Tuesday, April 30, 2013

கீழ‌க்க‌ரை அருகே வேன் க‌விழ்ந்து விப‌த்து!கேர‌ள‌ ப‌ய‌ணிக‌ள் காய‌ம்!



திருவ‌ன‌ந்த‌புர‌த்திலிருந்து ராமேஸ்வ‌ர‌த்திற்கு  கேர‌ளாவை சேர்ந்த‌வ‌ர்க‌ள் வேனில் ப‌ய‌ண‌ம் மேற்கொண்ட‌ன‌ர்.கீழ‌க்க‌ரை வ‌ண்ணாந்துறை ப‌குதியில் அமைந்துள்ள‌ துணை மின் நிலைய‌ம் அருகே வேன் க‌விழ்ந்து விப‌த்து ஏற்ப‌ட்ட‌து.இத‌னால் வேனில் ப‌ய‌ண‌ம் செய்த‌வ‌ர்க‌ளில் இர‌ண்டும் பேர் காய‌ம‌டைந்த‌ன‌ர்.இர‌வு நேரமானாலும் ச‌ம்ப‌வ‌ இட‌த்திற்கு வ‌ந்த‌ கீழ‌க்க‌ரையை சேர்ந்தோர் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு தேவையான‌ உத‌விக‌ளை செய்த‌னர்.காய‌ம‌டைந்த‌ ப‌ய‌ணிக‌ள் உட‌ன‌டியாக‌ ம‌ருத்து‌வம‌னைக்கு அனுப்ப‌ப்ப‌ட்ட‌ன‌ர்.



அருகே உள்ள‌ ம‌துபான‌ க‌டையில் ம‌து அருந்திவிட்டு சில‌ர் குறுக்கே வந்ததால் விப‌த்து ந‌டைபெற்ற‌தாக‌ சில‌ரும்,இர‌வு நேர‌மானதால் டிரைவ‌ரின் தூக்க‌த்தினால் ஏற்ப‌ட்ட‌ க‌வ‌ன‌ குறைவால் இந்த‌ விப‌த்து ந‌டைபெற்ற‌தாக‌வும் சில‌ர் தெரிவித்த‌ன‌ர்.ச‌ம்ப‌வ‌ இட‌த்திற்கு வ‌ந்த‌ போலீசார் விப‌த்து குறித்து விசார‌ணை ந‌ட‌த்தி வ‌ருகின்றன‌ர்.க‌ன‌ர‌க‌ வாக‌ன‌ம் மூல‌ம் விப‌த்துக்குள்ளான‌ வேன் அக‌ற்ற‌ப்ப‌ட்ட‌து.

ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ இப்ப‌குதி யில் தொட‌ர்ச்சியாக விப‌த்துக்க‌ள் ந‌டைபெற்று வ‌ருகிற‌து.

 2009ம் ஆண்டு ந‌டைபெற்ற‌ விப‌த்து


  சாலையின் ஓர‌த்தில் வீச‌ப்ப‌டும் வேக த‌டுப்பு வேலி
 கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் வண்ணாந்துறை அருகே சாலை வளைவில் அடிக்கடி விபத்து நடைபெற்று வந்ததால் ரோட்ட‌ரி ச‌ங்கத்தின் உத‌வியுட‌ன் காவல்துறை சார்பில் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக சாலையில் இரும்பு தடுப்பு வளைவு வேலிகளை அமைத்திருந்தனர்.ஆனால் லாரிகளில் வருபவர்கள் தடுப்புகளை சாலையோரம் வீசி விட்டு லாரிகளை வேகமாக ஓட்டி செல்வதாகவும் இத‌னால் விப‌த்துக்க‌ள் ஏற்ப‌ட‌ வாய்ப்புள்ள‌தாக‌ பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


  உடைத்து எடுக்கப்ப‌ட்டுள்ள‌ ஒளிரும் விள‌க்கு

கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் வண்ணாந்துறை அருகே வளைவில் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. இதனையடுத்து அரசு சார்பில் விபத்துகளை தவிர்க்கும் விதமாக‌ வளைவுகளில் ஏராளமான‌ கற்கள் பதித்து இரவு நேரங்களில் ஒளிரும் பிளாஸ்டிக் ஸ்டிக்கர் விளக்குகளை பொருத்தியிருந்தார்கள். இதன் மூலம் ஒளிரும் விளக்குகள் இரவு நேரம் வாகன ஒட்டிகளுக்கு மிகவும் உதவியாக இருந்து வந்தது .அதையும் சில‌ர்  உடைத்து எடுத்து விட்ட‌தை காண‌லாம்.


வண்ணாந்துறை அருகே உள்ள‌ ம‌துக்க‌டைதான் விப‌த்துக்க‌ளுக்கு கார‌ண‌ம் என‌ சில‌ர் குற்ற‌ம் சாட்டுகின்ற‌ன‌ர்.என‌வே அதை அக‌ற்ற‌ வேண்டும் என‌ கோரிக்கை விடுத்து வ‌ருகின்ற‌ன‌ர்.இப்ப‌குதியில் போக்குவ‌ர‌த்து காவ‌லரை நிறுத்த‌ வேண்டும்.அர‌சாங்க‌ம் இது குறித்து க‌வ‌ன‌ம் செலுத்தி இப்ப‌குதியை விப‌த்து ப‌குதியாக‌ அறிவித்து தேவையான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை மேற்கொள்ள‌ வேண்டும் என பொது ம‌க்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்

குண்ட‌ர் ச‌ட்ட‌த்தில் ஒருவ‌ர் கைது!


இது குறித்து போலீஸ் த‌ர‌ப்பில் கூற‌ப்ப‌டுவ‌தாவ‌து,

கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ ந‌ல்ல‌ இப்ராகிம்(55) என்ப‌வ‌ர் க‌ஞ்சா க‌ட‌த்த‌ல் தொட‌ர்பாக‌ கைது செய்ய‌ப்ப‌ட்டார். ந‌ல்ல‌ இப்ராகிம்(55) தொட‌ர்ந்து க‌ஞ்சா க‌ட‌த்த‌லில் ஈடுப‌ட்ட‌தாக‌ மாவ‌ட்ட‌ போலீஸ் எஸ்.பி ம‌யில்வாக‌ண‌ன்  இவ‌ரை குண்ட‌ர் த‌டுப்பு ச‌ட்ட‌த்தில் கைது செய்ய‌ ப‌ரிந்துரை செய்தார்.இத‌னை ஏற்ற‌ மாவ‌ட்ட‌ க‌லெக்ட‌ர் ந‌ந்த‌குமார் குண்ட‌ர் த‌டுப்பு ச‌ட்ட‌த்தில் கைது செய்ய‌ உத்த‌ர‌விட்டார்.அத‌ன் ப‌டி ந‌ல்ல குண்ட‌ர் ச‌ட்ட‌த்தின் கீழ் ம‌துரை சிறையில் அடைக்க‌ப்ப‌ட்டுள்ளார்.

முஹ‌ம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கணித துறைச் சார்பாக கருத்தரங்கம் !


கல்லூரி முதல்வர் ஜே.முஹம்மது ஜஹாபர் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் எஸ் எம்.ஜே. ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா முன்னிலை வகித்தார். கல்லூரியின் கணிதத்துறைத் தலைவி பேராசிரியை கே.ராஜம் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை ஸ்கூல் ஆப் மேதமெடிக்ஸ், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் துறை பேராசிரியர் பாஸ்கரன் பேசுகையில், விஞ்ஞானி கணித மேதை ராமானுஜத்தின் கண்டுபிடிப்பு எவ்வாறு பயன்படுகிறது. தங்கத்தின் தர விகிதம் மற்றும் எண்கள் கட்டிடத்துறையில் எவ்வாறு பயன்படுகிறது. பின்னம் கைப்பேசியில் பயன்படுத்தப்படும் விதம் மற்றும் வடிவியல் கணிதத்தின் முக்கியத்துவம் பற்றி விரிவாக விளக்கி கூறினார்.
பேராசிரியர் பாஸ்கரன், அருப்புக்கோட்டை எஸ். பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணிதத்துறைத் தலைவர் சந்திரமவுலீஸ்வரன் ஆகியோர் வளைவு களின் தன்மைப் பற்றிய வரலாறு மற்றும் பாலங்கள் ஆகியவை அமைக்கும் பொழுது பயன்படுத்த வேண்டிய கணித நுணுக்கங்கள் பற்றி கூறினர். கல்லூரி முதல்வர் ஜே.முஹம்மது ஜஹாபர் தலைமையுரையில், இந்த கருத்தரங்கம் மூலமாக மாணவர்கள் கூட்டாகச் சேர்ந்து கலந்துரையாடும் போது ஒவ்வொருவருக்கும் ஏற்படும் சந்தேகங்களைத் தெளிவுப்பெறச் செய்து படிக்க வேண்டுமெனக் கூறினார்.
கல்லூரி இயக்குநர் எஸ் எம்.ஜே. ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா தனது சிறப்புரையில், கணித மென்பது அறிவியலின் ராணி எல்லா மனிதனுக்கும் அன்றாட வாழ்க்கையில் கணிதம் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வாழ்க்கை யின் வெற்றிக்கு அவசியம் என விளக்கினார் பேராசிரியர் குமரன் நன்றியுரை வழங்கினார். பல்வேறுத் துறைத்தலை வர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Monday, April 29, 2013

கீழ‌க்க‌ரையில் தொட‌ரும் டெங்கு பாதிப்பு!10க்கும் மேற்ப‌ட்டோர் ம‌ருத்துவ‌ம‌னையில் அனும‌தி!


