Thursday, January 17, 2013

கீழ‌க்க‌ரை தபால் நிலைய‌த்தில் ஆயிர‌க்க‌ண‌க்கில் ப‌ண‌ம் கையாட‌ல்!புகார் தெரிவித்தும் ந‌ட‌வ‌டிக்கை இல்லை என‌ குற்ற‌ச்சாட்டு!


ப‌ண‌த்தை ப‌றிகொடுத்த‌ க‌ட‌ல் தொழிலாளி முனிய‌சாமி

தபால் நிலையத்தில் பணம் கையாடல் செய்யப்பட்டதாக புகார் கூறியும் 5 மாதமாக நடவடிக்கை இல்லை என பாதிக்கப்பட்டவர் பரிதவித்து வருகிறார்.
கீழக்கரை ஸ்ரீநகரை சேர்ந்த கடல் தொழிலாளி கிழவன் மகன் முனியசாமி. இவர் 1995ம் ஆண்டு முதல் கீழக்கரை தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்து வரவு செலவு செய்துள்ளார். கடந்த ஆக.18ல் தனது சொந்த தேவைக்காக தபால்நிலையத்தில் தனது கணக்கில் இருந்த ரூ50 ஆயிரத்து 809ல் ரூ45 ஆயிரத்தை எடுக்க சென்றார். ஆனால், சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.45 ஆயிரம் ஜூன் மாதமே எடுக்கப்பட்டுள்ளது. கணக்கில் பணம் இல்லை என தபால்நிலையத்தில் கூறினர்.

முனியசாமி திடுக்கிட்டார். நான் பணம் எடுக்கவில்லை. எப்படி எனது கணக்கில் பணம் குறைந்தது என போஸ்ட் மாஸ்டரிடம் கேட்டார். அவரிடம் பாஸ்புத்தகத்தை பெற்ற போஸ்ட்மாஸ்டர் ரூ.50 ஆயிரத்து 809.60 வரவு வைக்கப்பட்டதாக எழுதி கொடுத்தார். ஆனால், பணத்தை எடுக்க முடியவில்லை.

ராமநாதபுரம் தபால் அலுவலக கண்காணிப்பாளர் சோமனிடம் முனியசாமி புகார் செய்தார். 5 மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை. இதுகுறித்து முனியசாமி கூறுகையில், “எனது சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.45 ஆயிரம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. தபால் நிலைய உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி எனக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என்றார்.

இதுகுறித்து ராமநாதபுரம் தபால் அலுவலக கண்காணிப்பாளர் சோமன் கூறுகையில், “சம்பந்தப்பட்டவரின் பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக எழுந்த புகாரால் போலீஸ் நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்துள்ளேன், என்றார்.

கீழக்கரை தபால்நிலைய அலுவலர்கள் சிலர் கூறுகையில்,

“கீழக்கரை தபால் நிலையத்தில் ஊழியர் ஒருவர் பலரின் பணத்தை கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர்தான் முனியசாமி பணத்தையும் கையாடல் செய்திருப்பார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தினால் தெரியவரும்,”என கூறினர்.
 

Wednesday, January 16, 2013

கீழ‌க்க‌ரை க‌ல்லூரியில் 20/01/13 ஞாயிறு அன்று வேலை வாய்ப்பு முகாம்!



முஹ‌ம்ம‌து ச‌தக் பாலிடெனிக் க‌ல்லூரி சார்பில் வெளியிட்டுள்ள‌ செய்தி குறிப்பில் ....
கீழ‌க்க‌ரை ச‌த‌க் க‌ல்லூரியில் வெளிநாட்டு நிறுவ‌ன‌மான‌ அவ‌லான் டென்க்னால‌ஜியில் ப‌ணி புரிய‌ வேலை வாய்ப்பு முகாம் 20 1 2013 அன்று ஞாயிற்று கிழ‌மை காலை 9 ம‌ணிய‌ள‌வில் ந‌டைபெறுகிற‌து.

இத்தேர்வில் டிப்ள‌மா மின்னிய‌ல் ம‌ற்றும் மின்ன‌னுவிய‌ல் ம‌ற்றும் தொட‌ர்பிய‌ல் துறை ம‌ற்றும் எலக்ட்ராணிக்ஸ் இன்சுமென்ரேச‌ன் ப‌டித்து 2010/2011/2012 தேர்ச்சியடைந்த‌வ‌ர்க‌ள்/தேர்ச்சிய‌டையாத‌வ‌ர்க‌ள்,ஐடிஐ ம‌ற்றும் டிகிரி பிஏ பி.எஸ்.சி முடித்த‌வர்க‌ள் க‌ல‌ந்து கொண்டு ப‌ய‌ன‌டையலாம்.தேர்வுக்கு வ‌ருப‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து பாஸ்போர்ட் செய்ஸ் போட்டோ 3 ந‌ம்ப‌ர் க‌ல்வி சான்றித‌ழ் ம‌ற்றும் வ‌ய‌து சான்றித‌ழ் ந‌க‌ல்க‌ளுட‌ன் வ‌ர‌ கேட்டு கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.
இம்முகாமிற்கான‌ ஏற்பாடுக‌ளை க‌ல்லூரி சார்பில் முத‌ல்வ‌ர் பேராசிரிய‌ர் அலாவுதீன் ம‌ற்றும் துறை த‌லைவ‌ர் சேக் தாவுது உள்ளிடோர் செய்துள்ள‌ன‌ர்.

Tuesday, January 15, 2013

கீழ‌க்க‌ரையில் சிற‌ப்பாக‌ செய‌ல்ப‌ட்ட‌ ஆட்டோ ஒட்டுந‌ர்க‌ளுக்கு சான்றித‌ழ்!


கீழ‌க்க‌ரை ம‌க்க‌ள் சேவை அற‌க்க‌ட்ட‌ளை சார்பில் வ‌ள்ள‌ல் சீத‌க்காதி சாலையில் அமைந்துள்ள அலுவ‌ல‌க‌த்தில் சாலை பாதுகாப்பு வார‌ விழா ந‌டைபெற்ற‌து.

ம‌க்க‌ள் சேவை அற‌க்க‌ட்ட‌ளை நிறுவ‌ன‌ர் உம‌ர் த‌லைமை வ‌கித்தார்.ராம‌நாத‌புர‌ம் வ‌ட்டார‌ போக்குவ‌ர‌த்து அலுவ‌ல‌ர் கார்த்த‌லிங்கன்,வ‌ட்டார‌ போக்குவர‌த்து ஆய்வாள‌ர் இள‌ங்கோவ‌ன்,முக‌ம்ம‌து ச‌த‌க் பாலிடெக்னிக் முத‌ல்வ‌ர் அலாவுதீன் முன்னிலை வ‌கித்தன‌ர்.
ஹ‌மீதியா ஆண்க‌ள் மேல்நிலைப்ப‌ள்ளி த‌லைமை ஆசிரிய‌ர் ஹ‌ச‌ன் இப்ராகிம் வ‌ர‌வேற்றார்.இதில் மாவ‌ட்ட‌ ட‌வுன் காஜி ஸ‌லாஹுதீன்,த‌முமுக‌ ந‌க‌ர் த‌லைவர் சிராஜீதீன் க‌லந்து கொண்ட‌ன‌ர்.

மேலும் நுக‌ர்வோரிட‌ம் சிற‌ப்பாக‌ செய‌ல்ப‌ட்ட‌ ஆட்டோ ஓட்டுந‌ர்க‌ள் ம‌க்க‌ள் சேவை அற‌க்க‌ட்ட‌ளை சார்பில் தேர்வு செய்யப்ப‌ட்டு அவ‌ர்க‌ளுக்கு பாராட்டு ப‌த்திர‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.லெப்பை த‌ம்பி ந‌ன்றி கூறினார்.ஏற்பாடுக‌ளை க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் செய்திருந்தார்.
 

Monday, January 14, 2013

த‌ட‌க‌ள‌ம்!கீழ‌க்க‌ரை க‌ல்லூரி மாணவ‌ர் இந்திய‌ அள‌வில் தகுதி!



அண்ணாபல்க‌லை க‌ழக‌ ம‌ண்ட‌ல‌ங்க‌ளுக்கு இடையிலான‌ த‌ட‌க‌ள‌ போட்டி நாம‌க்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொங்குநாடு பொறியிய‌ல் க‌ல்லூரியில் ந‌டைபெற்ற‌து.

