Tuesday, July 30, 2013

கீழக்கரை கல்லூரியில் இப்தார் நிகழ்ச்சி!


கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

  இதற்கு கல்லூரி இயக்குநர் ஹபீப்முஹம்மதுசதக்கத்துல்லா முன்னிலை வகித்தார்.  கல்லூரி முதல்வர் அலாவுதீன் வரவேற்புரையாற்றினார்.

  நிகழ்ச்சியில் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது ஜஹாபர், செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அபுல்ஹசன்சாதலி, முஹம்மது சதக் அறக்கட்டளை திட்ட மேலாளர் தாவீக்ஷ், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  நோன்பின் முக்கியத்துவத்தையும், அதன் சிறப்பியல்புகளையும் முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் கத்தீப் காமில் ஆலிம் கூறினார்.

ஜூம்மா பள்ளி துணைத் தலைவர் அய்யூப்கான் நன்றி கூறினார்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜூம்மா பள்ளி பொருளாளர் சேக்தாவூத், உறுப்பினர்கள்  ஜாகிர்உசேன், தமீமுல்அன்சாரி மற்றும் மாணவ தொண்டர்கள் செய்திருந்தனர்.

ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே 4 வழி சாலை அமைக்க ரூ 406 கோடி ஒதுக்கீடு! அமைச்சர் சுந்தரராஜ் தகவல்!


ராமநாதபுரம் & தூத்துக்குடி இடையே ரூ.406 கோடியில் விரைவில் 4 வழிச்சாலை அமைக்கப்படும் என அமைச்சர் சுந்தரராஜ் பேசினார்.

கீழக்கரை அருகே உள்ள புது மாயாகுளத்தில் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து கட்டப்பட்ட கலை அரங்கத்தின் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி பாக்கியநாதன் தலைமை வகித்தார்.

அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர் முனியாண்டி, துணை செயலாளர் செல்வக்குமார், தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் முனியம்மாள் செல்வக்குமார், புல்லந்தை செயலாளர் பாக்கியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாயாகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரராஜ் வரவேற்றார்.

கலை அரங்கத்தை திறந்து வைத்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் சுந்தரராஜ் பேசியதாவது:

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரை 4 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு ரூ.406 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் தற்போது நடந்து வருகின்றன. விரைவில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் துவங்கும்.

மின்சார தட்டுபாட்டை போக்குவதற்காக உப்பூரில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 1,500 மெகாவாட் மின் சாரம் தயாரிக்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

ஏர்வாடி தர்காவில் வெளி மாவட்டத்தை சேர்ந்த மன நோயாளிகள் கவனிப்பாரின்றி நடு ரோட் டில் அலைந்து திரிகின்றனர். இங்கு அரசு சார்பில் விரை வில் மனநல காப்பகம் அமைக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார். விழாவில் கீழக்கரை நகர் செயலாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் சரவணா பாலாஜி, ஜகுபர் ஹூசைன், சிறுபான்மை செயலாளர் யாசீன், குமரன், நகராட்சி துணைத் தலைவர் ஹாஜாமுகைதீன் கடலாடி ஒன்றியக் குழு தலைவர் மூக்கையா, இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் ஜெயசந்திரன், முருகன், அரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

Sunday, July 28, 2013

கீழக்கரை கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி!




கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவ,மாணவியர்களுக்கான வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரிகளின் இயக்குநர் ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லாஹ் தலைமையேற்று மாணவ மாணவியர்களுக்கு அடையாள அனுமதி சான்றிதழ் வழங்கினார்.
கல்லூரி முதல்வர் ஜகாபர் முன்னிலை வகித்தார்.ஆங்கில துறை தலைவர் சகிலா பானு வரவேற்றார்.

ஒருங்கினைப்பாஅர் சேக் பரீத்  மாணவர்க உள்ளிட்ட பங்கேற்றனர்..வேதிய துறை தலைவர் தாவீத் ராஜா நன்றி கூறினார்.
பி ஆர் ஓ நஜிமுதீன் ஏற்பாடுகளை செய்தார்.

கீழக்கரை சதக் கல்லூரியில் மருத்துவ பரிசோதனை முகாம்!

.

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் என்எஸ்எஸ் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

  முகாமுக்கு கல்லூரி முதல்வர் முஹம்மது ஜஹாபர் மற்றும் இயக்குநர் ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா முன்னிலை வகித்தனர். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், காது, மூக்கு, தொண்டை, கண் சிகிச்சைக்கான இலவச மருத்துவ பரிசோதனை செய்தனர்.

 இதில் கல்லூரிப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் பயனடைந்தனர். இம்முகாமுக்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் சிவபாலன், முத்துவேல், பூபாலன், மீராமுஹைதீன் ஆகியோர் செய்திருந்தனர்

Saturday, July 27, 2013

கீழக்கரை கடைகளில் தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல்!ரூ5200 அபராதம்!






கீழக்கரையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் சில கடைகளில் அரசால் தடை  செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, புகையிலை போன்ற பொருள்கள் விற்கப்படுவதாக நகராட்சி நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
 
நகராட்சி ஆணையர் முஹம்மது அயூப்கான்
 
 
 இதன் அடிப்படையில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மற்றும் நகராட்சி ஆணையர் முஹம்மது அயூப்கான் ஆகியோரது உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளர்கள் விஜயகுமார், மோகன், கருணாநிதி, செல்லகண்ணு ஆகியோர், கீழக்கரையில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

 இதில் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 5,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.   ஆய்வின்போது, சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையிலான போலீஸாரும்  உடன் சென்றனர்.

