Tuesday, June 21, 2011

செல்போன் நிறுவன ஜெனரேட்டரில் தீ









கீழக்கரை, ஜூன் 21:
கீழக்கரை அருகே, தனியார் செல்போன் நிறுவன ஜெனரேட்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.
கீழக்கரை அருகே, காஞ்சிரங்குடியில் தனியார் செல்போன் டவர் உள்ளது. டவருக்கு மின் சப்ளை செய்யும் ஜெனரேட்டரில் நேற்று காலை 10மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஜெனரேட்டர், கேபிள், பேட்டரிகள் முற்றிலும் எரிந்து நாசமாயின.
தகவலின் பேரில் ராமநாதபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சாமிராஜ் தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர். மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.