Saturday, June 4, 2011

கீழக்கரை புது கிழக்குதெருவில் குப்பைகளை கொட்ட இடம் தேர்வு

கீழக்கரையில் நீண்ட காலமாக நிலவி வரும் குப்பை கொட்டும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கீழக்கரையில் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் பஷீர் அகமது தலைமையில் செயல் அலுவலர் போஸ் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கீழக்கரையில் சேகரிக்கப்படும் குப்பைகளை பல்வேறு இடங்களில் கொட்டியபோது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்காலிகமாக புதுகிழக்கு தெருவில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பைகளை கொட்ட முடிவு செய்யப்பட்டது.அந்த பகுதி மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்த 17 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.