Thursday, September 1, 2011

துபாயில் ஒரே இடத்தில் நாளொன்றுக்கு 3000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இப்தார் !



தன்னார்வ தொண்டர்கள்


கோவை வக்கீல் நந்தகுமார் வருகை


பத்திரிக்கையாளர் முதுவை ஹிதாயத்துல்லா



இந்திய தூதரக ஜெனரல் சஞ்சய் வர்மாஈமான் சங்க பொது செயலாளர் லியாகத் அலி மற்றும் இடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான ஹமீது சலாஹுதீன்

ஈமான் சங்க செயலாளர் தாஹா இந்திய தூதரக அதிகாரிகளுடன்

அப்துல் ரஹ்மான்.எம்.பி வருகை




இந்திய தூதரக அதிகாரிகளுடன் ஈமான் சங்க செயலாளர் தாஹா


எம்.பி.எம் நிறுவனத்தின் பொது மேலாளர் சாகுல் ஹமீது வருகை

.
துபாய்: துபாய் இந்திய‌ன் முஸ்லிம் அசோசியேஷ‌ன் ( ஈமான் ) ஒவ்வொரு ஆண்டும் இஃப்தார் எனும் நோன்பு திற‌ப்பு நிக‌ழ்ச்சியினை நடத்தும். இந்த ஆண்டும் துபாய் தேரா லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் (குவைத் ப‌ள்ளி ) ர‌மலான் மாத‌ம் முழுவ‌தும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் த‌மிழ‌க‌ நோன்புக் க‌ஞ்சி வழங்கப்பட்டது.

இது குறித்து ஈமான் பொதுச் செய‌லாள‌ர் குற்றாலம் ஏ. லியாக்க‌த் அலி கூறியதாவது,

துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்ச்சி க‌ட‌ந்த‌ 20 வ‌ருட‌ங்க‌ளுக்கும் மேலாக‌ ந‌டைபெற்று வ‌ருகிற‌து. முதலில் சிறிய‌ அள‌வில் ஆர‌ம்பித்து இன்று சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்ப‌ட்டோருக்கு தின‌மும் த‌மிழ‌க‌ நோன்புக் க‌ஞ்சியை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து. நோன்புக் க‌ஞ்சியுட‌ன் ச‌மோசா, ஆர‌ஞ்சு, குளிர் பான‌ம், த‌ண்ணீர், பேரீச்ச‌ம் ப‌ழ‌ம் உள்ளிட்ட‌வை வழங்கப்பட்டது என்றார்.

இத்த‌கைய‌ மாபெரும் நிக‌ழ்வு ஈமான் அமைப்பின் த‌லைவ‌ர் அல்ஹாஜ் சைய‌து எம். ஸ‌லாஹுத்தீன், க‌ல்விக் குழுத் த‌லைவ‌ர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹ‌பிபுல்லாஹ் ஆகியோர‌து வ‌ழிகாட்டுத‌லுட‌ன் பொதுச் செய‌லாள‌ர் ஏ.லியாக்க‌த் அலி, ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, விழாக் குழு செய‌லாள‌ர் ய‌ஹ்யா முஹயித்தீன், ஊடக‌த்துறை செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த், க‌ல்விக் குழு செய‌லாள‌ர் ஹிதாய‌த்துல்லா, ஜமாத் ஒருங்கினைப்பாளரும் அலுவ‌ல‌க‌ மேலாள‌ருமான ஏ. ஹ‌மீது யாசின், ப‌டேஷா ப‌ஷீர், இல்யாஸ், ஷ‌ர்புதீன், ஷாகுல் ஹ‌மீது, உஸ்மான், ஜ‌மால் முஹ‌ம்ம‌து உள்ளிட்ட‌ நிர்வாகக் குழு உறுப்பின‌ர்க‌ள் ம‌ற்றும் புர‌வ‌ல‌ர்க‌ள் ஒத்துழைப்புட‌ன் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.

இந்த நிக‌ழ்ச்சியில் ப‌ங்கேற்ற‌ கோவையைச் சேர்ந்த‌ சென்னை உய‌ர் நீதிம‌ன்ற‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர் வி. ந‌ந்த‌குமார் அவ‌ர்க‌ள் கூறுகையலி், இஃப்தார் நிக‌ழ்வில் ஒரு பூகோள‌ கிராம‌த்தைப் பார்ப்ப‌து போன்ற‌ ஒருபிர‌மிப்பினை ஏற்ப‌டுத்துகிறது. இது எனது வாழ்நாளில் ம‌ற‌க்க‌ முடியாத‌ நிக‌ழ்ச்சி. இந்தியா அல்லாத‌ வேறொரு நாட்டில் சேவை ம‌ன‌ப்பான்மையுட‌ன் செய‌ல்ப‌ட்டு வ‌ரும் ஈமான் அமைப்பின‌ரின் சேவையினைப் பாராட்டுகிறேன் என்றார்.

இது குறித்து கீழக்கரையை சேர்ந்த நாசர் கூறியதாவது,நாளொன்றுக்கு 3000த்துக்கு மேற்பட்டோருக்கு மாதம் முழுவதும் 90000த்துக்கும் மேற்பட்டோருக்கு அதுவும் ஒரே இடத்தில் வழங்குவது என்பது மிகுந்த சிரமமான காரியம் என்றார். மாதம் முழுவதும் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் அமீரக இந்திய தூதரக அதிகாரிகள் ,அப்துல் ரஹ்மான் எம்பி,எம்பிஎம் (இடிஏ) நிறுவனத்தின் பொது மேலாளர் சாகுல் ஹமீது,இடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஹமீது சலாஹுதீன் ,உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.