கீழக்கரையில் குவிந்துள்ள பல்வேறு வகையான பேரீச்சம் பழங்கள்!நாளொன்றுக்கு 500கிலோ விற்பனை!


 

வடக்குத்தெரு கொந்தன் கருனை அப்பா தர்ஹா செல்லும் வழியில் கடை ஏற்படுத்தி பேரீச்சம் பழம் மொத்த வியாபாரம் செய்யும் காதர்.


பழங்களிலேயே தனிச்சுவை கொண்டது பேரிச்சம் பழம்.இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்.  பதப்படுத்தப்பட்டால் இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது

 பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். மருத்துவக் குணம் கொண்டவை.  பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் டைக்கும் .
 பேரிச்சம் பழங்கள் ஆப்ரிக்க, ஈரான், ஈராக், சவுதி அரேபியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகளில் அதிகளவில் பேரீச்சை சாகுபடி செய்யப்படுகிறது. மற்றும் இந்தியாவில் குஜராத் மாநிலம், கட்ச் பகுதியில்  பேரீச்சை மரங்கள் உள்ளன சாகுபடிக்கு ஏற்ற உஷ்ண நிலை, தமிழகத்திலும் உள்ளது. வெப்ப சலனம் மிகுந்த தர்மபுரி மாவட்டத்தில், கிருஷ்ணாபுரம் பகுதியில் விவசாயிகள் பலர், பேரீச்சை சாகுபடியில் வெற்றி பெற்றுள்ளனர் பேரிச்சம் பழத்திற்கு இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றலும், இரத்தத்தை வளப்படுத்தும் இயல்பும் உண்டு.

கீழக்கரையில் பல்வேறு ரகங்களிலான பேரீச்ச
ம் பழங்கள் குவிந்துள்ளதாகவும் நகர் முழுவதும் பல்வேறு கடைகளில் நாளொன்றுக்கு 500கிலோ விற்பனையாவதாக தெரிவிக்கிறார் பேரிச்சம் பழம் மொத்த வியாபாரி காதர்

இது குறித்து கீழக்கரையை சேர்ந்த பேரிச்சம் பழம் மொத்த வியாபாரி காதர் கூறுகையில்,

 புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களின் முக்கிய உணவு பொருளாக பேரீச்சம் திகழ்கிறதுஇஸ்லாமியர்கள் அதிகம் வாழும் கீழக்கரை பகுதியில் டன் கணக்கில் பேரீச்சம் பழங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. பல் வேறு வகைகள் விற்கப்படுகிறது.கிலோ 120 லிருந்து ரூ2000 வரை தரம் வாரியாக கிடைக்கிறது.பெரும்பாலானவை அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.வெளியூர்களிலிருந்து ஏராளமானோர் கிழக்கரை வருகை தந்து வெளிநாட்டு இறக்குமதி செய்யப்பட்ட ருசி மிகுந்த பழங்களை வாங்கி செல்கின்றனர்.

பொதுவாக இப்பகுதியில் ரமலான் மாதத்தில் பேரீச்சம் பழம் விற்பனை அதிகளவில் இருக்கும்.கீழக்கரையில் நாளொன்றுக்கு 500கிலோ விற்பனையாகிறது.ருசி மிகுந்த இப்பழங்கள் ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி அனைவரும் வாங்கும் வகையிலான விலையில் கிடைக்கிறது.என்றார்

கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ சார்பில் இப்தார் நிகழ்ச்சி!ஏராளமானோர் பங்கேற்பு!



கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ சார்பில் இப்தார் நிகழ்ச்சி ஹைராத்துல் ஜலாலியா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

எஸ்.டி.பி.ஐ நகர் தலைவர் செய்யது இஸ்ஹாக்  தலைமை தாங்கினார்.  எஸ்.டிபி.ஐ நகர் பொருளாளர் சித்திக் அலி  வரவேற்புரையாற்றினார் .

  எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன், கிழக்குத் தெரு ஜமாஅத் தலைவர் சேகு அபூபக்கர் சாகிபு, ஜமாஅத் துணைத் தலைவர் அமீர் ஷாஜஹான், ஹைராத்துல் ஜலாலியா பள்ளியின் தாளாளர். ஜகுபர் சாதிக், டாக்டர் ஜவாஹிர் உசைன்,கீழக்கரை முஜீப்,இன்ஞினியர் கபீர்,கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர். செய்யது இபுறாஹீம் (ஸ்டேஷன் மாஸ்டர் - ஓய்வு),

 சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் செயலாளர். தங்கம் இராதாகிருஷ்ணன், முஹம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர். அலாவுதீன், மௌலவி அல்தாப் ஹுசைன் மன்பஈ, மௌலவி சம்சுதீன் ஆலிம் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.

எஸ்.டி.பி.ஐ  மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது மற்றும் பாப்புலர் ப்ஃரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் நவாஸ்கான்  சிறப்புரை ஆற்றினர்.

இந்த நிகழ்ச்சியின் நிறைவில்  கட்சியின் நகர் இணைச் செயலாளர் அபுபக்கர் சித்தீக் நன்றியுரை வழங்கினார்,

நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.அனைவருக்கும் நோன்பு திறப்பதற்கான முழுமையான  ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது

கீழக்கரை அதிமுக நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்!





