌து என்ற‌ன‌ர்.

இஸ்லாமிய‌ புதுவ‌ருட‌ பிற‌ப்பு (ஹிஜ்ரி 1434)! அனைவ‌ருக்கும் இனிய‌ ந‌ல்வாழ்த்துக்க‌ள்


Wednesday, November 14, 2012

கீழ‌க்கரையில் பொள்ளாச்சி போலி ம‌ந்திர‌வாதி கைது!ஆவேச‌த்துட‌ன் குவிந்த‌ மக்க‌ள்!


 
கைப்ப‌ற்ற‌ப்ப‌ட்ட‌ கார்

 

காவ‌ல் நிலைய‌த்தில் த‌மிழ்நாடு த‌வ்ஹீத் ஜமாத்தின‌ர் உள்ளிட்ட‌ பொதும‌க்க‌ள்(ப‌ட‌ங்க‌ள்: முஜீப்)

பொள்ளாச்சி, பாலக்காடு ரோட்டைச் சேர்ந்த அப்துல் ஜபார் என்பவரது மகன் முகமது இப்ராஹிம் (40). இவர் கடந்த ப‌ல‌ ஆண்டாக கீழக்கரையில் வசித்து வருகிறார். இவ‌ர் பேய்,பிசாசுக‌ளை விர‌ட்டுவ‌தாக‌வும்,யாருக்கேனும் செய்வினை வைத்திருந்தால் அதனை எடுப்பதாகவும் கூறி வீடுகளுக்குச் சென்று  இளம் பெண்களிடம் ஆபாசமாக பேசி வந்தாராம்.மேலும் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோவில் படம் பிடித்து அதனை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டி பெண்களிடம் இருந்து பணம் பறித்து வந்துள்ளார்.

இவர் கீழக்கரை, ஏர்வாடி போன்ற இடங்களில் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்.இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவ‌ர்க‌ள் கொடுத்த   புகாரின் பேரில், முகமது இப்ராகிமை போலீசார் கைது செய்தனர்.

ப‌ல‌ரையும் ஏமாற்றி வ‌ந்த‌ இவ‌ருக்கு க‌டும் த‌ண்டனை வழ‌ங்க‌ வேண்டும் என‌ கூறிய‌ ஏராள‌மான‌ ம‌க்க‌ள் காவ‌ல் நிலைய‌த்தில் குவிந்த‌ன‌ர்

Monday, November 12, 2012

தீபாவ‌ளி ப‌ண்டிகை! ந‌கராட்சி த‌லைவ‌ர் உள்ளிட்டோர் வாழ்த்து!


கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
 தீபாவளிநாளில்  அனைத்து மத நம்பிக்கைகளும், சமூக ஒற்றுமையயும், தூய அன்பையும் ஒளிர்ந்து அதன் முலம் இவ்வுலகில் சமத்துவம், சகிப்புத் தன்மையும், ஒருமைப்பாடும்  அனைத்து மக்கள் மற்றும் சமூகங்களுக்கிடையே பெருக வேண்டும் என இந்த நாளில் வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

கீழ‌க்க‌ரையில் மின் க‌ம்பிக‌ளை திருடியதாக‌ 3 பேர் கைது!




கீழ‌க்க‌ரையில் தொட‌ர்ந்து மின்க‌ம்பிக‌ள் திருட்டு ந‌டைபெற்று கொண்டிருந்தது.திருட்டு தொட‌ர்பாக‌ இன்று 3 பேரை போலீசார் கைது செய்த‌ன‌ர்.

இது குறித்து போலீசார் த‌ர‌ப்பில் கூற‌ப்ப‌டுவதாவது,

 இன்று காலையில் கீழ‌க்க‌ரையிலிருந்து ராமநாத‌புர‌ம் செல்லும் ஈ சி ஆர் சாலையில் காஞ்சிர‌ங்குடி அருகில் இன்ஸ்பெக்ட‌ர் க‌னேச‌ன் த‌லைமையில் எஸ்.ஐ.க்க‌ள் செல்லம‌ணி,கோபால் காவ‌ல‌ர்க‌ள் ராஜேஷ்,முனிய‌சாமி ம‌ற்றும் த‌னிப்பிரிவு ஏட்டு செல்வ‌ராஜ் ஆகியோர் வாக‌ன‌ சோத‌னையில் ஈடுப‌ட்டிருந்த‌ போது ராம‌நாத‌புர‌ம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்த‌ கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ பால‌முருக‌ன் என்ற‌ வவ்வால் குட்டி(23) ,அமீன் என்ற‌ அமீன் சர்தார்(22), இன்சாமுல்  ஹக்(22)ஆகியோர் மீது ச‌ந்தேக‌ம் ஏற்ப‌ட்ட‌தால் போலீசார் அவ‌ர்க‌ளை நிறுத்தி விசார‌ணை செய்து வாக‌ன‌த்தை சோத‌னை செய்த‌தில் மின் கம்பிகளை உருக்கி காப்பராக‌ வைத்திருந்த‌ன‌ர்.
இவ‌ர்க‌ளை தொடர்ந்து விசார‌ணை செய்த‌தில்  மின்கம்பிக‌ளை திருடி விற்ற‌தாக‌வும் மீத‌முள்ள‌வ‌ற்றை ராம‌நாத‌புர‌த்தில் விற்ப‌னை செய்ய‌ செல்வ‌தாக‌வும் கூறின‌ர். இதை தொட‌ர்ந்து மூவ‌ரும் கைது செய்ய‌ப்ப‌ட்டு இவ‌ர்க‌ளிட‌மிருந்த‌ 45 கிலோ காப்ப‌ரை ப‌றிமுத‌ல் செய்த‌ன‌ர்.
போலீசார் தொட‌ர்ந்து விசார‌ணை மேற்கொண்டு வ‌ருகின்ற‌ன‌ர்.