Saturday, May 18, 2013

குடிநீர் விநியோக‌த்திற்க்காக‌ மாலாக்குண்டுவில் 5 ஆண்டுக‌ளுக்கு பிற‌கு கிண‌றுக‌ள் தூர் வாரும் ப‌ணி!



கீழக்கரையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு காணும் வகையில் மாலாக்குண்டுவில் உள்ள குடிநீர் கிணறு ஐந்து ஆண்டுகளுக்கு பின் தூர்வாறும் பணி நடைபெறுகிறது.கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
கீழக்கரையில் காவிரி நீர் முழுமையான அளவு சப்ளை செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்க‌ பெறும் சிர‌ம‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். போதியளவு குடிநீர் கிடைக்காததால் மாட்டுவ‌ண்டி ம‌ற்றும் லாரி நீரை விலைக்கு வாங்கும் நிலை உள்ளது.இந்நிலையில் ந‌க‌ராட்சி சார்பில் முதற்கட்டமாக இரண்டு மாதங்களுக்கு வாகனங்களில் மக்களுக்கு குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது.மக்களுக்கு கூடுதலாக குடிநீர் வழங்கும் வகையில் மாலாக்குண்டுவில் உள்ள குடிநீர் கிணற்றை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.
 நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா கூறியதாவது;
மாலாக்குண்டுவில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மூன்று குடிநீர் கிணறுகள் உள்ளது.கடந்த ஐந்து ஆண்டுளுக்கு மேலாக‌  பராமரிப்பு இல்லாமல் இருந்த வந்தது.மக்களுக்கு கூடுதலாக குடி நீர் வழங்கும் வகையில் மூன்று கிணறுகளும் தற்போது தூர் வாரப்படுகிறது.கிணறுநீரை குடிநீர் வடிகால் வாரிய பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டு அவர்களது ஒப்புதல் கிடைத்ததும், தலைமை நீரேற்று நிலையத்திற்கு குழாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்படும். இதன் மூலம் தினமும் கூடுதலாக ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

தற்போது சுழற்சிமுறையில் அனைத்து வார்டு
களுக்கும் லாரி மற்றும் டிராக்டர்களில் இலவசமாக நாள்தோறும் 72 ஆயிரம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.லாரி செல்ல முடியாத பகுதிகளுக்கு டிராக்டர் மூலமாக தண்ணீர் வழங்கப்படுவதால் குடி த‌ட்டுப்பாடு ஓர‌ள‌வு குறைந்துள்ள‌து என்றார்.

 

Friday, May 17, 2013

கீழ‌க்க‌ரை 18வ‌து வார்டில் கிண‌ற்றுநீரில் க‌ழிவுநீர் க‌ல‌ந்து அசுத்த‌ம்!ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ கோரிக்கை!






கீழ‌க்க‌ரை தெற்குதெரு ப‌குதியில் சில‌ வீடுக‌ளில் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ கிண‌றுக‌ளில் கிடைக்கும் நீரில் சாக்க‌டை க‌லந்து வ‌ருவ‌தால் கிண‌ற்று நீரை ப‌ய‌ன்ப‌டுத்‌த‌ முடியாத‌ அபாய‌ சூழ்நிலை ஏற்ப‌ட்டுள்ள‌து. உட‌ன‌டியாக‌ இது குறித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென‌ பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் கோரிக்கை விடுத்துள்ளன‌ர்.

18 வது வார்டு பகுதியில் 18/ 148 வது நம்பர் வீட்டிலும் ,அது போல 18/225 எண் கொண்ட‌ வீட்டிலும் இன்னும் சில‌ வீடுக‌ளிலும் இது போன்ற‌ சூழ்நிலை நில‌வுவ‌தாக‌ கூறுகின்ற‌ன‌ர். இது குறித்து அவ‌ர்க‌ள் கூறிய‌தாவ‌து இப்பகுதியில் கிணறுகளில், தண்ணீர் சாக்கடை நீராக மாறி வருகிறது. இதனால் நோய் பரவும் நிலை உள்ளது. தினந்தோறும் குழந்தைகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டியது உள்ளது. வீடுகளில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை. வீடுக‌ளில் பயன்படுத்தி வந்த கிணற்று நீர், சாக்கடை நீராக மாறி  எத‌ற்கும் பயன்படுவதில்லை.இவ்வ‌ழியாக‌ செல்லும் க‌ழிவுநீர் கால்வாயில் குப்பைக‌ள் நிறைந்து நீண்ட‌ கால‌மாக‌ க‌ழிவு நீர் தேங்கி நிற்ப‌தால் இப்ப‌குதியில் கிண‌றுக‌ளில் சாக்க‌டை ‌கல‌ந்திருக்க‌லாம்.இப்பிர‌ச்சனையிலிருந்து ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் எங்க‌ளை காப்பாற்ற‌ வேண்டும் இவ்வாறு அவ‌ர்கள் தெரிவிக்கின்ற‌ன‌ர்.

இது குறித்து ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர் த‌ங்க‌ம் ராதாகிருஸ்ண‌ன்  கூறிய‌தாவ‌து,

இத‌ற்கு ‌ பாதாள‌ சாக்க‌டை திட்ட‌மே நிர‌ந்த‌ர‌ தீர்வாகும்.கீழ‌க்க‌ரையில் எதிர்கால‌த்தில் பெரும்பாலான‌ கிண‌றுக‌ளில் இது போன்று சாக்க‌டை க‌ல‌க்கும் சூழ்நிலை ஏற்ப‌ட்டால் நீர் ஆதார‌மே பாதிக்க‌ப்ப‌டும் அபாய‌ம் உள்ள‌து.

பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக அமைத்து பராமரிக்கும் பட்சத்தில், பொதுமக்களின் ஆரோக்கத்துக்கு நிரந்தர பயனளிக்கும். கழிவு நீர், சாக்கடை நீர் திறந்த வெளியில் தேக்கம் தவிர்க்கப்படும். துர்நாற்றம் வீசுவது தவிர்க்கப்படும். வீட்டிற்குள் அமைக்கும் செப்டிக் டேங்க் அவசியமில்லை. கொசுவினால் பரவும் யானைக்கால் நோய் முற்றிலும் தடுக்கப்படும். நோய் பரப்பும் சில பூச்சுகள், கிருமிகள் உற்பத்தியை தடுத்து நோய் பரவுதை தடுக்கலாம். கழிவு நீர் தேக்கத்தால் கிணற்று நீர், ஆழ்த்துளை கிணற்று நீர் மாசுப்படுவது தவிர்க்கப்படுகிறது. பன்றி போன்ற விலங்கினங்களின் தொல்லை குறையும்.

மழைக்காலத்தில் சாக்கடை நீருடன் மழை நீர் கலந்து சாலைகளில் வழிந்து ஓடாது. பாதாள சாக்கடையில் வெளியேற்றப்படும் கழிவுநீரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தர நிர்ணயப்படி சுத்தம் செய்வதால், அந்நீரை விவசாயத்திற்கு மீண்டும் பயன்படுத்தலாம்.  விவசாயத்திற்கு சுத்திரிக்கப்பட்ட சாக்கடை நீர் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். அதனால், சுற்றுப்புற‌ சுகாதார மேம்பாட்டிற்கு நிரந்தர பயன் அளிக்கும்.த‌ற்போது கீழ‌க்க‌ரையின் க‌ழிவு நீர் சுத்திக்க‌ப‌டாம‌ல் நேர‌டியாக‌ க‌ட‌லில் க‌ல‌க்கிற‌து இத‌னால் க‌ட‌ல் நீர் மாச‌டைகிற‌து.இத்திட்ட‌ம் செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட்டால் க‌ட‌ல் நீர் மாடைவ‌து த‌டுக்க‌ப்ப‌டும்.கீழ‌க்க‌ரை சுகாதார‌ம் மேம்ப‌டும் என்றார்.

இது குறித்து ந‌க‌ராட்சி தலைவ‌ர் ராவித்துல் க‌த‌ரியாவிட‌ம் கேட்ட‌ போது,

க‌ழிவு கால்வாய்க‌ளில் குப்பைக‌ளை போடாதீகள் ப‌ல‌முறை வேண்டுகோள் விடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.குப்பைக‌ளை அதில் வீசினால் நாம்தான் பாதிக்க‌ப்ப‌வோம் என்ப‌தை வீசுப‌வ‌ர்க‌ள் ஏன் நினைப்ப‌தில்லை.குப்பைக‌ள் அக்ற்ற‌ப்ப‌ட்டு க‌ழிவு நீர் தேங்காம‌ல் இருப்ப‌த‌ற்கும் ந‌ட‌வ‌டிக்க‌ எடுக்க‌ப்ப‌டும் மேலும் குறிப்பிட்ட‌ விடுக‌ளில் உள்ள‌ கிண‌ற்று நீரில் சாக்க‌டை நீர் கல‌ந்து வ‌ருவ‌து எத‌னால் என்று அறிந்து உட‌ன‌டியாக‌ ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ப்ப‌டும்.இது போன்ற‌ குறைக‌ள் இருக்கும் ப‌ட்ச‌த்தில் ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் என்ற‌ முறையில்  என்னிட‌ம் அலுவ‌ல‌க‌த்தில் தெரிவிக்கால‌ம் என்றார்





 

கீழ‌க்க‌ரை சேரான் தெரு ப‌குதி குப்பைக‌ளை அக‌ற்ற‌ ந‌க‌ராட்சிக்கு‌ வேண்டுகோள்!



கீழ‌க்க‌ரை சேரான் தெரு ப‌குதியில் குப்பைக‌ளை நிறைந்து காண‌ப்ப‌டுவ‌தால் சுகாதார‌ கேடு ஏற்ப‌டும் நிலை உள்ள‌தாக‌வும் உட‌ன‌டியாக‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென‌ அப்ப‌குதி ம‌க்க‌ள் கோர்க்கை விடுத்துள்ள‌ன‌ர்.

