Sunday, July 3, 2011

தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாறியது வாலிபர் கொலை வழக்கு

கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் திருமணமான மூன்றாவது நாளில் தஞ்சாவூரை சேர்ந்த வாலிபரை, பெண்ணின் சகோதரர்கள் மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு நீண்ட விசாரணைக்கு பின் தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அப்துல் வகாப் மகன் ஜகாங்கீர். இவருக்கும் தஞ்சாவூர் அருகே உள்ள ராஜகிரியை சேர்ந்த மைதீன் மகள் ஜெல்ஹார் பீவி என்பவருக்கும் 2002 செப்.,22ல் திருமணம் நடந்தது. இந் நிலையில் ஜகாங்கீருக்கும், ராமநாதபுரம் பெரியபட்டினம் சாகுல்ஹமீது மகள் ஜீனத் நிஸாவுக்கும் கடந்த ஜூன் 19ல் இரண்டாம் திருமணம் நடந்தது. முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ததால் ஏற்பட்ட பிரச்னையில் ஜகாங்கீர், ஜூன் 21 காலை 6.15 மணிக்கு மாடியிலிருந்து தூக்கி எரியப்பட்டு கொத்லை செய்யப்பட்டு விட்டதாக ஜகாங்கீரின் சகோதரி இஸ்மத் நிஸா, திருப்புல்லாணி போலீசில் புகார் செய்தார்.
நன்றி :தினமலர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.