Wednesday, December 11, 2013

கீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட..


கீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட..

weddingகீழக்கரையில் நடைபெறும் உங்கள் இல்ல திருமண நிகழ்ச்சி குறித்து “கீழக்கரை டைம்ஸ்” இணையதளத்தில் தகவல் வெளியிட, தங்கள் இல்ல திருமணப் பத்திரிக்கையை ஸ்கேன் செய்து  keelakaratimes@yahoo.com, hameedyas@gmail.com  e-mail முகவரிக்கோ அல்லது கீழக்கரை டைம்ஸின் முகநூல் இன்பாக்ஸிற்கோ  அனுப்பி வையுங்கள்.
உங்களின்   தொலைபேசி எண்ணை தவறாமல் குறிப்பிடவும்.

மேலும் செய்திகள் அறிய ... http://keelakaraitimes.com/wedding-invitation/ 

கீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி! பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு!


கீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி! பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு!

adhars card photo kilakarai


மேலும் விபரம் அறிய...  http://keelakaraitimes.com/information/   

கீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு முகாம்!


கீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு முகாம்!


msec pl
மேலும் படிக்க...... http://keelakaraitimes.com/mohamed-sathak/   
www.keelakaraitimes.com

Thursday, December 5, 2013

அறிவிப்பு ! கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்!


http://keelakaraitimes.com/category/keelakkarai-news/

அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்!

கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்பட தொடங்கி விட்டதால் செய்திகளை
http://keelakaraitimes.com/category/keelakkarai-news/ என்ற முகவரியில் காணலாம்.
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி !

அன்புடன்,

கீழக்கரை டைம்ஸ் குழுவினர்.

Wednesday, December 4, 2013

கீழக்கரை கல்லூரி அருகே வாகன விபத்து! 3 பேர் பலி! !


படம் மற்றும் விபரம் காண... கிளிக் செய்யவும்.... http://keelakaraitimes.com/?p=1463 , www.keelakaraitimes.com  



கீழக்கரைடைம்ஸ் இணையதளம் புது பொலிவுடன் 4ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி !


கீழக்கரைடைம்ஸ் இணையதளம் புது பொலிவுடன் 4ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி !




















கீழக்கரைடைம்ஸ் இணையதளம் புது பொலிவுடன் 4ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி !

