Wednesday, March 20, 2013

கீழ‌க்க‌ரையில் ச‌த‌க் க‌ல்லூரியில் ம‌க‌ளிர் தின‌ விழா!

முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி சேடோ நிறுவனம், சமூக மற்றும் மேம்பாட்டு அமைப்புகள் சார்பில், உலக மகளிர் தின விழா, இயக்குனர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா முன்னிலையில், முதல்வர் பேராசிரியர் அலாவுதீன் தலைமையில் நடந்தது.கீழக்கரை சிட்டி யூனியன் வங்கி மேலாளர் சுப்பிரமணியன், கல்வியாளர் ஜீடியத், வக்கீல் ரேணுகா தேவி, ஊராட்சி தலைவர் மனோரஞ்சிதம் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் யோசுவா, தொகுத்து வழங்கினார்.

சித்தார்கோட்டை ஜெயிலானி மின்னியியல் இறுதியாண்டு மாணவி முத்து நாச்சியார், கல்வியாண்டின் சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்ப‌டு க‌வுர‌விக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

மகளிர் முன்னேற்றத்திற்கு சிறந்த பணியாற்றிய மண்டபம் முகாம் கனகப்பிரியா, சித்தார்கோட்டை ஜெய்லானி ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

 சுயஉதவி குழுக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக, நான்கு மகளிர் மன்றங்களுக்கு, தலா 3 லட்ச ரூபாய் கடன் வழங்கப்பட்டது. மத்திய அரசு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் பல்வேறு விரிவாக்க பயிற்சி முடித்த பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சேடோ திட்ட அதிகாரி இளமுருகு, மகளிர் மேம்பாட்டு அமைப்பின் மேலாளர் முனைச்செல்வி செய்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.