இதில் கீழ‌க்க‌ரை முக‌ம்ம‌து ச‌த‌க் பொறியிய‌ல் க‌ல்லூரி மாண‌வ‌ர் பாசித் நீள‌ம் தாண்டும் போட்டியில் 6.89 மீட்டர் தாண்டி அகில‌ இந்திய‌ ப‌ல்க‌லைக‌ழ‌க‌ங்க‌ளுக்கு இடையிலான‌ போட்டியில் ப‌ங்கேற்க‌ த‌குதி பெற்றார். இவ‌ரை க‌ல்லூரி த‌லைவ‌ர் ஹ‌மீது அப்துல் காத‌ர் ,செய‌லாள‌ர் யூசுப் சாகிப் இய‌க்குந‌ர் ஹ‌பீப் முஹ‌ம்ம‌து ச‌த‌க்க‌த்துல்லா க‌ல்லூரி முத‌ல்வ‌ர் முக‌ம்ம‌து ஜகாப‌ர்,உட‌ற்க‌ல்வி இய‌க்குந‌ர்க‌ள் சுரேஷ்குமார்,கோவிந்த‌ம்மாள் ஆகியோர் பார‌ட்டின‌ர்.

Sunday, January 13, 2013

கீழ‌க்க‌ரை க‌ல்லூரியில் த‌மிழ‌ர் திருநாள் ம‌ற்றும் க‌லை ப‌ண்பாட்டுவிழா !


கீழ‌க்க‌ரை செய்ய‌து ஹ‌மீதா க‌லை ம‌ற்றும் அறிவிய‌ல் க‌ல்லூரி ம‌ற்றும் சேர்ம‌ன் முக‌ம்ம‌து ச‌த‌க் த‌ம்பி நினைவு த‌மிழ்ம‌ன்ற‌ம் சார்பில் த‌மிழ‌ர் திருநாள் ம‌ற்றும் க‌லை ப‌ண்பாட்டுவிழா க‌ல்லூர் வ‌ளாக‌த்தில் ந‌டைபெற்ற‌து.

க‌ல்லூரி முத‌ல்வ‌ர் அபுல்ஹ‌ச‌ன் சாத‌லி த‌லைமை வ‌கித்தார்.முக‌ம்ம‌து ச‌த‌க் அற‌க்க‌ட்ட‌ளை த‌லைவ‌ர் ஹ‌மீது அப்துல் காத‌ர்,செய‌லாள‌ர் யூசுப் சாகிப்,க‌ல்லூரி இய‌க்குந‌ர் ஹ‌பீப் முக‌ம்ம‌து ச‌த‌க்க‌த்துல்லா,ச‌த‌க் பாலிடெக்னிக் க‌ல்லூரி முத‌ல்வர் அலாவுதீன்,முக‌ம்ம‌து ச‌த‌க் பொறியிய‌ல் கல்லூரி முத‌ல்வ‌ர் முக‌ம்ம‌து ஜ‌காப‌ர் முன்னிலை வ‌கித்தார்.

 க‌ணித‌விய‌ல் துறை த‌லைவ‌ர் ம‌ற்றும் விழா ஒருங்கினைப்பாளார் சேக் அப்துல்லா வ‌ர‌வேற்றார். விழாவில் இன்றைய‌ சூழ‌லில் குடும்ப‌ வாழ்க்கை கொண்டாட்ட‌மா? திண்டாட்டமா ? என்ற‌ த‌லைப்பில் ப‌ட்டிம‌ன்ற‌ம் ந‌டைபெற்ற‌து.

ப‌ட்டிம‌ன்ற‌த்திற்கு வாணிய‌ம்பாடி சிக‌ர‌ம் க‌ல்வி அற‌க்க‌ட்ட‌ளை த‌லைவ‌ர் அப்துல் காத‌ர் ந‌டுவ‌ராக‌ செய‌ல்ப‌ட்டார்.

க‌ல்லூரி பேராசிரிய‌ர்க‌ள் அனைவ‌ரும் ஒன்று கூடி பொங்க‌ல் வைத்தன‌ர்.துணை முத‌ல்வ‌ர் பால‌கிருஸ்ண‌ன் ந‌ன்றி கூறினார்.இதில் ஆயிர‌த்திற்கும் மேற்ப‌ட்ட‌ மாண‌வர்க‌ள் வேஷ்டி அணிந்தும்,மாண‌விக‌ள் சேலை அணிந்தும் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

 

Saturday, January 12, 2013

கீழ‌க்க‌ரை அருகே 500பிளாட் ப‌குதியில் தமுமுக‌ சார்பில் குப்பைக‌ள் அக‌ற்ற‌ப்ப‌ட்டு அறிவிப்பு ப‌ல‌கை!

 த‌முமுக‌ சார்பில் கீழ‌க்க‌ரை பொருளாள‌ர் சாதிக் வெளியிட்டுள்ள‌ செய்தி குறிப்பில் கூறியிப்ப‌தாவ‌து,

கீழக்கரை அருகில் உள்ள 500 பிளாடில் த.மு.மு.க வினர் சுத்தம் செய்து ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைத்துள்ளார்கள். இதை இப்பகுதி மக்கள் அனைவரும் வரவேற்றனர். மற்றும் இப்பகுதி நுலைவாயிலும் அறிவிப்பு பலகை வைத்துள்ளார்கள்.

இப்ப‌ணிகளை 500 பிளாட் த.மு.மு.க வின் கிளை க‌ழ‌த்தின‌ர் செய்துள்ளார்கள்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கீழ‌க்க‌ரை அருகே பெண்கொலை!போலீசார் தீவிர‌ விசார‌ணை!


ப‌ட‌ விள‌க்க‌ம்: ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌ இட‌ம்
 கீழக்கரை அருகே கும்பிடுமதுரை வேலு மனைவி ஆறுமுகம், 51. இவர், மீனவர் குடியிருப்பு தொடக்கப்பள்ளியில் சத்துணவு ஊழியராக வேலை செய்து வந்தார்.

கீழக்கரையிலிருந்து கும்பிடும‌துரை செல்லும் வ‌ழியில் கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ நல்ல இபுராகிமுக்கு சொந்தமான முல்லைநகர் தோப்பில் தங்கியிருந்தார்.
நேற்று, காலை தோப்பு வளாகத்திலுள்ள கட்டடத்தில் ஆறுமுகம் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

மோப்பநாய், தடவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. எஸ்.பி., மயில்வாகனன், டி.எஸ்.பி., சோமசேகர் விசாரித்தனர். இவ‌ர‌து மகன் கணேசன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன இவரை யார் கொலை செய்தது என்பது குறித்து, இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்!
இக்கொலை ச‌ம்ப‌வ‌த்தால் அப்ப‌குதியில் ப‌ர‌ப‌ர‌ப்பு நில‌வுகிற‌து
 

Friday, January 11, 2013

கீழ‌க்க‌ரை க‌ல்லூரியில் மாண‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் பேராசிரிய‌ர்க‌ளுக்கு சிற‌ப்பு ப‌ரிசு!

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முஹம்மது ஜஹாபர் தலைமை வகித்தார். இயந்திரத் துறைத் தலைவர் கனகசுந்தரம் வரவேற்றார். கல்லூரி இயக்குநர் ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா சிறப்புரையாற்றினார்.
இதில் அண்ணா பல்கலைக் கழகத் தேர்வுகளில் நூறு சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தேர்ச்சி பெறச்செய்த 106 பேராசிரியர்களுக்கு கல்லூரி இயக்குநரும், அனைத்துப் பொறியியல் பாடப்பிரிவுகளிலும் அதிக மதிப்பெண் பெற்ற 75 மாணவர்களுக்கு கல்லூரி முதல்வரும் சிறப்புப் பரிசுகள் வழங்கினர்.
அப்போது கல்லூரி இயக்குநர் பேசுகையில், பேராசிரியர்கள் படிப்பில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்குப் புரியும் வகையில் கற்றுத்தந்து அதை தெளிவு செய்த பின்னரே பாடத்தின் அடுத்த கட்டத்திற்குச் சென்று புரியும் படியாக விளக்கங்களுடன் கற்றுத்தர வேண்டும் என்றார்.
இறுதியில் மரைன் துறை பேராசிரியர் ராமராஜ் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் மீனாட்சி சுந்தரம், மக்கள் தொடர்பு அதிகாரி நஜிமுதீன் ஆகியோர் செய்திருந்தனர்.