 தொடர்ந்து செய்திகளை www.keelakaraitimes.com என்ற முகவரியில் காணலாம்


கீழக்கரைடைம்ஸ் இணையதளம் புது பொலிவுடன் 4ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி !
கீழக்கரை டைம்ஸ் இணையதளத்தில் பல்வேறு செய்திகளை காணும் வகையில் வீடியோ இணைப்புகள், கானொலிகள்,வருங்காலங்களில் நேரடி ஒளிபரப்பு உள்ளிட்ட பல் வேறு வசதிகளை வலைதளத்தில் இணைத்து புது பொலிவுடன் வெளியிடப்பட்டு நான்காம் ஆண்டு துவக்க நிகழ்ச்சியும் துபாயில் தனியார் உணவக உள் அரங்கில் நடைபெற்றது.
புது பொலிவுடன் தயாரான கீழக்கரை டைம்ஸ் இணையதளத்தை  அஹமது தெரு சங்க தலைவர் ஹமீதுகான் தொடங்கி வைத்து நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக கீழக்கரையை சேர்ந்த முன்னாள் பள்ளி ஆசிரியர் ஆத்திமுத்து  மகன் பிரபு பங்கேற்றார்.
ஈடிஏ கார்ஸ் நிறுவனத்தில் சீனியர் மேலாளராக பணியாற்றும் பிரபு பேசியதாவது,
கீழக்கரையில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் இணைப்பு பாலமாக இத்தளம் திகழ்கிறது.மேலும் கீழக்கரையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி குறித்த தகவல்கள் மாணவ மாணவியருக்கு பயனளிக்கும் வகையிலான பதிவுகள் இத்தளத்தில்  இடம்பெற வேண்டும் என்றார்.
காயிதேமில்லத் பேரவையின் பொருளாளர் ஹமீது ரஹ்மான் பேசும் போது,
கீழக்கரை டைம்ஸ் செய்தி வெளியிடும்போது அனைத்து தரப்பின் கருத்துக்களையும் பெற்று நடுநிலைமையாக வெளியிட்டுவருகிறது.இது தொடர வேண்டும்.ஊடகம் வலிமையானது அதை சரியான வகையிலும் நேர்மையான முறையில் மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் பயன்படுத்த வேண்டும் என்றார்.
அஸ்வான் அமைப்பின் நிர்வாகியும்,எழுத்தாளருமான கீழை ராஜா என்ற ராஜாக்கான் பேசுகையில்,
ஒருவன் வாழ்வில் முன்னேற்றத்தை அடைய பல்வேறு சோதனைகளையும்,வேதனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.துவக்கத்தில் குறைந்த அளவில் பார்வையாளர்கள் வருகை தந்த கீழக்கரை டைம்ஸ் வலைதளம் இன்று நமது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இதற்காக இக்குழுவினர் பல்வேறு சிரமங்களை சந்தித்தாலும் விடாமுயற்சியாக  தொடர்ந்து செயல்பட்டதால் இன்று சிறந்த வலைதளமாக முழுமை பெற்றுள்ளது.தொடர்ந்து சிறப்பாக செயலாற்ற என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.
கவிஞர் அஸ்வாக் பேசிய போது,
கீழக்கரையின் சுகாதார பிரச்சனைகளை சீர் செய்ய வேண்டும்.இதற்காக இத்தளத்தின் மூலம் கீழக்கரை மக்களின் உணர்வுகளை எடுத்துரைக்கலாம் என்று கூறி கவிதை ஒன்றை வாசித்தார்.
அதில் “நான் பிறந்த ஊரினில் நீ பிறந்து விட்டாய்
நான் பிரிந்து  வாழ்கின்றேன்
நீ என்னை ஊரோடு இணைக்கின்றாய்
சூரியன் பிறக்கு என் ஊர் கடலினை  நான் கண்டு பல நாட்கள் பறந்து போய் விட்டன
ஓ.. கீழக்கரைடைம்ஸ் நீ காண வைக்கின்றாய் உன் இணையதளம் வழியாக..
இவ்வாறு வாழ்த்துரையில் தெரிவித்தார்.
கீழக்கரை ரோட்டரி கிளப்பின் முன்னாள் நிர்வாகி ஆசாத் கூறுகையில் ,
கீழக்கரை டைம்ஸ் இணையதளம் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் என்றார்.
எம்.எம்.கே காசிம் பேசுகையில்
பள்ளி கல்லூரி மற்றும் அரசுத்துறை வெளியிடும் பயனுள்ள அறிவிப்புகளை ,அதற்கான அப்ளிகேஷன் பார்ம்களை டவுன்லோட் செய்து பயனடையும் வகையில் இணையதளத்தில் இணைக்க வேண்டும் என்றார்.
கீழை அஞ்சல் செய்தி பத்திரிக்கை நிறுவனர் கீழை ஜமீல் கூறுகையில்,
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றமைக்கு மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
நிகழ்வில் கீழக்கரையை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கீழக்கரை டைம்ஸ் குழுமத்தின் சார்பாக அஹமது குத்புதீன் ராஜா,ஹமீது யாசின்,யாசர் அரபாத் ,அஹமது அபுதாஹிர் மற்றும் கீழக்கரை கிளாசிபைட் எஸ்.கே.வி ஷேக் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.
குறிப்பு :- இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் தொலைபேசி,இணையதளம் மூலம் வாழ்த்து தெரிவித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் கீழக்கரை டைம்ஸ் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

Tuesday, December 3, 2013

கீழக்கரை - ராமநாதபுரம் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து! தொடரும் சம்பவங்கள்!


