Monday, June 20, 2011

சுகாதார‌ கேட்டிற்கு கார‌ண‌ம் ந‌கராட்சி த‌லைவ‌ர் ப‌சீர்தான் ! ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ குற்ற‌ச்சாட்டு






கீழ‌க்க‌ரை :காஞ்சிர‌ங்குடியில் த‌முமுக‌ சார்பில் ம‌ருத்துவ‌மனையை ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ திற‌ந்து வைத்தார்.அப்போது நிருப‌ர்க‌ளுக்கு அளித்த‌ பேட்டியில் , தமிழ்நாடு முழுவதும் த.மு.மு.க. சார்பில் 96 ஆம்புலன்ஸ்கள் இயங்குகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 12 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. புதியதாக மேலும் 3 ஆம்புலன்ஸ்கள் சேர்க்கப்படவுள்ளன. 2008-ம் ஆண்டு கோவை குனியமுத்தூரில் ஒரு சிறிய மருத்துவமனை தொடங்கப்பட்டது. அங்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது. அதேபோல, குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை அளிக்க, ராமநாதபுரம் மாவட்டப் பொருளாளராகப் பணியாற்றி இறந்துபோன சல்மானின் நினைவாக காஞ்சிரங்குடியில் அவருடைய பெயரில் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.


கீழ‌க்க‌ரையில் குப்பைக‌ள் குவிந்து சுகாதார‌ சீர‌ழிவிற்கு கார‌ண‌ம் ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ப‌சீர் அக‌ம‌துதான். மேலும் த‌ற்போது அதிமுக‌ ஆட்சிக்கு கெட்ட‌ பெய‌ர் வாங்கி த‌ர‌ வேண்டும் என்ற‌ எண்ண‌த்துடன் குறிப்பிட்ட இடங்களில் குப்பைக‌ள் கொட்டுவ‌தை சில திமுக பிரமுகர்களின் உதவியுடன் நகராட்சி தலைவர் பசீர் த‌டுத்து வ‌ருகிறார். இத‌னால் கீழ‌க்க‌ரையின் சுகாதார‌ம் கேள்விகுறியாகி உள்ள‌து.



கீழ‌க்க‌ரையை தாலுகாவாக மேம்படுத்துவதற்கான‌ அறிவிப்பை செய‌ல்ப‌டுத்த‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.புதியதாகப் பொறுப்பேற்ற அ.தி.மு.க. அரசு மக்கள் நலப் பணிகளை விரைவாகச் செயல்படுத்தி வருகிறது என்றார். இவ்வாறு அவ‌ர் கூறினார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.