கீழ‌க்க‌ரையில் ப‌ல‌ மாத‌ங்க‌ளாக‌ டெங்கு ம‌ற்றும் ம‌ர்ம‌காய்ச்ச‌லால் ஏராள‌மானோர் பாதிக்க‌ப்ப‌ட்டு சிகிச்சை பெறுவ‌து தொட‌ர்ந்து கொண்டிருக்கிறது காய்ச்ச‌ல் பாதிக்கப்ப‌ட்டு இதுவ‌ரை சில‌ மாத‌ங்க‌ளில்‌ 4 பேர் உயிர‌ழ‌ந்துள்ள‌ன‌ர். ச‌மீப‌த்தில் கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ இள‌ம்பெண் ஒருவ‌ர் காய்ச்ச‌லால் பாதிக்க‌ப்ப‌ட்டு உயிர‌ழ‌ந்தார்.மேலும் த‌ற்போது 10க்கும் மேற்ப‌ட்டோர் டெங்கு காய்ச்ச‌லால் பாதிக்க‌ப்ப‌ட்டு ராம‌நாத‌புர‌ம் ம‌ற்றும் ம‌துரை த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னையில் சிகிச்சை பெற்று வ‌ருகின்றன‌ர்.

இது குறித்து ச‌மூக‌ ந‌ல் ஆர்வ‌ல‌ர் முகைதீன் கூறுகையில்,

சுகாதார‌த்துறையும் கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியும் இணைந்து ந‌ட‌வ‌டிக்கைகளை முடுக்கி விட‌ வேண்டும்.உயிர‌ழ‌ப்பு ஏற்ப‌ட்ட‌தும் சுகாதார‌த்துறையின‌ர் இர‌ண்டு நாட்க‌ள் ம‌ட்டும்உட‌ன‌டி ந‌ட‌வ‌டிக்கைக‌ள் எடுக்கின்ற‌ன‌ர்.பின்ன‌ர் ந‌ட‌வ‌டிக்கை ம‌ந்த‌மாகி விடுகிறது.
கீழக்க‌ரை ந‌க‌ரில் சிற‌ப்பு ம‌ருத்துவ‌ முகாம்க‌ளை அமைத்து டெங்கு த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ளை தீவிர‌ ப்ப‌டுத்த‌ வேண்டும்.ப‌ர‌வி வ‌ரும் காய்ச்ச‌லை க‌ட்டுப்ப‌டுத்த‌ வேண்டும் இது குறித்து பொதும‌க்க‌ளிட‌ம் விழிப்புண‌ர்வு ஏற்ப‌டுத்துவ‌ற்கு உண்டான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை தீவிர‌ப்ப‌டுத்த‌ வேண்டும் டெங்கு இல்ல‌வே இல்லை என்ற‌ க‌ருத்தை வ‌லியுறுத்த‌ சுகாதார‌த்துறை எடுக்கும் முய‌ற்சிக‌ளை விட்டு விட்டு நோய் த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ளை எடுத்து கீழ‌க்க‌ரை ம‌க்க‌ளின் அச்ச‌த்தை போக்க‌ வேண்டும் என்றார்.

முஹ‌ம்ம‌து ச‌த‌க் பாலிடெக்னிக் க‌ல்லூரி மாண‌வ‌,மாண‌விய‌ர்க‌ளுக்கு த‌மிழ‌க‌ அர‌சின் விலையில்லா லேப்டாப்!




முஹ‌ம்ம‌து ச‌த‌க் பாலிடெக்னிக் க‌ல்லூரியில் ப‌யிலும் மூன்றாம் ஆண்டு மாண‌வ‌ மாண‌விக‌ளுக்கு த‌மிழ‌க‌ அர‌சின் சார்பாக‌ இல‌வச‌ ம‌டி க‌ணினி(லேப்டாப்)வழ‌ங்கும் விழா ந‌டைபெற்ற‌து.

க‌ல்லூரி இய‌க்குந‌ர் ஹ‌பீப் முஹ‌ம்ம‌து ச‌த‌க்க‌த்துல்லா த‌லைமை வ‌கித்தார்.கைத்த‌றி ம‌ற்றும் ஜ‌வுளித்துறை அமைச்ச‌ர் சுந்த‌ர்ராஜ‌ன்,மாவ‌ட்ட‌ அதிமுக‌ செய‌லாள‌ர் முனியசாமி,கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் க‌த‌ரியா, கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி துணை த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன்,ஒன்றிய‌ துணை செய‌லாள‌ர் செல்வ‌குமார்,புல் ல‌ந்தை க‌ழ‌க‌ செய‌லாள‌ர் பாக்கிய‌நாத‌ன்,மாவ‌ட்ட‌ வ‌ழ‌க்க‌றிஞர் பிரிவு செய‌லாள‌ர் ஹ‌ரிதாஸ்,போக‌லூர் யூனிய‌ன் த‌லைவ‌ர் நாக‌நாத‌ன் முன்னிலை வ‌கித்த‌ன‌ர்.
க‌ல்லூரி முத‌ல்வ‌ர் அலாவுதீன் வ‌ர‌வேற்றார்.

 நிக‌ழ்ச்சியில் 742  மாண‌வ‌,மாண‌விய‌ர்க‌ளுக்கு லேப்டாப் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.துறை த‌லைவ‌ர் மரிய‌தாஸ் ந‌ன்றி கூறினார்.இதில் ந‌க‌ர் அதிமுக‌ நிர்வாகிக‌ள் இம்பாலா சுல்தான்,ச‌ர‌வ‌ண‌ பாலாஜி,நாராய‌ண‌ன்,க‌வுன்சில‌ர்க‌ள் செய்ய‌து க‌ருணை,சுரேஷ் உள்ப‌ட‌ உள்ப‌ட‌ ஏராள‌மான‌ பேராசிரிய‌ர்க‌ள்,துறை த‌லைவ‌ர்க‌ள் ம‌ற்றும் மாண‌வ‌ர்க‌ள் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

 

Sunday, April 28, 2013

கீழ‌க்க‌ரை 17வ‌து வார்டு ப‌குதி சாலையை சீர‌மைக்க‌ கோரிக்கை!


17வது வார்டு பகுதியிலுள்ள சொக்கநாதர் கோயில் தெருவில் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். இந்த சாலை குண்டும் குழியுமாக இருந்தும் சீரமைக்காததால் மக்கள் சிரமம் அடைகின்றனர்.
இது குறித்து அப்ப‌குதியை சேர்ந்த‌ ஹ‌பீப் கூறுகையில்,

இப்ப‌குதியில் ஏராளாமான‌ ப‌ள்ளி மாண‌வ‌,மாண‌விய‌ரை ஏற்றி வாக‌ன‌ங்க‌ள் அதிக‌ள‌வில் செல்கின்ற‌ன‌.அதிக‌ வாக‌ன‌ போக்குவ‌ர‌த்து நிறைந்த‌ ப‌குதியாகும் என‌வே உட‌ன‌டியாக‌ இப்ப‌குதியின் சாலையை சீர‌மைக்க‌ வேண்டும் என்றார்.

கீழ‌க்க‌ரை 15வ‌து வார்டு ப‌குதியில் புதிய‌ சாலை!



கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி 15வது வார்டுக்குட்பட்ட கண்ணாடியப்பா தர்ஹா ப‌குதியில் புதிய‌ சாலை அமைக்கப்ப‌ட்டுள்ள‌து.

 இது குறித்து சேர்ம‌ன் ராவிய‌த்துல் க‌த‌ரியா கூறிய‌தாவ‌து,ம‌ண‌ல் நிறைந்து சேத‌ம‌டைந்து காண‌ப்ப‌ட்ட‌ இப்ப‌குதியின் 150 மீட்ட‌ர் தொலைவிலான‌ இச்சாலை ரூ 1 ல‌ட்ச‌த்து 20 ஆயிர‌ம் ரூபாய் செல‌வில் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து

Thursday, April 25, 2013

ஏர்வாடி த‌ர்காவில் க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ குழ‌ந்தை க‌ர்நாட‌காவில் மீட்பு!வாலிப‌ர் கைது!


