Friday, June 22, 2012

கீழக்கரையில் கல்வி உதவி மற்றும் சங்கத்தின் 3வது ஆண்டு துவக்க விழா!


படத்தை பெரிதாக்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்






கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 3வது ஆண்டு துவக்க விழா மற்றும் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு,புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதன் மூலம் ஏராளமான மாணவ,மாணவிகள் பயன் பெற்றனர்.இந்நிகழ்ச்சியில் கீழக்கரை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் புதிய தலைவரக ஜமால் அசரப் ,துணை தலைவராக சீனி நசுருதீன்,செயலாளராக இஸ்மாயில்,துணை செயலாளராக சீனி,செய்தி தொடர்பாளராக முகைதீன் இப்ராகிம்,ஆலோசகராக சாலிஹ் ஹீசைன் ஆகியோர் நிர்வாகிகளாகவும்
செயற்குழு உறுப்பினராக செய்யது சாகுல் ஹமீது,நிசார்,ஜகுபர் சாதிக்,சுல்தான் செய்யது இப்ராகிம்,யாசுதீன,பயாஸ்,நாசர் முகம்மது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில் நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன்,கவுன்சிலர்கள் அன்வர் அலி,இடிமின்னல் ஹாஜா உள்ளிட்ட‌ ஏராளமானோர் கலந்து கொன்டனர்.





Wednesday, June 20, 2012

கீழக்கரையில் த‌.மு.மு.க சார்பில் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்த‌க‌ங்க‌ள்!




த.மு.மு.க மற்றும் ம.ம.க சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா ஹூசைனியா மகாலில் நடந்தது. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தலைமை வகித்து 250க்கும் அதிகமான‌ மாணவ,மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

கீழக்கரை வர்த்தக அணி செய்லாளர் சலீம் வரவேற்றார்.நகர் தலைவர் செய்யது இப்ராகிம்,பொருளாளர் ஜகுபர் சாதிக், பொருளாளர் சேகு தாவூது சாதிக், மர்றும் ம.ம.க., மாவட்ட செயலாளர் தஸ்பீக் அலி மாவட்ட செயலாளர் அன்வர் அலி, ஒன்றிய தலைவர் ரைஸ் இபுராகிம்,கீழக்கரை நகர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

300க்கும் மேற்பட்டோருக்கு விலையில்லா நோட்டு,புத்தகங்கள்!சேவை இயக்கத்தின் கல்வி சேவை!




கீழக்கரையில் "கீழக்கரை மக்கள் சேவை இயக்கம்" என்ற பொது நல இயக்கம் தொடங்கபட்டு அதன் நிறுவனராக முஜீப் உள்ளார்.

இந்த அமைப்பின் சார்பில் சுமார் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச நோட்டு,புத்தகங்கள் வழங்கப்பட்டது.மேலும் ஒரு சிலருக்கு தலா ரூ5000 ரொக்கம் கல்வி உதவியாக வழங்கப்பட்டது.

இந்நிகழச்சியில் மூர் ஹசனுதீன்,சீனி,எஸ்.டி.பி. பிரமுகர் அப்பாஸ் ஆலிம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து இயக்கத்தின் நிறுவனர் முஜீப் கூறுகையில்,
கீழக்கரை பலரும் மக்கள் நலப்பணிகளை மேறுகொண்டு வருகிறார்கள் அந்தவகையில் நாமும் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் கீழக்கரை மக்கள் சேவை இயக்கம்" என்ற அமைப்பு தொடங்கப்பட்டு பொது நலபணிகளை நடத்தி வருகிறோம். ஏராளமான இளைஞர்கள் இந்த சேவை இயக்கத்திற்கு ஆதரவு தருவதோடு மட்டுமின்றி ஆர்வத்துடன் தங்களையும் இணைத்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்ஷா அல்லா தொடர்ந்து மக்கள் ஆதரவுடன் நகரின் நலனுக்காக பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, June 19, 2012

கீழக்கரைக்கு தரமற்ற புதிய விளக்குகள் என குற்றச்சாட்டு!"முன்பே எச்சரித்தேன்"ந‌க‌ராட்சி த‌லைவ‌ர்!



பட விளக்கம் :-த‌ர‌ம் குறைந்த‌வை என்று குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள தெருக்களில் பொருத்த உள்ள விள‌க்குக‌ள் ம‌ற்றும் உப‌க‌ர‌ண‌ங்க‌ள்

கீழக்கரை நகராட்சியின் 18வது வார்டு கவுன்சிலர் முகைதீன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் கீழ‌க்க‌ரை ந‌க‌ர் முழுவ‌தும் தெரு விள‌க்குக‌ளை சீர் அமைக்க‌ டெண்ட‌ர் விட‌ப்ப‌ட்டு குறைந்த‌ விலைக்கு டெண்ட‌ர் எடுத்த‌ ம‌லானி என்ற‌ நிறுவ‌ன‌த்தால் புதிய‌ தெரு விள‌க்குக‌ள் ச‌ப்ளை செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

ஒப்ப‌ந்த‌ராரால் ச‌ப்ளை செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ விள‌க்குக‌ளும் ,உப‌க‌ர‌ண‌ங்களும் த‌ர‌ம் குறைந்த‌வையாக‌ உள்ளது.எந்த ஒரு பொருளுக்கும் ஐ.எஸ்.ஓ சான்றித‌ழ் இல்லை.என‌வே மாவட்ட கலெக்டராகிய தாங்கள் அவ‌ற்றை திருப்பி அனுப்பி த‌ர‌முள்ள‌ பொருட்க‌ளை ச‌ப்ளை செய்ய‌ நடவடிக்கை எடுக்க‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌த்திற்கு உத்த‌ர‌விட‌ வேண்டும் என‌ கேட்டு கொள்கிறோம் என்று ம‌னுவில் தெரிவித்துள்ளார்.


இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராபிய‌த்துல் காத‌ரியாவிட‌ம் கேட்ட‌ போது,

சென்ற‌ ந‌கராட்சி ம‌ன்ற‌த்தின் கூட்டத்தின் போது இந்த‌ ஒப்ப‌ந்ததார‌ர் மிக‌ குறைந்த‌ விலைக்கு டெண்ட‌ரை கோரியுள்ளார் என‌வே தரமான விளக்குகளை இவர்களால் தர முடியாதது மட்டுமில்லாமல் ச‌‌ரியாக‌ ப‌ணிக‌ளை செய்ய‌ மாட்டார்க‌ள் என எச்சரித்தேன்

ஆனால் இதே க‌வுன்சில‌ர்க‌ள் முகைதீன் இப்ராகிம்,ஜெய‌பிர‌காஷ்,இடிமின்ன‌ல் ஹாஜா உள்ளிட்டோர் க‌டும் எதிர்ப்பு தெரிவித்து மேல் குறிப்பிட்டுள்ள‌ ஒப்ப‌ந்த‌ராருக்குதான் கொடுக்க‌ வேண்டும் என்றார்க‌ள்.நீங்கள் (கீழ‌க்க‌ரைடைம்ஸ்) உள்ளிட்ட‌ ப‌த்திரிக்கையாள‌ர்க‌ள் அனைவ‌ரும் கூட்ட‌த்தில் இருந்தீர்க‌ள் என‌வே நீங்க‌ளும் அந்த‌ நிக‌ழ்ச்சியை அறிவீர்க‌ள். (இது தொடர்பான செய்தியை இதில் காணலாம்) http://keelakaraitimes.blogspot.com/2012/05/blog-post_05.html
த‌ற்போது க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் நான் முன்பு சொன்ன‌தை த‌ற்போது உறுதி ப‌டுத்தியுள்ளார்.
இவர்க‌ளே இந்த‌ ஒப்ப‌ந்த‌தார‌ருக்கு கொடுக்க‌ சொல்லி விட்டு இவ‌ர்க‌ளே இப்போது குறை கூறுகிறார்க‌ள்.ஆனாலும் த‌ர‌ம் குறைந்த‌ விள‌க்குக‌ள் என‌ நிரூப‌ணமானால் க‌டும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌டும் என்றார்.



