Sunday, July 3, 2011

கீழக்கரை ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் அளவு குறைவு

கீழக்கரை ஜூலை 2&
ராமநாதபுரம் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இதிலுள்ள கார்டுகளுக்கு மாதம் 3 லிட்டர் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படுகிறது. கீழக்கரையில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ரேஷன் கடை தினமும் காலை 11மணிக்கு திறக்கப்பட்டு மதியம் ஒரு மணி வரை மட்டுமே செயல்படுகிறது. சில நேரங்களில் கடை திறக்கப்படுவதில்லை. இதனால் இக்கடையில் இலவச அரிசி வாங்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும் இங்கு சப்ளை செய்யப்படும் 3 லிட்டர் மண்ணெண்ணெய் அளவு குறைவாக வழங்கப்படுகிறது.
இது போல் சீனி, பருப்பு, உளுந்து வகைகளும் கூடுதலைக்கு விற்கின்றனர். இது தொடர்பாக வருவாய் துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.