குழ‌ந்தையை க‌ட‌த்திய‌ அப்துல் ந‌சீர் கைது செய்ய‌ப்ப‌ட்டு  15 நாள் காவலில் வைக்கும்படி குற்றவியல் ந‌டுவ‌ர் உத்தரவிட்டார்.

ஏர்வாடி தர்காவில் கடத்தப்பட்ட ஒன்றே முக்கால் வயது ஆண் குழந்தையை கர்நாடகத்தில் போலீஸார் மீட்டு, கடத்திய இளைஞரையும் கைது செய்து, இன்று(வியாழக்கிழமை) நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்காவில்‌ தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் இங்கு வந்து தங்கியிருந்து செல்கிறார்கள்.



 இவ்வாறு திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி அருகே உள்ள அரவாய் குறிச்சி பகுதியை சேர்ந்த இபுராகிம் மூசா என்பவரது மனைவி யாஸ்மின் சஜினா(வயது 20) உட‌ல்நிலை ச‌ரியில்லாத‌ தனது 2 வயது மகன் முகம்மது யாசினுடன் த‌ர்காவில் த‌ங்கி இருந்தால் குண‌ம‌டையும் என்ற‌ அவ‌ரின் ந‌ம்பிக்கையின் பேரில் க‌டந்த 9.1.2013 முதல் ஏர்வாடி தர்கா வளாகத்தில் தங்கியிருந்து வருகிறார்.இவரது கணவர் இபுராகிம் மூசா அந்தமானில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் யாஸ்மின் சஜினா தங்கியிருந்த பகுதியில் வாலிபர் ஒருவர் முகமது யாசினுடன் நன்றாக பழகி விளையாடி வந்தாராம். இதன் காரணமாக அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டு சிறு வனை வைத்திருக்க அனுமதித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி யாஸ்மின் சஜினா தனது மகனுக்கு பால் வாங்கு வதற்காக அந்த வாலிபரிடம் சிறுவனை விட்டு விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது மகனையும், அந்த வாலிபரையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த யாஸ்மின் சஜினா கதறி அழுது பல்வேறு இடங்களில் மகனை தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ஏர்வாடி தர்கா காவல் நிலையத்தில் யாசின் ஜபினா புகார் செய்தார். கடத்தப்பட்ட குழந்தையையும், கடத்திய நபரையும் கண்டு பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயி்லவாகனன் உத்தரவில் ஆய்வாளர் கணேசன், சார்பு ஆய்வாளர்கள் ஜேசு தாஸ், மகேஸ்வரி, கணேசன் ஆகியோ்ர அடங்கிய தனி போலீஸ் படையை உதவி காவல் கண்காணி்ப்பாளர் விக்ரமன் நியமித்தார்.
இது குறித்து போலீஸ் த‌ர‌ப்பில் கூறப்ப‌டுவ‌தாவ‌து,

இதி்ல் கர்நாடக மாநிலம், சக்தபுரத்தைச் சேர்ந்த முகம்மது மகன அப்துல் நசீர் (22) என்ற இளைஞர் சுமார் ஒரு வாரமாகத் தங்கி இருந்தார் என்பதும் அவ‌ர்தான் அந்த‌ குழ‌ந்தையுட‌ன் ப‌ழ‌கிய‌தும் தெரிய‌ வ‌ந்த‌து, குழந்தை காணாமல்போன நாள் முதல் இந்த இளைஞரையும் காணவில்லை என்பதும் தெரிய‌வ‌ந்த‌து. மேலும் க‌ட‌ந்த‌ இர‌ண்டு  நாட்க‌ளுக்கு முன் ஏர்வாடி ஹ‌க்தார் நிர்வாகி ஒருவ‌ருக்கு  குழ‌ந்தையை த‌ர‌வேண்டுமானால் ரூ5 ல‌ட்ச‌ம் வேண்டும் எனவும் இல்லையென்றால் கொலை செய்து விடுவ‌தாக‌வும்‌ போன் வ‌ந்துள்ள‌து.ம‌ங்க‌ளூரிலிருந்து போன் பேசிய‌து தெரிய‌ வ‌ந்த‌தால் கர்நாடகம் சென்ற தனி போலீஸ் படையினர், குழந்தை கடத்தல்காரன் அப்துல் நசீரை அவனது சொந்த ஊரில் பதுங்கி இரு்நத போது நேற்று(புதன் கிழமை) கண்டுபிடித்து விசாரித்த‌ போது குழ‌ந்தை காணாம‌ல் போய் விட்ட‌தாக‌ கூறியுள்ளான்.

பின்ன‌ர் அங்குள்ள‌ காவ‌ல் துறை மூல‌ம் விசார‌ணை செய்த‌தில் குழ‌ந்தை ஒன்று அனாதையாக‌ நின்ற‌தால் அப்ப‌குதி ம‌க்க‌ள் குழ‌ந்தை காப்ப‌க‌த்தில் சேர்த்துள்ளன‌ர்.‌  பின்னர் தாய் மூல‌ம் குழந்தை அடையாள‌ம் காண‌ப்ப‌ட்டு குழ‌ந்தைமுகம்மது யாசினையும் மீட்டன‌ர்.

குழ‌ந்தையை க‌ட‌த்திய‌ அப்துல் ந‌சீர் கைது செய்ய‌ப்ப‌ட்டு  15 நாள் காவலில் வைக்கும்படி குற்றவியல் ந‌டுவ‌ர் உத்தரவிட்டார்.குழ‌ந்தையை ப‌ண‌த்திற்காக‌த்தான் க‌ட‌த்தினாரா,பிச்சை எடுக்க‌ வைக்க‌ப்ப‌டுவ‌த‌ற்காக‌ க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌தா,பிண்ணியில் வேறு யாரும் உள்ள‌ன‌ரா என‌ போலீசார் விசார‌ணை செய்து வ‌ருகின்ற‌ன‌ர்.குழந்தை கடத்தப்பட்ட 6 நாள்களில் குழந்தையை மீட்டு, கடத்தல்காரனையும் கைது செய்த தனி போலீஸ் படையினரை காவல் கண்காணிப்பாளர், உதவி காவல் கண்காணிப்பாளர், மற்றும் தர்கா நிர்வாகத்தினர், பொது மக்கள் ஆகியோர் பாராட்டினர்

அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையோட்டி அதிக‌ ம‌திப்பெண் பெற்ற‌ மாண‌வ‌,மாண‌விய‌ருக்கு விருது!


திருப்புல்லாணி வட்டார அம்பேத்கர் இளைஞர் பேரவையின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா கீழக்கரை தனியார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
 
ஒருங்கிணைப்பாளர் ரகுமான் வரவேற்றார். அற்புத குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் சேக் இபுராகிம், எஸ்.சி, எஸ்.டி அரசு ஊழியர் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ராமையா முன்னிலை வகித்தார்.
இதில் அனைத்து பள்ளிகளிலும் 11ம் வகுப்பில் கணிதம், அறிவியல் பாடங்களிலும், வங்கியில் கல்வி கடன் வழங்குவதிலும் தனியார் துறை வேலைவாய்ப்பிலும், ஆசிரியர் தகுதி தேர்விலும் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
 ஏற்பாடுகளை ராஜேஸ், அருண்விஜயகுமார் செய்திருந்தனர், ஒருங்கிணைப்பாளர் சூரன் நன்றி கூறினார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
 

கீழ‌க்க‌ரை கல்லூரி மாணவர்கள் சாதனை !குறைந்த காற்றழுத்தத்தில் மின்சார‌ உற்ப‌த்தி!நவீன காற்றாலை கருவி கண்டுபிடிப்பு



கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்ணணுவியல் துறை இறுதியாண்டு மாணவர்கள் குறைந்த காற்றழுத்தத்தின் மூலம் மின் உற்பத்தி செய்யும் நவீன கருவியை கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி மின்னி யல் மற்றும் மின்ணணுவி யல் துறை இறுதியாண்டு மாணவர்கள் அஹமது ஹூசைன் ஆசிப், பாசித்கனி, செய்யது முகம்மது பாதுஷா, மற்றும் சின்னத்துரை. இந்த மாணவர்கள் குறைந்த காற்றழுத்தத்தின் மூலம் மின் உற்பத்தி செய்யும் நவீன காற் றாலை கருவியை கண்டுபித்துள்ளனர்.

