Wednesday, June 1, 2011

கீழக்கரையில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை முதல்வரிடம் கொண்டு செல்வேன்! ஜவாஹிருல்லா .எம்.எல்.ஏ பேட்டி

கீழக்கரை அரசு மருத்துவமனையில் டாக்டர்களுடன் அலோசனை
பொதுமக்களிடம் குறை கேட்டார்
நோயாளியிடம் நலன் விசாரித்தார்

கீழக்கரை, ஜூன் 1: பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு நன்றி தெரிவிக்க வந்திருந்தார். யாரு்ம் எதிர்பாராத வகையில் கீழக்கரை அரசு மருத்துவமனையி்ல் ஆய்வு மேற்கொண்டார்

கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர், அங்கு நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து,
ஜவாஹிர் ஹுசைன் உள்ளிட்ட டாக்டர்களிடம் ஆலோசனை செய்தார்.

108 ஆம்புலனசுக்கு அழைப்பு விடுத்தா்ல் அலட்சியப்படுத்துவதாக புகார் கூறப்பட்டது.
மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டர்கள், நர்சுகள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்,பெண் டாக்டர்கள் தேவை வேண்டும், இடிந்து விழும் நிலையில் உள்ள மருத்துவமனை விடுதியை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நோயாளிகள், எம்எல்ஏவிடம் தெரிவித்தனர்.

எம்எல்ஏ கூறுகையில், அனைத்து கோரிக்கைகளையும், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றுவேன். ஏர்வாடி முனை ரோட்டிலும், பழைய பஸ் ஸ்டாண்டு அருகிலும் விரைவில் நிழற்குடை அமைக்கப்படும். புதிய பஸ் ஸ்டாண்டு மராமத்து பணியை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்படும்� என்றார்.

மாவட்ட தலைவர் சலிமுல்லாகான், மமக செயலாளர் அன்வர்,கீழக்கரை முஜிப் மற்றும் நிர்வாகிகள், அதிமுக நகர் செயலாளர் ராஜேந்திரன், கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.