தேங்கி நிற்கும் சாக்க‌டை!அருகிலேயே மீன்க‌டை!தேவை ந‌ட‌வ‌டிக்கை!காங்கிர‌ஸ் ந‌க‌ர் த‌லைவ‌ர் கோரிக்கை!


கீழ‌க்க‌ரையில் ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளி தெருவில் ப‌ழைமைமிக்க‌ மீன் மார்க்கெட்டும், புதிய‌ பேருந்து நிலைய‌ம் அருகே மீன் மார்க்கெட்டும் என‌ இர‌ண்டு மீன் மார்க்கெட்டுக‌ள் உள்ள‌ன‌.

க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ பெய்து வ‌ரும் ம‌ழையால் ம‌ழைநீர் வெளியேறுவ‌த‌ற்கு வ‌ழியில்லாம‌லும் க‌ழிவு நீர் க‌ல‌ந்து சாக்க‌டையாக‌ மார்க்கெட்டில் தேங்கி நிற்கிற‌து.இத‌னால் நோய் ப‌ர‌வி சுற்றுப்புற‌ம் பாதிக்கும் சூழ்நிலை உள்ளதால் ந‌க‌ராட்சி நிர்வாக‌ அப்பகுதியில் த‌ண்ணீர் தேங்காம‌ல் வெளியேறுவ‌த‌ற்கு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென‌ பொதும‌க்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

இது குறித்து நக‌ர் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ஹ‌மீதுகான் கூறிய‌தாவ‌து,
புதிய‌ மீன் மார்க்கெட்டில் பொதும‌க்க‌ள் ந‌ட‌ந்து செல்ல‌க்கூடிய‌ நிலையில் இல்லை.அந்த‌ அள‌வுக்கு மீன் க‌ழிவுக‌ளுட‌ன் ம‌ழைநீர் தேங்கி துர் நாற்ற‌ம் வீசுகிற‌து.மேலும் அங்கு அம‌ர்ந்துள்ள‌ வியாபாரிகள் துர்நாற்றை ச‌கித்து கொண்டு வியாபார‌ம் செய்கின்ற‌ன‌ர்.ஏற்கேன‌வே கீழ‌க்க‌ரை ப‌ல்வேறு நோய்க‌ள் ப‌ர‌வி வ‌ரும் சூழ‌லில் இது போன்று உண‌வு பொருள்க‌ள் விற்ப‌னை செய்யும் இட‌ங்க‌ள் சுகாதார‌ம‌ற்று இருப்ப‌து மேலும் நோய்க‌ள் ப‌ர‌வ‌ வாய்ப்பாகும். ப‌ண‌ம் கொடுத்து நோயை விலைக்கு வாங்குவ‌து என்று கூற்று இந்த‌ சூழ்நிலைக்கு பொருந்தும்.என‌வே உட‌ன‌டியாக‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் இப்ப‌குக‌ளில் சுகாதார‌த்தை பேண‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்.

Thursday, January 10, 2013

இ.யூ.முஸ்லீம் லீக் கீழ‌க்க‌ரை முன்னாள் த‌லைவ‌ர் காலமானார்க‌ள் !



கீழக்கரை நடுத்தெரு ஜமாத்தை சேர்ந்த மர்ஹூம்.முஹமத் முஹைய்தீன், மர்ஹூம்.செய்யது மீரா நாச்சியார் ஆகியோர்களின் மகனும் ,மர்ஹூம் A.M.M.செய்யது அகமது நைனா , மர்ஹூம் A.M.M.இன்சூரன்ஸ் சாவனா,மர்ஹூம் A.M.M.அப்துல் கரீம்,A.M.M.அபுபக்கர்,மர்ஹூம் A.M.M.செய்யது முஹமது புஹாரி ( புலவர் தம்பி ) ,மர்ஹூம் A.M.M.உம்மு நாட்சியா உம்மாள், மர்ஹூம் A.M.M. செய்யது அலீ பாத்திமா,மர்ஹூம் A.M.M.முஹமது உம்மாள், மர்ஹூம் A.M.M.ஆயீஷா பீவி ஆகியோரின் சகோதரரும்,செய்யது ஹமீது பௌசியா ,மதீனா பாயீஷா ,மீரா பானு ,ரமீஷா ,முஹமத் மூஹைய்தீன் ,முஹ்சீனா மர்ஸுகா ஆகியோரின் தகப்பனாரும், A.S.A.சேகு தாவூத் உம்மாள் அவர்களின் கணவரும்,
 ந‌டுத்தெரு ஜும்மா முன்னாள் துணை செய‌லாள‌ரும்,இந்திய‌ன் யூனிய‌ன் முஸ்லீம் லீக் ந‌க‌ர‌ முன்னாள் த‌லைவ‌ருமான‌ A.M.M.ஹ‌ச‌ன் அப்துல் காத‌ர் அவ‌ர்க‌ள் கட‌ந்த‌ ஞாயிர‌ன்று(06 01 2013) கால‌மானார்க‌ள். அவ‌ர்க‌ளின் ஜ‌னாஸா ந‌டுத்தெரு ஜும்மா ப‌ள்ளியில் மைய‌வாடியில் ந‌ல்ல‌ட‌க்க‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து.

அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

சீலா மீன் சீச‌ன்!கீழ‌க்க‌ரை,வாலிநோக்க‌ம் க‌ட‌ல்ப‌குதியில் பிடிப‌டும் ருசி மிகுந்த‌ மீன்க‌ள்!


பட‌ம்: ந‌சீருதீன்

நெய்மீன்,வஞ்சிர‌ம் என ப‌குதிவாரியாக‌ வெவ்வேறு பெய‌ர்க‌ளில் அழைக்க‌ப்ப‌டும்  சீலா மீன்க‌ள் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் வாலிநோக்க‌ம் ம‌ற்றும் கீழ‌க்க‌ரை க‌ட‌ல் ப‌குதிக‌ளில் அதிக‌ள‌வில் பிடிப‌டும்.இவ்வ‌கை மீன்க‌ள் அதிக‌ ருசி உடைய‌தாக‌ இருக்கும். ஆழ்க‌டலில் வ‌சிக்கும் இவ்வ‌கை மீன்க‌ள் காற்று அதிகம் வீசும் டிச‌ம்ப‌ர்,ஜ‌ன‌வ‌ரி,பிப்ர‌வ‌ரி மாத‌ங்க‌ளில் ஆழ‌ம் குறைந்த‌ க‌ரையோர‌ க‌ட‌ல் ப‌குதிக்கு வ‌ருகின்ற‌ன‌.
சீலா மீன் சீச‌ன் துவ‌ங்கிய‌ நிலையில் ப‌ருவ‌ நிலை மாற்ற‌ம் கார‌ண‌மாக‌ க‌ட‌ந்த‌ ஒரு வாரமாக‌ குளிர் காற்று வீசி வ‌ருவ‌தால் அதிக‌ள‌வில் சீலா மீன்க‌ள் கிடைக்கும் என‌ எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.கீழ‌க்க‌ரை முத‌ல் வாலிநோக்க‌ம் வ‌ரை சீலா மீன் பிடிப்ப‌த‌ற்கு மீன‌வ‌ர்க‌ள் ஆர்வ‌த்துட‌ன் உள்ள‌ன‌ர்.நாட்டு ப‌ட‌குக‌ளில் சென்று ஆழ்க‌ட‌லில் வ‌லையை வீசி விட்டு வ‌ந்து பின்ன‌ர் க‌ரையிலிருந்து 50 முத‌ல் 100 பேர் சேர்ந்து வ‌லையை இழுத்து சீலா மீன்க‌ளை பிடிக்கின்ற‌ன‌ர்.