இது குறித்து  ஆசிக் ம‌ரைக்க‌ கூறிய‌தாவ‌து,

இப்ப‌குதியில் ம‌க்க‌ள் தாங்க‌ளே ப‌ண‌ம் செல‌வ‌ழித்து சுத்த‌ம் செய்து வைத்திருந்த‌ன‌ர்.ஆனால் த‌ற்போது ந‌கராட்சி ப‌ணியாள‌ர்க‌ளே ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் சேரும் குப்பைக‌ளை இப்ப‌குதியில் கொட்டி விட்டு செல்கின்ற‌ன‌ர்.இத‌னால் இப்ப‌குதியில் மீண்டும் குப்பைக‌ள் குவிந்து அசுத்த‌மாக‌ காண‌ப்ப‌டுகிற‌து.என‌வே ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் மேலும் இது குப்பைக‌ளை கொட்டி விட்டு அக‌ற்றாம‌ல் செல்லும் ப‌ணியாள‌ர்க‌ளை கண்காணித்து உரிய‌ தீர்வு காண‌ வேண்டும் இவ்வாறு அவ‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.

Thursday, May 16, 2013

(காலமானார்கள்) வபாத் அறிவிப்பு !


கீழக்கரை ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளி ஜமாத்தை சேர்ந்த‌ சேகு முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ளின் ம‌க‌னும்,சேகு நெய்னா அவ‌ர்க‌ளின் ம‌ரும‌க‌னும், பி.எஸ்.எம். பதுரு ஜ‌மான் அவ‌ர்க‌ளின் ச‌கோத‌ருமான‌ பி.எஸ்.எம் உபைதுல்லா அவ‌ர்க‌ள் வபாத்தானார்க‌ள்(கால‌மானார்க‌ள்). (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).

அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

த‌க‌வ‌ல் : ப‌ர‌க்க‌த் அலி

தொடர்பு  :- செய்யது அபு சாலிஹ் - 9944541789
 

தெற்கு தெரு ப‌குதியில் காண்ட்ராக்ட‌ரின் த‌ர‌ம‌ற்ற‌ ப‌ணியால் மீண்டும் சுகாதார‌ கேடு!2 நாட்க‌ளில் க‌ழிவுநீர் தொட்டிக‌ள் உடைந்த‌தாக‌ க‌வுன்சில‌ர் புகார்! ந‌ட‌வ‌டிக்கை எடுக்க கோரிக்கை!




கீழக்கரை தெற்குத்தெரு பகுதியில் க‌ழிவுநீர் குழாய்களில் அடிக்கடி அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடி பள்ளி மாணவர்களுக்கும்,மசூதி மற்றும் பெண்கள் மசூதி ஆகியவற்றிற்கு செல்லும் பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டு வந்தது.இது குறித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ பொதும‌க்க‌ள் ந‌க‌ராட்சிக்கு கோரிக்கை விடுத்து வ‌ந்த‌ன‌ர்.

இந்நிலையில் அப்ப‌குதி க‌வுன்சில‌ர் ஆனா மூனாவின் கோரிக்கையின் பேரில் கீழக்கரை நகராட்சி நிர்வாக‌ம்  அப்பகுதியில் அடைப்புக‌ளை ச‌ரி செய்து புதைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ 4 இன்ச் அள‌வுள்ள‌ கழிவுநீர் குழாய்களை அக‌ற்றி விட்டு 8 இன்ச் பெரிய கழிவுநீர் குழாய்கள் ப‌திக்க‌வும்,க‌ழிவு நீர் தொட்டிகளை சீர்‌ செய்ய‌ கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி சார்பில் த‌னியார் காண்ட்ராக்ட‌ர் மூல‌ம் ப‌ணி ந‌டைபெற்ற‌து முடிந்த‌து.ஆனால் த‌ற்போது புதியதாக‌ அமைக்க‌ப்ப‌ட்ட‌ க‌ழிவு நீர் தொட்டிக‌ள் சேத‌ம‌டைந்ததால் முன்பு போல் க‌ழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிற‌து.

இது குறித்து தெற்குதெரு ஜ‌மாத் நிர்வாக‌ அலுவ‌ல‌ர் பெரிய‌ காக்கா என்ற‌ காத‌ர் கூறிய‌தாவ‌து,
த‌ற்போது மீண்டும் க‌ழிவு நீர் தொட்டிக‌ள் உடைந்தும்,க‌ழிவு நீர் குழாயிலிருந்து க‌ழிவு நீர் வெளியேறி தெற்கு தெரு ப‌ள்ளிவாச‌ல் அருகில் ஆறாக‌ ஓடுகிற‌து.இத‌னால் இப்ப‌குதியில் தொழுகைக்கு வ‌ருப‌வ‌ர்க‌ள்,பெரிய‌வ‌ர்க‌ள்,குழ‌ந்தைக‌ள் ந‌ட‌ந்து செல்வ‌த‌ற்கு மிக‌வும் சிர‌ம‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.மேலும் நோய் ப‌ர‌வும் வாய்ப்பும் ஏற்ப‌டும் என‌வே உட‌ன‌டியாக‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்.

இது க‌வுன்சில‌ர் ஆனா மூனா என்ற‌ழைக்க‌ப்ப‌டும் முகைதீன் காத‌ர் சாகிப் கூறிய‌தாவ‌து,
ரூ 1ல‌ட்ச‌த்து 20 ஆயிர‌ம் ம‌திப்பீட்டில் இப்ப‌ணிக‌ள் ந‌டைபெற்ற‌ன‌ ஆனால் த‌ர‌மற்ற‌ ப‌ணியால் க‌ழிவு நீர் தொட்டிக‌ள் இர‌ண்டே நாட்க‌ளில் உடைந்தது.உட‌னே நான் புகார் தெரிவித்தேன் சில‌வ‌ற்றை காண்ட்ராக்ட‌ர் ச‌ரி செய்தார் ஆனாலும் ப‌ணிக‌ள் த‌ர‌மில்லாத‌தால் த‌ற்போது க‌ழிவு நீர் சாலையில் ஆறாக‌ ஓடுகிற‌து.இப்ப‌ணிக‌ளை மேற்கொண்ட‌ ஒப்ப‌ந்தார‌ரை இப்ப‌ணிக‌ளை சீர் செய்து த‌ர‌ ந‌க‌ராட்சி உட‌ன‌டியாக‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்.

இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் க‌த‌ரியா கூறிய‌தாவ‌து,
இது குறித்து யாரும் த‌க‌வ‌ல் த‌ர‌வில்லை த‌ற்போது உட‌ன‌டியாக‌ ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ப்ப‌டும்.த‌ர‌ம‌ற்ற‌ ப‌ணிக‌ள் மேற்கொண்ட‌ காண்ட்ராக்ட‌ருக்கு ப‌ணிக‌ள் த‌ர‌மாக‌ இருந்தால் ம‌ட்டுமே அத‌ற்கான‌ முழு தொகையும் வழ‌ங்க‌ப்ப‌டும்.இல்லையெனில் இப்ப‌ணி மெற்கொண்ட‌த‌ற்காக‌ அவ‌ருக்கான‌ தொகை அளிப்ப‌து நிறுத்த‌ப்ப‌டும் என்றார்.



 

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் த‌ர‌ம‌ற்ற‌ ஜென‌ரெட்ட‌ர் வாங்கியுள்ள‌தாக‌ புகார் !




கீழக்கரை நகராட்சியில் கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் 21, 5வது வார்டுகளில் உள்ளன.

இவ்விரண்டிலும் 15 கி.வாட் மின்சாரத்தில் இயங்கும் மின் மோட்டார்கள் உள்ளன மின் தடை ஏற்படும் நேரங்களில் கழிவுநீரை வெளியேற்ற இயலாமல் போகிறது.

இதனால் கழிவுநீர் சாலைகளில் குளம் போல் தேங்கி துர்நாற்றம் வீசியது. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவியது. மின்தடை நேரத்தில் கழிவுநீர் வெளியேற்றும் பணி தொய்வின்றி தொடர பம்பிங் ஸ்டேசனுக்கு ஜெனரேட்டர் வாங்க வேண்டும் என கவுன்சிலர்கள் ஜெயபிரகாஷ், சாகுல்ஹமீது ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து 2 மாதங்களுக்கு முன் ஒரு ஜெனரேட்டர் மட்டும் வாங்கப்பட்டு, 21 வது வார்டில் வைத்து இயக்கப்பட்டது, இந்த ஜெனரேட்டர் தரமற்றது என நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர் ஜெயபிரகாஷ் புகார் தெரிவித்தார். தரமானதுதான் என நகராட்சித் தலைவர் என கூறினார்.

இதற்கிடையே, புதிய ஜெனரேட்டரின் சேஞ் ஓவர் ஸ்விட்ச் பழுதாகியதால் கடந்த ஒரு வாரமாக கழிவு நீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கழிவுநீர் ரோட்டில் குளம் போல் தேங்கி நிற்கிறது. டெண்டர் கொட்டேஷனில் கிர்லோஸ்கர் நிறுவன ஜெனரேட்டர் ரூ.3 லட்சம் என விலை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரேட்டர் விநியோக டெண்டர் எடுத்த கான்ட்ராக்டர் வேறு தரமான நிறுவன பெயர் ஸ்டிக்கரை ஒட்டி சீன தயாரிப்பு ஜெனரேட்டரை சப்ளை செய்துள்ளார். ஜெனரேட்டரின் வாங்க கொட்டேஷன் வாங்கியதில் ரூ.1.85 லட்சம்தான் என தெரிய வந்துள்ள‌தாக‌வும், ஜெனரேட்டரை ஆய்வு செய்த பிறகு அதற்குரிய பணம் வழங்கவும், மேலும் 2 ஜெனரேட்டரை தரமான நிறுவனத்திடமிருந்து வாங்க வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


கவுன்சிலர் ஜெயபிரகாஷ் கூறுகையில்,
மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய ஜெனரேட்டரில் முறைகேடு நடந்துள்ளது. தரமான நிறுவன ஜெனரேட்டருக்குரிய தொகையைப் பெற்றுக்கொண்டு சீன தயாரிப்பை வைத்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். 2 மாதத்தில் பழுதாகிய ஜெனரேட்டர் விவகாரத்தில் அதிகாரிகள் மழுப்பலாக பதில் கூறுகின்றனர் .இது குறித்து க‌மிஷ‌ன‌ரருக்கு புகார் செய்ய‌ போன் செய்தால் போனை எடுப்ப‌தில்லை பொறுப்பான‌ அதிகாரி இது போன்று இருந்தால் எப்ப‌டி குறைக‌ளை தீர்க்க‌ முடியும் ? என்றார்.

இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் க‌த‌ரியாவிட‌ம் கேட்ட‌ போது,

எவ்வித‌ முறைகேடு ந‌டைபெற‌வில்லை.சைனா தயாரிப்பு என்பெதெல்லாம் பொய் இந்திய‌ த‌யாரிப்பு ஜென‌ரெட்ட‌ர்தான்.ஜென‌ரெட்ட‌ர் ப‌ழுதான‌து குறித்து நிறுவ‌ன‌த்திட‌ம் புகார் தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.அந்த‌ நிறுவ‌ன‌த்தின‌ர் ச‌ரி செய்வார்க‌ள்.மேலும் ஒரு வ‌ருட‌ம் வார‌ண்டி உள்ள‌து.உண்மை நிலை இப்ப‌டி இருக்கும் போது க‌வுன்சில‌ர் ஜெய‌பிர‌காஷ் ஏன் இது போன்ற‌ குற்ற‌ச்சாட்டுக‌ளை கூறுகிறார் என்று தெரிய‌வில்லை என்றார்
 

Wednesday, May 15, 2013

கீழ‌க்க‌ரை தாசிம் பீவி ம‌க‌ளிர் க‌ல்லூரியில் புதிய‌ மாண‌விய‌ர் சேர்க்கை !


கீழ‌க்க‌ரையில் அதிக‌ரித்த‌ நாய்க‌ளை க‌ட்டுப‌டுத்த‌ 50க்கும் மேற்ப‌ட்ட‌ நாய்க‌ளுக்கு க‌ருத்த‌டை சிகிச்சை!



கீழ‌க்க‌ரை நகராட்சியில் உள்ள, 21 வார்டுகளில், 50 ஆயிர‌த்திற்கும் மேற்ப‌ட்ட‌ ம‌க்க‌ள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள பெரும்பாலான தெரு, சாலைகளில் ஏராள‌மான‌ நாய்கள் சுற்றித் திரிந்தன‌.

இவற்றில் சில நாய்கள், சாலையில் நடந்து செல்பவர்க‌ளை கடிப்ப‌தாக‌வும் ,சாலையில் சுற்றித்
திரியும் நாய்களால், இருசக்கர வாகனங்களில் அடிக்கடி விபத்துக்கு உள்ளாவ‌தாகவும்,ப‌ள்ளி குழ‌ந்தைக‌ள் ரோட்டில் ந‌ட‌க்க‌ அச்ச‌ம‌டைவதாக‌வு என‌வே கீழ‌க்க‌ரை    நகராட்சியில் அதிகரித்து வரும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, பொது மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்த‌ன‌ர்.

 
இதையடுத்து, நகராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் கத‌ரியாவின் ந‌ட‌வ‌டிக்கையின் பேரில் கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் அதிக‌ரித்து வ‌ரும் நாய்களை க‌ட்டுப்ப‌டுத்த‌ அவைக‌ளுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நகரில் சுற்றி திரிந்த 50க்கும் மேற்ப‌ட்ட ந‌க‌ராட்சி  ப‌ணியாள‌ர்க‌ள் உத‌வியுட‌ன்‌ நாய்களை பிடித்தனர்.பின்ன‌ர் இந்த‌ நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்பட்டது.

நாய்களுக்கு மயக்க ஊசி போட்டு கருத்தடை சிகிச்சையை கால்ந‌டை ம‌ருத்துவ‌ர் செய்தார். மேலும்  நாய்களுக்கு வெறி தன்மை குறையவும் ஊசி போடப்பட்டது.

 

Tuesday, May 14, 2013

கீழ‌க்க‌ரை அருகே லாரி விப‌த்து!குளிர் பான‌ங்க‌ள் சாலையில் சித‌றிய‌தால் போக்குவ‌ர‌த்து பாதிப்பு!



கீழ‌க்க‌ரை காஞ்சிர‌ங்குடி அருகில் குளிர் பான‌ம் ஏற்றி வந்த‌ லாரியின் பின் ப‌க்க‌ ட‌ய‌ர் வெடித்து நிலைதடுமாறி த‌லை குப்புற‌ க‌விழ்ந்து குளிர் பான‌ங்க‌ள் ந‌டுரோட்டில் சித‌றிய‌தால் சிறிது நேர‌ம் போக்கு வ‌ர‌த்து பாதிக்க‌ப்ப‌ட்ட‌து.

தேவிப‌ட்டிண‌த்திலிருந்து கீழ‌க்க‌ரைக்கு குளிர் பான‌ லாரி ஒன்றை தேவிப்ப‌ட்டிண‌த்தை சேர்ந்த‌ டிரைவ‌ர் வெங்க‌டேஷ்)24) ஓட்டி வ‌ந்தார்.உட‌ன் சேல்ஸ் மேன் முத்துகுமார் என்ப‌வ‌ரும் வ‌ந்துள்ளார்.ககாஞ்சிர‌ங்குடி ப‌ஸ் ஸ்டாப் அருகில் வ‌ரும்  போது பின் ப‌க்க‌ ட‌ய‌ர் வெடித்து நிலை த‌டுமாறிய‌ லாரி த‌லைகுப்புற‌ க‌விழ்ந்த‌தாக‌ அப்ப‌குதியில் உள்ள‌வ‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.இருவ‌ரும் காய‌மின்றி த‌ப்பின‌ர்.



 

கீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லில் ப‌ழமை வாய்ந்த‌‌ முறையான‌ கூடு வைத்து மீன் பிடித்த‌லில் ஈடுபடும் மீன‌வ‌ர்க‌ள்!



த‌மிழ‌க‌த்தில் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம்  நீணட‌ கட‌லோர‌ ப‌குதியை கொண்ட‌தாகும்.மன்னார் வ‌ளைகுடா க‌ட‌ல் ப‌குதி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் இப்ப‌குதிய்ல் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் மீன் பிடி தொழில் ஈடுப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌ர்.ராமேஸ்வ‌ர‌ம்,ம‌ண்ட‌ம்,கீழ‌க்க‌ரை ,ஏர்வாடி உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ஊர்க‌ளில் க‌ட‌ல் சார் வ‌ணிக‌ம் அதிக‌ள‌வில் ந‌டைபெற்று வ‌ருகிற‌து.

த‌ற்போது கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட 45 நாள் தடை உள்ள‌து.தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் மாதம் முதல் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கும் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகளில் சென்று மீன்பிடித்தால் மீ்ன் இனம் அடியோடு பாதிக்கப்படும் என கண்டறியப்ப‌ட்டுள்ள‌தால் ப‌ல‌ ஆண்டுகளாக ஏப்ரல் 15ம் தேதி முதல்45 நாட்கள் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில் த‌ற்போது ம‌ண்ட‌ப‌ம்,கீழ‌க்க‌ரை உளளிட்ட‌ ஊர்க‌ளில் பழ‌ங்கால‌த்தில் பிரதான‌ முறையாக‌ இருந்த‌ ப‌ழ‌மை வாய்ந்த‌ கூடு வைத்து மீன் பிடிக்கும் முறையை ப‌ய‌ன்ப‌டுத்தி மீன‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர்  மீன் பிடிப்பில் ஈடுப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌ர்.த‌ற்போதைய‌ கால‌த்தில் இவ்வ‌கை மீன் பிடி முறை அரிதாகி விட்ட‌து

நாட்டு உடை ம‌ர‌த்தின் குச்சி மூல‌ம் இவ்வ‌கை மீன் பிடி கூடுக‌ள் செய்ய‌ப்ப‌டுகிற‌து.நாட்டு உடை ம‌ர‌க்குச்சிக‌ள் கிடைக்காத‌ ப‌ட்ச‌த்தில் ப‌னைவேர் ,ஈச்ச‌ம‌ர‌ம்,க‌ருவோடைவேர் உள்ள்ட்ட‌வைக‌ளையும் ப‌ய‌ன்ப‌டுத்தி கூடுக‌ளை த‌யாரிக்கின்றன‌ர் (இப்ப‌குதிக‌ளில் நாட்டு உடை ம‌ர‌ங்க‌ள் வெகுவாக‌ குறைந்து விட்ட‌ன‌.வேலி க‌ருவேலி ம‌ர‌ங்க‌ள் அதிக‌ரித்து விட்ட‌ன‌).

வ‌ல்ல‌த்திலோ,வ‌த்தையிலோ,க‌ட்டும‌ர‌த்திலோ க‌ட‌லுக்கு இவ்வ‌கை கூடுக‌ளை எடுத்து செல்லும் மீன‌வ‌ர்க‌ள் த‌னியாக‌வோ அல்ல‌து சில‌ருட‌ன் சேர்ந்தோ இத்தொழிலில் ஈடுப‌டுகிறார்க‌ள்.இத்தொழிலில் ஈடுப‌ட‌ க‌ட‌லில் 5 பாக‌த்திற்கு மேல்(ஒரு பாக‌ம் ‍ஆறு அடி என்று குறிப்பிடுகிறார்க‌ள்) க‌ட‌லுக்கு அடியில் செல்கிறார்க‌ள்.  காலை அல்ல‌து மாலை நேர‌ங்க‌ளில் க‌ட‌லுக்குள் முப்ப‌து அடி ஆழ‌த்திற்குள் மீன்க‌ள் அதிக‌ம் இருக்கும் பகுதிக்குள் முக‌ க‌வ‌ச‌த்துட‌ன் முழ்கி செல்லும் மீன‌வ‌ர்க‌ள் கூட்டை அடியில் வைத்து விட்டு அதில் மீனுக்கு இரையையும் போட்டு விட்டு வ‌ந்து விடுவ‌ர்.

