Thursday, September 5, 2013

பேச்சு போட்டி! தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி முதலிடம்!

old(file) picமாணவி பஹூஜத் குபுரா சாலிஹ் ஹுசைன்
 
 கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் நடந்த பேச்சுப்போட்டியில், மாணவி பஹூஜத் குபுரா முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார். கோவை சாந்தலிங்க அடிகளார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும், கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி சார்பில் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் சுமையா தலைமை வகித்தார்.
 
தமிழ்த்துறை தலைவர் அகிலா வரவேற்றார். 10 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். நடுவர்களாக பட்டிமன்ற பேச்சாளர் வாசு, ராமநாதபுரம் சேதுபதி அரசு கலை கல்லூரி பேராசிரியர் கிளிராஜ், தேவிபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜகண்ணு இருந்தனர்.
 
தாசீம்பீவி அப்துல் காதர் கல்லூரி மாணவி பஹூஜத்து குபுரா முதலிடத்தையும், செய்யது ஹமீதா கலை கல்லூரி மாணவி உமா மகேஸ்வரி இரண்டாம் இடத்தையும் பெற்றனர். பேராசிரியர் எஸ்தர் நன்றி கூறினார்.

 

Wednesday, September 4, 2013

பேச்சு போட்டி!ஹமீதியா மெட்ரிக் பள்ளி மாணவிகள் பரிசு வென்றனர்



படம்: நன்றி , ராஜாக்கான்

கமுதி ரஹ்மானியா மேல்நிலைப்பள்ளியில் நிறுவனர் நினைவு நாளையோட்டி  பள்ளிகளுக்கிடையேயான தமிழ் மற்றும் ஆங்கிலம் பேச்சுபோட்டி நடைபெற்றது.இதில் கீழக்கரை  ஹமீதியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி ஹம்சத் ஹாஜரா முதல் பரிசையும் உயர் நிலைப்பிரிவில் 10 வகுப்பு மாணவி பாத்திமா சாஜியா முதல் பரிசை பெற்றார்.

இவர்களை பள்ளி நிர்வாகம் சார்பில் தாளாளர் ஹமீது அப்துல் காதர் மற்றும் பள்ளி முதல்வர் சஹர்பான் பீவி உள்ளிட்ட ஆசிரிய ஆசிர்யைகள் பாரட்டினர்

 

Tuesday, September 3, 2013

கீழக்கரை நகராட்சி கூட்டம் !செய்தியாளர்களை புறக்கணித்தது ஏன்? நகராட்சி தலைவருக்கு துணை சேர்மன் கடும் கண்டனம்!


நகராட்சி துணை தலைவர் ஹாஜா முஹைதீன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

ஒவ்வொரு முறையும் கீழக்கரை நகராட்சி கூட்டம் நடைபெறும் போது வழக்கமாக செய்தியாளர்களுக்கு கூட்டம் தொடர்பான அஜெண்டா நகராட்சி நிர்வாகம் மூலம் அனுப்ப்பட்டு செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று செய்தி சேகரிப்பார்கள்.

ஆனால் இம்முறை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் பத்திரிக்கைகளுக்கு செய்தி சேகரிக்க அனுமதி அளிக் மறுக்கும் விதமாக பத்திரிக்கையாளர்களுக்கு கூட்டம் தொடர்பான அஜென்டா மற்றும் அழைப்பு விபரம் அனுப்படவில்லை.இதனால் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு  கூட்டம் தொடர்பான நிகழ்வுகளை கீழக்கரை மக்கள் அறிந்து கொள்ள முடியாமல் ஆகி விட்ட்து.

இது குறித்து நகராட்சி தலைவரிடம் ராவியத்துல் காதரியாவிடம் நான் கேட்ட போது ஒரு தலை பட்சமாக செய்தி வெளியிடுகிறார்கள் அதனால் அனுப்பவில்லை  அடுத்த கூட்டத்திற்கு வேண்டுமானால் அனுப்பலாம் என்கிறார்.

