Monday, February 21, 2011

கீழக்கரையில் அனைத்து ஜமாத் சார்பில் மீலாது விழா சிறப்பாக நடைபெற்றது

கீழக்கரையில் அனைத்து ஜமாத்களும் ஒருங்கிணைந்து கண்ணாடி வாப்பா மகாலில் மிலாது நபி விழா நடைத்தப்பட்டது. நகராட்சி முன்னாள் தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். நகர் அனைத்து ஜமாத்துகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.கடற்கரை ஜமாத் தலைவர் சாகிபு வரவேற்றார்.கிழக்கு தெரு ஜமாத் இமாம் சம்சுதீன் கிராஅத் ஒதினார்.வேலூர் பாக்கியத்துஸ்ஸாலிஹாத் அரபிக் கல்லூரி பேராசிரியர் அப்துல் ஹமீது பாக்கவி பேசினார். ஹசன் அலி ம்.எல்.ஏ.,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி,நகராட்சி தலைவர் பஷீர் அகமது,மதுரை மண்டல இ.யூ.,முஸ்லிம் லீக் அமைப்பு செயலாளர் ஜஹாங்கீர் அரூஸி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.மின்ஹாஜ் பள்ளி ஜமாஅத் தலைவர் செய்யது இபுராகிம் நன்றி கூறினார். உலக மக்களின் அமைதி,சமூக நல்லிணக்கம் தொடர வேண்டி கீழக்கரை டவுன்காஜி காதர்பக்ஷ் ஹுசைன் சித்திகி துஆ ஓதினார்.


No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.