Tuesday, June 26, 2012

கீழக்கரையில் மாணவ,மாணவிகள் பங்கேற்ற‌ போதை பொருள் ஒழிப்பு தின‌ பேரணி !




கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் போதை பொருள் ஒழிப்பை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.


கல்லூரி முதல்வர்(பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கீழக்கரை காவல்துறை ஆய்வாளர் இளங்கோவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.கீழக்கரை காவல்நிலையம் அருகில் துவங்கிய பேரணி வள்ளல் சீதக்காதி சாலை வழியாக சென்று கடற்கரை பகுதியில் நிறைவு பெற்றது.
இப்பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கல்ந்து கொண்டனர். ஊர்வலத்தில் போதை பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும்,முழக்கமிட்டும் சென்றனர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.