படங்கள் : கார்த்திக்

கீழக்கரை - ராமநாதபுரம் சாலையில் ஆர்.எஸ்.மடையில் நேற்று தண்ணீர் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் காயமடைந்த லாரி டிரைவர் ராமநாதபுரம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த செல்வேந்திரன் என்பவர்  கூறியாதாவது,

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக தினமும் இச்சாலையில் விபத்துக்கள் நடைபெற்றவாறு  உள்ளது.இச்சாலையில் கண்காணிப்பு கேமரா அமைப்பது, போக்குவரத்து ரோந்து காவலர்கள் கண்காணிப்பு என்பதையெல்லாம் செயல்படுத்தில் போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தி விபத்துக்களை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்து எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றார்

நேற்று முன் தினம் இச்சாலையில் லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடதக்கது.

கீழக்கரை உள்ளிட்ட சுற்றுபகுதிகளில் தொடர் மழை! மழை நீர் சேமிப்பை செயல்படுத்த வேண்டுகோள்!

 Photo : Muzammil safiyullah
photo : Sabeer Ali

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையின்றி கிணறுகள் ,குளங்கள் வறண்டு கடும் வறட்சி நிலவி வந்தது.இதையோட்டி பல்வேறு இடங்களில் மழை வேண்டி சிறப்பு தொழுகை,பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அனைவரின் கவலையை போக்கும் வகையில் மாவட்டத்தில் கீழக்கரை  உள்ளிட்ட பல்வேறு  இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் நீர் நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.இது குறித்து பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இது குறித்து கீழக்கரை அலி பாட்சா கூறுகையில்..

நம்முடைய ரட்ஷகன் கடந்த சில தினங்களாக கீழக்கரையில் அருள் 
மழையை பொழிந்து கொண்டு இருக்கிறான். அவன் கூறிய திருமறை 
வசனங்களை மெய்பித்து விட்டான்.

ஆனால் நாமே..... மழை நீர் சேமிப்பை மறந்து விட்டோம். பலர் இது 
விஷயத்தில் அறவே விழிப்புணர்வு பெறவில்லை.சிலர் இதன் அருமை 
புரியாமல் ஏனோ தானோ என செய்து இருக்கிறார்கள்.மற்றும் மிகச் சிலர் 
முறையாக செய்து இறையோனின் சந்தோஷத்திற்கு ஆளாகி 
இருக்கிறார்கள்.எனவே மழை நீரை சேமிக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றார்.

Sunday, December 1, 2013

கீழக்கரை மாணவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று மாநில போட்டிக்கு தகுதி!



சிவகங்கை மண்டல அளவிலான குத்துசண்டை போட்டி சிவகங்கை மாவட்டம் புதுவயலில் நடைபெற்றது.

அதில் கீழக்கரை  இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை பள்ளி யை சேர்ந்த மாணவர் முகம்மது ஜீபைர் கான்(54 - 57) எடை பிரிவில் தங்க பதக்கத்தை பெற்று முதலிடத்தை பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்கள்.

அசீம் ரஹமான் சீனியர் (52 - 54) எடை பிரிவில் இரண்டாம் இடத்தையும் சுகையில் சூப்பர் சீனியர் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

வெற்றி பெற்ற மாணவர்களையும்,உடற்கல்வி ஆசிரியர் சசிகுமார்  ஆகியோரை பள்ளியின் தாளாளர் முகைதீன் இப்ராஹிம் முதல்வர் மேபல் ஜஸ்டிஸ்  மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.

இது குறித்து மாணவர் ஜீபைரின் தந்தை எஸ்.எஸ். மீரான் கூறியதாவது,

என் மகன் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.இவரது முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்கும் பள்ளி நிர்வாகத்துக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். என்றார்.


உங்கள் வாழ்த்துக்களை மீரானுக்கு கூறலாம்
தொடர்பு எண்: 050 5092601




ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் எஸ்டிபிஐ போட்டி ! மாவட்ட பொதுச்செயலாளர் அறிக்கை!




இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)இராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் கனி  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடக்கவிருக்கின்ற 2014 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 10 இடங்களில் போட்டியிட எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைமை முடிவு செய்துள்ளது.அதில் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியும் இடம் பெற்றுள்ளது.பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறோம்.

பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவும்,ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழுவும் நியமிக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது.மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் இராமநாதபுரம்,திருவாடானை ஆகிய தொகுதிகளில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று விட்டது.

 டிசம்பர் 01 ன்று முதுகுளத்தூர்,பரமக்குடி ஆகிய சட்டமன்ற தொகுதியை சார்ந்த செயல்வீரர்கள் கலந்து கொள்ளும் பாராளுமன்ற தேர்தல் கலந்தாய்வு  கூட்டம் சாயல்குடியில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் நூர்ஜியாவுதீன் தலைமை தாங்குகிறார்.மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது,வர்த்தக அணி மாநில செயலாளர் செரீப் சேட்,எஸ்டிடியூ (தொழிற்சங்கம்)மாநில பொருளாளர் கார்மேகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்கள்.     

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கீழக்கரை - ராமநாதபுரம் சாலையில் லாரிகள் மோதி விபத்து !



கீழக்கரை - ராமநாதபுரம் சாலையில் டேங்கர் லாரியும் ,சரக்கு லாரியும் நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டது.

நேற்று இரவு நடைபெற்ற இவ்விபத்தில் ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டு உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனால் நேற்று இரவு அச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

Thursday, November 28, 2013

இஸ்லாமியா பள்ளியில் சமையல் கலை நிகழ்ச்சி!ஏராளமான மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்பு!











இந்நிலையில் சமையல் கலை ஆர்வத்தை வளர்க்கும் விதமாக கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி சார்பில் பள்ளி மாணவியருக்கான சமையல் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 10, +1 ,+2 மாணவியர் பங்கேற்று புதிய வகை உணவுகளை தயாரித்து பார்வைக்கு வைத்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்காக  பள்ளியில்  பிரத்யோகமாக  சமையல் கூடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் நூற்றுக்கணக்கான உணவு வகைகளை மாணவியர் தயாரித்திருந்தனர்.இதில் தந்தூரி வகை உணவுகள்,வட நாட்டு உணவு வகைகள்,சில்லி சிக்கன்,ஸ்டப்ட் ப்ரோட்டா,குலோப்ஜாம்,கேரட் அல்வா  மற்றும் புதிய சிறுதானியங்களை கொண்டு தயாரித்த உணவுகளான கம்பு இட்லி, கம்பு சட்னி, ராகி தோசை,சோள தோசை, உள்ளிட்ட  வித விதமான சைவ மற்றும் அசைவ வகைகளை உருவாகியிருந்தனர்.
கீழக்கரை ஸ்பெசல் உணவான வட்டலப்பமும் செய்திருந்தனர்.
மேலும் புதிய வகை உணவுகளை தயாரித்து மாணவியரே புதிய பெயரிட்டு மெனுவாக தயார் செய்திருந்தனர்.இந்த உணவு வகைகளை உண்ணுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி மாணவியர் விளக்கினர்.


மிகுந்த ஆர்வத்துடன்  இந்நிகழ்ச்சியில் மாணவியர் பங்கேற்றனர்.இவர்களின் சமையல் படைப்புகளை பள்ளி நிர்வாகிகள்,ஆசிரிய ஆசிரியைகள் பார்வையிட்டு   பாரட்டினர்.



இது குறித்து பள்ளியின் தாளாளர் முஹைதீன் இப்ராஹிம் கூறுகையில்

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற சிலரின் சொல்வழக்கை புறந்தள்ளி இக்காலத்தில் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். 

இன்று படிக்கும் பெண்களுக்கு சமையல் எதற்கு என்று சொல்வது போன்று சமையல் செய்யவே தெரியாது என்று பெண்களில் ஒரு பகுதியினர் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக எங்கள் பள்ளி மாணவியரின்  சமையல் கலை ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம்.

