Monday, August 22, 2011

தலை இல்லாமல் இறந்து கிடந்த மயில் ! போலி மந்திரவாதிகள் செயல் ! பொது மக்கள் குற்றச்சாட்டு


கீழக்கரை அருகே முள்ளுவாடி பஸ் நிலையம் அருகில் தலையில்லாத நிலையில் மயில் இறந்து கிடந்தது. மயிலின் தோகைகள் பிடுங்கப்பட்டு சிதறி கிடந்தன. இந்தியாவின் தேசிய பறவையான மயில் இனத்தை பாதுகாக்க மத்திய,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
தமிழகத்தில் காடுகளில் வளர்ந்து வந்த மயில்கள் தற்போது காடுகள் அனைத்து அழிக்கப்பட்டு வீட்டு மனைகளாக மாறிவரும் சூழ்நிலையில் பல பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து கீழக்கரை,ஏர்வாடி,திருப்புல்லாணி போன்ற பகுதிகளில் ஏராளமான மயில்கள் சுற்றி திரிகிறது. இந்நிலையில் நேற்று காலை கீழக்கரை ,ஏர்வாடி செல்லும் சாலையில் முள்ளுவாடி பஸ் ஸ்டாப் அருகில் குப்பைகளுக்கு நடுவில் தலையில்லாத நிலையில் மயில் இற்ந்து கிடந்தது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில் , போலி மந்திரவாதிகள் சிலர் மயில் தலையை வெட்டி பரிகாரம் செய்தால் குடும்ப பிரச்சினைகள் தீரும் என்று அவர்களை நாடி வரும் சிலரிடம் கூறி இது போன்ற மயில் தலையை அறுக்கும் கொடூர செயல்களில் ஈடுபட வைக்கின்றனர். அடிக்கடி இது போன்று தலையில்லாத மயில்களை காண முடிகிறது உடனடியாக வனத்துறை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.