இது குறித்து முகைதீன் இப்ராகிமிட‌ம் கேள்வி எழுப்பிய‌ போது அவ‌ர் கூறியதாவது,

இவர்களுக்கு டெண்டரை கொடுக்கலாம் என்று நான் வ‌லியுறுத்திய‌து உண்மைதான் ஏனென்றால் குறைந்த‌ விலைக்கு இவ‌ர்க‌ள்தான் கோரியிருந்தார்க‌ள் அதே நேர‌த்தில் த‌ர‌ம் குறைந்த ஹைமாஸ்,சோடியம்,டியூப் லைட்கள் உள்ளிட்ட‌ பொருட்களை இவர்கள் ந‌ம‌தூர் த‌லையில் க‌ட்டுவ‌தை ஏற்க‌ முடியாது.என‌வே இவ‌ர்கள் தரும் பில்லை ந‌க‌ராட்சி அங்கீக‌ரிக்க‌ கூடாது.த‌ர‌ம் குறைந்த‌ பொருட்க‌ளை ச‌ப்ளை செய்த‌ இந்த‌ நிறுவ‌ன‌த்தின் பில்லை எவ்வித‌ இடைஞ‌ச‌லும் இல்லாம‌ல் பாஸ் செய்வ‌த‌ற்கு ந‌க‌ராட்சியின் முக்கிய‌ பொறுப்பில் இருக்கும் அதிகாரி ல‌ட்ச‌க்க‌ண‌க்கில் ல‌ஞ்ச‌ம் வாங்கியிருப்பாக‌ ச‌ந்தேகம் உள்ளது.விரைவில் உண்மையை வெளி கொண்டு வ‌ருவோம்.எனவேதான் க‌லெக்ட‌ர் வ‌ரை புகார் தெரிவித்துள்ளேன் என்றார்.

கீழ‌க்க‌ரையில் சி.எஸ்.ஐ. பள்ளி அருகே க‌ழிவு நீர் கால்வாய் அமைக்க‌ எதிர்ப்பு !!



கீழக்கரை வடக்குதெரு தெரு பகுதியில் கழிவு நீர் வாய்கால் கட்டுவதற்கு நகராட்சி மூலம் ரூ 20 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டு அப்பகுதியில் சிமெண்ட் கால்வாய்கள் அமைப்பதற்கு சாலையோரங்களில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர்,கீழக்கரை நகராட்சி தலைவர்,கமிஷனர்,பள்ளி கல்வித்துறை இயக்குநர்,ஆகியோருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

அம்மனுவில்,
இப்பகுதியில் சி.எஸ்.ஐ.தூய பேதுரு ஆலயமும்
அதன் வளாகத்தினுள் 200 ஆண்டுகளுக்கு பழமையான சி.எஸ்.ஐ நடுநிலை பள்ளியும் உள்ளது இந்த இடத்தை சுற்றி பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களும்,பள்ளி வரும் மாணவ,மாணவியரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள்.
மேலும் ஆலயத்தின் சுற்று சுவரை ஒட்டி கால்வாய் அமைம‌ப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டிருப்பதால் சுற்றுசுவர் இடிந்து விழும் நிலை உள்ளது.

மேலும் ப‌ள்ள‌ம் தோண்டும் ப‌குதியில் குடிநீர் பைப் புதைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.இத‌னால் க‌ழிவுநீர் குடிநீருட‌ன் க‌லப்ப‌த‌ற்கு வாய்ப்புள்ள‌து.ப‌ள்ளமான‌ ப‌குதியாக‌ இருப்ப‌தால் இங்கிருந்து கால்வாய் வ‌ழியாக‌ க‌ழிவுநீர் வெளியேற‌ வாய்ப்பில்லை.என‌வே ம‌க்க‌ள் வ‌ரிப்ப‌ணம் வீணாவ‌தை த‌டுத்து நிறுத்த‌ வேண்டும் என்று சபையின் குரு தேவாதாஸ் ராஜன் பாபு ம‌னுவில் தெரிவித்துள்ளார்.

காலமானார்கள் (வபாத்) அறிவிப்பு ! பழைய குத்பா பள்ளி தெருவை சேர்ந்த....



வஃபாத்து அறிவிப்பு.....கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவை சார்ந்த ஜனாப் M.K.M. அமீர் அலி (கல்கத்தா)அவர்களின் மனைவியும், அ.சபீர் அலி ( EMCO - Abu Dhabi), அ.கமால் ரியாசத் (கல்கத்தா), அ. அஹ்மத் அஜீம் (Western Auto - Dubai) ஆகியோரின் தாயாரும், O.S.N. அமானுல்லா (ex. ETA Melco - Dubai) அவர்களின் சகோதரியும் ,அய்மான் கல்லூரி செயலாளர் K. செய்யது ஜாஃபர் அவர்களின் சம்பந்தியுமான ஹாஜியானி.O.S.N. நூர்ஜஹான் பேகம் அவர்கள் இன்று காலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.... இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

த‌க‌வ‌ல்:-அஹமது குத்புதீன் ராஜா

Monday, June 18, 2012

கீழக்கரையில் டெங்கு!நகராட்சி,சுகாதாரத்துறை மெத்தனமாக உள்ளதாக கலெக்டரிடம் புகார்



நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை மெத்தனமாக இருப்பதாகவும் நடவடிக்கை எடுக்க கோரியும், 18வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இப்ராகீம் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது,

கீழ‌க்க‌ரை ந‌க‌ரின் ப‌ல‌ இட‌ங்க‌ளில் த‌மிழ‌க‌த்தை உலுக்க்கி வ‌ரும் டெங்கு ப‌ர‌வுகிற‌து.நமதூரை சேர்ந்த குழந்தைகள் உள்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் சிலருக்கு காய்ச்சல் தீவிரமாகி மதுரை மருத்துவமானையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இத‌னை த‌டுக்க‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டிய‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌மும்,சுகாதார‌த்துறையும் டெங்கு காய்ச்ச‌ல் ப‌ரவாம‌ல் த‌டுப்ப‌த‌ற்குறிய‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை முடுக்கி விடாம‌ல் மெத்த‌ன‌ம் காட்டுகிற‌து.


க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளுக்கு முன் ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் ம‌ற்று சுகாதார‌த்துறை இணைந்து ந‌க‌ர்ம‌ன்ற‌த்தில் டெங்கு காய்ச்ச‌ல் த‌டுப்பு ச‌ம்ப‌ந்த‌மாக‌ ந‌க‌ர்ம‌ன்ற‌ பிர‌திநிதிக‌ள்,பொதும‌க்க‌ள் முன்னிலையில் கூட்ட‌ம் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு ஆலோச‌னை பெற‌ப்ப‌ட்டது.குறிப்பாக‌ ப‌ழுது அடைந்து இருக்கும் கொசு புகை ம‌ருந்து அடிக்கும் இய‌ந்திர‌த்தை இது வ‌ரை ச‌ரி செய்யாம‌லும்,கூடுத‌ல் புகை ம‌ருந்து அடிக்கும் இய‌ந்திர‌ம் ந‌க‌ராட்சி சார்பாக‌ வாங்குவ‌தில் இது வ‌ரை மெத்த‌ன‌ம் காட்டி வ‌ருகிற‌து.

எனவே ந‌க‌ரில் ப‌ர‌வும் டெங்கு காய்ச்ச‌லை த‌டுக்க‌ போர்கால‌ அடிப்ப‌டையில் ந‌ட‌வ‌டிக்கை மேற்கொண்டு ந‌கராட்சி நிர்வாக‌த்துக்கு விரைவாக‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ உத்த‌ர‌விட‌ வேண்டும். இவ்வாறு புகார் ம‌னுவில் கூற‌ப்ப‌ட்டுள்ள‌து.

இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காதரியா த‌ர‌ப்பில் கேட்ட‌போது ,

ந‌க‌ரின் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் சுகாதார‌ம் பேணுவ‌த‌ற்கும்,டெங்கு காய்ச்சலை பரவுவதை தடுப்பதற்கு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.எனவே இவ‌ரின் குற்ற‌ச்சாட்டில் உண்மையில்லை.ஏதாவ‌து புகார் சொல்ல‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌
இது போன்ற‌ புகார்க‌ளை அவ‌ர் தெரிவித்து வ‌ருகிறார்.







.












கீழக்கரையில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கும் பணி துவங்கியது !



கீழக்கரை நகரின் முக்கிய இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்படும் என்று நகராட்சி தலைவர் அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் அதற்கான பணிகள் துவங்கியது.அறிவிக்கப்பட்ட இடங்களில் ஒரு பகுதியான‌ தெற்குதெரு முஸ்லீம் பொதுநல சங்கம் அருகில் கம்பம் நடுவதற்கு குழி வெட்டப்பட்டு இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தகவல் : ஹனீப் சூபியான்

கீழக்கரை யூசுப்சுலைஹா மருத்துவமனையில் இலவசமகப்பேறு ஆலோசனை முகாம்!




