Tuesday, June 21, 2011

சுயஉதவிக்குழு ஆண்டுவிழா



கீழக்கரை, ஜூன் 21:
கீழக்கரையில் குரு டைமண்ட் ஆடவர் சுயஉதவிக்குழு, அன்னை அபிராமி மகளிர் சுயஉதவிக்குழு மற்றும் ஆதிபராசக்தி மகளிர் சுயஉதவிக்குழு மூன்றாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமசாமி தலைமை வகித்தார். விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மகளிர் சுயஉதவிக்குழு மேம்பாட்டு திட்ட மாவட்ட அலுவலர் சுகுமார், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். மாவட்ட திட்ட உதவி அலுவலர் அருண்பிரசாத், ஆடவர் சுயஉதவிக்குழு தலைவர் பாஸ்கரன், செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.