Thursday, July 21, 2011

முன்னாள் எம்.எல்.ஏ ஹசன் அலி வீட்டில் திருட்டு !

கீழக்கரை, ஜூலை 21:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள முன்னாள் எம்எல்ஏ ஹசன்அலி வீட்டிலும் அருகில் உள்ள இஸ்மாயில் என்பவரின் வீட்டிலும் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
கீழக்கரை மேலத்தெருவில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன்அலி வீடு உள்ளது. அருகில் இஸ்மாயில் என்பவரின் வீடு உள்ளது. இருவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர்.
நேற்று காலை இருவரது வீட்டின் கதவுகளும் உடைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து கீழக்கரை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. எஸ்ஐக்கள் ராமநாதன், கணேசன், ஏட்டு முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்றனர். இரண்டு வீடுகளிலும் துணிகள், சமையல் பாத்திரங்கள் சிதறி கிடந்தன. திருடு போன பொருட்கள் மதிப்பு தெரியவில்லை. வீட்டின் உரிமையாளர்கள் வந்த பின்பே திருடு போன பொருட்கள் குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

3 comments:

  1. Dear Editor .....

    eppadiya delete pannikeeta irenkae karuthukalai ...varungalae samudayathaiyum vaelanga vedathiya .......senthikaum udathiya ......naal valkaya valuroom da entha urala puranthukeetu .........yentraiku vidu kalam varumoo .....

    ReplyDelete
  2. அன்புள்ள தொகுப்பாளர் அவர்களுக்கு ......இப்படி கருத்துகளை அழித்து கொண்டே இருங்கள் நம் வரும் காலம் ( நம் பிள்ளைகள் ) நம்மை போல் வெளி ஊர்களில் இருந்துகீட்டு அணைத்தயும் தொலைக்கட்டும் (பெண் ,பொன் , அன்பு ,பாசம் ,குடும்ப தொழில் ,அரசாங்க வேலை என்னும் பல ) .........

    ReplyDelete
  3. அன்பு "கர்கரே" அவர்களுக்கு, உங்கள் கருத்துக்கள் அருமை. நீக்கப்பட்ட கருத்து தற்போது தெரிவித்தது போல் விளக்கமில்லாததால் யாரையும் புண்படுத்தக்கூடாது என்ற காரணத்திற்காகத்தான் நீக்கப்பட்டது.உங்கள் சமூக பார்வைக்கு வாழ்த்துக்கள்... தொடருட்டும் உங்கள் பணி.. செய்திக்குழு

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.