இந்த நவீன கருவியை கண்டுபிடித்த மாணவர்கள் கூறுகையில், ‘பொதுவாக ஒரு காற்றாலை மின் உற்ப த்தி செய்வதற்கு நொடிக்கு 5 மைல் வேகம் உள்ள காற்ற ழுத்தம் வேண் டும். ஆனால் எங்களது புதிய நவீன காற் றாலை கருவி மூலம் மின் உற்பத்தி செய்வதற்கு நொடி க்கு 2 மைல் என்ற மிகக்குறைந்த காற்றின் வேகம் போதும். எனவே குறைந்த காற்றழுத்தம் உள்ள இடங்களில் கூட இந்த கருவியை நிறுவி மின் உற்பத்தியை பெ ருக்கி கொள்ளலாம். இதன்மூலம் தற்சமயம் உள்ள காற்றாலை யை விட 20 சதவிகிதம் கூடுதலாக மின் உற்பத்தி செய்ய முடியும். குறைந்த முதலீட்டில் நவீன காற்றாலையை உருவாக்கலாம்’ என்றனர்.

மாணவர்களை கல்லூரி தலைவர் ஹமீது அப்துல் காதர், தாளாளர் யூசுப்சாகிபு, இயக்குநர் ஹபீப் முகமது சதக்கத்துல்லா, முதல்வர் முகம்மது ஜகாபர் துறைத்தலைவர் சுரேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் பாராட்டினர்.


Wednesday, April 24, 2013

கீழ‌க்க‌ரை முஹைதீனியா ப‌ள்ளி மாண‌விக்கு இள‌ம் விஞ்ஞானிக்கான‌ சான்று!



ப‌ட‌ விள‌க்க‌ம்: இள‌ம் விஞ்ஞானி சான்றித‌ழ் ம‌ற்றும் ப‌ரிசு ரூ5 ஆயிர‌த்திற்கான‌ காசோலையை ராம‌நாத‌புர‌ம் துணை க‌ல்வி அலுவல‌ர் ராம‌நாத‌ன் மாண‌விக்கு வ‌ழ‌ங்கினார்

கீழ‌க்க‌ரை வ‌ட‌க்குத்தெரு முஹைதீனியா ந‌டுநிலைப்பள்ளியில் அறிவிய‌ல் க‌ண்காட்சி ந‌டைபெற்ற‌து.இதில் ஆறாம் வ‌குப்பு மாண‌வி அக‌ம‌து ஆதிபா சுற்று சூழ‌லை பாதுகாப்ப‌து எப்ப‌டி என்று செய்முறை விள‌க்க‌த்துட‌ன் பேசினார்.இம்மாணவியின் துல்லிய‌மான‌ அறிவை பாராட்டி நியூ டெல்லி அறிவிய‌ல் ம‌ற்றும் தொழில் நுட்ப‌ க‌ழ‌க‌த்தின் மூல‌மாக‌ சென்னை அறிவிய‌ல் ம‌ற்றும் தொழில்நுட்ப‌ம் க‌ழ‌க‌ம் சார்பாக‌ மாண‌விக்கு இள‌ம் விஞ்ஞானி சான்றித‌ழ் ம‌ற்றும் ப‌ரிசு ரூ5 ஆயிர‌த்திற்கான‌ காசோலையை ராம‌நாத‌புர‌ம் துணை க‌ல்வி அலுவல‌ர் ராம‌நாத‌ன் வ‌ழ‌ங்கினார். நிக‌ழ்ச்சிக்கு வ‌ட‌க்குத்தெரு ஜமாத் துணை த‌லைவ‌ர் அக‌ம‌து மிர்ஷா முன்னிலை வகித்தார்

வ‌ட‌க்குத்தெரு ஜ‌மாத் த‌லைவ‌ர் அக்ப‌ர்கான் த‌லைமையில் இய‌ங்கும் க‌ல்விக்குழுவின‌ர்,த‌லைமை ஆசிரிய‌ர் சுந்த‌ர‌ தேவி,மெட்ரிக் ப‌ள்ளி உத‌வி முத‌ல்வ‌ர் ஜெக‌ந்நாத‌ சேதுப‌தி ம‌ற்றும் ஆசிரிய‌ர்க‌ள் பாராட்டின‌ர்.
 

ஏர்வாடி த‌ர்காவில் 2 வ‌ய‌து குழ‌ந்தை க‌ட‌த்த‌ல்!க‌ண்காணிப்பு கேமரா மூல‌ம் க‌ட‌த்திய‌வரை அடையாள‌ம் காண‌ முய‌ற்சி!



ஏர்வாடி தர்காவில் தங்கியிருந்த சிறுவனை கடத்தி சென்றதாக மர்ம வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்காவில்‌ தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் இங்கு வந்து தங்கியிருந்து செல்கிறார்கள்.

இவ்வாறு திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி அருகே உள்ள அரவாய் குறிச்சி பகுதியை சேர்ந்த இபுராகிம் மூசா என்பவரது மனைவி யாஸ்மின் சஜினா(வயது 20) உட‌ல்நிலை ச‌ரியில்லாத‌ தனது 2 வயது மகன் முகம்மது யாசினுடன் த‌ர்காவில் த‌ங்கி இருந்தால் குண‌ம‌டையும் என்ற‌ அவ‌ரின் ந‌ம்பிக்கையின் பேரில் க‌டந்த 9.1.2013 முதல் ஏர்வாடி தர்கா வளாகத்தில் தங்கியிருந்து வருகிறார்.இவரது கணவர் இபுராகிம் மூசா அந்தமானில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் யாஸ்மின் சஜினா தங்கியிருந்த பகுதியில் வாலிபர் ஒருவர் முகமது யாசினுடன் நன்றாக பழகி விளையாடி வந்தாராம். இதன் காரணமாக அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டு சிறு வனை வைத்திருக்க அனுமதித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி யாஸ்மின் சஜினா தனது மகனுக்கு பால் வாங்கு வதற்காக அந்த வாலிபரிடம் சிறுவனை விட்டு விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது மகனையும், அந்த வாலிபரையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த யாஸ்மின் சஜினா கதறி அழுது பல்வேறு இடங்களில் மகனை தேடியும் கிடைக்கவில்லை. சிறுவனை மர்ம வாலிபர் கடத்தி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது
.
இதுகுறித்து யாஸ்மின் சஜினா ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கணேசன், சப் -இன்ஸ்பெக்டர் மகேசுவரி, ஏட்டு சண்முகவேல் ஆகி யோர் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின் றனர். யாஸ்மின் சஜினா தங் கியிருந்த இடத்தில் இருந்த நபர் மலையாளம் கலந்த தமிழ் மொழியில் பேசியதால் அவர் கேரளாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படு கிறது. அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் மங்களூரை சேர்ந்த ஒரு நபருடன் அடிக்கடி பேசியிருப் பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து தனிப் படை போலீசார் மங்களூர் விரைந்துள்ளனர்.

மேலும் தர்கா வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா மூலம் போலீசார் வாலிபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள் ளனர். ஏர்வாடி தர்காவில் தங் கியிருந்த சிறுவன் மர்ம மான முறையில் கடத்தப்பட்டுள்ள தால் அவனை நரபலி கொடுப் பதற்காக கடத்தி சென் றார் களா? அல்லது வேறு ஏதாவது காரணத்துக்காக கடத்தி செல் லப்பட்டுள்ளாரா? என்பது தெரியவில்லை. மேலும் அந்த மர்ம வாலிபர் தர்காவில் தங்கியிருந்த போது பிச்சை எடுத்து சாப்பிட்டுள்ளார். இதனால் சிறுவனை பிச்சை எடுக்க வைப்பதற்காக கடத்தி செல்லப்பட்டானா? போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்
 

கீழ‌க்க‌ரை மீனவர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்!அதிமுக நிர்வாகிகள் அணி தோல்வி !

 
ப‌ட‌ விள‌க்க‌ம்: வெற்றி பெற்ற‌வ‌ர்க‌ளுக்கு சான்றித‌ழ் வ‌ழங்க‌ப்ப‌ட்ட‌து

கீழக்கரை மீனவர்கள் கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுக நிர்வாகிகள் அணி தோல்வியடைந்தது. இதில் அதிமுக உறுப்பினர்கள் அணி வெற்றி பெற்றது.
கீழக்கரை மீனவர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு கடந்த 19ல் வாக்குப்பதிவு நடந்தது. இதற்கான வாக்குஎண்ணிக்கை நேற்று நடந்தது.
 
தேர்தல் அதிகாரிகள் வேதரத்தினம், சாகுல்ஹமீது, சுரேஷ்குமார் பங்கேற்றனர். இதில் அ.திமு.க. நிர்வாகிகள் ஒரு குழுவாகவும், அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் ஒரு குழுவாகவும் போட்டியிட்டனர். இதில் அடிப்படை உறுப்பினர்கள் அமோக வெற்றி பெற்று வெற்றிபெற்றனர்.
 