த‌ற்போது 3 அடி முத‌ல் 6 அடிவ‌ரை உள்ள‌ சீலா மீன்க‌ள் பிடிப‌டுகின்ற‌ன‌.இவை 20 கிலோ முத‌ல் 50கிலோவுக்கும் மேல் எடை கொண்ட‌தாக‌ இருக்கின்ற‌ன‌.த‌ற்போது சில்ல‌ரை விற்ப‌னையில் கிலோ ரூ450 முத‌ல் ரூ600 வ‌ரை விற்க‌ப்ப‌டுகிற‌து.
ஏர்வாடியை சேர்ந்த‌ மீன‌வ‌ர் ஜெய‌ராஜ் கூறுகையில், க‌ரைவ‌லையில் ஏராள‌மான‌ மீனவ‌ர்க‌ள் ஒன்று சேர்ந்து ரூ 45 ஆயிர‌ம் வ‌ரை செல‌வு செய்து சீலா மீன் பிடிப்பில் ஈடுப‌டுவோம்.மீன்கள் அதிகம் பிடிப‌ட்டால் ந‌ல்ல‌ லாப‌ம் கிடைக்கும்.சில‌ நேர‌ம் கிடைக்காம‌லும் போகும் என்றார்.

 

Wednesday, January 9, 2013

சாலை அமைத்து மூன்று மாதம்!விரைவாக‌ உடைந்து சேத‌ம்!


பட‌ விள‌க்க‌ம்:‍‍‍தெற்குதெரு இஸ்லாமியா ப‌ள்ளி செல்லும் வ‌ழியில் சாலைக‌ள் சேத‌ம‌டைந்துள்ள‌தால் ப‌ள்ளி குழ‌ந்தைக‌ள் மிகுந்த‌ சிர‌ம‌த்துட‌ன் ந‌ட‌ந்து செல்கின்ற‌ன‌ர்.

கீழ‌க்க‌ரையில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் மூன்று மாத‌ங்க‌ளுக்கு முன் அமைத்த‌ சாலைக‌ள்  புதிய‌ குடிநீர் பைப்க‌ள் புதைப்ப‌த‌ற்கு அப்ப‌குதிக‌ளில் தோண்ட‌ப்ப‌ட்ட‌தால் பெரும்பாலான‌ ரோடுக‌ள் சேத‌ம‌டைந்த‌து.கூடுத‌லாக‌ த‌ற்போது ம‌ழை பெய்து கொண்டிருப்ப‌தால் ரோட்டில் உள்ள‌ ப‌ள்ள‌ங்களில் ம‌ழை நீர் தேங்கி கொசுக்க‌ள் உற்ப‌த்தியாகி நோய் ப‌ர‌வும் அபாய‌ம் நில‌வுகிற‌து.உட‌ன‌டியாக‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென‌ பொதும‌க்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

கீழ‌க்க‌ரையில் க‌ட‌ந்த‌ மூன்று மாத‌ங்களுக்கு முன் வ‌ட‌க்குத்தெரு,தெற்குதெரு,சின்ன‌க்க‌டைத்தெரு,கிழ‌க்குத்தெரு,க‌ஸ்ட‌ம்ஸ் ரோடு, உள்ளிட்ட‌ ப‌ல‌ ப‌குதிக‌ளில் சாலைக‌ள் அமைத்த‌ன‌ர்.த‌ற்போது அந்த‌ ப‌குதிக‌ளில் புதிய‌தாக‌ குடிநீர் பைப்பு அமைப்ப‌த‌ற்கு ரோடுக‌ள் அமைந்த‌ ப‌குதிக‌ளில் ப‌ள்ள‌ம் தோண்டிய‌தால் சாலைக‌ள் சேத‌ம‌டைந்தாக‌ பொதும‌க்க‌ள் குற்ற‌ஞ்சாட்டுகின்ற‌ன‌ர்.

குறிப்பாக‌ தெற்குதெரு இஸ்லாமியா ப‌ள்ளிக‌ளுக்கு செல்லும் வ‌ழியில் ரோடு மிக‌வும் மோச‌மான‌ நிலையில் உள்ள‌தால் ம‌ழை நீருட‌ன் சாக்க‌டை நீரும் தேங்கி நிற்ப‌தால‌ ப‌ள்ளி செல்லும் சின்ன‌சிறு குழ‌ந்தைக‌ள் உள்ளிட்ட‌ மாண‌வ‌,மாண‌விய‌ர்க‌ள் ந‌ட‌ந்து செல்வ‌த‌ற்குள் பெரும் சிர‌ம‌த்துக்குள்ளாகிறார்க‌ள்.தேங்கி கிட‌க்கும் க‌ழிவுநீரால் தொற்று நோய் ப‌ர‌வும் வாய்ப்பும் உள்ள‌து.

இதுகுறித்து முன்னாள் க‌வுன்சில‌ர் முக‌ம்ம‌து காசிம் செல்வ‌ராஜா கூறிய‌தாவ‌து,
 சென்ற‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌த்தில் நாங்க‌ள் க‌வுன்சில‌ராக‌ இருந்த‌போது சாலை அமைப்ப‌த‌ற்கு தீர்மான‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌து. ஆனால் க‌வுன்சில‌ர் எம்.எம்.கே.ஜ‌மால் இப்ராகிம் பைப்புக‌ள் புதைத்து விட்டுதான் சாலை அமைக்க‌ வேண்டும் இல்லையென்றால் பைப்புக‌ள் புதைக்கும் போது ஏற்கென‌வே அமைத்த‌ சாலைக‌ள் உடைக்க‌ப்ப‌ட்டு ம‌க்க‌ள் ப‌ண‌ம் விரைய‌மாகி த‌ற்போது ஏற்ப‌ட்டுள்ள‌ நிலைமை(சாலைக‌ள் சேத‌ம்) ஏற்ப‌டும் என்று கூறி நீதிம‌ன்ற‌த்தில் த‌டை உத்த‌ர‌வு பெற்றார்.

ஆனால் த‌ற்போதைய‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் 3 மாத‌த்திற்கு முன் புதிய‌ சாலைக‌ள் அமைத்து விட்டு த‌ற்போது பைப் புதைக்க‌ வேண்டுமென்று சாலைக‌ளை சேத‌ப்ப‌டுத்தி ம‌க்க‌ள் ப‌ண‌த்தை விரைய‌ம் செய்து விட்டார்க‌ள்.
த‌ற்போது மாண‌வ‌,மாண‌விய‌ர் ந‌ட‌ந்து செல்ல‌ முடியாத‌ அள‌விற்கு சாலைக‌ள் மோச‌மாக‌ உள்ள‌து.இதை உட‌ன‌டியாக‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் ச‌ரி செய்ய‌ வேண்டும் இவ்வாறு அவ‌ர் கூறினார்.

எம்.எல்.ஏவை குறை கூறுப‌வ‌ர்க‌ள் உள்ளூர் பிர‌ச்ச‌னைக‌ள் குறித்து சேர்ம‌ன் ம‌ற்றும் க‌வுன்சில‌ர்க‌ளிட‌ம் கேட்டீர்க‌ளா? தமுமுக‌ கீழை இர்பான் அறிக்கை!



பைல் ப‌ட‌ம் :ராம‌நாத‌புரம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ தொகுதிக்கு ஜ‌வாஹிருல்லாஹ் வேட்பு ம‌னு தாக்க‌ல் செய்த‌ போது.....


த‌முமுக‌வை சேர்ந்த‌ கீழ‌க்க‌ரை இர்பான் வெளியிட்டுள்ள‌ செய்தி தொகுப்பில் கூறியிருப்ப‌தாவ‌து,

வ‌ர‌லாற்று சிற‌ப்புமிக்க‌ கீழக்கரையை சேர்ந்தவ‌ன் என்ற அடிப்படையிலும் தமுமுகவின் உறுப்பினரில் ஒருவன் என்ற அடிப்படையிலும் இதனை நான்ஊர் மக்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். தேர்த‌லுக்கு ம‌ட்டும்தான் முந்தைய‌ எம்.எல்.ஏக்க‌ள் வ‌ந்திருப்பார்க‌ள் பேரா.ஜ‌வாஹிருல்லா ம‌ட்டும்தான் தேர்த‌ல் முடிந்தும் ம‌க்க‌ளை தேடி,தேடி வ‌ருகிறார்

.இந்த முறைதான் பேராசிரியர் ஜவாஹிருல்லா MLA வை மிக எளிமையாக அனைவரும் சந்தித்து குறைகளை பகிர்ந்து கொள்ள முடிகிறது.குறை கூறுப‌வ‌ர்க‌ள் மனசை தொட்டு சொல்ல வேண்டும்.
என‌வே பேராசிரியர் ஜவாஹிருல்லாMLA பணியை ஊக்குவித்து மேலும் சமுக பணி செய்ய நாமும் துணையாக இருக்கவேண்டும். மேலும் ஆதாரத்துடன் பேராசிரிய‌ர் ஜ‌வாஹிருல்லாஹ் அவ‌ர்க‌ள் தொகுதிக்கு செய்த‌ ப‌ணிக‌ளை உங்க‌ளுடன் ப‌கிர்ந்து கொள்கிறேன்.
 