கீழக்கரை யூசுப்சுலைஹா மருத்துவமனை மற்றும் ராகவேந்திரா மருத்துவமனை இணைந்து நடத்திய தம்பதியருக்கு மகப்பேறு சம்பந்தமாக‌ இலவச ஆலோசனை மற்றும் மருத்துவ முகாம் யூசுப்சுலைகா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா தலைமை வகித்தார்.யூசுப் சுலைஹா மருத்துவமனை இயக்குநர் செய்யது அப்துல் காதர் முன்னிலை வகித்தார். இதில் மதுரை ராவேந்தர் மருத்துவர்கள் முருகன் தலைமையில் லதா,குர்சித் பானு,பியூலா,அழகம்மை ஆகியோர் கொண்ட குழு மருத்துவ முகாமில் கலந்து கொண்டோருக்கு ஆலோசனையும் சிகிச்சையும் அளித்தனர்.

Sunday, June 17, 2012

தொடரும் வெற்றி !கீழக்கரை மூர் அணி சாதனை ! மாநில அளவிலான போட்டிக்கு தகுதி !




தமிழக‌ முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஒவ்வொரு மாவட்ட அளவிலும், வாலிபால் , கூடைப்பந்து பல் வேறு போட்டிகள் நடைபெற்றது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் சேதுபதி -சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து விளையாட்டு அணிகள் கலந்து கொண்டனர்.

இங்கு நடைபெற்ற‌ வாலிபால் போட்டியில் கீழக்கரை மூர் அணி பங்கு பெற்று இறுதி போட்டியில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. மேலும் விரைவில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக‌ அவ்வணியின் நிர்வாகி ஹசனுதீன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் கூடைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு இறுதி போட்டியில் பங்கு பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.


மேலும் ஹசனுதீன் கூறியதாவது,

பல ஆண்டு காலமாக நடத்தப்பட்டு வரும் மூர் விளையாட்டு அணி நமதூர் இளைஞர்களின் விளையாட்டு திறமைகளை வெளி கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டு இன்று அதில் வெற்றியும் கண்டுள்ளது. இன்று வாலிபால் மற்றும் கூடைப்பந்து விளையாட்டில் நமதூர் இளைஞர்கள் மாநில அளவில் பேசப்படும் வீரர்களாக உருவாகியுள்ளனர்.
இந்த இரண்டு மாத கால் இடைவெளியில் மூன்றுக்கும் மேற்பட்ட போட்டிகளிகளில் கோப்பையை வென்றுள்ளோம்.
நமது அணி வீரர்கள் மக்களாகிய‌ உங்கள் அனைவரின் ஆதரவுடனும்,வாழ்த்துக்களுடன் மாநில அளவில் வெற்றி பெறுவார்கள் என நம்பிக்கையுட உள்ளோம்.எல்லா புகழு எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே என்றார்..

சமீபத்தில் மாவட்ட அளவிலான போட்டியில் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடதக்கது.

Saturday, June 16, 2012

கீழக்கரையில் 5 இடங்களில் புதிய சோடியம் விளக்குகள்! நகராட்சி முடிவு!


கீழக்கரை நகரின் முக்கிய இடங்களில் 60அடி உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் கீழக்கரை புது பஸ் நிலையம் தெற்குத் தெரு கட்டாலிம்ஷா பங்களா அருகில், பழைய கஸ்டம்ஸ் அலுவலகம் அருகில் உள்ளிட்ட‌ 5 இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்க தீர்மானிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

உய‌ர்கோபுர‌ம் மின்விள‌க்குக‌ள் அமைய‌விருக்கும் இட‌ங்க‌ளை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா நேரில் சென்று பார்வையிட்டார்.

வாடகை பாக்கி !கடைகளுக்கு சீல்!கீழக்கரை நகராட்சி அதிரடி!


கமிஷனர் முஜிபுர் ரஹ்மான்

கீழக்கரை நகராட்சிக்கு பல ஆண்டுகளாக ரூ.2 லட்சம் வாடகை செலுத்தாதது மற்றும், கடையை கிட்டங்கியாக பயன்படுத்த வேறு ஒருவருக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக, ஐந்து கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கீழக்கரை பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த நகர்ப்புற கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ஒன்பது கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் மறவர் தெரு எம்.சங்கரன் இரு கடைகளுக்கு ரூ.78 ஆயிரத்து 524, கே.காசிநாதன் ஒரு கடைக்கு 75 ஆயிரத்து 230, கோகுல் நகர் பி.தினகரன் ஒரு கடைக்கு 64 ஆயிரத்து 230 ரூபா வாடகை பாக்கி வைத்திருந்தனர். பல ஆண்டுகளாக வாடகை பாக்கி செலுத்தாததால் இவர்களது கடைகளுக்கு கமிஷனர் முஜிபுர் ரஹ்மான் உத்தரவுபடி துப்புரவு ஆய்வாளர் ரவி சங்கர்,அலுவலர்கள் கார்த்திக்,மனோகரன் மற்றும் நகராட்சி ஊழியர்கள், சீல் வைத்து பூட்டு போட்டனர்
.
மாற்று திறனாளி கே.ராமமூர்த்திக்கு வழங்கப்பட்ட எஸ்.டி.டி., பூத் கடை, வேறு நபருக்கு வாடகைக்கு விட்டு கிட்டங்கியாக பயன்படுத்தப்பட்டதால் இந்த கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.

கமிஷனர் முஜிபுர் ரஹ்மான் கூறியதாவது,
கீழக்கரை நகராட்சிக்கு சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் பாக்கி அதிகம் உள்ளது. இதில் முதல் பத்து இடத்தில் உள்ளவர்கள் பெயர்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். வரிபாக்கி செலுத்தாதவர்களின் வீட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும், என்றார்.

Friday, June 15, 2012

கீழ‌க்க‌ரையில் ஆட்ட‌ம் காண‌ வைக்கும் ஆட்டோ க‌ட்ட‌ண‌ம்! முறைபடுத்த கோரிக்கை !


கீழ‌க்க‌ரையில் நூற்றுக்கணக்கான வாடகை ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில் பெட்ரோல் விலை உய‌ர்வை கார‌ண‌ம் காட்டி தாறுமாறாக‌ வாட‌கையை உய‌ர்த்தி விட்ட‌தாக‌ குற்ற‌ஞ்சாட்டுகின்ற‌ன‌ர்.



இது குறித்து கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் செய்ய‌து இப்ராகிம் கூறுகையில்,

கீழ‌க்க‌ரையில் குறைந்த‌ப‌ட்ச‌ வாட‌கையாக‌ ரூ 25லிருந்து ரூ30 வ‌ரை பெற்று கொண்டிருந்த‌ ஆட்டோ ஓட்டுந‌ர்க‌ள் த‌ற்போது மினிம‌ம் வாட‌கை ரூ40 கேட்கிறார்க‌ள்.இத‌னால் ஆட்டோவில் ப‌யனிப்ப‌வ‌ர்க‌ள் க‌டும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்க‌ள்.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5 உயர்த்தப்பட்டுள்ளது என்றால் அதற்கு ஏற்றவாறு நியாயமான அளவு வாடகையை உயர்த்தி கொள்ளலாம்.அதை விட்டு மலை அளவு வாடகையை உயர்த்துவது ஏற்கதக்கதல்ல மேலும் எவ்வ‌ள‌வு உயர்த்தினாலும் கீழ‌க்க‌ரை மக்கள் கேட்கும் வாடைகையை த‌ருவார்க‌ள் என்ற‌ ஆட்டோ டிரைவ‌ர்க‌ளின் எண்ண‌ ஓட்ட‌மே இத‌ற்கு கார‌ண‌ம்.இக்க‌ட்ட‌ண‌ உய‌ர்வை நாம் ஏற்க‌ கூடாது.

மேலும் ந‌‌க‌ர் முழுவதும் பெய‌ர‌ள‌வுக்குத்தான் ஆட்டோவில் மீட்ட‌ர் பொருத்த‌ப்ப‌ட்டுள்ள‌து ஆனால் யாரும் மீட்ட‌ரை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தில்லை. கீழ‌க்க‌ரையில் ஆட்டோ க‌ட்ட‌ண‌ங்களை முறைப்ப‌டுத்த‌ப‌டுத்தி‌ ந‌டைமுறை ப‌டுத்த‌ வேண்டும்.

