Friday, April 8, 2011

கீழக்கரையில் சுகாதார சீர்கேட்டை சீர்படுத்துவேன் ! மமக வேட்பாளர் ஜவாஹிருல்லாஹ் பேட்டி






கீழக்கரை.ஏப்ரல்.-08.ராமநாதபுரம் தொகுதி அதிமுக கூட்டணியின் மமக வேட்பாளர் ஜவாஹிருல்லாஹ் கீழக்கரையில் பல் வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார். பின்னர் கீழக்கரையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், நான் வெற்றி பெற்றால் கீழக்கரையில் சுகாதார சீர்கேட்டை களைவேன்.பழைய குடிநீர் குழாய்களை மாற்றி புதிய குழாய்களை பதிக்க ஏற்பாடு செய்வேன்.சேது சமுத்திர திட்டத்தை மத்தி்ய காங்கிரஸ் அரசு முறையாக செயல்படுத்தாமல் வீணடித்து விட்டது.
இத்திட்டத்தினால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவாகவும்,மீனவர்களின் நலன் பாதிக்கப்படுவதாகவும் சுற்று சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்த வரை மீனவர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.மத்திய அரசு அறிமுகபடுத்தியுள்ள கடற்கரை மேலான்மை திட்டம் மீனவர்களின் வாழ்வாதரத்தின் உரிமையை பறிக்கும் திட்டம் .இத்திட்டத்தினால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மீனவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பேன்.மிஸ்ரா கமிசன் ,சச்சார் கமிசன் அறிக்கைகளை கண்டு கொள்ளாமல் கிடப்பில் போட்டது.இஸ்லாமியர்களில் முதுகில் குத்தியது,துரோக, இழைத்தது காங்கிரஸ் அரசுதா்ன் காங்கிரஸ் அரசு சிறுபாண்மையினருக்கு ஆதரவாக எதுவும் செய்யவில்லை.பெரியபட்டணம் படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன்.ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் அசன் அலியோ பெரியபட்டணம் என் தொகு்தி இல்லை என்று புறகணித்தார்.
நான் ஹசன் அலி போல் பொழுது போக்கு அரசியல்வாதி அல்ல பல்லாண்டு காலமாக மக்களுக்கான நல பணிகளி்ல் ஈடுபட்டு வருகிறேன். நான் வெற்றி பெற்றால் போதும்,போது்ம் என்று் சொல்லு்ம் அளவுக்கு இப்பகுயில் இருந்து பணியாற்றுவே்ன் என்றார்.பேட்டியின் போது அவருடன் அதிமுக நகர் செயலாளார் ராஜேந்திரன்,தமுமுக சிராஜுதின்,முஜிப்,ஹசன் உள்பட பலர் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.