Tuesday, August 23, 2011

கீழக்கரையில் மூன்று அமைப்புகள் இணைந்து நடத்திய உதவி வழங்கும் நிகழ்ச்சி !




கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கம், மக்கள் சேவை அறக்கட்டளை, மற்றும் எம்.எம்.கே முகம்மது இப்ராகிம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய இப்தார் நிகழ்ச்சியும்,ஏழைகளுக்கு இலவச வேஷ்டி ,சேலை வழங்கும் நிகழ்ச்சியும் தனியார் உணவகத்தில் அமானுல்லா தலைமயில் ந்டைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட காஜி ஸலாஹீதீன் அலீம், மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் அப்துல் காதர்,எம்.எம்.கே அறக்கட்டளை சார்பில் முகம்மது காசிம் மற்றும் நகர் மன்ற தலைவர் பசீர் அகமது, அனைத்து ஜமாத் செயலாளர் முகைதீன் தம்பி, ஆகியோர் கலந்து கொண்டு உதவி பொருள்களை வழங்கினர்.
செய்யது இப்ராகிம், ஆறுமுகம், ஜமால் அசரப், திமுக இளைஞர் அணி செயலாளர் சுல்தான் செய்யது இப்ராகிம், மூர் ஹசனுதீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நுகர்வோர் இயக்கத்தின் செயலாளர் தங்கம் ராதாகிருஸ்னன் அனைவரையும் வரவேற்றார். ஜஹாங்கிர் அரூஸி,கைராத்துல் ஜலாலியா பள்ளியில் தாளாளர் சாதிக் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.இறுதியாக பொருளாளர் முஹப்பதுல்லா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.