இது குறித்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் கேட்ட‌ போது,

நான் மினிமம் ரூ40 வாங்குவதில்லை.ஆனால் பெட்ரோல் விலையை உயர்த்தியதால் மிகவும் கஷ்டப்படுகிறோம். கூடுதலாக கேட்க வேண்டிய நிலை உள்ளது.
சாலைகள் மோசமாக உள்ளதால் ஆட்டோக்களும் அடிக்கடி பழுதடைகிறது.
ஆட்டோ வாடகை கட்டணம் ரூ.150, பெட்ரோலுக்கு 200 என ஒரு நாளைக்கு ரூ.350 செலவாகிறது.தினமும் ரூ.500-க்காவது ஓட்ட வேண்டும். ஆனால் அவ்வளவு வருமானம் வருவதில்லை.எங்க‌ளுடைய‌ பிர‌ச்ச‌னையையும் ப‌ய‌ணிக‌ள் க‌வ‌னத்தில் கொள‌ள‌ வேன்டும் என்றார்.

அரசு தரப்பில் கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்து கிழ‌க்க‌ரையில் அனைத்து த‌ர‌ப்பின‌ரையும் அழைத்து ஆட்டோ ஓட்டுந‌ர்க‌ளை அம‌ர‌ வைத்து பேச்சு வார்த்தை ந‌ட‌த்தி நியாயமான‌ ஆட்டோ க‌ட்ட‌ண‌த்தை நிர்ண‌ய‌ம் செய்வ‌தோடு அதை ந‌டைமுறைப‌டுத்தி இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ப‌தே பொதும‌க்க‌ளின் எதிர்பார்ப்பாக‌ உள்ள‌து.

Thursday, June 14, 2012

சாக்கடையில் சின்னக்கடைதெரு சாலை!அப்பகுதி மக்கள் கவலை !நடவடிக்கைக்கு கோரிக்கை !


படம்:-பிக்ருல் ஆகிர்

பட விளக்கம்;கழிவு நீர் கால்வாய் உடைந்ததால் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு கழிவு நீர் தேங்கி நிற்பதை காணலாம்.

கீழக்கரை சின்னக்கடை தெரு பகுதியில் புதிய சாலை அமைப்பதற்கு பழைய சாலை உடைத்து அகறும் போது கழிவுநீர் வாய்காலையும் உடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சாலையோர‌ பள்ளம் தோண்டி சாக்கடை நீர் ஓடுவதற்கு வழி ஏற்படுத்தினர் ஆனால் கழிவு நீர் அப்பகுதியிலேயே நிற்பதால் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் துர்நாற்றத்தால் பெரும் அவதிப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்ற்னர்.

இது குறித்து கீழக்கரை நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீதுகான் கூறுகையில்,

ஒரு மாதத்திற்கு முன் சின்னகடை தெருவில் சலை அமைக்கும் போது வாய்காலை உடைத்து சென்று விட்டனர்.இதனால் சாக்கடை நீர் ரோடு பகுதியில் ஓடி கொண்டிருக்கிறது. இது குறித்து நகராட்சியில் புகார் செய்தும் இது வரை நடவடிக்கை இல்லை .மேலும் கழிவு நீர் ஓடுவதற்கென்று சாலையோரம் பெரிய பள்ளம் தோண்டியிருப்பதால் வீடுகளில்லுள்ளோர் அதை கடந்து செல்வது பெரும் சிரமமாக உள்ளது. மேலும் இதனால் 100க்கும் அதிகமான தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.
என‌வே ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் உடைக்க‌ப்ப‌ட்ட‌ க‌ழிவுநீர் கால்வாயை ச‌ரி செய்து த‌ர‌ வேண்டும் என்றார்.

Wednesday, June 13, 2012

எக்ஸ்னோரா இணைந்து கீழக்கரை பள்ளிகளில் சுற்றுசூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!




கீழக்கரையில் சுற்று சூழல் குறித்து அனைத்து பள்ளி மாணவ,மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவதற்கு தொண்டு நிறுவனமான வெல்பேர் அசோசியேசன் மற்றும் எக்ஸ்னோரா தொடடு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்த‌ முடிவெடுத்த‌தின் பேரில்,

தொடக்கமாக கீழ‌க்க‌ரை ஹ‌மீதியா பெண்க‌ள் மேல்நிலைப்ப‌ள்ளி ஆசிரிய‌ர் ஞானக‌லாவ‌தி தலைமையில் ந‌டைபெற்ற‌து. வெல்பேர் அசோசியேச‌ன் மேலாள‌ர் அப்துல் அஜீஸ்,எக்ஸ்னோரா அமைப்பின் ம‌க்கும் குப்பை ம‌க்காத‌ குப்பை த‌யாரிப்பு மேலாள‌ர் த‌ணிகாசெல்வ‌ம் முன்னிலை வ‌கித்த‌ன‌ர்.

இது க்குறித்து எக்ஸ்னோரா தொழில்நுட்ப‌ மேலாள‌ர் த‌ணிகாச்ச‌ல‌ம் பேசுகையில்,
,
கீழ‌க்க‌ரையில் ம‌க்கும் குப்பை ,ம‌க்காத‌ குப்பைக‌ளை பிரித்து போடுவ‌த‌ற்கு அனைவ‌ருக்கும் விழிப்புண‌ர்வு ஏற்ப‌டும் வ‌கையில் தொடக்க முயற்சியாக‌ மேல‌த்தெரு ம‌ற்று அத‌ன் சுற்று ப‌குதிகளில் உள்ள‌ வீடுக‌ளில் ச‌லுகை விலையில் வீட்டுக்கு இர‌ண்டு வாளிக‌ள் வீத‌ம் சுமார் 1500 வீடுக‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌ட்டு ம‌க்கும்குப்பை,ம‌க்காத‌ குப்பை என்று பிரித்தெடுக்க்ப்ப‌டுகிற‌து.இவை ம‌றுசுழ‌ற்சி செய்ய‌ப்ப‌ட்டு உர‌மாக்குவ‌த‌ற்கான‌ ஏற்பாடுக‌ள் ந‌டைபெற்று வ‌ருகிற‌து.இது குறித்து கீழ‌க்க‌ரை ம‌க்க‌ள் அனைவ‌ரும் ஒத்துழைத்து கீழ‌க்க‌ரை ந‌க‌ரை சுகாதாரமான‌ ந‌கராக்குவோம் இவ்வாறு பேசினார்.

கீழக்கரையில் 5நாட்கள் மட்டுமே கட் அவுட் மற்றும் விளம்பர‌ பலகைகளுக்கு அனுமதி !


பைல் (பழைய) படம் கீழக்கரையில் கடந்த தேர்தலின் போது அகற்றப்பட்ட விளம்பர பதாகைகள்

கீழக்கரை காவல் நிலையத்தில் காவல்துறை ஆய்வாளர் இளங்கோவன் , நகராட்சித் தலைவர் ராவியத்துல் காதரியா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில், கீழக்கரை நகரின் பல்வேறு தரப்பினர
கலந்து கொண்டனர்.

அனைவரின் கருத்துகளும் பபரிசீலிக்கப்பட்டு கூட்டத்தில் கீழ் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது

கீழக்கரையில் பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினரால் நடத்தப்படும் பொதுகூட்டங்கள் புதிய பேருந்து நிலையம் அருகே மட்டும்தான் நடத்தி கொள்ள வேண்டும் வேறு எங்கும் நடைபெறகூடாது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், மணிக்கணக்கில் பொதுக்கூட்டம் போல் நடக்கிறது. இதை தடுக்கும் வகையில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் அதிகபட்சமாக 30 நிமிடங்கள் பிரசாரம் செய்யலாம். விதி மீறுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும்

கீழக்கரை நகராட்சி பகுதியில் அனுமதியின்றி பிளக்ஸ்போர்டுகள், விளம்பர தட்டிகள் வைப்பது தடை செய்யப்படுவதாகவும்.விளம்பர பலகைகளை நிறுவ‌ விரும்புவோர் நகராட்சியிடம் அனுமதிபெற்ற பிறகே நிறுவ‌ வேண்டும். அவ்வாறு அனுமதிபெற்ற பின் வைக்கப்படும் போர்டுகள் 5 நாட்களுக்குள் அகற்றப்பட்டுவிட வேண்டும். அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள அனைத்து பிளக்ஸ்போர்டுகளையும் உடனடியாக அகற்றி கொள்ளவேண்டும்.