கீழக்கரை அதிமுக நகராட்சி நிர்வாகத்தில் நடைபெறும் திட்டபணிகளில் முறைகேடுகள் மற்றும் நகராட்சி தலைவரின் கணவர் நிர்வாக தலையீடு,இவருக்கு துணை போகும் அதிகாரிகள்,நிர்வாக சீர்கேடு உள்ளிட்டவைகளை கண்டித்து  தமுமுக சார்பில் முஸ்லீம் பஜாரில் ஆர்ப்பாட்ட நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சாதிக் பாட்ஷா தலைமை வகித்தார்.மாநில அமைப்பு செய்லாளார் ஜெய்னுல் ஆப்தீன்,கவுன்சிலர் முகைதீன் இப்ராஹிம்,மாவட்ட செயலாளர் அன்வர் அலி,நகர் தலைவர் சிராஜுதீன்,மற்றும் நிர்வாகிகள் பசீர் அஹமது,பாக்கர் ,சித்தீக்,சைபுதீன்,இர்பான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்

ஆறு கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் நகராட்சியில் அவலநிலை நிலவுவதாக கடும் கண்டனம் தெரிவித்து பேசினர்.கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை நகர் செயலாளர் பைசுல் அமீன்,நிர்வாகிகள்

இர்பான்,மன்சூர்,சுதான்,ரைஸ் இப்ராஹிம்,சேக் தாவுத் சாதிக் செய்திருந்தனர்

Friday, July 26, 2013

கீழக்கரையில் ஆண்களுக்கான புதிய ஆடையகம் திறப்பு!



 புதிய ஷோ ரூமை, எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர். நூர் ஜியாவுதீன்  முன்னிலையில், M.M.K.ஜமால் இப்ராஹீம்  திறந்து வைத்தார்.  திறப்பு விழாவின் போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


இக்கடையின் உரிமையாளர் அஸ்வாத் கரீம்  கூறியதாவது,

ஆண்களுக்கான புதிய ரக நவீன ஆடைகளை விற்பனை செய்ய உள்ளோம்.அனைவரும் ஆதரவு தர வேண்டுமாய் அன்புடன் கேட்டு கொள்கிறேன்
என்றார்


துபாயில் புதுக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் இப்தார் நிகழ்ச்சி!



துபாயில் 3வது வருடமாக சென்னை புதுக்கல்லூரி முன்னாள் மாணவர்கள்(2000- 2003) சந்திப்பு மற்றும் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நாகூர்,கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி சமூக நலப்பணிகளை மேற்கொள்ள முயற்சிகள்  ஏறபடுத்தப்படும் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.


 

கீழக்கரையில் வீடு புகுந்து திருட்டு! ஒருவர் கைது!

 
 
 
 
 
கீழக்கரை: கீழக்கரை மேலத்தெரு மர்சூக் ரஹ்மான் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து, 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள "பிளம்பிங்' சாதனங்களை திருடிச் சென்றனர்.
 
இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த செய்யது முகம்மது அல்தாப், 34, என்பவரை, கீழக்கரை போலீசார் கைது செய்தனர்.
 

Wednesday, July 24, 2013

"பல்லாங்குழி" சாலை! சீரமைக்க கோரிக்கை!


கீழக் கரை சொக்கநாதர் கோயில் தெரு சாலை குண்டும், குழி யுமாக உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடை ந்து வருகின்றனர்.

கீழக்கரையில் உள்ள முக்கிய சாலைகளில் சொக்கநாதர் கோயில் தெரு சாலையும் ஒன்று. 6 மாதங்களுக்கு முன்னர் இந்த தார் ச்சாலை புதிதாக போடப்பட்டது.
 
ஆனால் நகராட்சி நிர்வாகத்தினர் 3 மாதங்களு க்கு முன்னர் இந்த சாலை யை தோண்டி குடிநீர் விநி யோக குழாய்கள் பதித்த னர். இதனால் புதிதாக போடப்பட்ட இந்த தார்ச் சாலை தற்போது குண்டும், குழியுமாக உள்ளது. கீழக் கரை நகர் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவி கள் இந்த சாலையை கடந்து தான் தங்கள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும்.
 
மேலும் நகரின் முக்கிய சாலை என்பதால் இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 

 
நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீதுகான் கூறுகையில்,
 
சொக்கநாதர் கோயில் தெருவில் குடிநீர் குழாய் களை பதித்த பின்னர் தார் ச்சாலை போட வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
 
ஆனால் நகராட்சி நிர்வாகத்தினர் அதை காதி லேயே வாங்கவில்லை. தார்ச் சாலை போட்டு விட்டு 3 மாதங்களில் அவர்களே சாலையை உடைத்து குடிநீர் குழாய்களை பதித்தனர்.
 
இதனால் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்கள் பதித்தும் பயனில்லை. அவற்றில் தண்ணீரும் வருவதில்லை. பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக இந்த சாலையை சரி செய்ய வேண்டும். குடிநீரையும் சீராக விநியோகிக்க வேண்டும்� என்றார்.

"தலைமை பண்பு" பயிற்சியில் கல்லூரி மாணவியர் ஏராளமானோர் பங்கேற்பு !

கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில், இந்திய தொழில் நுட்ப கழகம் சார்பில் தலைமை பண்புகள் மேம்படுத்துதல் குறித்த பயிற்சி பட்டறை, கல்லூரி இயக்குனர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா முன்னிலையில், முதல்வர் முகம்மது ஜகாபர் தலைமையில் நடந்தது.
 
இந்திய தொழில் நுட்ப கழக கல்லூரி மாணவர் அமைப்பு தலைவர் முகம்மது இஸ்மாயில் வரவேற்றார்.கொச்சி கப்பல் தொழிற்சாலை பொது மேலாளர் (ஓய்வு), விஜயராகவன், பயிற்சி அளித்தார்.
 
