Wednesday, August 31, 2011

ஊரெல்லாம் குப்பை அள்ளுகிறோம் ஆனால் எங்க ஏரியா சுத்தமில்லை......


கீழக்கரையில் பல் வேறு இடஙகளில் சாலை ஓரங்களில் குப்பைகள் குவிந்துள்ளன .இதில் எங்கள் பகுதியும் விதிவிலக்கல்ல என்கினறனர் துப்புரவு பணியாளர்கள்.
கீழக்கரை நகராட்சி 2வது வார்டுக்கு உட்பட்ட அண் ணா நகரில் துப்புரவு தொ ழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு கடந்த 2 மாதங்களாக குப்பைகளை எடுக்காமல் துர்நாற்றம் வீசுகிறது.
அப்பகுதியில் மூக்கை பிடித்துக்கொண் டே செல்லும் அவல நிலை உள்ளது. அடுத்த வாரம் இப்பகுதியில் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. அதற்குள்ளாவது குப்பைகளை அகற்றி துப் புரவு செய்யவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து துப்புரவு தொழிலாளர் ஒருவர் கூறுகையில், ‘ஊரை எல்லாம் நாங்கள் துப்புரவு செய்கிறோம். நாங்கள் குடியிருக்கும் பகுதியை துப் புரவு செய்வதற்கு எங்கள் மேஸ்திரி அனுமதிக்க மறுக்கிறார்’ என்றார்.
இதுகுறித்து நகராட்சி அலுவலர் (மேஸ்திரி) கூறு கையில், ‘ஆட்கள் பற்றாக்குறையே இதற்கு காரணம் .நகராட்சிக்கு சொந்தமான ஒரு டிராக்டர் உட்பட மூன்று டிராக்டர் களை வைத்து குப்பை அள்ளுகிறோம்.இவை நகர் முழுவதும் சேரும் குப்பைகளை அள்ளுவதற்கே நேரம் சரியாகி விடுகிறது. அதனால்தான் அந்த பகுதியில் குப்பைகளை அள்ள முடியவில்லை’ என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.