பங்கேற்ற மாணவியரின் ஆர்வத்தை காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது.மேலும் இனி ஒவ்வொரு வருடமும் இது போன்று நிகழ்ச்சிகள் பள்ளியில் நடத்தப்படும்.

மேலும் சத்து பற்றாக்குறையை தவிர்க்க பழைய உணவு வகைகளை நாம் உண்ணும் உணவில் சேர்ப்பது அவசியம் எனபதை உணர்த்தும் வகையில்  சிறுதானியங்களைக்கொண்டு தயாரிக்கும் உணவினை உண்ணும் பழக்கத்தினை குழந்தைகளிடையே ஏற்படுத்த வேண்டும். நமது நாட்டின் பாரம்பரிய உணவுப்பயிர்களான கம்பு, கேழ்வரகு,   கைக்குத்தல் அரிசி, கோதுமை ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைளை சாப்பிட்ட நமது முன்னோர்கள் ஆரோக்கியத்துடனும், உடல் பலத்துடனும் இருந்தனர். என்றார்.

கல்லூரி மாணவியருக்கு அதிகளவில் இவ்வகையான நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
முதல் முறையாக கீழக்கரையில் பள்ளி மாணவியருக்கு சமையல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடதக்கது.






Wednesday, November 27, 2013

பேருந்து நிலைய வணிக வளாகம் ஒரு பகுதி இடிந்து சேதம்!மெத்தனமாக இருப்பதாக நகராட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்


கீழக்கரை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வணிக வளாகத்தின் சேதமடைந்த பகுதி உடைந்து டூவீலர் மீது விழுந்து கிடக்கிறது.
கீழக்கரை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் டூவீலர் ஒன்று சேதமடைந்தது. இது மக்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் விழுந்ததால் உயிர் பலி தவி்ர்க்கப்பட்டது.
கீழக்கரை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இது கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வளாகத்தில் தற்போது மீன், காய்கறி கடைகளும் கூட்டுறவு ரேஷன் கடையும் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த வளாகத்தில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.
இந்த வணிக வளாகத்தின் சைன்சைடு பகுதி பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் இருந்தது. மக்கள் நடமாட்டம் உள்ள பகல் நேரத்தில் விழுந்தால் உயிர் பலி ஏற்படக்கூடும். அதனால் நகராட்சி நிர்வாகம் சைன்சைடு பகுதியை புதுப்பிக்க வேண்டும் என்று கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தினகரன் செய்தி வெளியிட்டிருந்தது. இதை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த வணிக வளாகத்தின் சைன்சைடு பகுதி திடீர் என்று இடிந்து விழுந்தது. அதில் அங்கிருந்த டூவீலர் ஒன்று சேதமடைந்தது. இது பகல் நேரத்தில் நடந்திருந்தால் உயிர் பலி ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
21வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரகாஷ் கூறியதாவது: “நகராட்சியின் பழமையான வணிக வளாகத்தை சீரமைக்க பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகளும், தலைவரும் கூறினார்கள். ஆனால் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இது இரவு நேரத்தில் நடந்ததால் உயிர் பலி தவிற்க்கப்பட்டுள்ளது. இதனியாவது நகராட்சி வணிக வளாகத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்நிலையில் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, கீழக்கரையில் சேதமடைந்துள்ள நகராட்சியின் வணிக வளாகத்தை இடித்து விட்டு புதியதாக கட்டுவதற்கு வலியுறுத்தியும்,நகராட்சி திட்டப்பணிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் இவற்றை கண்டித்து ஆர்ப்பட்டம் மற்றும் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் நகர் செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருணாகரன் ,குருவேல் ,மாவட்ட குழு உறுப்பினர்கள் ரவி,கல்யாணசுந்தரம்,கண்ணகி முன்னிலை வகித்தனர். மேலும் நிர்வாகிகள் விக்டர்,கருப்பசாமி,முருகேஷ்குமார்,பழனிசாமி, உள்ளிட்ட ஏராளமானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பல ஆண்டுகளாக பலனில்லாத மின்சார டிரான்ஸ்பார்மர்!