சட்டமன்ற உறுப்பினராக பேராசிரியர் ஜவாஹிருல்லா பொறுப்பேற்ற நாள் முதல் கீழக்கரையின் முன்னேற்றத்தில் வேறு எந்த சட்டமன்றஉறுப்பினரும் காட்டாத அளவு செயலாற்றி வருகிறார். கீழக்கரையில் நிலவும் சுகாதார பிரச்சினைகள், குறிப்பாக வீதியெங்கும் சாக்கடை,தெருவெங்கும் குப்பை மேடுகள்,கடற்கரை ஓரங்களில் இறைச்சி கழிவுகள், இவை போன்றவற்றிற்கு நிரந்தர தீர்வுக்கு என்ன வழியோ அதைகண்டறிந்து செயல்படுத்திட சட்டசபை முதல் முதல்வர் அலுவலகம் வரை,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் நகராட்சி ஆணையாளர் வரைசந்தித்து வலியுறுத்திபேராசிரியர் ஜவாஹிருல்லாவருகிறார்.

கடந்த ஆட்சியல் துவக்கப்பட்ட திட்டமானாலும் அது தீர்வுக்குரியதாக இருந்தால் அதை செயல்படுத்திட தேவையான நடவடிக்கைகளையும்மேற்கொள்கிறார்.குறிப்பாக சொல்ல வேண்டுமானால் கீழக்கரையில் சேரும் குப்பைகளை அப்புறப்படுத்தவும்,அவற்றை உரமாக மறு சுழற்சிசெய்வதற்காகவும் பதினோரு ஏக்கர் இடம் கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ செல்வந்தர் ஒருவரால் அருகிலுள்ள‌ கிராமமான தில்லையெந்தலில் தானமாக வழங்கப்பட்டது.ஆனால்அங்கு குப்பை கொட்டுவதற்கு அக்கிராமத்தை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.சாதாரணமாக துவங்கிய இந்த எதிர்ப்புநாளடைவில் வன்முறை அளவுக்கு சென்றது.

போலீஸ்,கோர்ட்,வழக்கு என திசை மாறியது.கீழக்கரை மக்களின் நல்வாழ்வில் பொறாமை கொண்ட சிலரால் தூண்டப்பட்ட இந்த எதிர்புணர்வைசட்டத்தின் முன் எதிர்கொள்ள தயங்கினார்கள் அனைவரும்.இந்நிலையில் இது குறித்த அணைத்து அம்சங்களையும் முழுமையாக அறிந்துகீழக்கரை நகராட்சி,மாவட்ட ஆட்சியர்,காவல்துறை,தில்லை ஏந்தல் ஊராட்சி என அணைத்து தரப்பையும் ஒருங்கிணைத்து குப்பை கிடங்குசெயல்பாட்டுக்கு வர சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர் எடுத்த முயற்சிகள் மக்கள் பிரதிநிதிகளுக்கு முன்மாதிரியான ஒன்றாகும்.கடந்த ஆறு மாதங்களாக அங்கு குப்பை கொட்டப்பட்டு எக்ஸ்னோரா என்ற தொண்டு நிறுவனத்தாரால் மக்கும் தன்மை,மற்றும் மக்காத தன்மைகொண்ட குப்பைகள் பிரிக்கும் பனி நடைபெற்று வருகிறது.

கடற்கரை இன்று பளிச்சென இருப்பதாக செய்தி தாள்கள் சொல்கின்றன. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் கீழ‌க்கரை வள்ளல் சீதக்காதி சாலை எப்படிஇருந்தது என்றும்,தற்போது எவ்வாறு உள்ளது என்றும் நியாய உணர்வுள்ளவர்கள் அறிவார்கள்.
ஆனால் சிலரோ,சாதாரணமாக நகராட்சி செய்ய வேண்டிய வேலைகளையும் சட்டமன்ற உறுப்பினரே செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
பேரூந்து நிலையத்தின் அங்கீகாரத்தை போக்குவரத்து துறையில் புதுப்பிக்கப்படாத அவல நிலையை கேள்விபட்டு அதற்குரிய வழிகாட்டுதலை நகராட்சிக்கு வழங்கினார்.

மின்சார பிரச்சினை குறித்தும் பெருமுயற்சி எடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது.
கீழக்கரையை தலைமையிடமாக கொண்ட தனி தாலுகா குறித்து அதிகமான முயற்சிகளை சட்டமன்ற உறுப்பினர்பேராசிரியர்ஜவாஹிருல்லாஎடுத்து வருகிறார்.வரும் பட்ஜட் கூட்டத்தொடர் வரை பொறுத்திருந்து பார்ப்போம்,அதன்பிறகு போராட்டம் தான் தீர்வென்றால்அதையும் செய்ய தயார் என பத்திரிகைகளில் பேட்டி கொடுக்கும் அளவு இந்த கோரிக்கையை கொள்கையாகவே கொண்டுள்ளார்.

பைல்(பழைய‌)பட‌ம்: ச‌மீப‌த்தில் அளித்த‌பேட்டி விப‌ர‌ம் ‍‍ http://keelakaraitimes.blogspot.com/2013/01/3.html
இறுதியாக, என் வீட்டு வாசலில் குப்பை கிடக்கிறது,பக்கத்துக்கு விட்டு வாசலில் சாக்கடை ஓடுகிறது சட்டமன்ற உறுப்பினர் என்ன செய்தார்?என்று கேட்பவர்களுக்கு ஒரு கேள்வி, ந‌ம‌து தெருக்க‌ளில் உள்ள ஒருவரை வார்டு கவுன்சிலராக தேர்ந்து எடுத்தீர்களே, ந‌ம‌து ஊரில் ஒருவரைநகராட்சி தலைவராக தேர்ந்து எடுத்தீர்களே அவர்களிடம் என்றைக்காவது இது குறித்து கேட்டீர்களா?

ராம‌நாதபுர‌ம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ தொகுதிகுட்ப‌ட்ட‌ கீழ‌க்க‌ரைக்கு பேராசிரியர் ஜ‌வாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ அவ‌ர்க‌ள் மிக‌ குறுகிய‌ கால‌த்திற்குள் செய்த‌ ப‌ணிக‌ளின் ஒரு ப‌குதியை ஆத‌ர‌த்துட‌ன் இணைத்துள்ளேன்.கீழே உள்ளே இணைப்பில் ....

.இவ்வாறு கீழை இர்பான் தெரிவித்துள்ளார்

 






Tuesday, January 8, 2013

20 ஆண்டுக‌ள் விப‌த்தில்லாம‌ல் ஓட்டிய‌ அர‌சு டிரைவ‌ர்க‌ளுக்கு கேட‌ய‌ம்!


அரசு போக்குவரத்துத் துறையில் 20 ஆண்டுகளாக விபத்து இல்லாமல் வாகனங்களை இயக்கிய 8 ஓட்டுநர்களுக்கு கேடயங்களையும், பாராட்டுச் சான்றிதழையும் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் வழங்கினார்.

   தமிழக அரசு மற்றும் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து 24-வது தேசிய சாலை பாதுகாப்பு வார நிறைவு விழாவை திங்கள்கிழமை நடத்தின. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி தலைமை வகித்தார்.
  கல்லூரி இயக்குநர் ஹபீப்முஹம்மது சதக்கத்துல்லா, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கார்த்தலிங்கன் சாலை பாதுகாப்பு பற்றி விளக்கினார்.

  ராமநாதபுரம் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் பேசுகையில், வாகன ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி இறப்பு ஏற்பட்டால்  கொலை வழக்காகப் பதிவு செய்யப்படும். மேலும் மாணவர்களுக்கு கல்லூரியிலேயே பயிற்சியுடன் கூடிய ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்றார்.