கீழக்கரை மீனவர் கூட்டுறவு சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் 332 செல்லாதவை 16. ஒவ்வொரு வாக்காளரும் 7 ஓட்டுகள் போட்டனர்.
 
போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் பெற்ற வாக்குகள் வருமாறு:
 
அ.தி.மு.க மாவட்ட பிரதிநிதி ஜகுபர் ஹூசைன்(118), இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் செல்வ கணேஷ் பிரபு(100), அகமது அப்துல்காதர்(115), சகுபர்சாதிக்(110)), காஜா அலாவுதீன்(120), முகைதீன், முகமது சதக் தம்பி(115), ஆகிய 7 பேர்கள் ஒரு குழுவாக போட்டியிட்டனர்.

அ.தி.மு.க. உறுப்பினர்கள் அப்துல்லா(209), அக்பர்அலி(196), லுக்மாயின்ஹக்கீம்(206), முகமதுஅலி(189), முகமது அலியார்(198), செய்யது அகமது கபீர்(190), பாவா செய்யதுகருணை(194) ஆகிய 7 பேரும் ஒரு குழுவாகவும் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க உறுப்பினர் அணி அமோக வெற்றி பெற்றது.

Tuesday, April 23, 2013

கீழ‌க்க‌ரை இன்ஸ்பெக்டர் க‌னேச‌ன் உள்ளிட்ட காவ‌ல்துறை அதிகாரிக‌ள் மீது ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ மாவ‌ட்ட‌ எஸ்.பியிட‌ம் எஸ்.டி.பி.ஐ சார்பில் புகார்!



 கீழ‌க்க‌ரை போலீசாரால் ப‌திவு செய்ய‌ப‌ட்டுள்ள‌ கொலை வ‌ழ‌க்கு ஒன்றில் எஸ்.டி.பி.ஐ  ராம‌நாத‌புர‌ம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ தொகுதி த‌லைவ‌ர் அப்பாஸ் ஆலிமை உண்மைக்கு புற‌ம்பாக‌ இணைத்துள்ள‌தாக‌வும் இதை செய‌ல்ப‌டுத்திய‌ கீழ‌க்க‌ரை இன்ஸ்பெக்ட‌ர் க‌னேச‌ன் உள்ளிட்ட‌ காவ‌ல்துறை அதிகாரிக‌ள் மீது ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வ‌லியுறுத்தியும்,வ‌ழ‌க்கிலிருந்து அப்பாஸ் ஆலிம் பெய‌ரை நீக்க‌ கோரியும் எஸ்.டி.பி.ஐ சார்பில் நிர்வாகிக‌ள் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் ராமநாத‌புர‌ம் காவ‌ல்துறை எஸ்.பி ம‌யில்வாக‌ண‌னிட‌ம் புகார‌ளித்த‌ன‌ர்.

கீழ‌க்க‌ரை இன்ஸ்பெக்ட‌ர் க‌னேச‌ன்
 
 
புகாரை பெற்று கொண்ட‌ காவ‌ல்துறை க‌ண்காணிப்பாள‌ர் இது குறித்து உரிய‌ ந‌ட‌வ‌டிக்கை எடுப்ப‌தாக‌ உறுதிய‌ளித்தார்.
 
இது குறித்து அப்பாஸ் ஆலிம் கூறிய‌தாவது,

கீழ‌க்க‌ரை போலீசாரால் போடப்ப‌ட்டுள்ள‌ கொலை வழ‌க்கில் பொய்யாக‌ என் பெய‌ர் சேர்க்க‌ப்ப‌ட்டுள்ள‌த‌ற்கு உள்ளூரை சேர்ந்த‌ சில‌ ச‌க்திக‌ளும் காரண‌மாக‌ இருக்க‌லாம் என‌ கருதுகிறேன்.இச்செய‌லுக்கு இன்ஸ்பெக்ட‌ர் க‌னேச‌ன் உள்ளிட்டோர் உட‌ந்தை.இவ‌ர்க‌ளுக்கு எஸ்டிபிஐ அனைத்து ச‌மூக‌ ம‌க்க‌ளிட‌மும் ந‌ற்பெய‌ர் எடுத்து வ‌ருவ‌து பிடிக்க‌வில்லை.ந‌ற்பெய‌ரை கெடுக்கும் நோக்க‌த்தில் இது போன்ற‌ செய‌ல்க‌ளில் ஈடுப‌ட்டு வ‌ருகிறார்க‌ள்.மேலும் கீழ‌க்க‌ரை போலீசாரால் போட‌ப்ப‌ட்டுள்ள‌ கொலை வ‌ழ‌க்கில் பொய்யாக‌ அப்பாவிக‌ள் மீது வ‌ழ‌க்கு ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.கீழ‌க்க‌ரை போலீசாரின் விசார‌ணை மீது ந‌ம்பிக்கையில்லை.இது தொட‌ர்பான‌ விசார‌ணையை சிபிஐயிட‌ம் ஒப்ப‌டைக்க‌ வேண்டும் என்றார்.

 

ராம‌நாத‌புர‌ம் ச‌ர‌க‌ புதிய‌ டிஐஜியாக‌ பாஸ்கர‌ன் பொறுப்பேற்றார் !


Thanks.Dinakaran daily news
 
ராமநாதபுரம் டி.ஐ. ஜி.யாக இருந்த ராமசுப்பிர மணி ஐ.ஜி.யாக பதவி உய ர்வு பெற்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.

சென்னை போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த பாஸ்கரன் டி.ஐ.ஜி., யாக பதவி உயர்வு பெற்று ராமநாதபுரத்திற்கு மாற்றப்பட்டார். அவர் நேற்று ராமநாதபுரம் டி.ஐ.ஜி.,யாக பொறுப்பேற்றார். இதற்கு முன் சென்னை போக்குவர த்து கமிஷனர், பரங்கி மலை துணை கமிஷனர், சேலம் துணை கமிஷனர், திருவா ரூர் மாவட்ட எஸ்.பி., ஆக அவர் பணியாற்றி உள்ளார். 1990&1991ல் ராமநாதபுரம் டி.எஸ்.பி.,யாகவும், பின்னர் ராமநாதபுரம் க்யூ பிராஞ்ச் டி.எஸ்.பி.,யாகவும் பணி யாற்றி உள்ளார்.

டி.ஐ.ஜி. பாஸ்கரன் செ ய்தியாளர்களிடம் கூறுகை யில், �சட்டம் ஒழுங்கை சிற ப்பாக பராமரிக்கும் பொரு ட்டு பதற்றமான இடங்களில் சுமூகமான சூழ்நிலை ஏற்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைக ளும் எடுக்கப்படும்.

இலங்கை சிறையில் உள்ள ராமே ஸ்வரம் மீனவர்களை விடு விக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மீனவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஈடுபடாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். வழிப்பறி, பெண்களிடம் நகை பறிப்பு போன்றவற்றை தடுக்க பழைய குற்றவாளிகளை கணக்கெடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ராமநாதபுரம், சிவகங் கை மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, போலீஸ் தொடர்பான நடவடிக்கைகளுக்கு என்னை பொதுமக்கள் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம்� என்றார்.  பேட்டி

Monday, April 22, 2013

கீழ‌க்க‌ரையில் வ‌ள்ளல் சீத‌க்காதி ம‌ணிம‌ண்ட‌ப‌ம் அமைக்க‌ கோரிக்கை!

ப‌ட‌ விள‌க்க‌ம்:‍கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ ச‌முதாய‌ புர‌வல‌ர் ஹ‌ச்.எஸ்.அப்துல் காத‌ரை கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் சார்பாக‌ த‌ங்க‌ம் ராத‌கிருஸ்ண‌ன் உள்ளிட்ட‌ நிர்வாகிக‌ள் ச‌ந்தித்த‌ன‌ர்

கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் செயலாள‌ர் த‌ங்க‌ம் ராதாகிருஸ்ண‌ன் ம‌ற்றும் நிர்வாகிக‌ள் கீழ‌க்க‌ரையில் முக்கிய‌ பிர‌முக‌ர்க‌ளை ச‌ந்தித்து ஊர் ந‌ல‌ன்,சமூக‌ ஒற்றுமையை மேம்ப‌டுத்துவ‌து குறித்து ஆலோச‌னை ந‌ட‌த்தின‌ர்.மேலும் கீழ‌க்க‌ரையில் வ‌ள்ளல் சீத‌க்காதி ம‌ணிம‌ண்ட‌ப‌ம் அமைப்ப‌த‌ற்கு வேண்டிய‌ ஏற்பாடுக‌ளை செய்ய‌ வேண்டும் என‌ முக்கிய‌ பிர‌முக‌ர்க‌ளை கேட்டு கொண்ட‌ன‌ர்.இச்ச‌ந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐயை சேர்ந்த‌ முஜீப் உள்ளிட்டோர் கல‌ந்து கொண்ட‌ன‌ர்.

