Sunday, June 19, 2011

கீழக்கரை அரசு மருத்துவமனை மீது தாக்குதல்

கீழக்கரை : கீழக்கரை அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் உதவி மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்க்கொண்டிருந்த போது மர்ம ஆசாமிகள் சிலர் கற்களால் தாக்கினர்.இதில் மருத்துவமனையில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.
இது குறித்து பெண் நோயாளி ஒருவர் கூறுகையில் , திடீரென‌ கற்களை வீசியதால் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளோம்.மருத்துவமனை என்று பாராமல் கற்களை வீசிய கல் நெஞ்சக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கற்கள் வீசியவர்கள் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.