மீன்க‌ளுக்கு இரையாக‌ இறால் ம‌ண்டையை வைக்கிறார்க‌ள் சின்ன‌ கூட்டுக்கு ஒரு கிலோ இறால் மண்டையும் பெரிய‌ கூட்டிற்கு ஒன்றை கிலோ இறால் ம‌ண்டையை இரையாக‌ வைக்கிறார்க‌ள்.பின்ன‌ர் ஒரு நாள் இடைவெளி விட்டு மீண்டும் க‌ட‌லுக்குள் சென்று கூடுக‌ளில் பிடி ப‌டும் மீன்க‌ளை எடுத்து வருகின்ற‌ன‌ர்.இவ்வ‌கையாக‌ பிடிப‌டும் மீன்க‌ள் ருசியும் அதிக‌ம் இருக்கும் என‌ தெரிவிக்கிறார்க‌ள்.

த‌க‌வ‌ல் உத‌வி எஸ்.ர‌ங்க‌சாமி

இது குறித்து க‌ட‌ல் சார் தொழிலில் ஈடுப‌ட்டு வ‌ரும் கீழ‌க்க‌ரை நெய்னா முக‌ம்ம‌து கூறுகையில்,

இவ்வ‌கையான‌ மீன் பிடித்தொழிலில் செய்ய‌ அதிக‌ முத‌லீடு தேவையில்லை பிடிப‌டும் மீன்க‌ளின் எடை 4 கிலோ முத‌ல் 8 கிலோ வ‌ரை இருக்கும்,கட‌ல் வ‌ள‌த்தை பாதிக்காது,ப‌ல்வேறு வ‌கையான‌ வ‌லைக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்தி மீன்க‌ள் குஞ்சு ப‌ருவ‌த்திலேயே பிடிக்க‌ப்படுவ‌து த‌டுக்க‌ப்ப‌டுகிற‌து.மேலும் க‌ட‌லில் முழ்கி ச‌ங்கு எடுக்க‌ தெரிந்த‌வ‌ர்க‌ள்,கூடு பின்ன‌ தெரிந்த‌வ‌ர்க‌ள் ,க‌ட‌லில் எந்த‌ ப‌குதியில் மீன்க‌ள் கிடைக்கும் என்ப‌தை ஓர‌ள‌வுக்கு தெரிந்த‌வ‌ர்க‌ள் இத்தொழில் வெற்றிக‌ரமாக‌ செய‌ல்ப‌ட‌முடியும்.அர‌சாங்க‌ம் இவ்வ‌கையான‌ தொழில்க‌ளை ஊக்க‌ப்ப‌டுத்த‌வேண்டும் என்றார்.
 

Monday, May 13, 2013

கீழ‌க்க‌ரையில் த‌மிழ்நாடு மெர்க‌ண்டைல் வ‌ங்கி கிளை திற‌க்க‌ ஏற்பாடு!


 துபாயில் வ‌ணிக‌ மேலாண்மை குறித்த‌‌ க‌ருத்த‌ர‌ங்கு 09.05.2013 வியாழ‌க்கிழ‌மை ந‌டைபெற்ற‌து.

இக்க‌ருத்த‌ர‌ங்கில் ப‌ரோடா வ‌ங்கி உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நிறுவ‌ன‌ங்க‌ளின் அலுவ‌ல‌ர்க‌ள் ப‌ங்கேற்ற‌ன‌ர். த‌மிழ‌க‌த்திலிருந்து த‌மிழ்நாடு மெர்க‌ண்டைல் வ‌ங்கியின் துணைப் பொது மேலாள‌ர் எம். குண‌சேக‌ர‌ன் ம‌ற்றும் பிராந்திய‌ மேலாள‌ர் செந்தில் ஆன‌ந்த‌ன் ஆகியோர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

அத‌னைத் தொட‌ர்ந்து ஈடிஏ அஸ்கான் ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டுத்துறை எக்ஸிகியூடிவ் டைர‌க்ட‌ர் எம். அக்ப‌ர்கான் அவ‌ர்க‌ளையும் ச‌ந்தித்து கீழ‌க்க‌ரையில் விரைவில் த‌மிழ்நாடு வ‌ங்கிக் கிளை திற‌க்க‌ப்ப‌ட‌ இருப்ப‌து குறித்தும் அவ்விழாவில் ப‌ங்கேற்க‌ வேண்டும் என‌வும் வ‌லியுறுத்தின‌ர். நிக‌ழ்வின் போது வ‌ங்கியின் துபாய் பிர‌திநிதி விருதுந‌க‌ர் ச‌ந்திர‌சேக‌ரும் உட‌ன் இருந்தார்.

கீழ‌க்க‌ரையில் சிட்டி யூனிய‌ன் வ‌ங்கி இட‌ மாற்ற‌ம்! கிழ‌க்குத்தெருவில் புதிய‌ க‌ட்டிட‌த்தில் திற‌ப்பு விழா!

கீழ‌க்க‌ரையில்  கொந்த‌ன் க‌ருணை அப்பா த‌ர்ஹா அருகில் இய‌ங்கி வ‌ந்த‌  இய‌ங்கி வ‌ந்த‌ சிட்டியூனிய‌ன் வ‌ங்கி த‌ற்போது இட‌மாற்ற‌ம் செய்ய‌ப்ப‌ட்டு கிழ‌க்குதெருவில் புதிய‌ க‌ட்டிட‌த்தில் ஏடிஎம் வ‌ச‌தியும் திற‌ப்பு விழா  துணை பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ந‌டைபெற்ற‌து. முகம்மது சதக் அறக்கட்டளை செயலாளர் யூசுப் சாகிப் திறந்து வைத்தார்.

கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாதிக் ஏ.டி.எம்., மையத்தையும், எஸ்.எம்.என்., பாக்கர், பாதுகாப்பு பெட்டக அறையையும் திறந்தார் கீழக்கரை கிளை மேலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார்.மண்டல வளர்ச்சி அலுவலர் ராஜா, ராமநாதபுரம் கிளை மேலாளர் பிரபாகரன், நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன்,கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் ஆசாத், செயலாளர் சுப்பிரமணியன் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் லுக்மான் ஹக்கீம்பங்கேற்றனர்.துணை பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ""ராமநாதபுரத்தில் ஏ.டி.எம்., மூலமாக பணம் செலுத்தும் வசதியை, ஏற்படுத்த உள்ளோம், என்றார்

கீழ‌க்க‌ரை முஸ்லீம் ப‌ஜார் ப‌குதியில் குப்பைக‌ளை அக‌ற்ற‌ கோரிக்கை!




கீழக்கரையில் முஸ்லீம் பஜார் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 குப்பைகளை அகற்ற நகராட்சியில் தற்போது 24 துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
முஸ்லீம் பஜார் பகுதியை சேர்ந்த அகமது அப்துல் காதர் கூறுகையில்,
கடந்த ஒரு வாரமாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால், கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இரவில் தூங்க முடியாமல் தவித்து வருகிறோம். வழக்கமாக எங்கள் பகுதியில் 3, 4 நாட்களுக்கு ஒருமுறைதான் குப்பைகளை அகற்றுகின்றனர். இது குறித்து நகராட்சியில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. குப்பைகளை தினமும் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் க‌த‌ரியாவிட‌ம் கேட்ட‌ போது,

ஒரு வார‌மாக‌ அக‌ற்றாம‌ல் இருக்க‌ வாய்ப்பில்லை.ஒவ்வொரு நாளும் குப்பைக‌ள் அக‌ற்ற‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.முத‌ல் நாள் இர‌வில் குப்பைக‌ள் ஒரு இட‌த்தில் சேரும் போது ம‌று நாள் உட‌ன‌டியாக‌ அக‌ற்ற‌ப்ப‌டுகிற‌து.இது போன்று இருக்கும் ப‌ட்ச‌த்தில் இது குறித்து உட‌ன‌டி எடுக்க‌ப்ப‌டும் மேலும் த‌ற்போது கூடுத‌ல் துப்புர‌வு ப‌ணியாள‌ர்க‌ள் நிய‌மிக்க‌ப்ப‌ட்டு உள்ளார்க‌ள்.என‌வே துப்புர‌வு ப‌ணிக‌ள் துரித‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.குறைக‌ள் இருந்தால் சுட்டி காட்டுங்க‌ள் உட‌ன‌டியாக‌ ச‌ரி செய்ய‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் த‌யாராக‌ உள்ள‌து. என்றார்

Sunday, May 12, 2013

கைராத்துல் ஜ‌லாலியா பள்ளி மாண‌வ‌ர் இம்ரான்கான் 1101 ம‌திப்பெண்க‌ள் பெற்று பள்ளியில் முத‌லிட‌ம் பெற்றார்.


ந‌டைபெற்ற‌ +2 தேர்வில் கைராத்துல் ஜ‌லாலியா மாண‌வ‌ர் இம்ரான்கான் 1101/1200 பெற்று ப‌ள்ளியில் முத‌லிட‌ம் பெற்றார்.த‌மிழ் 171 ஆங்கில‌ம் 165 கணிணி அறிவிய‌ல் 184 பொருளாதார‌ம் 190 வ‌ணிக‌விய‌ல் 196 க‌ண‌க்கு பதிவிய‌ல் 195 பெற்றுள்ளார்.

முஹ‌சர‌த் பாஹிமா 1099 பெற்று இர‌ண்டாம் இட‌த்தை பெற்றுள்ளார் இவ‌ர் வ‌ணிக‌வியலில் 200/200 பெற்றுள்ளார்.

ச‌ந்தியா 1054 பெற்று 3வ‌து இட‌த்தை பெற்றுள்ளார்.