 தலைமை பண்புகளையும், அவற்றை முன்னிலைபடுத்தும் வழிமுறைகள் குறித்து பயிற்சி தேர்வு நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
 
இந்திய தொழில் நுட்ப கழக கல்லூரி மாணவர் அமைப்பு துணைத்தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விஜயராஜ், பி.ஆர்.ஓ.,நஜ்முதீன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
 
 



 

Tuesday, July 23, 2013

தாசீம் பீவி கல்லூரி மாணவியர் பேரவை புதிய நிர்வாகிகள்!


photo:thassimin

கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில், மாணவிகள் பேரவை நிர்வாகிகள் பதவியேற்பு விழா, முதல்வர் சுமையா தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர், உளவியல் ஆய்வாளர் அருண் தீபஞ்சன் பேசினார். பேரவை ஆலோசகர்கள் ஹாபிஷா, ஜன்னத்துல் பிர்தவுஸ் ஆகியோர், புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினர்.

முதல் "ஷிப்ட்' பிரிவு பேரவை தலைவராக ஹசிமா ருகையா, உதவி தலைவராக மரியம் நபீசா, பொதுச் செயலாளராக செய்யது பர்வீன், இணை செயலாளராக ஜீனத் முனவரா உள்பட 14 நிர்வாகிகளும், 2வது "ஷிப்ட்' பிரிவில் தலைவராக சுமையாரபி, பொதுச் செயலாளராக சுபஸ்ரீ, இணை செயலாளராக சித்திக்
காக ரகிலா உள்பட 10 பேர் பொறுப்பேற்றனர்.
 

Monday, July 22, 2013

அப்துல் ரஹ்மான்.எம்பியுடன் ராமநாதபுரம்,கீழக்கரையை சேர்ந்தோர் சந்திப்பு!




துபாயில் அப்துல் ரஹ்மான் .எம்பியுடன் ராமநாதபுரம்,கீழக்கரையை சேர்ந்தோர் சந்திப்பு!

துபாய் வருகை தந்திருந்த அப்துல் ரஹமான் எம்பியுடன் கீழக்கரை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளை சேர்ந்தோர் சந்தித்தனர்.

இந்நிகழ்வில்,

காயிதேமில்லத்பேரவை அமீரக தலைவர் குத்தாலம் லியாக்கத் அலி, கீழக்கரை மஹ்ரூப்,மூத்த சமூக ஆர்வலர் சாதிக்,காயிதேமில்லத்பேரவை அமீரக பொருளாளர் ஹமீதுர் ரஹமான்,அஸ்வான் அமைப்பின் நிர்வாகி கீழை ராஸா,இஸ்மாயில் மரிக்கா,கீழக்கரை டைம்ஸ் சபியுல்லா,பாசித், கீழகக்கரை.டாட்.காம் சமது,நவ்ரோஸ்கான்,ராமநாதபுரம் பரக்கத்,கீழக்கரை காமில்,கனி,ஈஸா முஹைதின் ,அஹமது அப்துல் காதர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
கடல் அட்டை தடை நீக்கம்,சேது சமுத்திர திட்டம்,ராமநாதபுரம் கீழக்கரை வழியாக தூத்துக்குடி வரை புதிய ரயில் பாதை  திட்டம் உள்ளிட்டவை  குறித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்ததோடு கலந்துரையாடல் நிகழ்ச்சியும்  நடைபெற்றது.

 அப்துல் ரஹமான் எம்.பி கூறுகையில்,

கடல் அட்டை  தடை ஏன் விதிக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்து அதை மறு ஆய்வுக்கு உட்படுத்தி தேவையான நடவடிக்கையை எடுக்க உரியவர்களிடம் விரைவில் பேச உள்ளேன்.

சேது சமுத்திர திட்டம் தமிழர்களின் பல்லாண்டு கனவு திட்டமாகும்.இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தொழில் வளம் பெருகும் குறிப்பாக தென் தமிழக மக்கள் பெரும் பலனடைவார்கள்.இப்பிரச்சனையில் அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றினைத்து இத்திட்டம் நிறைவேற ஒத்துழைக்க வேண்டும்.அதே சமயம் இத்திட்டத்தால் மீன்வளம் குறையும் என்பது போன்ற பல் வேறு பரப்பபடும் சந்தேகங்களை தீர்த்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

 ராமநாதபுரம்,கீழக்கரை,சிக்கல் வழியாக  தூத்துக்குடி வரையிலான  ரயில்வே திட்டம் ஆய்வு பணிகள் நிறைவு செய்யபட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.இது குறித்து மறைந்த கீழக்கரை ஹமீது அப்துல் காதர் காக்கா ,மெஜஸ்டிக் கரீம் காக்கா,ஹுசைன் காக்கா உள்ளிட்டோர் என்னிடம் டெல்லியில் சந்தித்து இத்திட்டம் குறித்து உரியவர்களிடம் பேசுமாறு  கோரிக்கை வைத்தார்கள்

அப்போதைய ரயில்வே இணை அமைச்சராக இருந்த இ.அஹமது சாஹிப் அவர்களிடம் வலியுறுத்தப்பட்டு முயற்சிகள் எடுக்கப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் வெளியுறவு துறை அமைச்சரவை பொறுப்புக்கு மாறிவிட்டார்கள்.ஆனாலும்.நான் இது பற்றிய முழு விபரங்களையும் அறிந்து கொண்டேன்.சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியுள்ளேன்

 தொகுதி எம்.பிக்கள் குரல் எழுப்ப வேண்டும்.இதன் மூலம் மத்திய அரசு இத்திட்டத்தை விரைவு படுத்த வாய்ப்புள்ளது.மேலும் நான் சம்பந்தபட்ட எம்.பிக்களுடன் இது குறித்து பேசி தேவையான நடவடிக்கைளை மேற்கொள்வேன்


