Wednesday, July 10, 2013

தீ விபத்தின் போது பலரை காப்பற்றி தீரச்செயல்! கீழக்கரையின் முதல் சப் - இன்ஸ்பெக்டர் முஹம்மது அன்ஸ்சுக்கு பாராட்டு




கீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டராக தேர்வாகி, சிறப்பாக செயலாற்றி வரும் கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த யூசுப் சாகிப் அவர்கள் மகன் முஹம்மது அனஸ் அவர்கள் கடந்த 2011 ஆம் வருடம் தேர்வு எழுதி சப் - இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்றார்.

தற்போது கோவை மாவட்டத்தில் பணியாற்றும் அனஸ் கோவை நகரின் பிரதானப் பகுதியான லக்ஸ்மி மில் சந்திப்பு அருகே உள்ள ஆXஈஸ் வங்கி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, சிக்கி தவித்த வங்கி பணியாளர்களை, விரைந்து மீட்டு அவர்களின் உயிரை காத்தமைக்காக, உயிரை காத்த உன்னத சேவைக்கான பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இதனை கோயம்புத்தூர் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் வழங்கினார்

2011 ல் வெளிவந்த செய்தி.....

http://keelakaraitimes.blogspot.ae/2011/03/blog-post_6210.html

 http://keelakaraitimes.blogspot.ae/2012/07/blog-post_346.html

1 comment:

  1. எமதூர் பெருமைக்கு ஒரு வித்து, வளரத்தும் உங்கள் சேவை, நம்மை படைத்தவன் என்றும் துணை இருப்பான்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.