Friday, February 3, 2012

கீழக்கரை நகரை தூய்மையாக்க தாசிம் பீவி கல்லூரியில் கருத்தரங்கம் !




கீழக்கரை நகரை தூய்மையாக்குவதை தொடர் நிகழ்ச்சியாக நடத்துவது குறித்த செயலாக்க பணிகளை பற்றிய கருத்துக்களின் பரிமாற்றத்திற்க்கான கருத்தரங்கம் கல்லூரிகளின் நலப்பணிதிட்ட மாணவ,மாணவிகள் மற்றும் கீழக்கரை வெல்பர் அசோஸியேசன் சார்பாக கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் முஹம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் தலைமை வகித்தார்.கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்றார். கீழக்கரை நகராட்சி கமிசனர் முஜிப் ரஹ்மான், நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா ரிஸ்வான்,முன்னாள் மதுரை மாநகராட்சி ஆணையாளர் நாகராஜன்,முகம்மது பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன்,இயக்குநர் யூசுப் சாகிப்,கல்லூரி முதல்வர் சுமையா கீழக்கரை உஸ்வதுன் ஹசனா முஸ்லீம் சங்க நிர்வாகிகள், சென்னை எக்ஸ்னோரா நிர்வாக அலுவலர் ஜெய்க்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் சுகாதாரம் குறித்த பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன.


நிகழ்ச்சி நிறைவில் ஹமீதியா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ஹமீது நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்த லாபிர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இது குறித்து ஏற்கெனவே டிசம்பர் மாதம் எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் தலைமையில் லாபிர் ஒருங்கினைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.அத‌ன் தொட‌ர்ச்சியாக‌ இந்த‌ நிக‌ழ்ச்சி ந‌டைபெற்றுள்ள‌து.
கருத்தரங்குகளில் வெளியிடப்பட்ட சுகாதாரம் தொடர்பான‌ க‌ருத்துக்க‌ளை செய‌ல்ப‌டுத்தி கீழ‌க்க‌ரையை தூய்மையான ந‌க‌ரமாக‌ வேண்டும் என்ப‌தே பொது ம‌க்களின் எதிர்பார்ப்பாக உள்ள‌து.


http://keelakaraitimes.blogspot.com/2011/12/blog-post_9726.html - டிசம்பர் மாத கருத்தரங்கம் தொடர்பான முந்தைய செய்தி

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.