கீழக்கரை 21வது வார்டு வடக்குத் தெரு தட்டான் தோப்பு அருகில் அமைக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத மின்சார வாரிய டிரான்ஸ்பார்மர்.
கீழக்கரையில் 4 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள டிரான்ஸ்பார்மரை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை 21வது வார்டு வடக்குத் தெரு கொந்தக்கருணை அப்பா தர்ஹாவுக்கு அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் அதிகளவிலான வீட்டு மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதானல், சீரான மின்சாரம் கிடைக்காததால் வீடுகளில் அடிக்கடி மின் இணைப்பு பழுதடைந்து வந்தது. கூடுதலாக ஒரு டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என்று கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
உடனடியாக நடவடிக்கை எடுத்த மின்சார வாரிய அதிகாரிகள் தட்டான் தோப்பு பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மரை அமைத்தனர். இதிலிருந்து ஒரு சில மாதங்களில் புதிய இணைப்புகள் கொடுக்கப்பட்டுவிடும், பழைய டிரான்ஸ்பார்மரில் உள்ள பெரும்பகுதியான இணைப்புகள் மாற்றப்படும். அதன் பிறகு எந்த வீடுகளில் மின் இணைப்பு பழுது ஏற்படுவது முழுமையாக தீர்க்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
ஆனால், அதிகாரிகள் கூறியது எதுவுமே நடக்கவில்லை. புதியதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. துருபிடித்து வீணாகி வருகிறது. பொது மக்களின் நலன் கருதி 4 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு கொண்டுவராத டிரான்ஸ்பார்மரை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கீழக்கரையில் பூட்டியிருந்த வீடு புகுந்து 8 பவுன் நகை திருட்டு!மர்ம ஆசாமிகளை போலீஸ் தேடுகிறது!


கீழக்கரை அஹமது தெருவை ஹசனா லெப்பை மனைவி ரஹ்மான் பீவி(49) இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்த நேரத்தில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டிலிருந்த சுமார் 1 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள 8 1/2 பவுன் மதிப்புள்ள நகையை திருடி சென்றுள்ளதாக காவல் துறையில் புகார் செய்தார்.

இதன் பேரில் எஸ்.ஐ கோட்டைசாமி தலைமியிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறனர்.

கீழக்கரையில் பிடிபட்ட இருதலைமணியன் பாம்பு!வனத்துறையிடம் ஒப்படைப்பு!


 old (file picture)

கீழக்கரை தொலைபேசி நிலைய வாசல் பகுதியில் இருந்து துணை போலீஸ் சூப்பி ரண்டு அலுவலக பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு சுமார் 3 அடி நீளமுள்ள இருதலை மணியன் பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதனை கண்டவர்கள்  ஏர்வாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.


இதையடுத்து வனச்சரகர் ஜெயராமன் உத்தரவின் பேரில் வனவர் இன்னாசிமுத்து தலைமையிலான ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று இரு தலைமணியன் பாம்பை கைப் பற்றினர். ஏர்வாடி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்ற பின்னர் நேற்று காலை திருப்புல்லாணி அருகே சதுப்புநில காட்டு பகுதியில் அந்த பாம்பை கொண்டு சென்றுவிட்டனர்.


photo : thanks.Dinathanthi (Mr.Azad)

