Monday, March 21, 2011

சதக் கல்லூரி வேலைவாய்ப்பு முகாமில் ஹூண்டாய் நிறுவனத்துக்கு 151 பேர் தேர்வு!


ஹீண்டாய் நிறுவனத்துக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவருக்கு சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் பணி நியமண ஆணையை வழங்கினார்.

கீழக்கரை.மார்ச்.21.கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இம்முகாமிற்கு முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் தலைமை வகித்தார்.கல்லூரி முதல்வர் அலாவுதீன் வரவேற்றார்.செயல் இயக்குநர் யூசுப் சாகிப் முன்னிலை வகித்தார்.
சென்னை ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் கம்பேனியின் மனித வள மேம்பாட்டு துறை மேலாளர் தனிகை செல்வன்,சுந்தர்ராஜன்,சுவாமி நாதன் ஆகியோர் இயந்திரவியல்,மின்னியல்,மின்னனுவியல் மற்றும் தொடர்பியல் துறை மாணவர்களை தேர்வு செய்தனர்.
முகாமில் பல் வேறு கல்லூரிகளிலிருந்தும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 151 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் பணி நியமண ஆணையை வழங்கினார்.கல்லூரி வேலை வாய்ப்பு அதிகார் சேக் தாவூது நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.