மேலும் இது குறித்து த‌ங்க‌ம் ராத‌கிருஸ்ண‌ன் கூறியதாவ‌து,

கீழக்கரையில் செத்தும் கொடை கொடுத்தவர் என படிக்காசு புலவரால் போற்றப்பட்ட   வள்ளல் சீதக்காதி மரைக்காருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் .இது குறித்து ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ ப‌ல‌ த‌ர‌ப்பின‌ரும் கோரிக்கை விடுத்து வ‌ருகின்ற‌ன்றன‌ர்.த‌ற்போதைய‌ அர‌சாங்க‌ம் இத‌ற்கான‌ ஏற்பாடுக‌ளை செய்ய‌ வேண்டும்.ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ஜ‌வாஹிருல்லாவும் இத‌ற்காக‌ த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ரிட‌ம் வ‌லியுறுத்த‌ வேண்டும் என்றார்.
 

Sunday, April 21, 2013

குழந்தைகள் உள்ளிட்ட‌ 16 வயதுக்குட்பட்டோருக்கு ஏப்.28ல் இலவச இருதய சிகிச்சை முகாம்!

டாக்டர் சின்னத்துரை அப்துல்லா

சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து ராமநாதபுரத்தில் ஏப்.28ல் குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாம் நடத்துகிறது என ரோட்டரிசங்க துணை ஆளுனர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்தாவது:
பதினாறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களை கண்டறிந்து அவர்களுக்கு இலவச சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளை ரோட்டரி சங்கம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது.

ரோட்டரி சங்க ஆளுநர் மேஜர்டோனர் ஷாஜகான் முயற்சியில் இந்த முகாம் நடத்தப்படும். முகாம் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் வரும் ஏப்.28 ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரம செய்யது அம் மாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

மூச்சுத்திணறல், குறைவான உணவு உட்கொள்ளுதல், அதிகப்படியாக வியர்த்தல், உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல், குழந்தையின் மேனி நீலநிறமாதல், நடுக்கம், நினைவு இழத்தல் போன்றவை இருதய நோய்க்கான அறிகுறியாகும்.

இந்த குறைபாடு உள்ள குழந்தைகள் அல்லது ஏற்கனவே இருதய சிகிச்சைக் காக மருத்துவர்களால் பரிந் துரை செய்யப்பட்டு வசதியில்லாமல் தவிக்கும் ஏழை எளிய குழந்தைகளும் முகாமில் பங்கேற்று பயனடையலாம். பரிசோதனை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். முகாமில் கலந்துகொள்ள வரும் குழந்தைகள் தங்களது பழைய மருத்துவ அறிக்கைகள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் பதிவு பெற்றிருந்தாலோ அதற்கான முழு அறிக்கையும் எடுத்து வரவேண்டும்.

இது குறித்த விபரங்களை மேலும் அறிய தங்கள் ஊரில் உள்ள ரோட்டரி சங்க உறுப்பினர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும விபரம் அறிந்துகொள்ள, ரோட்டரி துணை ஆளுனர் டாக்டர் சின்னத்துரைஅப்துல்லா. 98424 21334, டாக்டர் கோதண்டராமன் ,94431 20286,. ரமேஷ்பாபு. 94425 21964., சண்முகராஜேஸ்வரன். 94433 31561., களஞ்சியம். 94434 42519, சாதிக்அலி 94433 31672., ஆசாத் எஸ்.எஸ். ஹமீது. 89252 27966, சுப்பிரமணியன் 94438 60560 ஆகியோரை தொடர்புகொண்டு விபரம் அறிந்துகொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
 

கீழ‌க்க‌ரையில் வேன் க‌விழ்ந்து 8பேர் காய‌ம்!

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே கருப்பன்துறையை சேர்ந்தவர் அந்தோணி ஜான் ரீகன். குடும்பத்துடன் வேளாங்கன்னி தேவாலயத்திற்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். நெல்லை மாவட்டம் சிங்கம்பாறை முருகன், வேனை ஓட்டி வந்தார். கீழக்கரை போலீஸ் ஸ்டேஷன் அருகே இ.சி.ஆர்., ரோட்டில் அதிகாலை 3.30 மணிக்கு சென்ற போது டிரைவரின் கவனக்குறைவால் வேன் நிலை தடுமாறி கவிழ்ந்தது.

இதில் அந்தோணி ஜான் ரீகன் உட்பட எட்டு பேர் காயமடைந்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கீழக்கரை எஸ்.ஐ., கோட்டைச்சாமி, வழக்குப்பதிவு செய்து, டிரைவர் முருகனை கைது செய்தார்.

 

Saturday, April 20, 2013

கீழ‌க்க‌ரை க‌டைக‌ளில் உண‌வு பாதுகாப்பு அதிகாரிக‌ள் ஆய்வு!த‌ண்ணீர் பாட்டில்க‌ள் ப‌றிமுத‌ல்!



உணவு பாதுகாப்புத்துறை நிய‌ம‌ன‌ அலுவ‌லர் டாக்ட‌ர் க‌ண்ண‌ன் த‌லைமையிலான‌ உண‌வு பாதுகாப்பு அதிகாரிக‌ள் மாரிஸ்வ‌ர‌ன்,க‌ருணாநிதி,மோக‌னராஜ்,செல்ல‌ப்பாண்டி,க‌ர்ண‌ன், ஆகியோர் அட‌ங்கிய‌ குழு இன்று காலை கீழ‌க்க‌ரை க‌டைக‌ளில் திடீர் ஆய்வு செய்து டீக்க‌டைக‌ளில் ப‌ய‌ன்ப‌டுத்தும் தேயிலை ,ஓட்ட‌ல் ம‌ற்றும் டீக்கடைக‌ளில் ப‌ய‌ன்ப‌டுத்தும் குடித‌ண்ணீர் ஆகிய‌வைக‌ளை ப‌ரிசோத‌னைக்காக‌ எடுத்து கொண்ட‌ன‌ர்.குடீநீர் பாட்டில்க‌ளை சோத‌னை செய்த‌ போது அர‌சு அனும‌தியின்றி பாட்டில்க‌ள் விற்ப‌னை செய்த‌து தெரிய‌ வ‌ந்த‌து.உட‌ன‌டியாக‌ பாட்டில்க‌ள் ப‌றிமுத‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌து.

இது குறித்து கா.செ.சுல்தான் என்ப‌வ‌ர் கூறுகையில்,
கீழ‌க்க‌ரையில் இந்த‌ ஆய்வு வ‌ர‌வேறக்க‌த‌க்க‌து.வ‌ள்ள‌ல் சீத‌க்காதி சாலை ம‌ட்டுமின்றி அனைத்து தெருக்க‌ளில் உள்ள க‌டைக‌ளிலும் சோத‌னை செய்ய‌ வேண்டும்.கால‌வ‌தியான‌ பொருட்க‌ளை விற்ப‌வ‌ர்க‌ள் மீது க‌டும் நட‌வடிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்.

பாதாள‌த்தில் கீழக்க‌ரை பாதாள சாக்கடை திட்டம்!விரைந்து செய‌ல்ப‌டுத்த‌ கோரிக்கை!




கீழக்கரையில் ஆய்வு பணிகளுடன் பாதாள சாக்கடை திட்டம்
ப‌ல்லாண்டுக‌ளாக‌ கிட‌ப்பில்  போட‌ப்ப‌ட்டுள்ள‌து. திட்ட மதிப்பீடு தயார் செய்து விரைவில் திட்டப்பணிகளை துவக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழக்கரையில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு 300க்கும் மேற்பட்ட சந்துக்கள் உள்ளன. சுமார் 50 ஆயிர‌த்திற்கும் மேற்ப்ப‌ட்டோர்
வசித்து வருகின்றனர். மிக குறுகிய தெருக்களில் ஏராளமான அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் கடலில் கலக்கின்றன. இதனால், கடலின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. பல இடங்களில் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. கீழக்கரையில் பெரும்பாலான இடங்களில் திறந்தவெளி சாக்கடையாக இருப்பதால் சுகாதார கேடு ஏற்படுகிற‌து.த‌ற்போது வாய்கால்க‌ளில் மூடி அமைக்க‌ப்ப‌டுவ‌தால் ஓர‌ள‌வுக்கு சுகாதார‌ம் பேண‌ப்ப‌டுகிற‌து ஆனாலும் மழை காலங்களில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனால், நோய்க‌ள் உருவாகி ப‌ல்வேறுபொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கீழக்கரையில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் ப‌ல்லாண்டு கால‌மாக‌ வலியுறுத்தி வருகின்ற‌னர்.

