Monday, November 25, 2013

இஸ்லாமியா துவக்கப்பள்ளி கட்டிட பணிக்கு ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ நிதியிலிருந்து ரூ 5 லட்சம்


கீழக்கரை தெற்குதெருவில் இஸ்லாமியா துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியின் நிர்வாகம் மூலம் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவது உள்ளிட்ட கட்டிட பணிகள் நிறைவடைந்துள்ளது.இப்பணிக்கு எம்.எல்.ஏ நிதியிலிருந்து ரூ ஐந்து லட்சம் வழங்கிய ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏவுக்கு பள்ளி நிர்வாகம் நன்றி தெரிக்கப்பட்டது.

இது குறித்து இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே முஹைதீன் இப்ராஹிம் கூறுகையில்,

 ரூ 25 லட்சம் செலவில் இப்பணி நிறைவடைந்துள்ளது.இதற்கான தொகையில் ஒரு பகுதியான ரூ 5 லட்சத்தை எம்.எல்.ஏ நிதியிலிருந்து வழங்கிய ஜவாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் ஜமாத் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.