Sunday, June 26, 2011

கும்பிடுமதுரை கிராமத்தில் கீழக்கரை குப்பைகளை கொட்ட எதிர்ப்பு



கீழக்கரை: திருப்புல்லாணி அருகே கும்பிடுமதுரை கிராமத்தில் கீழக்கரை நகராட்சிகுப்பைகளை கொட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கீழக்கரை நகராட்ட்சியில் நீண்ட காலமாக நீடித்து வரும் குப்பை கொட்டும் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக கும்பிடுமதுரை கிராமத்தில் கீழக்கரை நகராட்சி குப்பைகள் கொட்டப்படுகின்றன.இதை கண்டித்தும்,உடனடியாக தடுத்து நிறுத்த கோரியும் நேற்று ராமநாதபுரம்கலெக்டரின் முகாம் அலுவலகத்திற்கு கும்பிடுமதுரை கிராமத்தை சேர்ந்த‌ஏராளமான பெண்கள் வந்தனர்.
அவர்கள் கலெக்டர் அருண்ராயை சந்தித்து மனு அளித்தனர். இது குறித்துவிஜயராணி என்பவர் கூறுகையில் , கீழக்கரை நகராட்சி குப்பைகளை எங்கள் கிராமத்தில் கொட்டுவதால் கொசுக்கள் அதிகமாகி எங்கள் ஊரின் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.சுகாதார கேடிலிருந்து எங்கள் ஊரை காப்பற்றுவதற்கு கீழக்கரை நகராட்சி குப்பைகளை எங்கள் ஊரில் கொட்டுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.