அப்போதைய‌ கீழக்கரை நகராட்சி தலைவர் பஷீர்அகம்மது, முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் முயற்சியால் பாதாள சாக்கடை திட்டம் துவங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முதற்கட்டமாக பாதாள சாக்கடை திட்டத்திற்கான ஆய்வுப்பணிகள் அப்போது ந‌டைபெற்றன‌. இத்திட்டத்திற்காக ரூ.24 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டது.கீழக்கரையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக 5 இடங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வும் ந‌டைபெற்ற‌து,பொதுமக்கள் ப ங்களிப்பாக 10 சதவீதம் என்று கூறப்பட்ட‌து.ஆனால் இத்திட்ட‌ம் துவ‌ங்க‌ப்ப‌ட‌வில்லை
பின்ன‌ர் ஆட்சி மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ராக‌ அதிமுக‌ சார்பில் ராவிய‌த்துல் கத‌ரியா த‌லைமையிலான‌ நிர்வாக‌ம் பொறுப்பேற்று 2013ல் 50 கோடி திட்ட‌ ம‌திப்பீட்டில் இத்திட்ட‌ம் துவ‌ங்கும் என‌ சென்ற‌ ஆண்டு 2012 அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து.ராம‌நாதபுர‌ம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ஜ‌வாஹிருல்லாவும் இது குறித்து மாநில‌ அர‌சை வ‌லியுறுத்துவ‌தாக‌ அறிவித்திருந்தார் ஆனால் இன்று வ‌ரை இத்திட்ட‌ம் துவ‌ங்குவ‌த‌ற்கான‌ எவ்வித அறிகுறியும் இல்லை.

அரசு தரப்பில் ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு, பொதுமக்கள் பங்களிப்பு தொகை எவ்வளவு போன்ற மதிப்பீடு த‌யாரிக்கப்ப‌ட‌ வேண்டும். நின்றுபோன இத்திட்டத்தை விரைவில் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னளர்.

ம‌க்க‌ள் பிர‌திநிதிக‌ளும்,உள்ளூர் பிர‌முக‌ர்க‌ளும் இத்திட்ட‌ம் நிறைவேற‌ முய‌ற்சி எடுக்க‌ வேண்டும்

அர‌சு ம‌ருத்துவம‌னையில் சிகிச்சை பெற்று வ‌ந்த‌‌ குழ‌ந்தைக்கு ம‌ருத்துவ‌ர்க‌ள் முன்னிலையில் ‌முத‌லாம் பிறந்த‌நாள் நிக‌ழ்ச்சி!


கீழ‌க்க‌ரை அருகே உள்ள‌ வேளானூர் க‌ருங்க‌தாஸ்(சென்ட்ரிங் தொழிலாளி) செல்வ‌ராணி த‌ம்ப‌திய‌ரின் குழ‌ந்தையான‌ முனீஸ்பிரியா(1),க‌ட‌ந்த‌ ஏப் 14ல் மூச்சு திண‌ற‌ல் ம‌ற்றும் ச‌ளி தொந்த‌ர‌வு  இருப்ப‌தாக‌ கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் அனும‌திக்கப்ப‌ட்டு சிகிச்சை பெற்று வ‌ந்த‌து. இந்நிலையில் இக்குழ‌ந்தைக்கு முத‌ல் பிற‌ந்த‌ நாள் ஏப்ர‌ல் 19ல் வ‌ருவ‌தால் வீடு சென்று திரும்புகிறோம் என‌ பெற்றோர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.

குழ‌ந்தைக்கு நோய் முழுமையாக‌ குண‌ம‌டைய‌ததால்  வீட்டுக்கு
செல்ல‌ வேண்டாம் என‌ அறிவுறுத்திய‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் அதே ச‌ம‌ய‌ம் குழ‌ந்தையின் பிற‌ந்த‌நாளை ம‌ருத்துவ‌ம‌னையிலேயே கொண்டாட‌லாம் என‌ யோச‌னை தெரிவித்த‌ன‌ர் அத‌ன்ப‌டி கீழ‌க்க‌ரை த‌லைமை அர‌சு ம‌ருத்துவ‌ர் ராஜ்மோக‌ன் த‌லைமையில் டாக்ட‌ர்க‌ள் சாஹீல் ஹ‌மீது,ஜ‌வாஹிர் ஹீசைன்,முத்த‌மிழ் அர‌சி, சித்தா டாக்ட‌ர் வெங்க‌ட் ராம‌ன் முன்னிலையில் கேக் வெட்டி சிற‌ப்பாக‌ கொண்டாட‌ப்ப‌ட்ட‌து.

இது குறித்து குழ‌ந்தையின்  பெற்றோர்க‌ள் கூறிய‌தாவ‌து,குழ‌ந்தையின் உட‌ல்ந‌ல‌க்குறைவால் மிகுந்த‌ க‌வ‌லையிலும் மேலும் குழ‌ந்தையின் பிற‌ந்த‌ நாள‌ன்று ம‌ருத்துவ‌ம‌னையிலேயே இருக்க‌ நேரிடுகிற‌தே என்ற‌ வ‌ருத்த‌த்துட‌ன்  இருந்த‌ எங்க‌ளுக்கு ம‌ன‌ ஆறுத‌ல் அளிக்கும் வ‌கையில் எங்க‌ள் குழ‌ந்தையின் முத‌ல் பிற‌ந்த‌ ம‌ருத்துவ‌ம‌னையில் கொண்டாட‌ அனும‌தி த‌ந்த‌ ம‌ருத்துவ‌ர்க‌ளுக்கும் நிர்வாக‌த்தின‌ருக்கும் ந‌ன்றியை தெரிவித்து கொள்கிறோம்.என்ற‌ன‌ர்.

 

Friday, April 19, 2013

தேசிய‌ அள‌விலான‌ போட்டியில் கீழ‌க்க‌ரை க‌ல்லூரி மாண‌வ‌ர் முத‌லிட‌ம்!

 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர் தேசிய அளவில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் முதல் பரிசு பெற்றார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கில் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியல்துறை மூன்றாம் ஆண்டு மாணவர் மதுமிதன் வினாடிவினா போட்டியில் முதல்பரிசை வென்றார்.

பரிசு பெற்ற மாணவரை கல்லூரி தலைவர் ஹமீது அப்துல்காதர்,தாளாளர் யூசுப் சாகிப்,இயக்குநர் ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா,முதல்வர் முஹம்மது ஜஹாபர் மற்றும் துறைத்தலைவர் கார்த்திகேயன்,பேராசிரியர் யூசுப் ஆகியோர் பாராட்டினர். 

கீழக்கரை பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு !

 
கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி ஆங்கிலத்துறை சார்பில் தகவல் தொழில் நுட்ப பரிமாற்ற கருத்தரங்கு நடந்தது.
 
கல்லூரி முதல்வர் முகமது ஜகாபர் தலைமை வகித்தார். இயக்குநர் ஹபீப் முகமது சதக்கத்துல்லா முன்னிலை வகித்தார். ஆங்கிலத்துறைத் தலைவர் ஷகீலாபானு வரவேற்றார். தகவல் பரிமாற்றத்தின் வகைகள் பற்றியும், வெற்றிகரமான தகவல் பரிமாற்றம் எவ்வாறு அமைகிறது என்பது குறித்தும் தூத்துக்குடி மனநல வளர்ச்சி பொறியியல் நிறுவன இயக்குநர் கணேஷ் ராமசந்திரன் பேசினார், பேராசிரியர் பிரான்சிஸ் நன்றி கூறினார். மக்கள் தொடர்பு அலுவலர் நஜிமுதீன், பேராசிரியைகள் சத்தியவதி, யாஸ்மின், ரேகா உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்தனர்.

கீழ‌க்க‌ரையில் தாழ்வாக‌ தொங்கும் மின்க‌ம்பிகளால் ஆப‌த்து!ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வ‌லியுறுத்த‌ல்


கீழக்கரையில் பள்ளி அருகே தாழ்வாகச் செல் லும் மின் கம்பியின் விபரீ தம் உணர்ந்து மின்வாரி யம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கீழ‌க்க‌ரையில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் மிக‌வும் தாழ்வாக‌ செல்கிற‌து.இத‌னால் ஆப‌த்து விளையும் ஆப‌த்துள்ளது.குறிப்பாக‌ கீழக்கரை தெற்கு தெரு இஸ்லாமிய பள்ளியின் பின்புற வாசல் அருகே செதுல்லும் மின் கம்பி தாழ்வாக செய்கிறது. ஆறு அடி உயரத்தில் உள்ள மின் கம்பியை மனிதர்களின் தலையை உரசி செல்லும் நிலையில் உள் ளது. பள்ளி குழந்தைகள் வாசல் படியில் நின்று கையை உயர்த்தினால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து மின்வாரியத்திற்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கையில்லை.