நாக‌ராஜ்,கார்த்திக் ,முஹம்ம‌து அஸ்பாக், ஆகிய‌ மூன்று மாண‌வ‌ர்க‌ள் க‌ண‌க்கு ப‌திவியலில் 200/200 பெற்றுள்ள‌ன‌ர்.

இவ‌ர்க‌ள் அனைவ‌ரையும் ப‌ள்ளியின் நிர்வாக‌த்தின‌ர் கிழ‌க்குத்தெரு ஜ‌மாத்தார்க‌ள் ,ஆசிரிய‌ர்க‌ள் க‌ல்விக்குழுவின‌ர் பார‌ட்டின‌ர்.

 

Saturday, May 11, 2013

க‌வுன்சில‌ர் ப‌த‌வியை ராஜினாமா செய்ய‌ த‌யார்!க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் ச‌வால்!


கீழக்கரை நகராட்சி சார்பாக நடை பெற்ற திட்டப் பணிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில் 50 சதவீதத்திற்கு நடைபெற்று இருப்பதாக நகராட்சி நிர்வாகம் நிரூபித்தால் ராஜினாமா செய்யத் தயார் - 18 வது வார்டு கவுன்சிலர் சவால் !

கீழக்கரை டைம்ஸ் இணைய தளத்தில் கடந்த 08.05.2013 அன்று, மரியாதைக்குரிய நகர் மன்ற தலைவி அவர்கள் நான் எனது வார்டு சம்பந்தமாக எதையும் அவரிடம் கூறுவது இல்லை என்றும் எனது வார்டு குறைகளை தீர்ப்பதில் அக்கறை இல்லை என்றும் கூறி உள்ளார்கள்.

எனது வார்டு மீது எனக்கு அக்கறை இல்லையா ? என்பதையும் என் மீது அவர் வைத்திருக்கின்ற குற்றச் சாட்டு உண்மையா என்பதை, என் மீது பாசம் வைத்திருக்கும்  வாசகர்களுக்கும், நடு நிலையாளர்களுக்கும், வாசகர்களுக்கும் விளக்க கடமைப்பட்டு இருக்கிறேன்.

எனது வார்டுக்கு தேவையான கோரிக்கைகளை 22.10.2012 அன்று நகர் மன்ற தலைவி அவர்களிடம், எழுத்துப் பூர்வமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். இதில் அவர் கூறும் பாபு ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள கால்வாய் இணைக்கும் அபாயக் குழியில் தொட்டி அமைத்து மூடி போடும் படியும் கேட்டிருக்கிறேன்.

இது சம்பந்தமாக என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நகர் மன்ற தலைவி அவர்கள் 31.10.2012 அன்று நடை பெற்ற சாதாரண கூட்டத்தில் பொருள் 36 ல் ரூ.4,50,000 மதிப்பிலும் 29.11.2012 அன்று நடை பெற்ற சாதாரணக் கூட்டத்தில் பொருள் 15 ல் ரூ. 9500மதிப்பிலும், 30.01.2013 அன்று நடை பெற்ற சாதாரணக் கூட்டத்தில் பொருள் 28 ல் ரூ. 10000 மதிப்பிலும், மன்ற ஒப்புதல பெற்று, இது வரை பனி ஆணை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

எனது வார்டு மீது எனக்கு அக்கறை இல்லை என்று கூறிய நகர் மன்றத் தலைவி அவர்கள் உண்மைக்கு மாற்றமாக பேட்டி அளித்து இருப்பதால், என் மீது பாசம் வைத்திருக்கும்  இணைய தள வாசகர்கள் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, நான் என் வார்டு சம்பந்தமாக கொடுத்த மனு நகலையும் மன்ற அஜந்தா நகலையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

இதிலிருந்தே பொது மக்களாகிய யாவரும் ஒன்றை புரிந்து கொள்ளலாம். கீழக்கரை மக்கள் மீதும், நகர் நலத் திட்டங்கள் மீதும், நகர் மன்ற தலைவிக்குத் தான் அக்கறை இல்லை என்பதையும், அவருடைய தலைமையில் எந்தப் பணிகளும் சரிவர செயல்பட வில்லை என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ளலாம்.
மேலும் கீழக்கரை நகராட்சி சார்பாக நடைபெற்ற பணிகளையும் அதற்கு வழங்கப்பட்ட தொகையையும், அதன் தரத்தையும் அனைவரும் கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும். 11 வது வார்டு ஜின்னா தெருவில் இருக்கும் பொதுக் கழிப்பிடத்தில் கூடுதல் கழிப்பறை கட்டும் பணி முடிவுற்று அதற்காக வழங்கப்பட்ட தொகை ரூ 3,49,333 ஆகும். ஆனால் செய்யப்பட்ட வேலைகள் ரூ.1,30,000 கூட இருக்காது.

புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் நலன் கருதி மின்சார பில் கட்டணம் கட்டும் அலுவலகம் செயல்படுத்த ஏற்கனவே இருந்த ஒரு அறையை புதுப்பிக்க நகராட்சியால் வழங்கப்பட்ட தொகை ரூ. 1,97,812 ஆகும். ஆனால் செய்யப்பட்ட வேலைகள் ரூ. 50000 கூட இருக்காது. இதில் வருத்தத்திற்கு உரிய விஷயம் என்னவென்றால், இதுவரை ஜின்னா தெரு கழிப்பிடமோ அல்லது மின்சார பில் கட்டணம் கட்டும் அலுவலகமோ இது வரை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. ஆனால் பணிகள் முழுதும் நிறைவடைந்து விட்டதாம்.

மேலும் நன்றாக இருந்த மேலத் தெரு செய்யது முஹம்மது அப்பா தர்ஹா சாலையை, பெயருக்கு சாலை போடுவதாக மன்ற ஒப்புதல் பெற்று,சுமார் 350 மீட்டர் அளவுக்கு சாலை போடா செய்த செலவு எவ்வளவு தெரியுமா? ரூ. 200000 (இரண்டு இலட்சம்) மட்டுமே. ஆனால் அதற்கு வழங்கப்பட்டதாக கணக்கில் வரும் தொகை ரூ.11,00000 (பதினோரு இலட்சம்) என்று தெரிய வருகிறது.

நகராட்சி சார்பாக நடை பெற்ற திட்டப் பணிகளுக்காக, ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட தொகையில் 50 சதவீதம் வேலைகள் நடை பெற்று இருப்பதாக நகராட்சி நிர்வாகம் அதிகாரப் பூர்வமாக ஏதேனும் ஒரே ஒரு பணியை நிரூபித்தால் "நான் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்" என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

நகராட்சி சார்பாக நடை பெற்ற அனைத்து திட்டப் பணிகளிலும், பெரும் அளவு ஊழல் நடை பெற்றுக் கொண்டிருப்பதை, மக்களுக்கு நீதி மன்றம் மூலம் நிரூபித்து யார் தவறு செய்து இருந்தாலும், அவர்கள் மீது சட்டப் பூர்வமான நடவடிக்கை மேற்கொள்வேன். என்பதையும் இதன்  மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து செயல்களையும்,எல்லாம் வல்ல ஏக இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கீழ‌க்க‌ரையில் சிற‌ந்த‌ ம‌திப்பெண்க‌ளை மாண‌வியர் பெற்றாலும் பெரும்பாலான‌‌ பெற்றொர்க‌ள் உய‌ர் க‌ல்விக்கு அனுப்புவ‌தில்லை! ப‌ள்ளிக‌ளின் தாளாள‌ர் வ‌ருத்த‌ம்!


இஸ்லாமியா ப‌ள்ளிக‌ளின் தாளாள‌ர் எம் எம் கே முகைதீன் இப்ராஹிம் கூறிய‌தாவ‌து,

+2 தேர்வு எழுதி  முடிவுக‌ளை பெற்ற‌ அனைத்து மாண‌வ‌,மாண‌விக‌ளுக்கும் வாழ்த்துக்க‌ள்.

கீழ‌க்க‌ரையில் ஏராள‌மான‌ மாண‌விக‌ள் 1000 ம‌திபெண்க‌ளை பெற்றுள்ள‌ன‌ர் மேலும் அதிக‌ ம‌திப்பெண்க‌ளாக‌  1155 ,1146 என‌ பெற்று சாத‌னை ப‌டைத்துள்ளன‌ர்.த‌மிழ‌க‌த்தின் அதிக‌ ம‌திப்பெண் எடுத்த‌வ‌ர்க‌ளுக்கும் இவ‌ர்களுக்கும் மிக‌ குறைந்த‌ அள‌வே ம‌திபெண்க‌ள் வித்தியாச‌ம் வ‌ருங்கால‌ங்க‌ளில் த‌மிழ‌க‌த்திலேயே அதிக‌ ம‌திப்பெண் பெற்ற‌ மாண‌விய‌ர் கீழ‌க்க‌ரையிலேயே உருவாகுவார்க‌ள்.

ஆனால் கீழ‌க்க‌ரையில் மிக‌ வ‌ருத்ததுக்குறிய‌ நிக‌ழ்வு என்ன‌வென்றால் பெரும்பாலானோர் இவ்வ‌ள‌வு ம‌திப்பெண்க‌ள் பெற்ற‌ மாண‌விய‌ரை பொருளாதார‌ சூழ்நிலை ந‌ன்றாக‌ இருந்தும் உய‌ர் க‌ல்வி க‌ற்க‌  அனுப்புவ‌தில்லை பள்ளி ப‌டிப்புட‌ன் க‌ல்வியை நிறுத்தி விடுகின்ற‌ன‌ர்.சென்ற ஆண்டு‌ எங்க‌ள் ப‌ள்ளி மாண‌வி கீழ‌க்க‌ரையிலேயே அதிக‌ ம‌திபெண்க‌ள் எடுத்தார் ஆனால் அவ‌ரின் குடும்ப‌த்தார் அவ‌ரை மேல் ப‌டிப்பு தொட‌ர‌ அனும‌திக்க‌வில்லை.இது அக்குடும்ப‌த்தாரின் உரிமை என்றாலும் ச‌முதாய‌த்திற்க்கு ப‌ய‌ன் ப‌ட‌ வேண்டிய‌ மாண‌வியின் க‌ல்வி பாதியிலேயே நின்று விட்ட‌தே என்ற‌ ம‌ன‌ வ‌ருத்த‌ம் எங்க‌ளுக்கு ஏற்ப‌ட்டது.