இது முற்றிலும் தவறான அணுகுமுறை.செய்தியாளர்கள் தவறுகளை சுட்டிகாட்ட்த்தான் செய்வார்கள்..தலைமை பொறுப்பில் உள்ளவர் சகிப்பு தன்மையுடன் தவறுகள் இருப்பின் சீர்  செய்து மக்கள் பணியாற்ற வேண்டும்  இது குறித்து எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் என்றார்


இது குறித்து  கவுன்சிலர் முஹைதீன் இப்ராஹிம் கூறுகையில்,

இது தொடர்பாக கூட்டம் நடைபெறும் போது பத்திரிக்கையாளர்களை அழைக்காததற்கு கண்டித்து கவுன்சிலர்கள் ஜெயபிரகாஷ்,சாஹீல் ஹமீது உள்ளிட்ட கவுன்சிலர்கள்  குரல் எழுப்பினோம்.

செய்தியாளர்களை புறக்கணித்தால் கூட்டத்தில் என்னென்ன திட்டங்கள் வைக்கப்பட்டன.எவ்வளவு தொகைக்கான ,தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பதையெல்லாம் மக்கள் எப்படி தெரிந்து கொள்வார்கள்.
இது நகராட்சி தலைவரின் ஜனநாயக விரோத போக்கை காட்டுகிறது.தமிழகத்தில் எங்கும் இதுபோல்  நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை..

இதற்கு முன் பேரூராட்சியாக,நகராட்சியாக இருந்த போது எத்தனையோ பெரியவர்கள் தலைவர்களாக இருந்துள்ளார்கள் அவர்களின் நிர்வாகங்களில் குறைகள் நடைபெறும் போது பத்திரிக்கைகள் குறை கூறி எழுதியுள்ளார்கள் ஆனால் யாரும் இது போன்று செய்ததில்லை.பதவியில் இருப்பவர்களுக்கு பணிவும்,சகிப்புதன்மையும் அவசியம்.
பகிரங்கமாக நடைபெறும் கூட்ட நிகழ்வுகளை மக்களுக்கு இருட்டடிப்பு செய்யும் நோக்கத்தில் நடைபெற்றுள் இச்செயலால் கீழக்கரை நகர மக்களுக்கு நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையின்மையும்,சந்தேகத்தையும் அதிகப்படுத்தியுள்ளது.

ஜனநாயக நெறிமுறையின் கழுத்தை நெறிக்கும் செயலாகும்.இச்செயலை செய்த நகராட்சி தலைவர்  மற்றும் துணை போன கமிஷனர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும். என்றார்,

 

உயிரழந்த நிலையில் கரை ஒதுங்கியது டால்பின்!

கீழக்கரை கடற்கரை பகுதியில் நேற்று டால்பின் ஒன்று இறந்தநிலையில் கரை ஒதுங்கியது. 4 அடி நீளம்  கொண்ட இந்த டால்பின் பாறையில்,கப்பல் அடிப்பகுதியில் மோதி காயம் அடைந்து உயிரிழந்திருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் பெரிய மீன்கள் தாக்கி இறந்திருக்கலாம்ம என்று தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழக்கரை வனச்சரகர் ஜெயராமன் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். கால்நடை டாக்டர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின் டால்பின் புதைக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

சிறப்பு காவல் இளைஞர் படை ஆட்கள் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வினியோகம்


 

Photo :Thanks .Dinathanthanthi daily news (Mr.Azad)

 
விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய....

ராமநாதபுரத்தில் சிறப்பு காவல் இளைஞர் படை யில் சேர விண்ணப்பங் கள் வினியோகிக்கப்பட் டது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்கும் பணியை மேம்படுத்தும் வகையில் போலீசாருடன் இணைந்து பணியாற்ற தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை அமைக்கப்படும் என்று முதல் -அமைச்சர் ஜெயலலிதா அறி வித்திருந்தார்.
. இந்த பணிக்கான ஆட்கள் தேர்வு தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக அடுத்த மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள்அந்தந்த மாவட்டங்களில் வழங்கப்பட்ட்து.
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகத்தில் நேற்று காலை முதல் வினியோகிக்கப்பட்டன.
இந்த பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

 முதல்-அமைச்ச ரின் அறிவிப்புப்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு 360 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பத் தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் அவரவர் தகு திக்கேற்ப இந்த படையில் சேர்ந்து கொள்ளலாம். இவர் களுக்கு மாதம் ரூ.7 ஆயி ரத்து 500 மதிப்பூதியமாக வழங்கப்படும்.

