Wednesday, February 23, 2011

சம்பளம் ரூ30000 ! ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை!


கீழக்கரை.பி.23.ராமாநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமான லாரிகள் இயக்கப்படுகின்றன.உணவு பொருள்களை சுமந்து செல்வதற்கும்,குறிப்பாக சிமெண்ட்,செங்கல் ,மண் என்று கட்டுமான துறைக்கு தேவையான பொருள்களை எடுத்து செல்வதற்கும் லாரிகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன.இதனால் லாரி ஓட்டுநர்கள் இப்பகுதிகளில் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள்.ஆனால் ஓட்டுநர்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது பெரும் பாலானவர்கள் மினி வேன்,ஆட்டோ, போன்ற சிறிய ரக வாகனங்கள் ஓட்டுவதில் ஆர்வம் செலுத்துவதால் இப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து லாரி உரிமையாளர் சண்முகம் கூறியதாவது, சம்பளமாக ரூ25 ஆயிரத்திலிருந்து 30ஆயிரம் வரை மாத சம்பளமாக கொடுக்க தயாராக இருந்தும் ஆள் கிடைப்பத்தில்லை.இதானால் ஒரு நாள சம்பளம் என்ற அடிப்படையில்தான் டிரைவர்கள் கிடைக்கிறார்கள்.இதனால் மாதத்தில் 10 நாட்கள் தான் லாரிகளை இயக்க முடிகிறது என்றார். பட விளக்கம் :-பத்திரிகைகளில் வெளி வந்த ஓட்டுனர் தேவை விளம்பரம்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.