Monday, June 13, 2011

கீழக்கரை அருகே இறந்த நிலையில் திமிங்கலம் கரை ஒதுங்கியது





கீழக்கரை 13 : மாயாகுளம் அருகே கிழக்கு மங்களீஸ்வரிநகர் அருகே உள்ள கடற்கரை ஓரத்தில் 12 மீட்டர் நீளமும் , 5 மீட்டர் சுற்றளவும் 1.5டன் எடைகொண்ட சீப்பு எலும்பு திமிங்கலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. மாவட்ட வன உயிரின காப்பாளர் சுந்தரகுமார், உதவி வன பாதுகாவலர் ராஜேந்திரன் கீழக்கரை வன சரக அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் பார்வையிட்ட பின்னர் கூறியதாவது: இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம் பாறையில் மோதி அல்லது திருக்கை மீன் தாக்கி இறந்திருக்கலாம் எனவும், இந்த வகை இனம் மன்னார் வளைகுடாவில் அதிகம் உள்ளது. இவை ஒரு வார காலத்திற்குள் இறந்திருப்பதால் அழுகிய நிலையில் கரை ஓதுங்கியிருக் கிறது என தெரிவித்தனர். கீழக்கரையிலிருந்து ஏராளமானோர் மீனை காண்பதற்கு கடற்கரையில் குவிந்தனர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.