இதற்கான உடல் தகுதி தேர்வு உள்ளிட்டவை அடுத்த மாதம் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வு நவம்பர்
 
10-ந் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பத்தை அக்டோபர் 1-  ந்தேதிக்குள் தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை உறுப்பினர் தேர்வு என குறிப்பிட்டு அந்தந்த மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். இதற் கான விண்ணப்பங்களை இணைய தளத்திலும் பதிவி றக்கம் செய்து கொள்ளலாம்.
 

இவ்வாறு அவர் கூறினார்.  




செஸ் போட்டி! கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவ,மாணவியர் சாதனை


திருப்புல்லாணி வட்டார அளவிலான உயர், மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவ,மாணவிகளுக்கான செஸ் போட்டி வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி ஆறு மாணவ, மாணவியர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்

.19 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் எஸ்.சலோம் முதல் பரிசு,எஸ்,மோனிஷா இரண்டாம் பரிசும்,17 வயதிற்குட்பட்டோரில் 
ஹைருன் ஹபிலா முதல் பரிசும் பெற்றனர்.19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் என்.செய்யது நபாய்தீன் மூன்றாம் பரிசு, 17 வயதிற்கு உட்பட்டோரில் ஜெ.அசீம் ரக்மான் இரண்டாம் பரிசு,எஸ்.கோகுலநாதன் மூன்றாம் பரிசு பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களை பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இபுராகிம்,துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் சார்த்தோ,நிர்வாக அலுவலர் மலைச்சாமி,உடற்கல்வி ஆசிரியர்கள் சசிகுமார்,ஜெயா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்

 

Monday, September 2, 2013

கீழக்கரை அருகே ஏர்வாடியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

 

தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் சுமார் 10க்கும் மேற்பட்ட மாவட்டங் களில் நிலத்தடி நீர் மட்டம் வரலாறு காணாத வகையில் குறைந்துள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் முக்கிய இடத்தை பெற்றுள்ளது குறிப் பிடத்தக்கது.
 
மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட் டம் வெகுவாக குறைந்து விட் டது. பொதுமக்கள் நீர் ஆதாரம் இல்லாமல் தவித்து வருகின்ற னர். போர்வெல் மற்றும் ஆழ் குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் வற்றிப்போனதால் தூர்வா ரும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர நீர் ஆதாரம் உள்ள பகு திகளை கண்டறிந்து புதிய போர்வெல் அமைக்கும் முயற் சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இந்தச் சூழ்நிலையில் தற்போது வடகிழக்குப் பருவ மழையை மக்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர். இந்த ஆண்டாவது நல்ல மழை பெய்ய வேண்டும் என ஏர்வாடி பகுதியில்   சிறப்பு தொழுகையும் மற்றும்  அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. 
    
இதையொட்டி நடத்தப்பட்ட பேரணியை ஏர்வாடி தர்கா முன் பகுதியில் தர்கா ஹக்தார் நிர்வாக சபைத் தலைவர் அம்ஜத்உசேன், செயலாளர் சாதிக்பாரூக் ஆலிம், உதவித் தலைவர் செய்யதுசிராஜுதீன் ஆகியோர் தலைமை ஏற்று தொடங்கி வைத்தனர். இஸ்மாயில் ஆலிம் துஆ ஓதினார். இந்தப் பேரணி நகரின் (3கிலோ மீட்டர்|) முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளிவாசல் ஊருணி பகுதியை அடைந்தது.
 
  நீரின்றி வறண்டு காணப்பட்ட அந்த ஊருணியின் மையப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் மழை வேண்டி சிறப்புத் தொழுகை நடத்தினர்..ஏராளமானோர் தொழுகையில் கலந்து கொண்டனர்.
 
ஆலிம் ஜகுபர் சாதிக் தலைமையில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது .இதில் தர்ஹா ஹக்தார் கமிட்டி உறுப்பினர் அஜ்மல் ரஹ்மான்,மாலிக் லெவ்வை,சோட்டை லெவ்வை,இருளாண்டி,பக்கிரி,நாகராஜ்,ராசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
சமீபத்தில் கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது

ஏர்வாடியிலிருந்து முதுகுளத்தூர், அபிராமம், வழியாக மதுரை வரை செல்லும் புதிய பஸ் வழித்தடம் துவக்கம்!


ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியிலிருந்து மதுரைக்கு புதிய பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைத்துப் பேசிய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் சுந்தரராஜ் முதல்வரின் திட்டங்களால் ராமநாதபுரம் விரைவில் முன்னேறிய மாவட்டமாகும் என்று தெரிவித்தார். 

        ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியிலிருந்து மதுரைக்கு புதிய பேருந்து வழித்தட தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காரைக்குடி பொது மேலாளர் மணிமுத்து தலைமை வகித்தார். ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா வரவேற்புரையாற்றினார். சேமிப்பு கிடங்கு வாரியத் தலைவர் முனியசாமி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சுந்தரபாண்டியன், முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் சுந்தரராஜ், ஏர்வாடியிலிருந்து சிக்கல், முதுகுளத்தூர், அபிராமம், வீரசோழன், நரிக்குடி வழியாக மதுரை வரை செல்லும் புதிய பேருந்து வழித்தடத்தை துவங்கி வைத்தார்.
 பின்னர் அவர் பேசும் போது, தமிழக முதல்வர் பொதுமக்களின் தேவைகளையும் எண்ணங்களையும் அறிந்து செயல்பட்டு வருகிறார். அரசின் அனைத்துத் திட்டங்களும் சிறப்பான முறையில் குறிப்பிட்ட காலங்களுக்குள் சென்றடைவதன் மூலம் நேர்மையான ஆட்சி நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி, முதுகுளத்தூர், திருவாடானை பகுதியில் ஆண்கள், பெண்கள் பயிலும் கலைக் கல்லூரிகளை வழங்கியுள்ளார். பரமக்குடியில் 500 ஏக்கர் பரப்பளவில் ரூ.920 கோடி முதலீட்டில் சூரிய மின்சக்தி பூங்காவில் 100 மெகாவாட் அளவிற்கு மின்உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் அனைத்துத் திட்டங்களின் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் விரைவில் முன்னேறுகின்ற மாவட்டமாக திகழும். ஏர்வாடி பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இப்பேருந்து காலை 9.20-க்கு ஏர்வாடியிலிருந்து புறப்பட்டு 2.10-க்கு மதுரை சென்றடையும். மாலை 2.30-க்கு மதுரையிலிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு ஏர்வாடி வந்தடையும் என்று பேசினார்.

  இந்நிகழ்ச்சியில் கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மூக்கையா, இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெயச்சந்திரன், கேபிள் முருகன், சாயல்குடி ஒன்றியச் செயலாளர் அந்தோனிராஜ், கடலாடி ஊராட்சி ஒன்றிய 5-வது வார்டு கவுன்சிலர் சவுந்தரபாண்டியன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர் பார்த்திபன், கிளை மேலாளர் சரவணன் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

மயில் வேட்டை! 3 பேர் கைது !3 பேர் தப்பி ஓட்டம்!



 
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வனச்சரகம் உத்திரகோசமங்கை உள்ளிட்ட அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இரை தேடும் மயில்களை சிலர் வேட்டையாடிச் செல்வதாக விருதுநகர் உதவி வனப்பாதுகாவலர் ஆனந்தக்குமாருக்கு தகவல் கிடைத்தது.  இதன் பேரில்  அவரது தலைமையில் வனவர் செல்லச்சாமி, வனக்காவலர்கள் வடமலையான், செந்தில்ராகவன் உள்ளிட்ட வன ஊழியர்கள் உத்திரகோசமங்கை பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

. அங்கு கடலாடி அருகே வீரம்பலை சேர்ந்த சார்லஸ், 43, எகோவா, 32, கிருஸ்டோபர், 35, சகோயி, 30, சத்தியராஜ்,25, பிரதீஸ் குமார், 25 ஆகிய ஆறு பேர் கொண்ட கும்பல் மயில்களை வேட்டையாடி கொண்டிருந்தனர்.

இதில் கடைசி மூன்று பேர் தப்பித்து ஓட்டம் பிடித்தனர்.