  முன்னதாக தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் 20 ஆண்டுகளாக விபத்து இல்லாமல் வாகனங்களை இயக்கிய 8 ஓட்டுநர்களுக்கு கேடயங்களையும், பாராட்டுச் சான்றிதழையும் அவர் வழங்கினார்.

  இதில் ராமநாதபுரம் மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளர் முரளிதரன், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் இளங்கோவன், அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
  என்எஸ்எஸ் அலுவலர் ஆனந்த் நன்றி கூறினார்.

 

முஹ‌ம்ம‌து ச‌த‌க் பொறியிய‌ல் க‌ல்லூரியில் சாலை பாதுகாப்பு வார‌ விழா!



கீழ‌க்க‌ரை முக‌ம்ம‌து ச‌த‌க் பொறியிய‌ல் க‌ல்லூரியில் சாலை வார‌ பாதுகாப்பு வார‌ விழா ந‌டைபெற்ற‌து.க‌ல்லூரி முத‌ல்வ‌ர் முக‌ம்ம‌து ஜ‌காப‌ர் த‌லைமை வ‌கித்தார்.ஏர்வாடி இன்ஸ்பெக்ட‌ர் சுரேஷ் ,எஸ்,ஐ ம‌கேஸ்வ‌ரி,துறை த‌லைவ‌ர் கார்த்திக்கேய‌ன் அகியோர் முன்னிலை வ‌கித்த‌ன‌ர்.
பேராசிரிய‌ர் க‌னேஷ்குமார் ந‌ன்றி கூறினார்.ஏற்பாடுக‌ளை நிர்வாக‌ அலுவல‌ர் மீனாட்சி சுந்த‌ர‌ம் செய்திருந்தார்.


 

Saturday, January 5, 2013

துபாயில் ஈமான் அமைப்பு சார்பில் மீலாத் வினாடி வினா போட்டி!கீழ‌க்க‌ரை உள்ளிட்ட‌ த‌மிழ‌க‌த்தின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளின் சிறுவ‌ர்,சிறுமிய‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.!



துபாய் ஈமான் அமைப்பு சார்பில் 7 முத‌ல் 12 வ‌ய‌து வ‌ரை சிறுவ‌ர் சிறுமிய‌ருக்கான‌  மீலாத்  இஸ்லாமிய‌ வினாடி வினா ம‌ற்றும் கிராஅத் போட்டி  04.01.2013 வெள்ளிக்கிழமை மாலை ஸ்டார் இண்டர்னேஷனல் ஸ்கூலில் வெகு சிறப்புற நடைபெற்றது.
நிக‌ழ்ச்சியில் ஈமான் அமைப்பின் தலைவர் செய்ய‌து எம்  ஸலாஹுத்தீன்  தலைமை வகித்தார்.ஈமான் அமைப்பின் அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் ஜ‌மால் கிராஅத் ஓதினார். பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி முன்னிலை வகித்தார். விழாக்குழு செய‌லாள‌ர் ஹ‌மீது யாசின் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தின‌ர். .ச‌ங்க‌த்தின் துணை பொது செயலாள‌ர் தாஹா நிக‌ழ்ச்சிக‌ளை தொகுத்து வ‌ழ‌ங்கினார்.
உணர்வாய் உன்னை பயிற்சியாளர் தஞ்சை ஜலாலுதீன், துபாய் கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளி முதல்வர் முஹம்மது கலீஃபுல்லாஹ் நடுவர்களாக இருந்து சிறுவ‌ர் சிறுமிய‌ரை தேர்வு செய்த‌ன‌ர்.
ஜெயா தொலைக்காட்சியின் முன்னால் செய்தி வாசிப்பாளர் ரஃபீக் சுலைமான் குழந்தைகளின் திறன்களை ஊக்கப்படுத்துவது குறித்து விளக்கவுரை வழங்கினார்.

கீழ‌க்க‌ரை உள்ளிட்ட‌ த‌மிழ‌க‌த்தின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளை சேர்ந்த‌ சிறுவ‌ர்,சிறுமிய‌ர் ஏராள‌மானோர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.
வெற்றி பெற்றவர்களுக்கு சிற‌ப்பு பரிசு வழங்கப்பட்டன.போட்டியில் ப‌ங்கேற்ற அனைவ‌ருக்கும் ப‌ரிசுக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ன‌.
 விழாக்குழு துணை செயலாள‌ர் முஹைதீன் ,வெல்பேர் ஒருங்கினைப்பாள‌ர் ஃபைஜுர் ரஹ்மான்,கல்விக்குழு செய‌லாள‌ர் மதுக்கூர் ஹிதாய த்துல்லா,ஆகியோ ர் போட்டியில் ப‌ங்குபெற்ற‌ குழ‌ந்தைக‌ளுக்கு ந‌டுவ‌ர் குழு அளித்த‌ ம‌திப்பெண்க‌ளை இறுதி வ‌ரைவ ு செய்த‌ன‌ர்.

ஊடகத்துறை மற் றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத் நன்றியுரை நிகழ்த்தினார்.

ஊடக‌த்துறை ஒருங்கிணைப்பாள‌ர் சாதிக் பாட்சா,க‌ல்விக்குழு துணை செய‌லாள‌ர் ஜாபர் சித்திக்,   காதர், முபாரக் அலி, முஸ்தபா, சலாஹுதீன் , ஹபீபுல்லாஹ்,மணல்மேல்குடி அம்ஜத் கான் உள்ளிட்ட நிர்வாக்குழு உறுப்பினர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை  செய்திருந்தனர்.
 

ச‌த‌க் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் துவ‌க்க‌ விழா

பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்பு முகாம் துவக்க விழா நடந்தது.
முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல்காதர் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் ஹபீப் முகமது சதக்கத்துல்லா, முதல்வர் முகமது ஜகாபர் முன்னிலை வகித்தனர். எல்சியம் டெக்னாலஜி மற்றும் மெட்டாமார்ஃபோசிஸ் நிறுவனத்தின் மேலாளர்கள் 10 நாட்கள் நடைபெறும் இந்த முகாமை துவக்கி வைத்தனர்.
விழாவில் கல்லூரி முதல்வர் முகமது ஜகாபர் பேசுகையில்,

பொறியியல் இறுதி ஆண்டு படிக்கும் அனைத்து பொறியியல் பிரிவு மாணவர்களுக்கும் இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு மாணவர்களின் ஆளுமைத்திறனை மேம்படுத்தவும், நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவதற்கான நுணுக்கங்களை கற்று கொள்ளவும், அதன் மூலம் தொழில் நுட்பத்துறையில் மட்டுமின்றி எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கவும் பயிற்சி அளிக்கப்படும். இந்த நிறுவனத்தின் மூலம் முன்னிலை வகிக்கும் சிறந்த கம்பெனிகள் கல்லூரிக்குவரவழைக்கப்பட்டு முகம்மது சதக்


பொறியியல் கல் லூரியில் வேலைவாய்ப்பிற்கான வளாகத்தேர்வு நடைபெறும் என்றார்.
ஏற்பாடுகளை பணி அமர்வு அதிகாரி ஷேக் யூசுப் மற்றும் மக்கள் தொடர்பாளர் நஜிமுதீன் செய்தனர்.

கீழ‌க்க‌ரையில் "மாஸ் கிளினிங்" முறையில் ப‌ல‌ வ‌ருட‌ குப்பைக‌ள் அக‌ற்ற‌ம்!




த‌மிழ‌க‌ உள்ளாட்சிக‌ளில் "மாஸ் கிளினிங் ஒர்க்" என்ற‌ முறையில் குப்பைக‌ள் அக‌ற்ற‌ப்ப‌டும் முறை பின்ப‌ற்ற‌ப‌டுகிற‌து. மாஸ் கிளினிங் என‌ப‌து ஒரே இட‌த்தில் அனைத்து ந‌க‌ராட்சி ப‌ணியாள‌ர்க‌ளையும் வ‌ர‌வ‌ழைத்து மிக‌ப்பெரிய‌ அள‌வில் குவிந்துள்ள‌ குப்பைகள் அப்ப‌குதியில் அக‌ற்ற‌ப்ப‌ட்டு சுத்த‌மாக்க‌ப்ப‌டும்.

