Sunday, September 25, 2011

கீழக்கரையில் சரித்திர சான்றுகள் ! ஜப்பான் மாணவர்கள் பிரமிப்பு !



தொன்மையான பண்டைகால கட்டிடங்களை ஆராய்ச்சி செய்வதற்காக ஜப்பானை சேர்ந்த பேராசிரியர்,மற்றும் மாணவர்கள் கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றுபயணம் மேற்கொண்டு பழமை வாய்ந்த கட்டிடங்களை பார்வையிட்டு அதன் சிறப்புகளை கேட்டு அறிந்தனர்.

ஜப்பான் பல்கலைகழக பேராசிரியர் சூ யமானே தலைமையில் புக்காமி நவோக்கா ஆராய்ச்சியாளர் சுசூகி மற்றும் மாணவர்கள் யுனிஸின்யே, ஹேஹக்கி,டெசூ ஆகியோர்கள் கீழக்கரை ,ஏர்வாடி பகுதிகளில் உள்ள பழமை வாய்ந்த மசூதிகள்,கட்டிடங்கள் ,உத்தரகோசமங்கை,திருப்புல்லாணியில் உள்ள கோவில்கள் மற்று சிற்பங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இது குறித்து ஜப்பான் பல்கலைகழக பேராசிரியர் சூயமானே கூறுகையில் ,
கீழக்கரையில் மீன்கடை தெருவில் அமைந்துள்ள பழைய குத்பா பள்ளி,நடுத்தெருவில் அமைந்துள்ள ஜீம்மா பள்ளி மற்றும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உள்பட இப்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடங்கள், இங்குள்ள சரித்திர சான்றுகள் எங்களை பிரமிக்க வைக்கிறது.. ராமேஸ்வரம் ,திருப்புல்லாணி சொக்கநாதர் கோவில்களில் உள்ள கல்வெட்டு சான்றுகள் ஆராய்ச்சிக்கு உதவும் .மேலும் இப்பகுதி மக்கள் எங்களை அன்புடன் உபசரித்து தேவையான விளக்கங்களை அளித்தனர் என்றார்

முன்னதாக ஏர்வாடி தர்ஹாவில் தர்கா ஹக்தார் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. இவர்களுக்கு தேவையான உதவிகளை கீழக்கரையை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அபுசாலிஹ் மற்றும் சீனி ஹசனா ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.