Saturday, January 12, 2013

கீழ‌க்க‌ரை அருகே பெண்கொலை!போலீசார் தீவிர‌ விசார‌ணை!


ப‌ட‌ விள‌க்க‌ம்: ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌ இட‌ம்
 கீழக்கரை அருகே கும்பிடுமதுரை வேலு மனைவி ஆறுமுகம், 51. இவர், மீனவர் குடியிருப்பு தொடக்கப்பள்ளியில் சத்துணவு ஊழியராக வேலை செய்து வந்தார்.

கீழக்கரையிலிருந்து கும்பிடும‌துரை செல்லும் வ‌ழியில் கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ நல்ல இபுராகிமுக்கு சொந்தமான முல்லைநகர் தோப்பில் தங்கியிருந்தார்.
நேற்று, காலை தோப்பு வளாகத்திலுள்ள கட்டடத்தில் ஆறுமுகம் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

மோப்பநாய், தடவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. எஸ்.பி., மயில்வாகனன், டி.எஸ்.பி., சோமசேகர் விசாரித்தனர். இவ‌ர‌து மகன் கணேசன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன இவரை யார் கொலை செய்தது என்பது குறித்து, இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்!
இக்கொலை ச‌ம்ப‌வ‌த்தால் அப்ப‌குதியில் ப‌ர‌ப‌ர‌ப்பு நில‌வுகிற‌து
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.