Friday, November 25, 2011

நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் கணினி துறையில் பயின்றவர்களுக்கு சான்றிதழ்!



கீழக்கரை நகராட்சி பொன்விழா ஆண்டு நகர்புற வேலைவாய்ப்பு திட்டம் சார்பில் திமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட‌ 10 மற்றும் 11 படித்தவர்களுக்கான‌ கணினி பயிற்சியில் ஆறுமாத காலம் சி.எஸ்.சி கம்ப்யூட்ட சென்டரில் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா தலைமையில் நடைபெற்றது.
இது குறித்து சமுதாய அமைப்பாளர் முத்துலட்சுமி கூறியதாவது, அரசு ஆணைப்படி சொர்ணா ஜெயந்தி திட்டத்தில் படித்த ஏழை மாணவர்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி ,கணினி பயிற்சி, அளிக்க வேண்டும்.இதனடிப்படையில் சென்ற வருடம் 12 பேர்களுக்கு கணினி பயிற்சி நடைபெற்றது.இந்த வருடம் 25 பேர்கள் தேர்வு செய்யப்பட்டு நேற்று முதல் பயிற்சி துவங்கப்பட்டது.தற்போது பயிற்சி முடித்தவர்களில் 10 பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.