அகற்றப்படாவிட்டால் நகராட்சி மூலம் அவை அப்புறப்படுத்தப்படுவதுடன், அதற்கான செலவுத்தொகை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். இவ்வாறு அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது

Tuesday, June 12, 2012

காலமானார்கள் (வபாத்) அறிவிப்பு ! கிழக்குதெரு ஜமாத்தை சேர்ந்த....




கீழக்கரை கிழக்குத் தெரு ஜமாத்தை சேர்ந்த பருத்திக்காரத் தெரு மர்ஹூம். ஜனாப். (டிரைவர்) M. முஹம்மது முஹைதீன் அவர்களின் மனைவியும், ஜனாப். M.M.ஹபீப் ரஹ்மான், ஜனாப். M.M.இபுராஹீம் சாஹிபு, ஜனாப். M.M.முஹம்மது ரபீக், ஜனாபா. M.M.தமீமுன் நிஷா, ஜனாபா. M.M.பவுசுல், M.M.அமீர் ஷாஜகான், M.M.முஹம்மது நூஹு ஆகியோர்களின் தாயாரும், ஜனாப். A.M.D.ஹபீப் முஹம்மது மன்சூர், ஜனாப். A.M.D.முஹரதுல்லா சாகிபு, ஜனாபா.AM.D. சபர் நிசா பீவி, ஜனாபா. A.M.D.ஐனுன் பஸீரா பானு, ஜனாப். A.M.D.செய்யது முஹம்மது, ஜனாப். A.M.D.முஹம்மது சாலிஹ் ஹுசைன், ஆகியோர்களின் மாமியுமாகிய 'ரஹ்மத்துல் குபுரா' அவர்கள் இன்று (12.06.2012) மதியம் சுமார் 3.30 மணியளவில் வாபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (13.06.2012) காலை 10 மணியளவில் சேகு அப்பா பள்ளி மைய வாடியில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


தொடர்புக்கு :

ஜனாப். M.M.முஹம்மது ரபீக் - 0091 9629088961

ஜனாப். A.M.D. முஹம்மது சாலிஹ் ஹுசைன் - 0091 9791742074

-

கீழக்கரை,ஏர்வாடி பகுதியில் அமைச்சர்கள்!டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு கோரிக்கை !


ச‌த‌க் க‌ல்லூரியில் அமைச்ச‌ர்க‌ள்

கீழ‌க்க‌ரை ம‌ற்றும் ஏர்வாடி த‌ர்ஹாவுக்கு வ‌ருகை த‌ந்த‌ அமைச்ச‌ர்க‌ள் சுந்த‌ராஜ‌ன் ம‌ற்றும் அமைச்சர் முகம்மது ஜான் ஆகியோர் பல் வேறு இடங்களுக்கு சென்று கலந்தாய்வு செய்தனர்.

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராபிய‌த்துல் காத‌ரியா உள்ளிட்டோர் அமைச்ச‌ர்க‌ளை ச‌ந்தித்து வ‌ர‌வேற்ற‌ன‌ர்.

கீழக்கரையில் பழைய குத்பா பள்ளி,கடற்கரை பள்ளி,மேலத்தெரு புதுபள்ளி,அரூசியா தைக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.

அவருடன் நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன்,கவுன்சிலர்கள் அன்வர் அலி,முகைதீன் இப்ராகிம், பாவா செய்யது கருனை முன்னாள் நகர செயலாளர் இம்பாலா ஹீசைன்,உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

மேலும் முகம்மது சதக் அறக்கட்டளை நிர்வாகத்தில் நடபெறும் கல்லூரிகளுக்கு சென்ற அமைச்சர்கள் கல்லூரி தாளாளர் யூசுப் சாகிப்,இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துலா,மற்றும் கல்லூரி முதல்வர்கள் அலாவுதீன்,முகம்மது ஜகாபர் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.அமைச்சர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

அதே போல் ஏர்வாடி தர்காவிற்கு சென்ற அமைச்சர்களிடம் ஹக்தார் நிர்வாகிகள் ஏர்வாடி தர்காவில் மன நல காப்பகம் அமைக்க கோரிக்கை விடுத்தனர்.

பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரபடுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.

அமைச்சர் முகம்மது ஜான் அளித்த‌ பேட்டியில்,

கடந்தாண்டு பள்ளிவாசல்கள் புனரமைப்பதற்கு முதல்வர் 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினார். நடப்பாண்டில் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பிற்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்தவர்களுக்கு கடந்தாண்டு 28 விடுதிகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது இப்பணி முடியும் தருவாயில் உள்ளது. இந்தாண்டு மேலும் 26 விடுதிகள் புதிதாக கட்டப்படவுள்ளன. கடந்தாண்டு சிறுபான்மையினருக்கு மூன்று விடுதிகள் ஒதுக்கப்பட்டன. அதேபோல், இந்தாண்டும் ஒதுக்கப்படும். கீழக்கரையில் வள்ளல் சீதக்காதிக்கு நினைவிடம் உள்ளது. நினைவு மண்டபம் கட்ட, முதல்வரிடம் வலியுறுத்துவேன், என்றார்.

Monday, June 11, 2012

100க்கும்மேற்ப‌ட்ட‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு நாசா அமைப்பின் கோடைகால‌ ப‌யிற்சி முகாம்!



கீழக்கரை வடக்குதெரு நாஸா சமூக நல அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட‌ இஸ்லாமிய மார்க்க வழியில் கடைபிடிக்க வேண்டிய‌ ஒழுக்க‌ நெறிகள்,குர்ஆன் ஓதுவ‌து,ஹ‌தீஸ்க‌ளின் விள‌க்க‌ம்,உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ப‌யிற்சிக‌ள் உள்ள‌ட‌ங்கிய‌ கோடைகால இஸ்லாமிய பயிற்சி முகாம் கடந்த 08/05/2012 முதல் 24/05/2012 வரை 15 நாட்கள் நடைபெற்றது.இவ்வகுப்பில் 108 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்ற‌னர்.

மாணவர்களுடைய வயது வரம்புகளின் அடிப்படையில் மூன்று வகுப்பறைகளாக
பிரிக்கப்பட்டு தினசரி மூன்று வகுப்புகள் காலை 10:30 மணி முதல் முற்பகல் 12:30 மணி வரை இடையே 10 நிமிட இடைவெளியுடன் நடத்தப்பட்டது.


தினமும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.மின்சார தடையில்லாமல் மாணவர்களுக்கு கற்று கொடுக்க ஜெனரெட்டர் வசதி செய்யப்பட்டிருந்தது.இப்பயிற்சியின் இறுதியில் கிராத் ஓதுதல் மற்றும் மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்த‌ கேள்வி- பதில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பும் நடைபெற்றது.

ஒவ்வொரு வகுப்பிலுமிருந்து முறையாக வருகைபதிவு பெற்ற மாணவர்கள், இறுதி தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்றவர்கள் ஆகியோருக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு பரிசுகளும் சிறப்பாக வழங்கப்பட்டது. பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட அணைத்து மாணவர்களுக்கும் சான்றிதல் மற்றும் நினைவு பரிசாக இஸ்லாமிய புத்தகம் "அன்றாட வாழ்வில் 1000 சுன்னத்துக்கள்" வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய உதவிய அனைவருக்கும் நாஸா சமூக நல அமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் கூறியதாவது,

எவ்வித கட்டணமும் இல்லாமல் கோடைகால பயிற்சி வகுப்பு எங்களின் பிள்ளைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.இந்நிகழ்ச்சியை நடத்திய நாஸா அமைப்பினருக்கு எங்களது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.அடுத்த முறை மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

Sunday, June 10, 2012

கீழக்கரையில் கல்விக்கான உதவி வழங்கும் நிகழ்ச்சி!



கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை சார்பக மேலத்தெரு அருஸியா தைக்கா வளாகத்தில் கல்விக்கான உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

மக்கள் சேவை அறக்கட்டளையின் நிறுவனர் உமர் அப்துல் காதர் தலைமை வகித்தார். மாவட்ட காஜி சலாஹீதீன் வரவேற்றார்.

நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா,துணை தலைவர் ஹாஜா முகைதீன், ரிபாய்தீன்,ஹமீதியா ஆண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஹசன் இப்ராகிம்,கைராத்துல் ஜலாலியா மேல்நிலை பள்ளி தாளாளர் சாதிக், சமூக நுகர்வோர் இயக்க செயலாளர் தங்கம் ராதாகிருஸ்ணன்,சிராஜீதீன் அகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்நிக‌ழ்ச்சியில் ஏராள‌மான மாண‌வ‌,மாண‌விய‌ருக்கு க‌ல்விக்கான‌ உதவி தொகை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

இதில் க‌வுன்சில‌ர்க‌ள் இடிமின்ன‌ல் ஹாஜா,முகைதீன் இப்ராகிம்,அன்வ‌ர் அலி,,ஜெய‌பிர‌காஷ்,செய்ய‌து பாவா க‌ருணை,சாகுல் ஹ‌மீது ம‌ற்றும் கைராத்துல் ஜ‌லாலியா துவ‌க்க‌ ப‌ள்ளி தாளாள‌ர் செய்ய‌து இப்ராகிம் உள்ளிட்ட‌ ஏராள‌மான‌வ‌ர்க‌ள் க‌லந்து கொண்ட‌ன‌ர்.

Saturday, June 9, 2012

கீழக்கரை வடக்குத்தெரு பகுதியில் சாக்கடை குளம்! பொதும‌க்கள் அவ‌தி !





கீழ‌க்க‌ரை வ‌ட‌க்கு தெரு மணல் மேடு ப‌குதியிலிருந்து பழைய‌ போலீஸ் ஸ்டேச‌ன் செல்லும் வ‌ழியில் சாலையில் சாக்க‌டை குள‌ம் போல் தேங்கி உள்ள‌து. இத‌னால் அப்ப‌குதியில் குடியிருப்ப‌வ‌ர்க‌ளும்,அவ்வ‌ழியே செல்ப‌வ‌ர்க‌ளும் பெரும் அவ‌திக்குள்ளாகிறார்க‌ள்.இதனால் பலரும் நோய் பாதிப்புக்குள்ளக்குவதாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்ப‌குதியை சேர்ந்த‌ உம‌ர் கூறிய‌தாவது, இப்பகுதியில் சாக்கடை நீர் தேக்குவதற்கு தொட்டி உள்ளது.இத்தொட்டி நிரம்பி கழிவு நீர் சாலைக்கு வந்து விடுகிறதுது.ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ இப்பிர‌ச்ச‌னை நீடித்து வ‌ருகிற‌து.அடிக்கடி இப்பிரச்சனை ஏற்படுகிறது.இப்பகுதியில் சாக்கடை நீர் தேங்காமல் நிர‌ந்த‌ர‌ தீர்வு காண்ப‌த‌ற்கு அனுபவம் வாய்ந்த இன்ஜினியர்களை கொண்டு அலோசனை செய்து நிர‌ந்த‌ர‌ தீர்வு காண‌வேண்டும்.இது மட்டுமில்லாமல் சாக்கடையோடு குப்பையும் கலந்து சுகாதார கேடு நிலவுகிறது என்றார்.


இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவியத்துல் காத‌ரியாவிட‌ம் கேட்ட‌ போது,

தாழ்வான அப்பகுதியில் மோட்ட‌ர் மூல‌ம் க‌ழிவு நீர் வேளியேற்ற‌ப‌ப்டுகிற‌து.த‌ற்போது மோட்டார் ப‌ழுத‌டைந்துள்ள‌தால் தொட்டியிலிருநது கழிவு நீர் வெளியேற்றப்படாமல் நிர‌ம்பி வழிந்து சாலையில் வ‌ழிந்தோடுகிற‌து.உட‌ன‌டியாக‌ சீர் செய்ய‌ப்ப‌டும்.மேலும் இத‌ற்கு நிர‌ந்த‌ர‌ தீர்வு காண‌ ஆலோச‌னை செய்ய‌ப்ப‌டும் என்றார்.

மாவட்ட அளவிலான கராத்தே போட்டி கீழக்கரை மாணவர் சாம்பியன் !




ராமநாதபுரத்தில் நடந்த மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர் சதாம் ஹூசைன் சாம்பியன் பட்டம் வென்றார். இவரை பாராட்டி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இபுராகிம் பரிசு வழங்கினார்.
கல்வி அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் முகம்மது காசீம், முகம்மது ஜமால் இபுராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ், தலைமை ஆசிரியர் (ஓய்வு) ஜோசப் சார்த்தோ, நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Friday, June 8, 2012

மதுரையில் சர்வதேச விமான நிலையம் ரத்தா?மத்திய அரசின் அறிவிப்பில் இடம்பெறவில்லை!



படம்: சுந்தர்

பிரதமர் மன்மோகன் சிங் அடிப்படை கட்ட மைப்பு துறை தொடர் பான அமைச்சகங்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன்சிங், புதிதாக நிறைவேற்றப்பட இருக்கும் திட்டங் கள் பற்றி அறிவித்தார். அவர் கூறிய தாவது:-

"சிவில் விமான போக்குவரத்து துறையில் நவி மும்பை, கோவா மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்படும். கோவை, திருச்சி மற்றும் லக்னோ, வாரணாசி, காயா ஆகிய நகரங்களில் சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கப் படும். நடப்பு நிதியாண்டில் டெல்லி மற்றும் சென்னை யில் புதிய விமான சேவை மையங்கள் அமைக்கப்படும். என்றார்


சர்வதேச விமான நிலையம் விரிவாக்கி உருவாக்கும் பிரதமரின் பட்டியலில் திருச்சி, கோவை இடம் பெற்றுள்ளன.மதுரை பட்டியலில் இல்லை இதனால் மதுரையில் சர்வதேச விமான நிலையம் உருவாகும் திட்டம் கானல் நீர்தானா என்று தென் மாவட்டங்களை சேர்ந்த அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தென்மாவட்ட வளர்ச்சிக்காக மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக்க மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்து இருந்தது. இதன் முதற்கட்டமாக சர்வதேச தரத்தில் ரூ.130 கோடியில் டெர்மினல் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இங்கு சுங்கத் துறை வசதியை தொடர்ந்து, மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு படை நியமிக்கப்பட்டதும் சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சர்வதேச விமான நிலையமாகி, ஏர் பஸ் போன்ற பெரிய ரக விமான போக்குவரத்துக்கு விமான ஓடு தளத்தை தற்போதுள்ள 7 ஆயிரத்து 500 அடியில் இருந்து 12 ஆயிரத்து 500 அடியாக விஸ்தரிக்க வேண்டும். இதற்காக 630 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்து தரும்படி விமான ஆணையம் தமிழக அரசிடம் கோரியது. அதன்படி அரசு நில ஆர்ஜித நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு விட்டன. நிலத்தின் உரிமையாளர்களுக்கு அரசு வழங்க வேண்டிய விலை நிர்ணயம் ஆகாததால், நிலம் விமான ஆணையத்திடம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை.

நிலம் ஒப்படைக்கப்பட்டதும், ரிங்ரோட்டை மண்டேலா நகரில் இருந்து சிறிது தூரம் துண்டித்து மாற்றுப் பாதையில் அமைக்கவும் திட்டம் உருவாக்கப்பட்டது.

விரைவில் சர்வதேச விமான நிலையம் கனவு நனவாகும் சூழல் நிலவியது. பயணிகள் விமானம் மட்டுமின்றி சர்வதேச அளவில் சரக்கு விமான போக்குவரத்தும் தொடங்கி தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அதில் தமிழகத்தில் திருச்சி, கோவை இடம் பெற்று மதுரை இடம் பெறாதது இங்கு சர்வதேச விமான நிலையம் உருவாகும் திட்டம் கானல் நீராகி விடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. தென் மாவட்டமே புறக்கணிக்கப்பட்டு விட்டதோ? என்ற எண்ணமும் உருவாகி உள்ளது.