உலகின் பொருளாதார வல்லுநர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இஸ்லாமிய வங்கி முறை திகழ்கிறது. ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடு களில் இது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இஸ்லாமிய வங்கி முறை உலக அளவில் வெற்றிகர மாக நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. வட்டி, நிலுவைத் தொகை செலுத்த முடியாதவர்க ளுக்கு நிவர்த்தி செய்யக் கூடிய ஒரு முறையாக இஸ்லாமிய வங்கி முறை அமைந்துள்ளது. வர்த்தக நோக்கின் அடிப்படையில் இந்த வங்கி முறை செயல் படுகிறது. உலக அளவில் பொருளாதார நிபுணர்கள் இஸ்லாமிய வங்கி முறையை வரவேற்றுள்ள னர். ஜாதி மதங்களை கடந்து ஐரோப்பிய மேற் கத்திய மற்றும் அரபுலக நாடுகளில் இஸ்லாமிய வங்கி நிறுவப்பட்டுள்ளது. இந்த வங்கி முறை அனைத்து மக்களுக்கும் தெளிவான ஒரு முறையாக உலகில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. இது இந்தி யாவில் நடைமுறைப் படுத்தப்பட்டால் வங்கித் துறையில் முன்னேற்றம் காணலாம்.
ரகுராம் ராஜன் தலைமையிலான குழுவினர் இந்தியாவில் இஸ்லாமிய வங்கியை நிறுவ இந்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
.
உலகப் பொருளாதார நெருக்கடியால் அனைத்து வங்கிகளும் பாதிக்கப்பட்ட நிலை யில் இஸ்லாமிய வங்கி முறை எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட்டிருப்பது நிருபிக்கப்பட்டுள்ளது.
எச்.எஸ்.பி.சி.., சிட்டி வங்கி உள்ளிட்ட சர்வதேச வங்கிகள் நடைமுறையில் உள்ள வங்கி முறைகளோடு அதற்கு அப்பாலும் இஸ்லாமிய வங்கிக்கான தனிப்பிரிவு ஏற்படுத்தி மாற்றத்தகுந்த வங்கி முறையை ஏற்படுத்தியுள்ள னர். இதில் கவனிக்கத்தக்க ஒன்று என்னவெனில், நமது நாட்டில் நடைமுறையில் உள்ள வங்கி சேவைகளை விட இஸ்லாமிய வங்கி முறையின் பிரிவில் அதிக வருமானம் வந்துள்ளது.

இஸ்லாமிய வங்கி என்ற பெயர்தான் சிலருக்கு உறுத்தலாக உள்ளது என்று நினைத்தால் அப்பெயரை மாற்றி வேறு பெயரில் வேண்டுமானால் அரசாங்கம் வைத்து கொள்ளட்டும்.மக்கள் பயன் பெறட்டும் என்றார்

Saturday, July 20, 2013

கீழக்கரையில் 26/07 வெள்ளிக்கிழமை நகராட்சியை கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்!



19 07 2013 அன்று கீழக்கரை நகர் தமுமுக நிர்வாக கூட்டம் நகர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தமுமுக நகர் தலைவர் முகம்மது சிராஜுதீன் தலைமையில் நகர் துணைத்தலைவர் கோஸ் முகம்மது முன்னிலையில் நகர் நிர்வாக கூட்டம் நடைபெற்று. இறுதியாக தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள் பற்றி நகர் தலைவர் முகம்மது சிராஜுதீன் பத்திரிக்கையாளரிடம் கூறுகையில் :

  1. கீழக்கரை நகராட்சி யில் தொடர்ந்து நடைபெறும் சீர்கேடுகளை  கண்டித்து  மற்றும் முறையான குடிநீர்  வழங்க கோரியும் வரும் 2 6/07/13 அன்றுவெள்ளிக் கிழமை முஸ்லீம் பஜாரில் பகல் 2 மணிக்கு ஆயிரக்கணக்கன பொதுமக்களை திரட்டி கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும்

2 புனித ரமலான் மாத பித்ராக்களை வசூல் செய்து அதிகமான ஏழை எளிய மக்களுக்கு பெருநாள் கொடை வழங்குவது.  

3.   ஜுலை 15 க்குள் அனைத்து மக்கள் நல பணிகளும் நிறைவேற்றப்படும் என்று கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் அழித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும்.

 பேட்டியின் போது மூத்த தலைவர் அன்பின் அசன், நகர் செயலாளர் பவுசுல் அமீன், ஒன்றிய செயலாளர் சாதிக், மமக செயலாளர் இக்பால், வர்த்தக அணி செயலாளர் சலீம்,  மமக துணை செயலாளர்  புகாரி PRO கமால் நாசர் மற்றும் ரிபாக், , வளைகுடா நிர்வாகி கீழை. இர்பான், 9 வார்டு நிர்வாகி மாலிக் உடன் இருந்தனர்.

தேசிய அடையாள அட்டை பதிவு!கீழக்கரையில் தற்காலிக மையம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல் !



கீழக்கரையில்  தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு பொதுமக் களின்  புகைப்படங்கள் எடுப்பட்டு விரல் ரேகைகள், கருவிழிகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கான பணியில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டனர். ஆனால் கீழக்கரையில் 50 சதவீதம் பேர் தான் தேசிய அடையாள அட்டை  பெற பணிகளை நிறை செய்துள்ளார்கள் . இதில் விடுபட்டவர்கள் அதிகளவில் உள்ளனர். இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ரமலான் மாதத்தை தொடர்ந்து ஏராளமானோர் வெளிநாடு மற்றும் வெளியூர்களிலிருந்து சொந்த ஊரான கீழக்கரை திரும்பியுள்ளனர்.எனவே தற்போது கீழக்கரை நகரில் தற்காலிகமாக தேசிய புகைப்படம் எடுக்கும் பணிகளுக்கான சிறப்பு மையம் ஒன்றை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து நகராட்சி துணை சேர்மன் ஹாஜா முகைதீன் கூறியதாவது,

தற்போது ரமலான் மாதத்தில் ஏராளமான எமதூர் மக்கள் விடுமுறைக்கு ஊரு திரும்பிய வண்னம் உள்ளனர்.இச்சமயத்தில் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு புகைப்படம் எடுக்க மற்றும் பணிகளை மேற்கொள்ள சிறப்பு மையத்தை தற்காலிகமாக கீழக்கரை நகரில் ஏற்படுத்த கலெக்டர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டு கொள்கிறேன்.இதன் மூலம் விடுபட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றார்


 

Friday, July 19, 2013

ஏர்வாடியில் ரூ1 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்!4 பேர் கைது!


ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் நேற்று கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையில் கியூ பிரிவு போலீசார் தர்கா பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் சோதனை நடத்தினர்.

அங்குள்ள அறையில் சோதனை மேற்கொண்டதில் மெத்தாகுலைன் என்ற போதை பொருள் பாக்கெட்களில் பதுக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும்,இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ 1 கோடி போலீசார் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து அறையில் தங்கியிருந்த 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பாக்கெட்களை மேற்கொண்டு ஆய்வு மேற் கொள்ள அனுப்பி வைத்தனர்.இந்த பாக்கெட்கள் இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் தொடர்ந்து மேலும் யாரெனும் இதில் சம்ப்பந்தப்பட்டுள்ளார்கள  என விசாரணை செய்து வருவதாக கியூ பிரிவு போலீசார் தெரிவித்தனர்.



கீழக்கரை முக்கிய சாலைகளில் குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு!



 நகராட்சி நிர்வாகத்தின் முறைகேடுகளை எதிர்த்து குரல் எழுப்பியதால் தங்கள் வார்டுகளில் குப்பை அள்ளும் பணி ஒரு வாரமாக நிறுத்தப்பட்டுள்ளது என கீழக்கரையில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தெருக்களில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் குவி ந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது.
. நகராட்சி தலைவரின் நடவடிக்கையைக் கண்டித்து 13 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த 13 கவுன்சிலர்களின் வார்டுகளும் புறக்கணிக்கப்படுவதாக மீண்டும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. கடந்த ஒரு வார கால மாக, இந்த 13 வார்டுகளிலும குப்பைகள், கழிவுகள் அகற்றப்படாமல், தெருக்க ளில் குவிந்து கிடப்பதாகவும். இதனால்  தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பழுதான தெரு விளக்குகளை சரி செய்யும் பணிகளும் கிடப்பில் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐந்தாவது வார்டு கவுன்சிலர் சாகுல் ஹமீது கூறுகை யில்,

கீழக்கரையில் நகராட்சி கூட்டம் கடந்த 9ம் தேதி நடந்தது. நகராட்சியில் நடந்த முறைகேடுகள் தொடர் பாக இந்தக் கூட்டத்தில் பிரச்னையை கிளப்ப துணைத்தலைவர் ஹாஜாமுகைதீன்(அதிமுக) உள்ளிட்ட கவுன்சிலர்கள் திட்டமிட்டு இருததை  அறிந்து கொ ண்ட நகராட்சி தலைவர் மற்றும் ஆணையாளர், அறிவிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே கூட்டத்தை நடத்தி முடித்ததாக அறிவித்தனர்

. மேலும் எனது வார்டு பகுதியில் ஒரு வாரமாக குப்பை கள் அகற்றப்படாமல் கிடக்கின்றன. தெருக்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் கொசு தொல்லை அதிகரித்து வரு கிறது. சுகாதார ஆய்வாளரிடம் புகார் தெரிவித்தோம். ஒப்பந்ததாரர் முறையாக பணி செய்யவில்லை என்று எழுதி கொடுத்தால் தான் குப்பைகளை எடுக்கச் சொல்வேன் என்கிறார்,” என்றார்.

ஒப்பந்ததாரர் ஆறு முகம் கூறுகையில்,

“துப் புரவு பணிக்கு, நபர் ஒருவருக்கு ரூ.241 என்ற அடிப்படையில் டெண்டர் எடுத்து வேலை செய்கிறோம். கடந்த இரண்டு மாதங்களாக பில் பணம் கொடுக்கவில்லை. 20 சதவீதம் கமிஷன் கொடுத்தால்தான் பில் பணம் தருவோர் என்கிறார்கள்.
இதனால் தொழிலாளர்களுக்கு பணம் தர முடியவில்லை. மேலும், உன்னுடைய ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டோம். இனி வேலை பார்த்தால் பணம் தரமாட்டோம் என்கின்றனர். அதனால் தான் குப்பைகளை அகற்றவில்லை என்றார்.




இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா தரப்பில் கேட்ட போது,

வேண்டுமென்றே யாருடைய வார்டும் புறக்கணிக்கப்படவில்லை ஆட்கள் பற்றாக்குறையால்  தான் தனியாருக்கு விடப்பட்டது .ஆனால் குறிப்பிட்ட வார்டு பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள டெண்டர் எடுத்த தனியார் நிறுவனம் பணிகளை சரியாக செய்யவில்லை .இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்ட்டு வருகிறது விரைவில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு இப்பிரச்ச்னை தீர்க்கப்படும்.மேலும் உடனடி நடவடிக்கையாக குப்பைகள் அனைத்து அகற்றப்படும் என்றார்

Thursday, July 18, 2013

ராக்கிங் தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம்!



கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ராக்கிங் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அபுல்ஹசன்சாதலி தலைமை வகித்தார்,

 மாயாகுளம் ஊராட்சி தலைவர் சுந்தராஜன், ஏர்வாடி போலீஸ் எஸ்ஐ ஆனந்தன், ஷேடோ சுயஉதவிக்குழு உதவி தலைவி உமா மகேஸ்வரி, ஷேடோ தொண்டு நிறுவன உதவி தலைவர் ஆரோக்கிய ராஜ் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாணவர் அஸ்லாம் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். பேராசிரியர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். பேராசிரியர் முகம்மது இபுராகிம் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை பேராசிரியர்கள் அக்பர்ஜஹான், ஆனந், நாசர் செய்திருந்தனர். இதில் 300க்கும் அதிகமான மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

துபாயில் ஈமான் சார்பில் ரமலான் மாதம் முழுவதும் இப்தார் நிகழ்ச்சி!தினமும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

 தாயகத்திலிருந்து வருகை தந்த வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்.பி,ஈமான் துணைத் தலைவர் மற்றும் க‌ல்விக்குழுத் த‌லைவ‌ர்  கீழக்கரை பி.எஸ்.எம். ஹ‌பிபுல்லாஹ்,ஈடிஏ மனித வள மேம்பாட்டுதுறை நிர்வாக இயக்குநர் கீழக்கரை அக்பர் கான் உள்ளிட்டோர் துபாயில் ஈமான் சார்பில் நடைபெற்ற  இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்



"புதிய தலைமுறை" சேனலில் வெளியான ஈமான் நோன்பு கஞ்சி தொடர்பான செய்தி கானொலி தொகுப்பு...  http://www.youtube.com/watch?v=GoD7K02UYBY&feature=c4-overview&list=UUmyKnNRH0wH-r8I-ceP-dsg

 துபாயில் ஈமான் என்று அழைக்கப்படும் இந்திய‌ன் முஸ்லிம் அசோசியேஷ‌ன் இஃப்தார் எனும் நோன்பு திற‌ப்பு நிக‌ழ்ச்சியை துபாய் தேரா லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் (குவைத் ப‌ள்ளி) ர‌மலான் மாத‌ம் முழுவ‌தும் த‌மிழ‌க‌ நோன்புக் க‌ஞ்சியுட‌ன் நடத்தி வருகிறது.

இது குறித்து ஈமான் பொதுச் செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி கூறுகையில்,துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்ச்சி க‌ட‌ந்த‌ 25 ஆண்டுகளுக்கும் மேலாக‌ ந‌டைபெற்று வ‌ருகிற‌து.

ஆர‌ம்ப‌த்தில் சிறிய‌ அள‌வில் ஆர‌ம்பித்து இன்று சுமார் 3,500க்கும் மேற்ப‌ட்டோருக்கு தின‌மும் த‌மிழ‌க‌ நோன்புக் க‌ஞ்சியை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து. நோன்புக் க‌ஞ்சியுட‌ன் ச‌மோசா, ஆர‌ஞ்சு, குளிர்பான‌ம், த‌ண்ணீர், பேரிச்ச‌ம் ப‌ழ‌ம் உள்ளிட்ட‌வை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் ஒரே பகுதியில் அமர்ந்து இப்தார் மேற்கொள்கிறார்கள்.

துபாயில் ரமாலான் மாதம் முழுவதும் நடைபெறும் மிக பெரும் இப்தார் நிகழ்ச்சியாகும்.இத்த‌கைய‌  நிக‌ழ்ச்சி ஈமான் அமைப்பின் த‌லைவ‌ர் கீழக்கரை சைய‌து எம். ஸ‌லாஹுத்தீன், துணைத் தலைவர் மற்றும் க‌ல்விக்குழுத் த‌லைவ‌ர்  கீழக்கரை பி.எஸ்.எம். ஹ‌பிபுல்லாஹ் ஆகியோர‌து வ‌ழிகாட்டுத‌லுட‌ன் பொதுச் செய‌லாள‌ர் ஏ.லியாக்க‌த் அலி, துணைப் பொதுச் செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, ஊடக‌த்துறை மற்றும் மக்கள் தொடர்பு செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த், விழாக்குழு செய‌லாள‌ர் கீழை ஹமீது யாசின், நலத்துறை மற்றும் நிர்வாக மேலாளர் திருச்சி ஃபைசுர் ரஹ்மான், அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், ப‌டேஷா ப‌ஷீர், இல்யாஸ், ஷ‌ர்புதீன், உஸ்மான், முஹ‌ம்ம‌து அலி உள்ளிட்ட‌ நிர்வாகக் குழு உறுப்பின‌ர்க‌ள் ம‌ற்றும் புர‌வ‌ல‌ர்க‌ள் ஒத்துழைப்புட‌ன் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து

.பள்ளியில் அமர்ந்து நோன்பு திறப்பவர்களுக்கு மட்டுமல்லாது தங்களது அறையில் அல்லது இல்லத்தில் நோன்பு திறப்பதற்கும் நோன்புக் கஞ்சியினை பிளாஸ்டிக் கன்டெய்னரில் மாலை 6 மணி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 500 பேர் பலன் பெற்று வருகின்றனர்.கடும் வெயிலையும் பொருட்படுத்தாது தன்னார்வ ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 
 இப்ப‌ணியில் ஈடுப‌ட‌ விரும்புவோர் 050 4674399 / 050 5196433 எனும் அலைபேசி எண்ணில் தொட‌ர்பு கொள்ள‌லாம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. பங்கேற்பு:ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் பங்கேற்றார். அவருடன் அவரது மகன் சித்திக்கும் வந்திருந்தார்.இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்துல் ரஹ்மான் ஈமான் அமைப்பினரின் இந்த சேவையை பாராட்டினார். இறைப் பொருத்தத்தை நாடி இறை உவப்பிற்காக மேற்கொண்டு வரும் இச்சீரிய பணிகளுக்கு பெரும் ஒத்துழைப்பு நல்கி வரும் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமம் மற்றும் புரவலர்களை நினைவு கூர்ந்தார்.

