Monday, August 29, 2011

வேலை வாய்ப்பு முகாமில் இடிஏ அஸ்கான் (கத்தார்) நிறுவனத்திற்கு சதக் பாலிடெக்னிக் மாணவர்கள் 57பேர் தேர்வு !


கல்லூரி முதல்வர் அலாவுதீன்


கீழக்கரை பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாடு பிரிவு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இம் முகாமுக்கு கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார். இ.டி.எ.அஸ்கான் கத்தார் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அலுவலர்கள் திருவழிவேந்தன், பாலமுருகன், இம்ரான் ராஜா ஆகியோர் நேர்முகத் தேர்வை நடத்தி தங்கள் நிறுவனத்தைப் பற்றியும், உற்பத்தி பொருள்கள், செயல்பாடுகள் போன்றவை குறித்து தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இம் முகாமில், 57 மாணவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தேர்வு செய்யப்பட்ட ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு ரூ. 18ஆயிரமும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 12 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும். வளாகத் தேர்வுக்கான ஏற்பாடுகளை பாலிடெக்னிக் கல்லூரி தொழில் பயிற்சி நிலையத்தின் முதல்வர் எம்.அப்துல்காதர், வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும் மின்னியில் மற்றும் தொடர்பியல் துறைத் தலைவருமான அ. சேக் தாவூத் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

1 comment:

  1. இந்திய,தமிழ் நாட்டு அரசு வேலைக்கு எதாவது பன்னுரங்கள ???
    இல்லையே!!!

    எங்க பொய் புல்லம்ப இந்த வெளிநாட்டு மொஹத ????
    பதிக்க படுவது என்னமோ நம் வரிசு தான்......

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.