இந்நிலையில் கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியாவின் முடிவின் பேரில் க‌மிஷ‌ன‌ர் முக‌ம்ம‌து முகைதீன் உத்த‌ர‌வைய‌டுத்து சுகாதார‌ ஆய்வாள‌ர் தின்ண‌யிர‌மூர்த்தி த‌லைமையில் துப்புர‌வு ப‌ணியாள‌ர்க‌ள் அனைவ‌ரும் ஒன்றினைந்து அண்ணா ந‌க‌ர் முத்துசாமிபுர‌ம் ப‌குதியில் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ அக‌ற்ற‌ப்ப‌டாம‌ல் கிட‌ந்த‌ குப்பைக‌ளை "மாஸ் கிளினிங் ஒர்க்" என்ற‌ பெய‌ரில் ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் முன்னிலையில் அக‌ற்றின‌ர். இப்ப‌ணியின் போது அப்ப‌குதி இளைஞ‌ர்க‌ள் உள்ளிட்ட‌ பொதும‌க்க‌ள் இணைந்து துப்புர‌வு ப‌ணிக‌ளை செய்த‌ன‌ர்.
 

Thursday, January 3, 2013

500 பிளாட் ப‌குதியில் சோலார் தெரு விள‌க்குக‌ள்!ஜ‌வாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ தொட‌ங்கி வைத்தார்!


த‌ற்போது த‌மிழ‌க‌த்தில் பல்வேறு இட‌ங்க‌ளில் சூரிய‌ ச‌க்தியில் இய‌ங்கும் தெ
ரு விளக்குக‌ள் அமைக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.


இந்நிலையில் தில்லையேந்த‌ல் ப‌ஞ்சாய‌த்துக்குட்ப‌ட்ட‌ கீழ‌க்க‌ரை 500 பிளாட் ப‌குதியில் 10 சோலார் தெரு விள‌க்குக‌ளை ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ தொட‌ங்கி வைத்தார். தில்லையேந்த‌ல் ப‌ஞ்ச‌யாத்தின் செல்வ‌குமார்,செய்ய‌து அலி ம‌ற்றும் த‌முமுக‌,மம‌க‌ நிர்வாகிக‌ள் உட‌ன் இருந்த‌ன‌ர்.

Wednesday, January 2, 2013

கீழ‌க்க‌ரையில் விலையில்லா ம‌ருந்துக‌ள் ம‌ற்றும் துப்புர‌வு உப‌ர‌க‌ர‌ண‌ங்க‌ள் வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சி!


கீழ‌க்க‌ரை ந‌க‌ர்ந‌ல இய‌க்க‌ம் சார்பாக‌ துப்புர‌வு ப‌ணியாள‌ர்க‌ளுக்கு பாதுகாப்பு உப‌க‌ர‌ண‌ங்க‌ள் ம‌ற்றும் சர்க்க‌ரை நோய் ம‌ற்றும் ர‌த்த‌ அழுத்த‌ நோயால் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ தேவையான‌வ‌ர்க‌ளுக்கு விலையில்லா ம‌ருந்துக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

ந‌க‌ர் ந‌ல இய‌க்க‌த்தின் நிறுவ‌ன‌ர் ஹ‌மீது அப்துல் காத‌ர் த‌லைமை வகித்தார் த‌லைவ‌ர் செய்ய‌து அப்துல் காத‌ர் சீனா தானா அற‌க்க‌ட்ட‌ளை நிறுவ‌ன‌ர் செய்ய‌து அப்துல் காத‌ர்,அதிமுக‌ ந‌க‌ர் செய‌லாள‌ர் ராஜேந்திர‌ன் முன்னிலை வ‌கித்த‌ன‌ர்.செய‌லாள‌ர் ப‌சிர் அக‌ம‌து வ‌ர‌வேற்றார். மேலும் யூசுப் சுலைஹா ம‌ருத்துவ‌ம‌னை இய‌க்குந‌ர் டாக்ட‌ர் செய்ய‌து அப்துல் காத‌ர் ம‌ற்றும் க‌னி,வ‌ட‌க்குதெரு நாசா ந‌ல‌ அமைப்பு நிர்வாகிக‌ள்,கீழ‌க்க‌ரை பைத்துல் மால் நிர்வாகிக‌ள் ம‌ற்றும் ஜ‌மாத்தார்க‌ள் ,ந‌க‌ராட்சி துப்புர‌வு ஆய்வாள‌ர் திண்ணாயிர‌மூர்த்தி, உள்ப‌ட‌ ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். இய‌க்க‌த்தின் பொருளாள‌ர் ஹாஜா அணீஸ் ந‌ன்றி கூறினார்.
 

கீழ‌க்க‌ரை லைட் ஹ‌வுசை மாண‌வ‌,மாண‌விய‌ர் பார்வையிட‌ அனும‌திக்க‌ கோரிக்கை!




க‌ட‌லில் வ‌ழி த‌வ‌றும் க‌ப்ப‌ல்க‌ள் ம‌ற்றும் இர‌வில் வ‌ழி த‌வ‌று மீன‌வ‌ர்க‌ளுக்கு என‌ க‌ட‌ல் வ‌ழி ப‌ய‌ண‌த்துக்கு பேருத‌வியாக‌ இருப்ப‌து க‌ல‌ங்க‌ரை விள‌க்க‌ங்க‌ளாகும்.த‌ற்போது ப‌ல்வேறு கலங்கரை விளக்கங்க‌ளின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள ராடார் கருவியுடன், பகல் மற்றும் இரவு நேரத்தில் தெளிவாக கண்காணிக்கும் கேமரா, தொலை நோக்கு கேமரா, தானியங்கி அடையாளம் காணும் கருவி, சென்ஸ்சார் கருவி உட்பட பல கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள் கடலோரங்களை கண்காணிக்கும், அதன் மூலம் பெறப்படும் தகவல்களை கடலோர காவல் படைக்கு அனுப்பப்படும் இத‌ன் மூல‌ம் க‌ட‌லோர‌ பாதுகாப்பு ப‌ல‌ப‌டுத்தப்ப‌ட்டுள்ளது.

கப்பல் போக்குவரத்து அமைச்சக துறையின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை மண்டலத்தின் 21கலங்கரை விளக்கங்க‌ளில் ஒன்றான கீழ‌க்க‌ரை க‌ல‌ங்க‌ரை விள‌க்க‌ம் 1979ல் செய‌ல்ப‌ட‌ தொட‌ங்கிய‌து.35 மீட்ட‌ர் உய‌ர‌மும் 15 நொடிக்கு ஒரு முறை வெளிச்ச‌த்தை உமிழும் ச‌க்தி வாய்ந்த‌ விள‌க்கையும் கொண்ட‌து

இந்த‌ (லைட் ஹ‌வுஸ்) க‌ல‌ங்க‌ரை விள‌க்க‌ம் ப‌ல‌ ஆண்டு கால‌ம் முன்பு கீழ‌க்க‌ரை க‌ல‌ங்க‌ரை விள‌க்க‌த்தை காண்ப‌த‌ற்கு க‌ட்ட‌ண‌ம் பெற்று கொண்டு அனும‌தித்து வ‌ந்தார்க‌ள் பின்ன‌ர் பார்வையாள‌ர்க‌ளுக்கு அனும‌தி மறுக்க‌ப்ப‌ட்டு இன்று வ‌ரை அனும‌தி இல்லை.
இந்நிலையில் இப்ப‌குதி ப‌ள்ளி மாண‌வ‌,மாண‌விய‌ர்க‌ளுக்கு க‌‌ல‌ங்க‌ரை விள‌க்க‌த்தை காண்ப‌த‌ற்கு அனும‌திக்க‌ வேண்டும் நீண்ட‌ கால‌ம் கோரிக்கை இருந்து வ‌ருகிறது.