இது குறித்து சமூக ஆர்வலர் முஸ்தபா கூறுகையில்,

இஸ்லாமிய பள்ளி குழந்தைகள் அப்பகுதி வீடுகளிலுள்ள குழந்தைகள் வீட்டு வாசற்படியில் நின்று குதித்து விளையாடுகின்றனர்.
எதிர்பாராவிதமாக மின்கம்பியில் கை உரசினால் பெரிய விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தாழ்வாக செல்லும் மின் கம்பியை உயர்த்த ராமநாதபுரம் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் துரித நடவடிக்கை எடுக்க பணியாளர்களுக்கு உத்தரவிடவேண்டும்.கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் இது போன்ற‌ நிலை உள்ள‌து. என்றார்.

Tuesday, April 16, 2013

சின்ன‌ஞ்சிறு வ‌ய‌தில் சிறுசேமிப்பில் அச‌த்திய‌ ப‌ள்ளி குழ‌ந்தைக‌ளுக்கு ப‌ரிசு!


கீழ‌க்க‌ரை இஸ்லாமியா தொட‌க்க‌ப்ப‌ள்ளியி சின்ன‌ஞ்சிறு
பால‌ர்க‌ளுக்கு சிறு சேமிப்பு ப‌ழ‌க்க‌த்தை ஊக்க‌ப்ப‌டுத்தும் வித‌மாக‌ 2012 ஜீன் முத‌ல் 2013 மார்ச் வ‌ரை ஒரே வ‌ருட‌த்தில் ரூ 2 ஆயிர‌த்திற்கும் மேலாக‌ சிறு சேமிப்பில் சாதித்த‌ 49 பேர்க‌ளுக்கு ப‌ள்ளியின் சார்பாக‌ வ‌ழ‌ங்கும் விழா ந‌டைபெற்ற‌து.

ப‌ள்ளியில் ப‌யிலும் 350 குழ‌ந்தைக‌ளுக்கும் சிறு வ‌ய‌திலேயே  சிறு சேமிப்பு ப‌ழ‌க்க‌த்தை ஊக்க‌ப்ப‌டுத்தும் வித‌மாக‌ அனைத்து குழ‌ந்தைக‌ளு சிறு சிறு சேமிப்புக‌ளாக‌ சேர்த்து பாண்டிய‌ன் வ‌ங்கியில் ச‌ஞ்சாயிகா திட்ட‌த்தில் ப‌ள்ளியின் மூல‌மாக‌ ப‌ண‌த்தை சேமித்து வ‌ந்த‌ன‌ர்.

இந்நிலையில் இக்குழ‌ந்தைக‌ளை மேலும் அதிக‌மாக‌ ஊக்க‌ப்ப‌டுத்தும் விதமாக‌ அதிக‌ தொகை சேர்த்த‌ குழ‌ந்தைக‌ளுக்கு முத‌ல் மூன்று ப‌ரிசுக‌ளும் 46 பேர்க‌ளுக்கு ஆறுத‌ல் ப‌ரிசுக‌ளும் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

முன்னாள் க‌வுன்சில‌ர் எம்.எம்.கே ஜ‌மால் துரை தலைமை வ‌கித்து ப‌ரிசுக‌ளை வ‌ழ‌ங்கினார்.இஸ்லாமியா மெட்ரிக் ப‌ள்ளி முத‌ல்வ‌ர் மேப‌ல் ஜ‌ஸ்ட‌ஸ்,மெட்ரிக் தொட‌க்க‌ப்ப‌ள்ளி த‌லைமை ஆசிரிய‌ர் ஜொச‌ப் சார்த்தோ,ஆசிரியர் தாஹா ரசூல் முன்னிலை வ‌கித்தார். த‌லைமை ஆசிரியை த‌ன‌ ல‌ட்சுமி வர‌வேற்றார்.

இதில் இர‌ண்டாம் வ‌குப்பு மாண‌வி த‌ஸ்னீம் பேக‌ம் ரூ 13 ஆயிரத்து 100 சேமித்து முத‌ல் ப‌ரிசு பெற்றார்.இவ‌ரை ப‌ள்ளியின் தாளாள‌ர் எம்.எம்.கே முகைதீன் இப்ராகிம் பாராட்டினார்.ஆசிரியை ல‌த்திபா பேக‌ம் ந‌ன்றி கூறினார்.ஏற்பாடுக‌ளை பள்ளியின் நிர்வாக‌ இயக்குந‌ர் ம‌லைச்சாமி ம‌ற்றும் ஆசிரிய‌ர்க‌ள் செய்திருந்த‌ன‌ர்.
 

கீழ‌க்க‌ரையில் முன்விரோத‌த்தால் தாக்குத‌ல்!4 பேர் கைது!



500பிளாட் பகுதி முஹம்மது அஸ்லம் மகன் ஹமீது(30)த‌ர‌ப்பில் கூற‌ப்ப‌டுவ‌தாவ‌து,

சென்ற‌ மாத‌ம் கீழக்கரையை சேர்ந்த‌ அபுல்ஹசன்(18), முஹம்மது ஜமாலுதீன்(18), முஹம்மது ஆசிப்(18),பாரூக் மரைக்கா(18), அஜ்மீர்(18), தமீமுல் அன்சாரி(18). நண்பர்களான இவர்கள்  500பிளாட் பகுதியில் செல்லும் பெண்களை கேலி செய்த‌னராம்.இதை அதே பகுதியைச் சேர்ந்த முஹம்மது அஸ்லம் மகன் ஹமீது(30) என்பவர் அந்த இளைஞர்களை கண்டித்துள்ளார்.இதனால் இருத‌ர‌ப்புக்கும் முன் விரோத‌ம் இருந்து வ‌ந்துள்ள‌து.

இத‌னால் ஏற்ப‌ட்ட முன்விரோத‌த்தால்   ஹமீதுவை இளைஞர்கள் 6பேரும் வழி மறித்து தாக்கினர். இதில் காயமடைந்த ஹமீது கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இது சம்ப‌ந்தமாக ஹமீது கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து 4இளைஞர்களை கைது செய்தனர். அஜ்மீர்,தமீமுல் அன்சாரி ஆகிய இருவரை தேடி வருகின்றனர். 

கீழக்கரையில் கல்லூரி வாகன ஓட்டுநர் மீது தாக்குதல்!தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ளை போலீஸ் தேடுகிற‌து!



ப‌ட‌ங்க‌ள்: நன்றி. ந‌க்கீர‌ன் இணைய‌த‌ள‌ம்
கீழ‌க்க‌ரை ம‌ருத்துவ‌ம‌னை வளாக‌த்தில்... 

ப‌ட‌ங்க‌ள்: நன்றி. ந‌க்கீர‌ன் இணைய‌த‌ள‌ம்

கீழக்கரையைச் சேர்ந்த நாகசுந்தரம் மகன் ராஜேஸ்(24). இவர் கீழ‌க்க‌ரை தனியார் கல்லூரியில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை மாலைகல்லூரி மாணவிகளை வாக‌ன‌த்தில் ஏற்றிக் வீடுக‌ளில் சேர்ப்ப‌த‌ற்காக‌ கீழ‌க்க‌ரை சாலையில் சென்று கொண்டிருந்த‌ போது வாக‌ன‌த்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் 4 இளைஞ‌ர்க‌ள் வ‌ந்துள்ளன‌ர்.
 இது குறித்து ஓட்டுநர் ராஜேஸ் இளைஞ‌ர்க‌ளை க‌ண்டித்ததால் வாக்குவாத‌ம் ஏற்ப‌ட்டு ஓட்டுந‌ர் ராஜேஷ் க‌டுமையாக‌ தாக்க‌ப்ப‌ட்டுள்ளார்.இத‌னால் காயமடைந்த ராஜேஸ் கீழக்கரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ராஜேஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கஸ்டம்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த உமர்சாகிப்,அமீன் உட்பட 4பேர் மீது வழக்குபதிவு செய்து தேடி வ‌ருகின்ற‌ன‌ர்.
இதனிடையே ராஜேஸை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி ஒரு பிரிவை சேர்ந்த‌ ஏராள‌மான‌ இளைஞர்கள் கீழக்கரை காவல்நிலையத்தை முற்றுகையிட்டன‌ர். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Monday, April 15, 2013

கீழ‌க்க‌ரையில் நாளை(செவ்வாய்,16 ஏப்2013) மின் த‌டை!


கீழக்கரை பகுதியில் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழக்கரை,ஏர்வாடி,முகம்மது சதக் கல்லூரி பகுதி,காஞ்சிரங்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நாளை (செவ்வாய்,16 ஏப் 2013) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று உதவி செயற் பொறியாளர் க‌ங்காத‌ர‌ன் தெரிவித்துள்ளார்.