காரணம் என்ன

தமிழகத்தின் 2வது பெரிய நகரம் மதுரைதான். தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக அமைந்துள்ளது. இங்கு சர்வதேச விமான நிலையம் உருவாக்க அனைத்து கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் திடீரென்று மதுரை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு, சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையை விரிவாக்க தமிழக அரசு 630 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்து ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது

இது குறித்து கீழ‌க்க‌ரை த‌ங்க‌ம் ராதாகிருஸ்ணன் கூறுகையில்,
தென் மாவட்டத்தின் தொழில் வ‌ள‌ர்ச்சிக்கு பெரும் உத‌வியாக‌ இருக்கும் என்று எதிர்பார்க்க‌ப்ப‌ட்ட‌ ம‌துரை ச‌ர்வ‌தேச‌ விமான‌ நிலைய‌ம் க‌ன‌வுதான் என்ற‌ நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ள‌து.குறிப்பாக ம்துரையில் சர்வதேச விமான நிலையம் அமைந்தால் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பெரும் பயனடைவர் தென் மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ அனைத்து த‌ர‌ப்பின‌ரும் உட‌ன‌டியாக‌ ம‌துரை ச‌ர்வ‌தேச‌ விமான‌ நிலைய‌ம் அமைக்க‌ ஒருமித்த‌ குர‌ல் எழுப்ப‌ வேண்டும்.ஏற்கென‌வே சேது ச‌முத்திர‌ம் திட்ட‌ம் கிட‌ப்பில் போட‌ப்ப‌ட்டுள்ள‌து. தென் மாவ‌ட்ட‌ங்க‌ள் தொட‌ர்ந்து புற‌க்க‌ணிக்க‌ப்ப‌டுகிறது என்றார்.

.






Thursday, June 7, 2012

கீழக்கரை சின்னக்கடை தெரு பகுதியில் சாலை அமைக்கும் பணி தீவிரம்!


கீழக்கரை நகராட்சி சார்பில் புதிய சாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கியது.

இதனை தொடர்ந்து கீழக்கரை சின்னக்கடை தெருவில் பழைய சாலை பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வாலிபால் போட்டி கீழக்கரை மூர் அணி கோப்பையை வென்றது !ப‌ட்டாசு வெடித்து ம‌கிழ்ச்சி ஆரவாரம்!


மூர் விளையாட்டு அணி

வெற்றிக்கு ம‌கிழ்ச்சி தெரிவிக்கும் வ‌கையில் வ‌ள்ள‌ல் சீத‌க்காதி சாலையில் ப‌ட்டாசு வெடிக்க‌ப்ப‌ட்ட‌து.

ப‌டம்: நன்றி -நெய்னா
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் கீழக்கரை மூர் அணி கோப்பையை கைப்பற்றியது.



கீழக்கரை மூர் விளையாட்டு கிளப்பின் நிர்வாகி ஹசனுதீன் வெளியிட்டுள்ள செய்தியில்,

ராமநாதபுரம் காவல்துறை சார்பில் நடைபெற்ற இப்போட்டிகளில் வாலிபால் இறுதிப்போட்டியில் முகவை அணியை மூர் கிளப் தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது.

அதே போல் கூடைப்பந்து போட்டியில் மூர் கிளப் இறுதி போட்டி வரை இடம் பெற்று இரண்டாமிடத்தை பெற்றது.

வெற்றி பெற்ற ந‌ம‌தூர் அணி வீர‌ர்க‌ளுக்கும் ஆத‌ர‌வு தெரிவித்த‌ அனைவ‌ருக்கும் ந‌ன்றியையும், வாழ்த்துக்க‌ளையும் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இளைஞர்கள் கீழ‌க்கரையில் ப‌ட்டாசு வெடித்து கொண்டாடின‌ர்.

Wednesday, June 6, 2012

கீழக்கரையில் டெங்கு காய்ச்சல்! 7மாத குழந்தை உள்பட‌ 4 பேர் பாதிப்பு !



தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் சூழ்நிலையில் கீழக்கரையிலும் டெங்கு காய்ச்சல் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


கீழக்கரையில் 7 மாத குழந்தை ,8 மற்றும் 10வயது சிறுவன் உள்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கீழக்கரை அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் டெங்கு காய்ச்சல் தொடர்பான பரிசோதனை கீழக்கரை அரசு மருத்துவமனையில் இல்லாததால் காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.


டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மதுரை மருத்துவமனைக்கு சிக்ச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கீழக்கரையில் மேலும் பலர் இக்காய்ச்சலில் பாதிக்கபட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அரசு கீழக்கரையில் உடனடியாக‌ மருத்துவ குழுவை ஏற்படுத்தி தடுப்பு நடவடிக்கை எடுக்க‌ வேண்டும் என்று பொது ம‌க்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.


_________________________________________________________________________
டெங்கு காய்ச்சல் பற்றி டாக்டர். க. இராஜேந்திரன் பதில்கள்

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?

டெங்கு காய்ச்சல் வைரஸ் கிருமியினால் உண்டாகும் நோயாகும். சில சமயங்களில் நோயின் போக்கு தீவிரமாகும் போது மூக்கு, பல்ஈறு மற்றும் தோலிலிருந்து இரத்தம் வடிதல் உண்டாகும். காபி கொட்டை நிறத்தில் வாந்தியோ அல்லது கறுப்பு நிறத்தில் மலமோ வெளியேறும். இதிலிருந்து வயிற்றுக்குடலினுள் இரத்தம் வடிகிறது எனக் கண்டு கொள்ளலாம்.

டெங்கு காய்ச்சல் மற்றும் இரத்தம் வடிதல் இரண்டுமிருப்பதை டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் என்கிறோம். சில சமயம் நோயாளிக்கு டெங்கு ஷாக் வரலாம்.

நான் எப்போது டெங்கு காய்ச்சல்தானா என சந்தேகிக்க வேண்டும்?
•திடீரென்று காய்ச்சல் வரும்போது (103f-105f)
•காய்ச்சலுடன் தலைவலி, கண்களில் பின்புறம் வலி, உடம்பு வலி, தோல் சினைப்பு மற்றும் வாந்தி வருதல், வயிறு வலி, சிறு குழந்தைகளுக்கு வலிப்பும் வரலாம்.
•காய்ச்சல் 5 நாட்களுக்கு மேல் இருத்தல்
•திடீர் திடீரென்று காய்ச்சல் வருதல்.
•காய்ச்சல் வந்தபின் மிகவும் அசதியாக இருத்தல்

காய்ச்சலில் நிறைய வகைகள் உள்ளன. எப்போது டெங்கு காய்ச்சல் என சந்தேகிக்க வேண்டும்?
•கண்களில் பின்புறம் வலி
•தசை வலி
•மூட்டு வலி
•தோலில் சினைப்பு
•வயிறு வலி, வாந்தி

டெங்கு காய்ச்சல் மூட்டுகளையும் பாதிக்கின்ற காரணத்தால் அதனை எலும்பு முறிவு காய்ச்சல் எனவும் கூறலாம்.

டெங்கு காய்ச்சல் நேரிடக் கூடிய நோயாளிக்கும் டெங்கு காய்ச்சல் என சந்தேகிக்கிற நோயாளிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

இரத்த அடர்த்தியின் அளவு டெங்கு காய்ச்சல் உள்ள நோயாளிக்கு குறைவாகவே இருக்கும். நோயாளிக்கு இரத்த சோகை இருந்தால் அவை வேறுபடும்.

டெங்கு காய்ச்சல் வந்த நோயாளிக்கு மீண்டும் அந்த நோய் வர வாய்ப்புகள் உள்ளதா?

வர வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் அந்த வைரஸ் கிருமியை சார்ந்த 4 வகை நோய்க்கிருமிகள் உள்ளன. எனவே ஒரு வகை நோய்க்கிருமியினால் உண்டாகக் கூடிய டெங்கு காய்ச்சல் மறுமுறை வேறு வகை நோய்க்கிருமியினால் உண்டாகும். எனவே ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் ஒருமுறைக்கும் மேல் டெங்கு காய்ச்சல் வரலாம்.

டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த ஏதாவது சோதனைகள் உள்ளதா?

நேரிடையாகவோ (அ) மறைமுகமாகவோ ஆய்வுக் கூடங்களில் டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த முடியும். இந்த ஆய்வுகள் டெங்கு தொற்று நோயை உறுதிப்படுத்துகின்றன. மேலும் சில ஆய்வுகளை உபயோகப்படுத்தியும் டெங்கு காய்ச்சலை உறுதி செய்யலாம். ஆனால் அந்த ஆய்வுக்கூடங்கள் முறையான அனுமதி பெற்ற ஆய்வுக் கூடங்களாக இருக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் எவ்வாறு உண்டாகிறது.