க‌ல்வியில் பின் த‌ங்கி இருக்கும்  ச‌மூக‌த்தில் சிற‌ந்த‌ மாண‌வியின் ப‌டிப்பு பாதியிலேயே நிறைவு பெறுவ‌து என‌பது மிக‌வும் வேத‌னைய‌ளிக்கும் நிக‌ழ்வு.

மேல் ப‌டிப்புக்கு க‌ல்லூரி செல்வோமா? என்ற‌ நிச்ச‌ய‌ம் இல்லாத‌ நிலையில் கீழ‌க்க‌ரையில் மாண‌விய‌ர் இவ்வ‌ள‌வு ம‌திப்பெண்க‌ளை எடுக்கும் நிலையில் இவ‌ர்க‌ளுக்கு உயர் க‌ல்விக்கான‌ உத்த‌ர‌வாத‌த்தையும்,ஊக்க‌த்தையும் அளிப்போமானால் கீழ‌க்க‌ரை மாணவிக‌ள் க‌ல்வியில் பெரும் சாத‌னை ப‌டைப்பார்க‌ள் என்ப‌து நிச்ச‌ய‌ம்.

எனவே கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ பெற்றோர்க‌ள் த‌ங்க‌ள‌து பிள்ளைக‌ளை ப‌ள்ளி ப‌டிப்புட‌ன் நிறுத்திவிடாம‌ல் உய‌ர் க‌ல்வி பெற‌ அனும‌தியுங்க‌ள்.

இவ்வாறு அவ‌ர் கூறியுள்ளார்.
 

Friday, May 10, 2013

கீழ‌க்க‌ரை முஹைதீனியா மெட்ரிக் ப‌ள்ளியில் 100 ச‌த‌வீத‌ தேர்ச்சி!


 
வட‌க்குத்தெரு ஜ‌மாத் த‌லைவ‌ர் அக்பர்கான் க‌ல்வி மேம்பாடு குறித்த‌ உரையை லிங்கில் காண‌லாம்!
 
கீழக்கரை:கீழக்கரை முஹ்யீத்தீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள், 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளியில் எம்.முகம்மது ஆசிபா 1,066 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், எஸ்.அப்துல் ஹாலிக் 1,061 பெற்று இரண்டாம் இடம், எஸ்.அப்ரா பாத்திமா 1,056 எடுத்து மூன்றாம் இடம், என்.சப்ரீனா பாத்திமா 1,020 பெற்று நான்காமிடம் பெற்றனர்.
இவர்களை வ‌ட‌க்குத்தெரு ஜ‌மாத் த‌லைவ‌ர் அக்ப‌ர்கான் த‌லைமையில் செய‌ல்ப‌டும் வடக்கு தெரு ஜமாத் உப தலைவர் அகமது மிர்ஷா மெட்ரிக் பள்ளி உதவி முதல்வர் ஜெகந்நாத சேதுபதி மற்றும் கல்விக்குழு நிர்வாகிகள்,ஆசிரியர்கள் பாராட்டினர்

Thursday, May 9, 2013

இஸ்லாமியா மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வர்‌ ம‌ற்றும் மாண‌வி 1146 ம‌திப்பெண்க‌ள் பெற்று கீழ‌க்க‌ரையில் இர‌ண்டாம் இட‌ம்!




+2 தேர்வு முடிவில் இஸ்லாமியா மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வ‌ர் அப்துல் க‌ரீம் அஹ்ஷ‌ன் 1146/1200 ,மாண‌வி முஹ‌ம்ம‌து த‌வ்ல‌த் க‌த‌ரியா ஆகியோர் 1146/1200 எடுத்து ப‌ள்ளியில் முத‌லிட‌மும் கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் இர‌ண்டாமிட‌மும் பிடித்த‌ன‌ர். முஹ‌ம்ம‌து அபியா 1126/1200 எடுத்து ப‌ள்ளியில் இர‌ண்டாம் இட‌ம் பெற்றார் .ஹதிஜ‌த்துல் அஃப்ரோஸ் 1123/1200 எடுத்து ப‌ள்ளியில் 3ம் இட‌ம் பெற்றார்.

9பேர் 1000த்திற்கும் மேற்ப‌ட்ட‌ ம‌திப்பெண்க‌ள் பெற்ற‌ன‌ர்.

அனைவ‌ரையும் ப‌ள்ளியின் தாளாள‌ர் எம்.எம்.கே முகைதீன் இப்ராகிம்,முத‌ல்வ‌ர் மேப‌ல் ஜ‌ஸ்டிஸ் ம‌ற்றும் ஆசிரிய‌ர்க‌ள் ,மாண‌வ‌,மாண‌விய‌ர் பாராட்டு தெரிவித்த‌ன‌ர்.

இஸ்லாமியா ப‌ள்ளிக‌ளின் தாளாள‌ர் எம் எம் கே முகைதீன் இப்ராஹிம் கூறிய‌தாவ‌து,

+2 தேர்வு எழுதி  முடிவுக‌ளை பெற்ற‌ அனைத்து மாண‌வ‌,மாண‌விக‌ளுக்கும் வாழ்த்துக்க‌ள்.

கீழ‌க்க‌ரையில் ஏராள‌மான‌ மாண‌விக‌ள் 1000 ம‌திபெண்க‌ளை பெற்றுள்ள‌ன‌ர் மேலும் அதிக‌ ம‌திப்பெண்க‌ளாக‌  1155 ,1146 என‌ பெற்று சாத‌னை ப‌டைத்துள்ளன‌ர்.த‌மிழ‌க‌த்தின் அதிக‌ ம‌திப்பெண் எடுத்த‌வ‌ர்க‌ளுக்கும் இவ‌ர்களுக்கும் மிக‌ குறைந்த‌ அள‌வே ம‌திபெண்க‌ள் வித்தியாச‌ம் வ‌ருங்கால‌ங்க‌ளில் த‌மிழ‌க‌த்திலேயே அதிக‌ ம‌திப்பெண் பெற்ற‌ மாண‌விய‌ர் கீழ‌க்க‌ரையிலேயே உருவாகுவார்க‌ள்.

ஆனால் கீழ‌க்க‌ரையில் மிக‌ வ‌ருத்ததுக்குறிய‌ நிக‌ழ்வு என்ன‌வென்றால் பெரும்பாலானோர் இவ்வ‌ள‌வு ம‌திப்பெண்க‌ள் பெற்ற‌ மாண‌விய‌ரை பொருளாதார‌ சூழ்நிலை ந‌ன்றாக‌ இருந்தும் உய‌ர் க‌ல்வி க‌ற்க‌  அனுப்புவ‌தில்லை பள்ளி ப‌டிப்புட‌ன் க‌ல்வியை நிறுத்தி விடுகின்ற‌ன‌ர்.சென்ற ஆண்டு‌ எங்க‌ள் ப‌ள்ளி மாண‌வி கீழ‌க்க‌ரையிலேயே அதிக‌ ம‌திபெண்க‌ள் எடுத்தார் ஆனால் அவ‌ரின் குடும்ப‌த்தார் அவ‌ரை மேல் ப‌டிப்பு தொட‌ர‌ அனும‌திக்க‌வில்லை.

இது அக்குடும்ப‌த்தாரின் உரிமை என்றாலும் ச‌முதாய‌த்திற்க்கு ப‌ய‌ன் ப‌ட‌ வேண்டிய‌ மாண‌வியின் க‌ல்வி பாதியிலேயே நின்று விட்ட‌தே என்ற‌ ம‌ன‌ வ‌ருத்த‌ம் எங்க‌ளுக்கு ஏற்ப‌ட்டது.க‌ல்வியில் பின் த‌ங்கி இருக்கும்  ச‌மூக‌த்தில் சிற‌ந்த‌ மாண‌வியின் ப‌டிப்பு பாதியிலேயே நிறைவு பெறுவ‌து என‌பது மிக‌வும் வேத‌னைய‌ளிக்கும் நிக‌ழ்வு

மேல் ப‌டிப்புக்கு க‌ல்லூரி செல்வோமா? என்ற‌ நிச்ச‌ய‌ம் இல்லாத‌ நிலையில் கீழ‌க்க‌ரையில் மாண‌விய‌ர் இவ்வ‌ள‌வு ம‌திப்பெண்க‌ளை எடுக்கும் நிலையில் இவ‌ர்க‌ளுக்கு உயர் க‌ல்விக்கான‌ உத்த‌ர‌வாத‌த்தையும்,ஊக்க‌த்தையும் அளிப்போமானால் கீழ‌க்க‌ரை மாணவிக‌ள் க‌ல்வியில் பெரும் சாத‌னை ப‌டைப்பார்க‌ள் என்ப‌து நிச்ச‌ய‌ம்.

எனவே கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ பெற்றோர்க‌ள் த‌ங்க‌ள‌து பிள்ளைக‌ளை ப‌ள்ளி ப‌டிப்புட‌ன் நிறுத்திவிடாம‌ல் உய‌ர் க‌ல்வி பெற‌ அனும‌தியுங்க‌ள்.

இவ்வாறு அவ‌ர் கூறியுள்ளார்.


 

+ 2 தேர்வு முடிவு! 1155ம‌திப்பெண்க‌ள் பெற்று கீழ‌க்க‌ரை ஹ‌மீதியா மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வி முத‌லிட‌ம்!




