Monday, June 27, 2011

வெளிவாசம் ஒத்துக்காதுப்பா...! ஜெயில்தான் ஜாலி

கீழக்கரை, ஜூன் 27:
சிறையிலிருந்து வெளியில் வந்தவர் கடையை உடைத்து திருடியதால் மீண்டும் சிறைக்கே அனுப்பப்பட்டார்.
கீழக்கரை எஸ்ஐ ஜான்சிராணி, ஏட்டு காசிம் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். மேலத்தெரு கண்ணாடி அப்பா அருகே உள்ள ஒரு கடையின் பூட்டை உடைத்து கொண்டிருந்தவரை கையும், களவுமாக பிடித்தனர்.
விசாரணையில்,� அவர் ராமநாதபுரம் சாயக்காரத்தெருவை சேர்ந்த ஹமீதுசுல்தான்(55) எனவும், திருட்டு வழக்கு தொடர்பாக சிறையிலிருந்த அவர் கடந்த 5நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டதும் தெரியவந்தது. கீழக்கரை போலீசார் அவரை மீண்டும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.