tag:blogger.com,1999:blog-314201890626948568.post8516155376454018537..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் தனியார் வாகனங்களை ஆய்வு செய்ய கோரிக்கை!Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-58457452007395310572012-07-30T13:58:41.886+05:302012-07-30T13:58:41.886+05:30பரிதாபத்திற்கரிய சிறுமி ஸ்ருதியின் அகால மரணத்தை ஒட...பரிதாபத்திற்கரிய சிறுமி ஸ்ருதியின் அகால மரணத்தை ஒட்டி முன்னால் தமிழக ஐ.எ.எஸ், அதிகாரி கூறியதாவது: அரசு துறைகளில் எல்லாமே சடங்காகத்தான் நடக்கின்றன. பிரச்சனைகளை தீர்க்க முழு ஈடுபாட்டுடன் தொடர் நடவடிக்கைகள் எடுப்பதில்லை. இனிமேலாவது மாவட்ட ஆட்சியாளர்களின் தலைமையில் போக்குவரத்து, கல்வி துறை, காவல் துறை, மாணவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் கொண்ட குழுவை ஏற்படுத்தி அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்.(தினமலர் 27/07/12 ம்துரை பதிப்பு)<br /><br />அரசு நிர்வாகம் கோமாளித்தனமாகி போய் விட்ட இன்றைய காலக் கட்டத்தில் எங்கும் எதிலும் லஞ்ச லாவண்ணியம், மக்களுக்கு அத்தியாவசியமான தெரு விளக்கு, குடிநீர் குழாய் முதலான வற்றில் கூட விவஸ்தை கெட்டதனமாக செயல்படும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மனம் திருந்தாத வரை எதுவும் மக்களுக்கு பயன் அளிக்கப் போவதில்லை. சில ஆண்டு களுக்கு முன் குமபகோணத்த்ல் கரிகட்டையாய் போன இளஞ் பிஞ்சுகளின் வழக்கு என்னவாயிற்று? இது போல கணக்கில் அடங்காத அளவிற்கு சொல்லி கொண்டே போகலம். <br /><br />சில காலத்திற்கு முன் வாடகை மற்றும் த்னியார் மகிழுந்துகளில் பக்க வாட்டு கணணாடிகளில் ஒட்டப்பட்ட கருமை நிற ஒட்டிகளை நீக்கச் சொன்னார்கள். அது நடைமுறையில் இப்போது எப்படி உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. <br /><br />இப்போது கூட பள்ளி வாகனங்கள் மீது எடுக்குப்படும் நடவடிக்கை கூட கண்துடைப்பே. உயர்நீதி மன்ற நீதிபதி மரியாதைக்குரிய எம்.ஒய். இக்பால் அவ்ர்கள் யாருடை முறையீடும் இல்லாமல் தானாக முன் வந்து நடவடிக்கையை துரிதப் படுத்தியதால் ஏதோ இப்போது இது பற்றி பேசப்படுகிறது. அதுவும் அடுத்த கொடூரமான் பாதிப்பு நிகழும் வரைதான். <br /><br />சில காலங்களுக்கு முன் நமக்கு அருகில் உள்ள ஏர்வாடியில் மன நலம் குன்றியவர்கள் சிலர் பேராசை காரர்களின் கொடூர எண்ணத்தால் கரிக்கட்டையாகி போன சம்பவம் நம் கண்களை விட்டு அகல மறுக்கிறது.அப்போதுகூட உச்ச நீதி மன்ற நீதிஅரசர் மரியாதைக்குரிய மார்கண்டேய கட்சூ அவர்கள் யாரும் முறை இடாத நிலையில் பத்திரிக்கையில் வநத செய்தியின் அடிப்படையில் தானாக முன் வந்து சாட்டையை சுழற்றினார்கள்.அதன் அடிப்படையில் சிகிச்சைக்காக ஏர்வாடிக்கு வரும் மனம் நலம் குன்றியவர்களை பாதுகாக்க சில சட்ட நடைமுறைக்ளை கொண்டு வந்தார்கள். பழைய குருடி கதவை திறடி என்ற சொலவடைக்கு ஏற்ப இன்று எப்படி செயல்படுகிறது என்பதை நாம் கண்கூடாக் காண்கிறோம்.<br /><br />ஆக சட்டத்தின் பாதுகாவலர்கள் தான் வணங்கும் இறைவனுக்கு அஞ்சி லஞ்ச வாவண்ணியத்திலிருந்து முடிந்த அளவு விடுபட்டு செயல் பட்டால் ஒழிய மக்களுக்கு விமோசனம் இல்லை.மங்காத்தாவின் தங்கச்சி மகன்noreply@blogger.com