Monday, February 21, 2011

கீழக்கரையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை ஒருவர் கைது;2 பேர் மீது வழக்கு

கீழக்கரையில் தடை செய்யப்பட்ட லாட்டரியை விற்பனை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இந்து பஜாரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர் ராமநாதன், போலீசாருடன் அந்த பகுதியில் “திடீர்” சோதனை நடத்தினார். அப்போது 200 லாட்டரி சீட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தார். இதுதொடர்பாக கோகுல்நகரைச் சேர்ந்த முகமது இப்ராகிம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அஸ்கர், சங்குதுரை ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.