இறகுகள் அறுக்கப்பட்டு நிலையில் இருந்த 10 மயில்களில் நான்கு மயில்கள் இறந்த நிலையில் கிடந்தது.மற்ற ஆறு மயில்களையும் கீழக்கரை கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

வேட்டையாட பயன்படுத்திய ஹெட் லைட்,வலை,இரு சக்கர வாகனங்கள் மூன்று ஆகியவைகளை பறிமுதல் செய்து கீழக்கரை வன அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர்.வனத்துறையினர் நடத்திய விசாரணையில்,இறைச்சிக்காக மயில்களை வேட்டையாடி வருவதாகவும்,கிலோ 700 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும் தெரிவித்தனர்

 

Sunday, September 1, 2013

வபாத் அறிவிப்பு(காலமானார்)!






கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த, ஜனாப். ஹனீபா, ஜனாப்.ஜாகிர், ஜனாப். யூசுப், மர்ஹூம். ஜனாப். வாச்சா முஹைதீன், ஜனாப். செய்யது இபுறாஹீம் ஆகியோர்களின் தகப்பனார் 'சூப்புக் கடை அடுமை மாமா' என்று அன்போடு அழைக்கப்பட்ட 'Y.M.முகைதீன் அடுமை' அவர்கள்  (31.08.2013) சனிக் கிழமை மாலை மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்(காலமானார்கள்). 

அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் நடுத் தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் நடைபெற்றது.அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..

தொடர்புக்கு :  ஜனாப். ஹனீபா - 8807289100


தகவல்: சாலிஹ் ஹுசைன்


 

 

 

 
 


 


 

கீழக்கரை அருகே சிறுவனை வேலைக்கு அமர்த்தியவர் கைது!



சிறுவனை வேலைக்கு அமர்த்தியவரை போலீசார் கைது செய்தனர்.

கீழக்கரையை அடுத்துள்ள ஏர்வாடியில் குழந்தை தொழிலாளரை வேலைக்கு அமர்த்தி யிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மனித வர்த் தக கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜனார்த்த னன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அனிதா, சண்முகராஜேசுவ ரன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
 அப்போது ஏர்வாடி மெயின்ரோடு பகுதி யில் உள்ள தனியார் ரத்த பரி சோதனை நிலையம் ஒன்றில் வேலைக்கு அமர்த்தப்பட்டி ருந்த கல்பார் பகுதியை சேர்ந்த தனிக்கொடி என்பவரது 13 வயது மகனை போலீசார் மீட்டனர்.

சிறுவனிடம் நடத்திய விசா ரணையில் தனது தந்தை தனிக்கொடிக்கு உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் குடும்ப வறுமை காரணமாக சிறுவன் வேலைக்கு செல்வதா கவும், 7ம் வகுப்பு வரை படித்து விட்டு பாதியிலேயே வந்து விட்டதாகவும் தெரிவித்தான். இதனை தொடர்ந்து போலீசார் சிறு வனை மீட்டு குழந்தைகள் நலக்குழுமம் மூலம் காப்பகத் தில் சேர்த்தனர். மேலும் சிறு வனை வேலைக்கு அமர்த்திய ஏர்வாடி பகுதியை சேர்ந்த தாவூத் இபுராகீம் என்பவரது மகன் அகமது யாசின் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர.
குழ‌ந்தைக‌ள் ந‌ல‌த்துறை அதிகாரி ஒருவ‌ர் கூறுகையில்,

நாடு முழுவ‌தும் வீட்டு வேலைகள், உணவகங்கள், சாலையோர உணவகங்கள், கட்டுமானத் தொழில்,ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், தேனீர்க் கடைகள் மற்றும் பிற இடங்களில் 14வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்துவது த‌டை செய்யப்ப‌ட்டுள்ளது

14
வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்துவது குற்றச் செயலாகும்.

இதுபோல 14 வயதுக்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவோர் மீதுசட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாவார்க‌ள்.
இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனைஅல்லது ரூ.20,000 அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனைகிடைக்கும்.

 14
வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்துவதுசட்டப்படி குற்றம். அதுபோல செயல்படுபவர்கள் மீது 1986ம் ஆண்டு குழந்தைத்தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்தல்) சட்டத்தின் கீழ் ந‌ட‌வ‌டிக்கைக்கு உட்ப‌டுத்த‌ப்ப‌டுவார்க‌ள் என்றார்