+ 2 தேர்வு முடிவு! 1155ம‌திப்பெண்க‌ள்  கீழ‌க்க‌ரை ஹ‌மீதியா மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வி கீழ‌க்க‌ரை அள‌வில் முத‌லிட‌ம் பெற்றுள்ளார். 1146 மதிப்பெண்க‌ள் பெற்று இஸ்லாமியா ப‌ள்ளி மாண‌வ‌ மாண‌விய‌ர் இருவ‌ர் இர‌ண்டாம் இட‌த்தை பிடித்துள்ள‌ன‌ர்


கீழக்க‌ரை ப‌ள்ளிக‌ளின் +2 தேர்வு தேர்ச்சி முடிவுகள்!

 ‌ஹ‌மீதியா ஆண்க‌ள்ப‌ள்ளி மாண‌க்க‌ர்‌ 98 பேரில் 98பேரும் தேர்ச்சிய‌டைந்து 100ச‌த‌வீத‌ தேர்வு!

ஹ‌மீதியா பெண்க‌ள் ப‌ள்ளியில்  மாண‌க்க‌ர் 182 பேரில் 182 பேரும் தேர்ச்சிய‌டைந்து 100ச‌த‌வீத‌ தேர்வு.

ஹ‌மீதியா மெட்ரிக் ப‌ள்ளியில்  மாண‌க்க‌ர் 63 பேரில் 63பேரும் தேர்ச்சிய‌டைந்து 100ச‌த‌வீத‌ தேர்வு!

கைராத்துல் ஜலாலியா ப‌ள்ளியில் எழுதிய‌ 147 பேரில் 140பேரும் தேர்ச்சிய‌டைந்து 95ச‌த‌வீத‌ தேர்வு!
 
 இஸ்லாமியா மெட்ரிக் ப‌ள்ளி மாண‌க்க‌ர்‌ 75 பேரில் 74பேரும் தேர்ச்சிய‌டைந்து 99ச‌த‌வீத‌ தேர்வு!
 
தீனியா மெட்ரிக் ப‌ள்ளி மாணாக்க‌ர் ‌ 3 பேரில் 3பேரும் தேர்ச்சிய‌டைந்து 100ச‌த‌வீத‌ தேர்வு!
 
முஹைதினியா மெட்ரிக் பள்ளி மாண‌க்க‌ர்‌ 15 பேரில் 15பேரும் தேர்ச்சிய‌டைந்து 100ச‌த‌வீத‌ தேர்வு

கீழ‌க்க‌ரையில் மாண‌வ‌ மாண‌விய‌ர் எடுத்த‌ அதிக ம‌திப்பெண்க‌ளின் விப‌ர‌ம்..


கீழ‌க்க‌ரை ஹ‌மீதியா‌ மெட்ரிக் ப‌ள்ளியில் ஜாஹிர் ஹீசைன் அவ‌ர்க‌ளின் ம‌க‌ள் மாண‌வி ஹ‌ஸ்னா ரஸ்ஹானா 1155 பெற்று கீழ‌க்க‌ரை முத‌லிட‌ம் பெற்றுள்ளார்.

இவ‌ர் பெற்ற‌ ம‌திப்பெண்க‌ள் விப‌ர‌ம் :

த‌மிழ் 188, ஆங்கில‌ம் 192, க‌ணித‌ம்200, பிஸிக்ஸ் 186 , கெமிஸ்ட்ரி 191

.
தெற்குதெரு இஸ்லாமியா மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வ‌ர் அக்சின் மாண‌வி த‌வ்ல‌த் க‌த‌ரியா இருவ‌ரும் த‌லா 1146 ம‌திப்பெண் பெற்றுள்ள‌ன‌ர்.

 வ‌ட‌க்குத்தெரு முஹைதீனியா மெட்ரிக் ப‌ள்ளி மாணவ‌ர் 1066 ம‌திப்பெண் பெற்றுள்ளார்.

கிழ‌க்குத்தெரு கைராத்துல் ஜ‌லாலியா மேல்நிலைப்ப‌ள்ளி மாண‌வ‌ர் 1101 ம‌திப்பெண் பெற்றுள்ளார்.

 ஹ‌மீதியா மேல்நிலைப்ப‌ள்ளி மாணவ‌ர் 1046 ‌மதிப்பெண்னும்,

ஹ‌மீதியா பெண்க‌ள் மேல்நிலைப்ள்ளி மாண‌வி 1097 ம‌திப்பெண்னும் பெற்றுள்ள‌ன‌ர்.


தீனியா மெட்ரிக் ப‌ள்ளி  மாண‌வ‌ர் 851 பெற்றுள்ளார்.

மாண‌வ‌ ,மாண‌விய‌ருக்கு  ப‌ள்ளிக‌ளின் நிர்வாக‌த்தின‌ர் ,ஆசிரியபெரும‌க்க‌ள்,மாண‌வ‌,மாண‌விய‌ர்க‌ள் வாழ்த்து தெரிவித்த‌ன‌ர்.
 

குறைந்த‌ செலவில் மின்சாரம் தயாரிக்கும் க‌ருவி!கீழ‌க்க‌ரை க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் க‌ண்டுபிடிப்பு!



கீழ‌க்கரை முஹ‌ம்ம‌து ச‌த‌க் பொறியிய‌ல் க‌ல்லூரி சார்பில் வெளியிட்டுள்ள‌ செய்தி குறிப்பி தெரிவித்திருப்ப‌தாவ‌து,

க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் நிலைகாந்த‌த்திலிருந்து இய‌ந்திர‌ ஆற்ற‌லை உருவாக்கி அதை ஜென‌ரேட்ட‌ருட‌ன் இணைத்து அத‌ன் மூல‌ம் மின்சார‌ம் த‌யாரிக்கும் க‌ருவியை க‌ண்டுபிடித்துள்ள‌ன‌ர்.

நிலைகாந்த‌ ஈர்ப்பு உள்ளிட்ட‌வைக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்தி இந்த‌ க‌ருவி இய‌ங்குகிற‌து.இக்க‌ருவி இய‌ங்குவ‌த‌ற்கு எரிபொருள் தேவையில்லை மேலும் ப‌ராம‌ரிப்பு செல‌வும் இல்லை

இத‌னை பெரிய‌ அள‌வில் தயார் செய்தால் மின்சார‌ ப‌ற்றாக்குறையை த‌விர்க்க‌லாம்.இந்த‌ ந‌வீன‌ க‌ருவியை உருவ‌க்கிய‌ மாண‌வ‌ர்க‌ள் உபேஸ்,பாஸி,முஹைதீன்,சேக் ஒலி,அஹ‌ம‌து ஜாவித் ஆகியோரை க‌ல்லூரி இய‌க்குந‌ர் ஹ‌பீப் முஹ‌ம்ம‌து ச‌த‌க்க‌த்துல்லா,க‌ல்லூரி முத‌ல்வ‌ர் முஹ‌ம்ம‌து ஜஹாப‌ர்,மின்னிய‌ல் துறை பேராசிரிய‌ர் சுரேஷ் குமார் ம‌ற்றும் க‌ல்லூரி அலுவ‌ல‌ர்க‌ள் பாராட்டினார்க‌ள்.

Wednesday, May 8, 2013

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி சார்பில் லாரி மூல‌ம் க‌ழிவு நீர் அக‌ற்றும் ப‌ணி தொட‌ங்கிய‌து!



கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் புதிதாக‌ வாங்க‌ப்ப‌ட்டுள்ள‌ க‌ழிவு நீர் அக‌ற்றும் லாரி மூல‌ம் சாலைக‌ளில் க‌ழிவு நீர் உறிஞ்ச‌ப்ப‌ட்டு கால்வாய்க‌ளில் தேங்கி நிற்கும் க‌ழிவு நீரை அக‌ற்றும் ப‌ணி தொட‌ங்கிய‌து.

இந்த‌ வாக‌ன‌ம் 10 நிமிட‌த்தில் 6000 லிட்ட‌ர் உறிஞ்சும் ச‌க்தி கொண்ட‌து

இது குறித்து நக‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா கூறிய‌தாவ‌து,
இந்த‌ வாக‌ன‌ம் 10 நிமிட‌த்தில் 6000 லிட்ட‌ர் உறிஞ்சும் ச‌க்தி கொண்ட‌து இத‌ன் மூல‌ம் சாலைக‌ளில்,க‌ழிவு நீர் வாய்க்காலில் தேங்கி நிற்கும் நீர் அக‌ற்ற‌ப்ப‌டும்.மேலும் ஏராள‌மான‌ வீடுக‌ளில் திட‌க்க‌ழிவு தொட்டிகள் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.இங்கு தொட்டிக‌ளில் க‌ழிவுநீர் நிர‌ம்பினால் க‌ட்ட‌ண‌ம் த‌ர‌ப்ப‌ட்டு த‌னியார் மூல‌ம் அக‌ற்ற‌ப்ப‌டுகிற‌து.என‌வே த‌னியார் வீடுக‌ளுக்கும் ந‌க‌ராட்சி மூல‌ம் ம‌க்க‌ள் ப‌ய‌ன்பெரும் வ‌கையில் குறைந்த‌ க‌ட்ட‌ண‌த்தில் இதே வாக‌ன‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி க‌ழிவு நீர் அக‌ற்ற‌லாமா என்று ஆலோச‌னை செய்து வ‌ருகிறோம்.ஆனால் வாக‌னம் செல்லும் வ‌ச‌தி உள்ள‌ ப‌குதிக‌ளில்தான் இதை செய‌ல்ப‌டுத்த‌ முடியும்.

வார்டு குறைக‌ளை தீர்ப்ப‌தில் க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிமிற்கு ஆர்வ‌மில்லை

மேலும் 18வ‌து வார்டு உறுப்பின‌ர் முகைதீன் இப்ராஹிம் அவ‌ர்க‌ளின் வார்டில் கால்வாய் அருகே ப‌ள்ள‌ம் இருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தீர்கள் இது குறித்து ந‌ட‌வ‌டிக்கை எடுத்து ச‌ரி செய்ய‌ப்ப‌டும்.

