Sunday, February 20, 2011

வீடுகளில் திருடும் டிப் டாப் ஆசாமிகள்

பிப்.20கீழக்கரையில் கடந்த சில தினங்களாக லாப் டாப் சகிதம் டிப் டாப்பாக உடை அணிந்து கொண்டு எலக்ட்ரிக் பொருள்கள் மற்றும் கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்து தருகிறோம் என்ற பெயரில் ஆசாமிகள் சிலர் வீடுகளில் திருடி வருகிறார்கள்.இது சம்பந்தமாக வந்த புகாரின் பெயரில் டிப் டாப் ஆசாமி ஒருவரை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.இது குறித்து இன்ஸ்பெக்டர் பால் பாண்டி கூறியதாவது,வீட்டில் புகுந்து செல்போன் திருடிய ஒருவரை விசாரித்து வருகிறோம் .இக்கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இது குறித்து சமுக ஆர்வலர் முகைதீன் இப்ராகிம் கூறியதாவது, முன் பின் தெரியாதவர்களிடம் பொதுமக்கள் எச்சரிகையாக இருக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.