Monday, June 20, 2011

தெருக்களில் தேங்கும் கழிவுநீரால் தொற்று நோய் அபாயம்

கீழக்கரை, ஜூன் 20 :
கீழக்கரை நகரில், சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் அபாயம் நிலவுகிறது.
இருபத்தி ஒன்று வார்டுகளை உள்ளடக்கிய கீழக்கரை நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், ஆங் காங்கே தேங்கும் அவலம் நீடிக்கிறது.
பெரும்பாலான இடங்களில், சாக்கடை அடைப்புகளால் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுகிறதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அப்பகுதியில் கொசுக்கள் அதிகரித்துள்ளதால், தொற்று நோய் பரவும் உள்ளது. இனியாவது வடக்குத்தெருவில் தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்த, நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.