க‌வுன்சில‌ர் முஹைதீன் இப்ராஹிம் அவ‌ர்க‌ள் க‌வுன்சில‌ர் என்ற‌ முறையில் எங்க‌ளை தின‌மும் ச‌ந்திக்கும் வாய்ப்பை பெற்ற‌வ‌ர் அப்ப‌டி இருக்கும் போது நேரிலே வார்டின் குறைக‌ளை ச‌ரி செய்ய‌ கூறலாமே? வீண் குற்ற‌ச்சாட்டுக‌ளை கூறி வ‌ரும் இவ‌ர் இது வ‌ரை வார்டு ம‌க்க‌ளுக்காக‌ எப்போதாவ‌து சேர்ம‌ன் என்ற‌ முறையில் என்னிட‌ம் பேசியிருக்கிறாரா?வார்டு குறைக‌ளை தீர்ப்ப‌தில் க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிமிற்கு ஆர்வ‌மில்லை

வார்டு பிர‌ச்ச‌னைக‌ள் இருந்தால் எங்க‌ளிட‌ம் எடுத்து வாருங்க‌ள் தீர்வு காண‌ப்ப‌ட‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்கிறேன்.வீண் குறை கூறி திரிந்தால் ப‌ணிக‌ள்தான் பாதிக்க‌ப்ப‌டும் என‌ க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் அவ‌ர்க‌ள் உண‌ர‌ வேண்டும்.

அது போன்று பேருந்து நிலைய‌ம் அருகே வ‌ணிக‌ வளாக‌ம் சேத‌ம‌டைந்து உள்ள‌தை ஏற்கெனவே பார்வையிட்டு விட்டேன் அதை சீர் ப‌டுத்த‌ ரூ 5 ல‌ட்ச‌ம் செல‌வில் திட்ட‌ம் வ‌குக்க‌ப்ப‌ட்டு உள்ள‌து.இதை க‌வுன்சில‌ர் ஜெய‌பிர‌காஷ் அவ‌ர்க‌ள் என்னிட‌ம் கேட்டிருந்தால் விள‌க்க‌ம் தெரிவித்திருப்பேன் .

த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் புர‌ட்சி த‌லைவி அவ‌ர்க‌ளின் ந‌ல்லாட்சியில் ஏராள‌மான‌ ந‌ல‌ப்ப‌ணிக‌ள் கீழ‌க்க‌ரையில் ந‌டைபெறுகின்ற‌ன‌.ம‌க்க‌ள் ப‌ய‌ன் பெறும் வ‌க‌யில் இன்னும் பல்வேறு ந‌ல‌ப்ப‌ணிக‌ள் தொட‌ந்து நடைபெறும் என்றார்.
 

கீழ‌க்க‌ரை சாலைக‌ளில் சுற்றி திரிந்த‌ க‌ன்று! ம‌க‌ளிர் சுய‌ உத‌வி குழுவிட‌ம் ஒப்ப‌டைப்பு!ந‌கராட்சி ந‌ட‌வ‌டிக்கை!


கீழ‌க்க‌ரை சாலையோர‌ம் சுற்றிதிரியும் மாடுக‌ளால் போக்குவ‌ர‌த்துக்கு பெரும் இடையூறு இருப்ப‌தாக‌ எழுந்த‌ புகாரின் பேரில் சாலைக‌ளில் மாடுக‌ள் சுற்றி திரிந்தால் ந‌க‌ராட்சி ஊழிய‌ர்க‌ள் மூல‌ம் பிடிக்க‌ப்ப‌ட்டு மாட்டின் உரிமையாள‌ர்க‌ளுக்கு அப‌ராத‌ம் விதிக்கப்ப‌டும் என‌ ந‌க‌ராட்சி சார்பில் அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து.

இந்நிலையில் கீழ‌க்க‌ரை சாலையில் நீண்ட‌ நாட்க‌ளாக‌ சுற்றி திரிந்த‌ க‌ன்று ஒன்றை சுகாதார ஆய்வாள‌ர் த‌லைமையிலான ந‌கராட்சி‌ குழுவின‌ரால் பிடிக்க‌ப்ப‌ட்டு ந‌க‌ராட்சி அலுவல‌க‌ வளாக‌த்தில் ஒரு வாரமாக‌ பராம‌ரிப்பு செய்து வைத்திருந்த‌ன‌ர்.

யாரும் இக்க‌ன்றுக்கு உரிமை கோர‌ முன் வ‌ராத‌தால் ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் மூல‌ம் த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா,க‌மிஷ‌ன‌ர் முஹ‌ம்ம‌து முகைதீன்,துணை த‌லைவ‌ர் ஹாஜா முஹைதீன், ஆகியோர் முன்னிலையில் ம‌க‌ளிர் சுய‌ உத‌வி குழுவை  சேர்ந்த‌வ‌ரிடம் இக்க‌ன்று ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌து.


 

Tuesday, May 7, 2013

ரத்ததான கொடையாளர்க‌ள் 1 ல‌ட்ச‌த்திற்கும் மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை அறிந்து கொள்ள‌ வ‌லைத‌ள‌ம்!ராம‌நாத‌புர‌த்தில் அறிமுக‌ நிக‌ழ்ச்சி!


இந்தியா முழுவதும் தன்னார்வத்துடன் ரத்த தானம் செய்ய
விரும்பும் சுமார் 1ல‌ட்ச‌த்திற்கும்  மேற்ப‌ட்டோர்  பதிவு செய்துள்ள இணையதளத்தை செல்போன்களில் அறிந்து கொள்ளும் வசதியை ராமநாதபுரத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.

   கடந்த 24.11.2005 அன்று ஆந்திராவைச் சேர்ந்த பொறியாளர் எஸ்.கே. ஷெரீப் (9885039261) என்பவரை நிறுவனராகக் கொண்டும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கணினி தொழில்நுட்ப வல்லுநர்களும் இணைந்து http://www.friends2support.org/index.aspx என்ற இணையதளத்தை துவக்கியுள்ளனர்.

  தன்னார்வ ரத்த தான கொடையாளர்களுக்காகவே தொடங்கப்பட்ட இந்த இணைய தளம் சுமார் 200 பேர் பதிவு செய்யப்பட்டதுடன் துவக்கப்பட்டது. தற்போது இந்த இணையதளத்தில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 1 ல‌ட்ச‌திற்கும் மேற்ப‌ட்ட‌ தன்னார்வத்துடன் ரத்த தானம் செய்ய விரும்புவதாக தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

  கணினி உள்ளவர்களால் மட்டுமே பார்க்க முடிந்த இந்த இணையதளம் இப்போது செல்போன்களிலும் பார்த்து தேவையான ரத்த தான கொடையாளர்களை பயன்படுத்திக் கொள்ளும் வசதி ராமநாதபுரத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தொடக்கி வைத்து செல்போன்களில் இவ்வசதியை எவ்வாறு பயன்படுத்துவது என விளக்கியதாவது:
  ஆண்டிராய்டு, வின்டோஸ், ஆப்பிள், ஜாவா உள்ளிட்ட வசதிகளை உடைய செல்போன்களில் இந்த இணையதளத்தை யாரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

   இந்த இணையதளம் மூலம் ரத்த தானத்தில் மிகச்சிறந்த சேவை செய்ய முடியும். தமிழகத்தில் ஆண்டுக்கு 10,000 பேர் விபத்துகளால் உயிரிழக்கின்றனர். இதில் பெரும்பாலோருக்கு ரத்தம் தேவைப்பட்டுள்ளது. ரத்தத்தின் தேவை தற்போது  அதிகமாக உள்ளது. ஆனால் அதற்கான தேவை குறைந்துள்ளது.
  எனவே இன்றைய சூழ்நிலையில் ரத்த தான விழிப்புணர்வு மிக அவசியமாகும் என்றார்.

  விழாவிற்கு ஆயிரவைசிய மகாஜன சபைத் தலைவர் அ.வேணுகோபாலன் தலைமை வகித்தார். நகை வியாபாரிகள் சங்க மாநில துணைத் தலைவர் என்.ஏ. வாசுதேவன், நகர் துணைத் தலைவர் பி. ராகவன், ஆயிரவைசிய சமூக நலச் சங்கத் தலைவர் ஆர்.எஸ். கோபி, வர்த்தக சங்கத் தலைவர் பா. ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  முன்னதாக ரத்த தான இணையதள தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் ஏ.வி. சதீஷ்குமார் வரவேற்றார்.   விழாவில் அதிகமுறை ரத்த தான முகாம்களை நடத்திய பேராசிரியர் எஸ். அய்யப்பன், ஆயிரவைசிய சமூக நலச் சங்கத் தலைவர் எஸ்.ஆர். கோபி ஆகியோருக்கு நினைவுப் பரிசுகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.

  விழாவில் ராமநாதபுரம் டி.எஸ்.பி. முரளீதரன், இதய நோய் மருத்துவர் ஜவஹர்பாரூக், அரிமா சங்கத் தலைவர் சண்முக சுந்தரம், நிர்வாகி அபர்ணா. வெங்கடாஜலம் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரத்ததான கொடையாளர்க‌ள் 1 ல‌ட்ச‌த்திற்கும் மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை அறிந்து கொள்ள‌ வ‌லைத‌ள‌ம்!ராம‌நாத‌புர‌த்தில் அறிமுக‌ நிக‌ழ்ச்சி!

 

Monday, May 6, 2013

சேதமடைந்த நிலையில் நகராட்சி வணிக வளாகம்! சீரமைக்க கோரிக்கை !


கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ளது .இங்கு 30 கடைகள் உள்ளன .கடைகளில் அடிக்கடி  சிமெண்ட் சிலாப்புகள் பெயர்ந்து விழுகின்றன .இதனால் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .

ஏற்கெனவே சிலாப்பு இடிந்து மீன் விற்கும் தொழிலாளி ஒருவர் காயமடைந்துள்ளார் எனவே பெரிய ஆபத்துக்கள் நிகழும் முன்  நகராட்சி நிர்வாகம் இதை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி கவுன்சிலர் ஜெயபிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.