ப‌ட‌ம்: அஸ்ப‌ர்

இப்ப‌குதி மாண‌வ‌ர்க‌ளுக்கு இய‌ற்கை வ‌ள‌ங்க‌ளை நேரில் சென்று காண‌ப‌தற்கான வாய்ப்பு மிக‌வும் குறைவு.என‌வே க‌ல‌ங்க‌ரை விள‌க்க‌த்தின் உய‌ர‌த்திலிருந்து பார்வையிட‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு அனும‌தித்தால் வ‌ளைகுடாவின் ஒரு ப‌குதியான‌ கீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லின் வ‌ன‌ப்பை காண்பத‌ற்கும்,ப‌வ‌ள‌ பாறைக‌ள் உள்ளிட்ட‌ அரிய‌ க‌ட‌ல் வாழ் உயிர‌ன‌ங்க‌ள் ப‌ற்றி அறிந்து கொள்வ‌த‌ற்கும் அருகிலிருக்கும் தீவுக‌ளை தெரிந்து கொள்வ‌த‌ற்கு மாண‌வ‌ர்க‌ளுக்கு உத‌வியாக‌ இருக்கும். தின‌மும் இல்லாவிட்டால் வார‌த்தில் ஒரு முறையாக‌ குறிப்பிட்ட‌ எண்ணிக்கையில் மாண‌வ‌ர்க‌ளை அனும‌திக்க‌லாம்.

என‌வே  மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்க வேண்டுமானால் தமிழக அரசு ம‌த்திய‌ அர‌சை அனுமதிக்க‌ கேட்டு கொள்ள‌ வேண்டும்.இத‌ற்காக‌ இப்ப‌குதி ம‌க்க‌ள் பிர‌திநிதிக‌ள் முய‌ற்சிக்க‌ வேண்டும்.

கலங்கரை விளக்கத்திலுள்ள விளக்கு நேராக ஒளியைப் பாய்ச்சாமல், கடலை நோக்கி ஒளியைப்    பாய்ச்சியவாறு அரை வட்டத்தில் சுழலும். இரவில் நேரில் சென்றால் இதைத் தெளிவாகப் பார்க்கலாம். சில விளக்குகள் ஒளியை விட்டு விட்டு அனுப்புவதாகவும் இருக்கும். விளக்குச் சுழற்சி வேகமும், ஒளிகளுக்கு இடையிலான கால இடைவெளியும் ஒவ்வொரு கலங்கரை விளக்கத்திற்கும் மாறுபட்டிருக்கும். மாலுமிகள், இந்த மாறுபாடுகளை வைத்து ஒவ்வொரு கலங்கரை விளக்கத்தையும் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.
வானிலை மோசமாக உள்ள நேரங்களிலும் செயல்படும் வகையில் நவீன கால கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்படுகின்றன. இத்தகைய நவீன கலங்கரை விளக்கங்களில் ரேடியோ அலை பரப்பிகளைக்கொண்டு மாலுமிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இது தவிர திசை அறிய மாலுமிகளுக்கு, ஜி. பி. எஸ். திசை காட்டியும், கடல் வரை படங்களும், வான் நட்சத்திர வரைபடங்களும் உதவுகின்றன.

லைட்ஹவுஸ் கண்காணிப்பாளர் பவுலிக்கர் கூறுகையில், “முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை சம்பவத்திற்கு பின் தமிழகத்தில் உள்ள அனைத்து லைட்ஹவுஸ்களிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், சில இடங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கலாம் என அரசு கருதியது. இதன்விளைவாக மகாபலிபுரம், முட்டம், கன்னியாகுமரி போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். கீழக்கரையில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க உத்தரவு எதுவும் வரவில்லை. சென்னையில் உள்ள எங்களது தலைமை அலுவலகத்தில் நகராட்சி சார்பில் அனுமதி கேட்டால் பார்வையாளர்களுக்கான அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது,”என்றார்.

Tuesday, January 1, 2013

கீழ‌க்க‌ரை‍ முனை ரோட்டில் நிழ‌ற்குடைக்கு ரூ 3லட்ச‌ம் நிதி ஒதுக்கியுள்ளேன்!ஜ‌வாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ த‌க‌வ‌ல்



கீழ‌க்க‌ரை ஏர்வாடி முக்கு ரோட்டில் வாக‌ன‌ங்க‌ளுக்காக‌ காத்து நிற்கும் ம‌க்க‌ள் நிழ‌ற்குடை இல்லாத‌தால் மிகுந்த‌ சிர‌ம‌டைந்து வ‌ந்த‌ன‌ர்.நிழ‌ற்குடை அமைக்க‌ வேண்டுகோள் விடுத்து கீழ‌க்க‌ரை டைம்சிலும் செய்தி வெளியிட்டிருந்தோம் http://keelakaraitimes.blogspot.com/2011/05/blog-post_24.html த‌ற்போது அனைத்து த‌ர‌ப்பு ம‌க்க‌ளின் கோரிக்கையை ஏற்று நிழ‌ற்குடை அமைக்க‌ சட்ட‌ம‌ன்ற‌ நிதியிலிருந்து நிதி ஒதுக்கியுள்ள‌தாக‌ ஜ‌வ‌ஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்

கீழ‌க்க‌ரை ம‌க்க‌ள் ந‌ல‌ப்ப‌ணிகள் குறித்து ஆய்வு செய்த‌ ராமநாத‌புர‌ம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ஜ‌வாஹிருல்லாஹ் நிருப‌ர்க‌ளுக்கு அளித்த‌ பேட்டியில் கூறியிருப்ப‌தாவ‌து,

ராமநாத‌புர‌ம் திருப்புல்லாணி,கீழ‌க்கரை அருகே உள்ள‌ இறால் ப‌ண்னைக‌ளால் குடிநீர் ஆதார‌ங்க‌ள் பாதிப்ப‌டைகின்ற‌ன‌.மேலும் குடிநீர் பைப்க‌ள் அமைப்ப‌த‌ற்கு இடையூறாக‌ உள்ள‌து.என‌வே இப்பகுதி ம‌க்க‌ளின் ந‌ல‌னை க‌ருத்தில் கொண்டு இறால் ப‌ண்ணைக‌ளை அப்புற‌ப்ப‌டுத்தி சுற்று சூழ‌லுக்கு பாதிப்ப‌டையாத‌ வ‌கையில் வேறு இட‌த்தில் அமைத்து கொள்ள‌ வேண்டும்.

ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்தில் ப‌ருவ‌ நிலை மாற்ற‌ம் கைகொடுக்காம‌ல் விவசாய‌ம் பாதிப்ப‌டைந்துள்ள‌தால் விவாசாயிக‌ள் பெரும‌ள‌வில் ந‌ஷ்ட‌ம‌டைந்துள்ள‌ன‌ர்.என்வே டெல்டா மாவ‌ட்ட‌ விவசாயிக‌ளுக்கு நிவார‌ண‌ம் வ‌ழ‌ங்குவது போன்று ஏக்க‌ருக்கு த‌லா ரூ 25 ஆயிர‌ம் நிவார‌ண‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

மேலும் கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியின் செயல்பாடுக‌ள் பார‌ட்டும்ப‌டி இல்லை.சாலைக‌ள் த‌ர‌மில்லாம‌ல் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.டெங்கு காய்ச்சல் த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ள் குறிப்பிடிதக்க‌ அள‌வில் இல்லை மீண்டும் டெங்கு த‌லை தூக்க‌ தொட‌ங்கியுள்ள‌து.

மேலும் கீழ‌க்க‌ரை தாலுகாவாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டு செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌டாம‌ல் உள்ள‌து.த்மிழ‌க‌ அர‌சு வ‌ரும் ப‌ட்ஜெட் கூட்ட‌ தொடருக்குள் அறிவிப்பை செய‌ல்ப‌டுத்த‌ விட்டால் பொதும‌க்க‌ளை திர‌ட்டி போராட்ட‌ம் ந‌ட‌த்த‌ப்ப‌டும்.

கீழ‌க்க‌ரை ஏர்வாடி முனை ரோட்டில்  நீண்ட‌ கால‌ கோரிக்கையான‌ நிழ‌ற்குடை அமைக்க‌ என‌து ச‌ட்ட‌மன்ற‌ உறுப்பின‌ர் நிதியிலிருந்து ரூ3 ல‌ட்ச‌ம் ஒதுக்கியுள்ளேன்
இவ்வாறு அவ‌ர் கூறினார்
 

2013ம் ஆண்டு தொட‌க்க‌ம்!கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் வாழ்த்து!

 2013 ஆம் ஆண்டுக்கான தொட‌க்க‌த்தையோட்டி கீழக்கரை நகராட்சித் தலைவர் ராவியத்துல் காதரியா தமது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவ‌ர் வெளியிட்டுள்ள‌ செய்தியில்..
"இந்த புதிய‌ ஆண்டு தொட‌க்க‌த்தில் எனது இதயம் கனிந்த புத்தாண்டு  நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.