Tuesday, June 14, 2011

சூதாட்டம் 8 பேர் கைது! கீழக்கரை அதிமுக செயலாளர் தப்பி ஓட்டம்

அதிமுக‌ செய‌லாள‌ர் ராஜேந்திர‌ன்


ப‌றிமுத‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌ கார்க‌ள்






கீழக்கரை: கீழக்கரையில் தனியார் இடத்தில் சூதாட்ட விடுதி நடத்திய அதிமுக பிரமுகர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் அதிமுக செயலாளர் தப்பி ஓடினார்.கீழக்கரை இனஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் நேற்று நள்ளிரவு வள்ளல் சீதக்காதி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.அப்போது அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் சூதாட்ட கிளப் நடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து நடத்திய சோதனையில் சூதாடிக்கொண்டிருந்த கீழக்கரை அதிமுக செயலாளர் ராஜேந்திரன், ராமநாதபுரம் குருசாமி, விருநகரை சேர்ந்த பாலன், முருகன், குமார், முருகன், முனீஸ்வரன், சின்னராஜ் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 53 ஆயிரத்து 150 ரூபாய் ரொக்க பணத்தையும் கைப்பற்றினர். மேலும்அவர்கள் பயன்படுத்திய கார்களையும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து விசாரணை நடந்து கொண்டிருந்தபோது அதிமுக செயலாளர் ராஜேந்திரன் தப்பியோடினார். தப்பியோடிய அதிமுக செயலாளரை கீழக்கரை போலீசார் தேடி வருகின்றனர்.சில‌மாத‌ங்க‌ளுக்கு முன் ந‌டைபெற்ற‌ சோத‌னையிலும் சூதாட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌தாக‌ அதிமுக‌ செய‌லாள‌ர் ராஜேந்திர‌ன் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌து குறிப்பிட‌த‌க்க‌து.

2 comments:

  1. ARAMBITHU VITTARKAL IYA

    ReplyDelete
  2. CHATTAM THAN KADAIYAI SEYYA VIDUVARKALA PRUTHU IRUNTHU PARPOM

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.