Tuesday, January 1, 2013

கீழ‌க்க‌ரை‍ முனை ரோட்டில் நிழ‌ற்குடைக்கு ரூ 3லட்ச‌ம் நிதி ஒதுக்கியுள்ளேன்!ஜ‌வாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ த‌க‌வ‌ல்



கீழ‌க்க‌ரை ஏர்வாடி முக்கு ரோட்டில் வாக‌ன‌ங்க‌ளுக்காக‌ காத்து நிற்கும் ம‌க்க‌ள் நிழ‌ற்குடை இல்லாத‌தால் மிகுந்த‌ சிர‌ம‌டைந்து வ‌ந்த‌ன‌ர்.நிழ‌ற்குடை அமைக்க‌ வேண்டுகோள் விடுத்து கீழ‌க்க‌ரை டைம்சிலும் செய்தி வெளியிட்டிருந்தோம் http://keelakaraitimes.blogspot.com/2011/05/blog-post_24.html த‌ற்போது அனைத்து த‌ர‌ப்பு ம‌க்க‌ளின் கோரிக்கையை ஏற்று நிழ‌ற்குடை அமைக்க‌ சட்ட‌ம‌ன்ற‌ நிதியிலிருந்து நிதி ஒதுக்கியுள்ள‌தாக‌ ஜ‌வ‌ஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்

கீழ‌க்க‌ரை ம‌க்க‌ள் ந‌ல‌ப்ப‌ணிகள் குறித்து ஆய்வு செய்த‌ ராமநாத‌புர‌ம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ஜ‌வாஹிருல்லாஹ் நிருப‌ர்க‌ளுக்கு அளித்த‌ பேட்டியில் கூறியிருப்ப‌தாவ‌து,

ராமநாத‌புர‌ம் திருப்புல்லாணி,கீழ‌க்கரை அருகே உள்ள‌ இறால் ப‌ண்னைக‌ளால் குடிநீர் ஆதார‌ங்க‌ள் பாதிப்ப‌டைகின்ற‌ன‌.மேலும் குடிநீர் பைப்க‌ள் அமைப்ப‌த‌ற்கு இடையூறாக‌ உள்ள‌து.என‌வே இப்பகுதி ம‌க்க‌ளின் ந‌ல‌னை க‌ருத்தில் கொண்டு இறால் ப‌ண்ணைக‌ளை அப்புற‌ப்ப‌டுத்தி சுற்று சூழ‌லுக்கு பாதிப்ப‌டையாத‌ வ‌கையில் வேறு இட‌த்தில் அமைத்து கொள்ள‌ வேண்டும்.

ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்தில் ப‌ருவ‌ நிலை மாற்ற‌ம் கைகொடுக்காம‌ல் விவசாய‌ம் பாதிப்ப‌டைந்துள்ள‌தால் விவாசாயிக‌ள் பெரும‌ள‌வில் ந‌ஷ்ட‌ம‌டைந்துள்ள‌ன‌ர்.என்வே டெல்டா மாவ‌ட்ட‌ விவசாயிக‌ளுக்கு நிவார‌ண‌ம் வ‌ழ‌ங்குவது போன்று ஏக்க‌ருக்கு த‌லா ரூ 25 ஆயிர‌ம் நிவார‌ண‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

மேலும் கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியின் செயல்பாடுக‌ள் பார‌ட்டும்ப‌டி இல்லை.சாலைக‌ள் த‌ர‌மில்லாம‌ல் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.டெங்கு காய்ச்சல் த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ள் குறிப்பிடிதக்க‌ அள‌வில் இல்லை மீண்டும் டெங்கு த‌லை தூக்க‌ தொட‌ங்கியுள்ள‌து.

மேலும் கீழ‌க்க‌ரை தாலுகாவாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டு செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌டாம‌ல் உள்ள‌து.த்மிழ‌க‌ அர‌சு வ‌ரும் ப‌ட்ஜெட் கூட்ட‌ தொடருக்குள் அறிவிப்பை செய‌ல்ப‌டுத்த‌ விட்டால் பொதும‌க்க‌ளை திர‌ட்டி போராட்ட‌ம் ந‌ட‌த்த‌ப்ப‌டும்.

கீழ‌க்க‌ரை ஏர்வாடி முனை ரோட்டில்  நீண்ட‌ கால‌ கோரிக்கையான‌ நிழ‌ற்குடை அமைக்க‌ என‌து ச‌ட்ட‌மன்ற‌ உறுப்பின‌ர் நிதியிலிருந்து ரூ3 ல‌ட்ச‌ம் ஒதுக்கியுள்ளேன்
இவ்வாறு அவ‌ர் கூறினார்
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.