இதேபோல ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தினக ரன் என்பவரது வீட்டு முருங்கை மரம் அருகில் அதிசய பறவை ஒன்று மயங்கிய நிலையில் நின்று கொண்டிருந்தது. நீண்டநேரம் அசைவற்று நின்று கொண்டிருந்ததால் சந் தேகமடைந்த தினகரன் இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து ராமநாத புரம் வனச்சரகர் கணேசலிங் கம் தலைமையிலான வனத் துறையினர் அந்த பறவையை பிடித்தனர்.அப்போது இது அபூர்வ வகையான நீலத்தாழை கோழி  எனப்படும் "பர்ப்பிள் சுவாப் ஹென்'. அழகாக காட்சியளிக்கும் இவை, பெரும்பாலும் நதிகள், குளங்கள் உள்ளிட்ட சதுப்பு நிலங்களில் வசிக்கும். எளிதில் காண முடியாத வகையில் புதர்களில் மறைந்தே வாழும். புழுக்கள் மற்றும் சிறிய மீன் குஞ்சுகளை உணவாக உட்கொள்ளும். பறவைகள் அதிகபருந்து உள்ளிட்ட பறவைகள் தாக்கியதால் அது அதிர்ச்சியில் அப்பகுதியில் நின்றிருக்கக்கூடும் என்றும் வனத்துறையினர் தெரிவித்த னர். மேலும் அந்த பறவைக்கு சிகிச்சை அளித்து தேவிபட்டி னம் வனப்பாதுகாப்பு இடத் தில் காட்டுப்பகுதியில் கொண்டு போய்விட்டனர்.


கீழக்கரை அருகே கிணறு தோண்டும் போது விபத்து! புதைந்த இருவர் மீட்பு!


 படம் : பாலாஜி ,சன் ரைஸ் ஸ்டுடியோ

 கீழக்கரை அருகே ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், கிணறு தோண்டியபோது, மண் சரிந்ததில், மண்ணிற்குள் புதைந்த இருவர், உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், ரூ.1.40 கோடி ரூபாயில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக, ராமநாதபுரம் ஒப்பந்ததாரர் அருணகிரி ஏற்பாட்டில், தலைமை ஆசிரியர் அறை அருகே, கிணறு தோண்டும் பணியை, பாப்பாக்குடியை சேர்ந்த 5 பேர், நேற்று காலை 9.30 மணிக்கு துவங்கினர்.

மதியம் 12.40 க்கு திடீரென மண் சரிந்தது. இதில் இளையராஜா, 29, கழுத்தளவுக்கும், கருப்பையா, 30, இடுப்பளவுக்கும் மண்ணுக்குள் புதைந்தனர். ஏர்வாடி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 3 மண் அள்ளும் இயந்திரங்களின் உதவியுடன், மண்ணை அள்ளினர். 

கழுத்தளவிற்கு புதைந்த இளையராஜா மூச்சு விட திணறியதால், டியூப் மூலம் ஆக்சிஜன் செலுத்தி, முதலுதவி அளித்தனர். 2 மணி நேர முயற்சிக்கு பின், இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 
இதில் காலில் பலத்த வலி காரணமாக இளையராஜா, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கருப்பையா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.


Tuesday, November 26, 2013

வபாத் அறிவிப்பு (காலமானார் )!


கீழக்கரை கிழக்குதெருவை சேர்ந்த மர்ஹீம் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகனும் ,மர்ஹூம் செய்யது முஹம்மது(காட்டரபி) மர்ஹீம் அரபி ஷாஹுல் ஹமீது,மர்ஹும் கதீஜா உம்மா மற்றும் அரபி ஹம்ஷா ஆகியோரின் சகோதரரும்,
மர்ஹூம் உம்மு ஹபீபா ஆகியோரின் கணவரும் ஹலிஃபுதீன் ,ஷபியுதீன் ,ரபீஷா ஆகியோரின் தகப்பானாரும்,அரபி நூர்ல் அமீன் அவர்களின் மாமனாரும்,நுஃமான்,ஜபருல்லாஹ்,கன்ஸுல்லாஹ் ஆகியோரின் மாமாவும்,
அமீன் ஸாஹிப்,நிஸார்,நூருல் ஆபிதீன்,இஸ்மாயில்,அஜ்மல்,அஸ்ஃபர்,நூர் முஹம்மது,இஸ்மாயில் மரிக்கா ஆகியோரின் பெரியவாப்பாவுமான ஜனாப் செய்யது அப்துல் காதர்(85) பெரிய அரபி அவர்கள் இன்று (26/11/13) வபாத்தானார்கள்(காலமானார்)

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி இராஜிவூன்.

அன்னாரின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு அவ‌ர‌து குடும்பத்தினர் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.


தகவல்: இஸ்மாயில் மரிக்கா