 
 மேலும் ஆரம்ப காலத்தில் நோன்புக் கஞ்சியினை தான் பொதுச் செயலாளராக இருந்த போது செய்யப்பட்ட விதத்தினையும் மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டது பலரையும் அந்த கால கட்டத்திற்கு இழுத்துச் சென்றது.
மாலை 6 மணிக்கு நோன்புக் கஞ்சியினை பார்சலாக வழங்குவதற்கு ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் கும்பகோணம் சாதிக் ஏற்பாட்டில் டோக்கன் முறையில் வழங்கப்படும் முறையினைப் பாராட்டினார்.

தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் பள்ளி மட்டுமல்லாது துபாய் பிரிஜ் முரார் லத்திஃபா பள்ளியிலும் அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால் முஹம்மது தலைமையில் நெல்லிக்குப்பம் காதர், பெரம்பலூர் உஸ்மான் உள்ளிட்டோர் நோன்புக் கஞ்சி விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் சுமார் 450 பேர் பயன் பெற்று வருகின்றனர்.ஈமானின் இத்தகைய பணிகளுக்கு தனது ஒத்துழைப்பு என்றும் இருக்கும் என அப்துல் ரஹ்மான் எம்.பி. தெரிவித்தார்.
 

Wednesday, July 17, 2013

கீழக்கரை நகரில் சுகாதாரத்தை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கமிஷனரிடம் மனு


கீழக்கரை எஸ்டிபிஐ நிர்வாகிகள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள கமிஷனர் அயுப்கானை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு கோரிக்கை மனுவும் அளித்தனர்

மனுவில் ,கீழக்கரையில் கடந்த பல நாட்களாக குப்பை அகற்றப்படாமல் சுகாதார கேடு நிலவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே  இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரினர்.

இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென கமிஷனர் உறுதியளித்தார்.
 

கீழக்கரை பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் நிகழ்ச்சி !



காமராஜரின் 111வது  பிறந்த நாளை முன்னிட்டு கீழக்கரையில் கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடப்பட்டது.

கீழக்கரை முஹைதீனியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கல்வி குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

டி.எஸ்பி சோம சேகர் தலைமை தாங்கி பேரணியை துவங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் கனேஷன்,துனை தலைவர் முஹைதீன் இப்ராஹிம் என்ற தம்பிவாப்பா,பள்ளி செயலாளர் டாக்டர் ராசீக்தீன்,இணை செயலாளர் அஹமது மிர்ஷா,பொருளாளர் பசீர் அஹமது ரோட்டரி சங்க செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் செய்ய அஹமது சதக்கத்துல்லா, ஹசன், மக்கள் நல அறக்கட்டளை ஹாஜா அணீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப்பள்ளியில், கல்வி வளர்ச்சி நாள் விழா தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி தலைமையில் நடந்தது. போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. கைத்தொழில் ஆசிரியர் பத்மாவதி நன்றி கூறினார்.

கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் தாளாளர் டாக்டர் சாதிக் தலைமை வகித்தார்.கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் செளகர் சாதிக் தலைமை வகித்தார்.
முன்னாள் தாளாளர்கள் செய்யது இபுராகிம், மஹமூது கரீம்,  முதுகலை ஆசிரியர் சையது அபுதாகிர் பேசினர். கிழக்கு தெரு ஜமாஅத் தலைவர் சேகு அபுபக்கர் சாகிபு, துணை தலைவர் அமீர், பொருளாளர் அஜ்ஹர், கல்விக்குழு உறுப்பினர்கள் சுஐபு, ஹூசைன் அப்துல் காதர் கலந்து கொண்டனர். மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை, உபகரணங்கள் வழங்கப்பட்டன.



கீழக்கரை அருகே மாவிலாதோப்பு நாடார் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அன்பு செல்வன் தலைமை வகித்தார்.கல்விக்குழு தலைவர் கிருஸ்ணமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
 

Tuesday, July 16, 2013

துபாயில்(20/07)சனிக்கிழமை இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு(தமிழில்)!


                                  நஜிமுதீன்

துபாயில்(20/07)சனிக்கிழமை இஸ்லாமிய மார்க்க  சொற்பொழிவு(தமிழில்)! கீழக்கரை நஜிமுதீன் தகவல்!

நபிகள் நாயகம் கற்று தந்த மனித "நேயமும் வாழ்க்கை நெறியும்" என்ற தலைப்பில் மெளலவி முபாரக் மதனி உரையாற்ற உள்ளார்கள்

20 07 13 இரவு அன்று 10 15 மணி அளவில் ஜாமியத் அல் இஸ்லாஹ் வின்ல் அன்று கிஸஸ் லுலு சென்டர் பின்புறம் நிகழ்ச்சி நடைபெறும்.அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற வேண்டுமென கீழக்கரை நஜிமுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

கீழக்கரை கல்லூரி மாணவர்கள் விளையாட்டு போட்டியில் இந்திய அளவில் சாதனை!


File(OLD) Pic
கீழக்கரை முஹம்மது சதக் இன்ஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் வினோத் கபடி போட்டியிலும்,மாதவன் தடகள் போட்டியிலும் இந்திய பல்கலைகழக அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.பாசித் நீளம் தாண்டுதல், 100 மீட்டரில் 2ம் இடம் பிடித்துள்ளார்.

இவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ 10 ஆயிரத்திற்க்கான காசோலையை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வழங்கி பாராட்டினார்.