கொசுக்கடியின் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகின்றது. எடீஸ் எஜிப்டி வகை கொசுக்கள் இந்த வகை கொசுக்கள் ஒருவித வெள்ளைநிற உடம்பு மற்றும் கால்களுடன் இருக்கும். இதனை ஒரு பாமரன் கூட கண்டுபிடிக்க இயலும். இந்த வகை கொசுக்கள் நீரில் வசிப்பவை. மற்றும் 100-200 மீ வரை, பறக்கும் தன்மை கொண்டவை. இந்த கொசு, டெங்கு காய்ச்சல் உள்ள நோயாளியின் இரத்தம் உறிஞ்சும்போது டெங்கு வைரஸ் கிருமியினையும் பெற்றுவிடுகிறது.

டெங்கு காய்ச்சல் ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவுமா?

இல்லை. கொசுக்கடியின் மூலமாக மட்டுமே டெங்கு நோய்க்கிருமி பரவுகின்றது.

நோய் தொற்றியபின் டெங்கு காய்ச்சல் எவ்வாறு உண்டாகிறது?

நோய்க்கிருமி தொற்றியவுடன் அவை நிணநீர் நாளங்களில் பெருக்கம் அடைகின்றன. போதிய எண்ணிக்கையில் பெருக்கம் அடைந்தவுடன் அறிகுறிகளை தோற்றுவிக்கின்றன. இது 4 முதல் 6 நாட்களில் அறிகுறிகள் உண்டாகின்றன.

டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவர் நோயாளிபோல் தோற்றமளிக்காமல் இருப்பாரா?

ஆம். சிலருக்கு இது எவ்வித அறிகுறியையும் உண்டாக்குவதில்லை. எல்லோருக்கும் அல்லாமல் 4 முதல் 5 பேருக்கு அறிகுறிகள் இருப்பதில்லை. மேலும் சிலருக்கு சில அறிகுறிகள் மட்டுமே இருக்கும்.


டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவ ஆலோசனை என்ன? இதனை குணப்படுத்த முடியுமா?

டெங்கு காய்ச்சலுக்கென தனியாக மருத்துவ சிகிச்சை இல்லை. தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் இதற்கு உதவாது. பாரசிட்டமால் மருந்து காய்ச்சலுக்கும், மூட்டுவலிக்கும் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆஸ்பிரின், பூரூபென் போன்ற மருந்துகளை தவிர்ப்பதன் மூலம் இரத்தக்கசிவினை தடுக்க இயலும். எனவே மருத்துவர்கள் நோயாளிக்கு மருந்துகளை கொடுக்கும்போது கவனமாக இருத்தல் வேண்டும்.

டெங்கு காய்ச்சலினால் அபாயங்கள் உண்டா?

டெங்கு காய்ச்சலினால் இரத்த குழாய்களுக்கு தீங்கு ஏற்படும். இரத்தக்கசிவு. இரத்த அடர்த்தி குறைதல் முக்கியமான உறுப்புகளில் இரத்தம் வடிதல் ஏற்படும்.

டெங்கு காய்ச்சலினால் இறப்பு உண்டாகுமா?

டெங்கு காய்ச்சலினை சரியான சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும். ஆனால் முறையான சிகிச்சை கொடுக்கவில்லையென்றால் இரத்தக்கசிவு நோய் மற்றும் டெங்கு ஷாக் ஏற்படுவதை தடுக்க இயலாது. சிலர் இறக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே டெங்கு காய்ச்சலினை முறையான சிகிச்சையின் மூலம் ஒரு உயிரினை காப்பாற்ற இயலும்.

டெங்கு நோயாளி எப்போது மருத்துவ உதவிக்கு அணுக வேண்டும்?

டெங்கு இரத்தக்கசிவு நோய் உண்டாகும்போது (அ) டெங்கு ஷாக் இருந்தாலும் காய்ச்சல் வந்து 3 முதல் 5 நாட்களுக்குள் மருத்துவரை அணுக வேண்டும். சிலசமயம் காய்ச்சல் இருக்காமல் உடலின் வெப்பநிலை சாதாரண நிலைக்கு வந்துவிடும். இதனால்தான் காய்ச்சல் சரியாகிவிட்டதாக நாம் தவறாக நினைக்கிறோம். எனவே இந்த சமயம்தான் மிகவும் அபாயகரமானது.

மிகவும் வயிற்றுவலி, வாந்தி எடுத்துக் கொண்டே இருத்தல், சிறு சிறு சிவப்பு (அ) ஊதா நிறத்தில் கொப்பளங்கள் மூக்கில் இரத்தம் வடிதல், ஈறுகளில் மற்றும் கழிவுகளில் இரத்தம் வருதல் இவையெல்லாம் அபாய அறிகுறிகள் ஆகும். எனவே மிகவும் வயிற்றுவலி இருந்தாலோ, வாந்தி தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இரத்தக்கசிவு உறுப்புகளில் வரும்வரை பொருத்திருந்தால் அபாயகரமானதாகும்.



டெங்கு காய்ச்சினால் நீண்டகால பாதிப்புகள் உண்டா?

1-2 வாரங்களில் முழுமையான குணம் அடைந்து வருவார்கள். சிலருக்கு பல வாரங்களுக்கு அசதிகள் இருக்கும்.

டெங்கு வைரஸை பரப்பும் கொசு எங்கு வாழ்கிறது?

இந்த கொசு, எடீஸ் எஜிப்டி இருட்டு இடங்களிலும் வீட்டை சுற்றிலும் வாழ்கிறது. பெண் கொசு தேங்கி கிடக்கும் நீரின் மேற்பரப்பிலும் வீட்டைச் சுற்றிலும் முட்டையிடுகிறது. இந்த முட்டை 10 நாளில் வளர்ச்சியடைந்து லார்வாக்களை உண்டு செய்யும்.

இந்த கொசு உற்பத்தியாவதை எவ்வாறு தவிர்க்கலாம்?
•டெங்கு கொசுக்கள் பகல் நேரங்களில் கடிக்கும். அதிகப்படியாக சூரிய உதயத்தில் இருந்து 2 மணி நேரம் வரையிலும், சூரியன் மறையக் கூடிய மாலை வேளைகளிலும் கடிக்கும்.
•முழுக்கை ஆடைகளையும் நீண்ட ஆடைகளை அணிந்து உடலினை நன்றாக மூடுவதன் மூலம் கொசுக்கடியின தவிர்க்க இயலும்.
•கொசுவலை, கொசுக்களை கொல்லும் காயில் முதலியவற்றை உபயோகிக்கலாம். குழந்தை மற்றும் முதியவர்க்கு உபயோகப் படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.
•கொசுவர்த்தி மற்றும் மின்சார ஆவியாகக் கூடிய மேட்டுகள் உபயோகப்படுத்தலாம்.
•கொசு வலை பகலில் தடுக்க மிகவும் நல்லது. தற்போது மருந்து உபயோகப்படுத்திய கொசுவலைகள் மலேரியா காய்ச்சல் தடுப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன.

டெங்கு நோயாளிக்கு அவற்றைப் பரவச் செய்யாமல் தடுக்க ஏதேனும் அறிவுரை உள்ளதா?

டெங்கு காய்ச்சல் அடுத்தவருக்கு பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த காய்ச்சல் உள்ள நோயாளி கொசுக்களில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும். எனவே கொசு விரட்டியை உபயோகிக்கவேண்டும். கொசுவர்த்தி, காயில்கள் போன்றவைகளையும் உபயோகப்படுத்தலாம். இதன் மூலம் டெங்கு காய்ச்சலை தவிர்க்க முடியும்.

டெங்கு பரவியுள்ள பகுதிக்கு பயணம் செய்பவற்கு ஆலோசனை உண்டா?
பயணத்தை கட்டுப்படுத்த வேண்டியதில்லை. போதிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்களின் சிகிச்சை என்ன?

டெங்கு நோய் இருப்பதாக இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.

நோயின் தன்மையை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

இரத்த அடர்த்தி குறைந்தால் இரத்தம் கொடுக்க வேண்டும். இரத்த அடர்த்தியின் அளவு முன் இருந்ததை விட 20% அதிகரித்தால் இரத்தக் குழாய்களின் மூலம் நீர் சத்தை அதிகரிக்க வேண்டும்.

சிகிச்சையின் போது நோயாளிகள் தவிர்க்க வேண்டியன எவை?

ஆஸ்பிரின் புரூபென், மருந்துகளை சாப்பிடக்கூடாது. இது இரத்தத்திட்டுகளை குறைவு செய்யும். மற்றும் இரத்தக்சிவு உண்டாகும்.

டெங்கு காய்ச்சல் இருப்பதை அறிவிப்பதில் உங்கள் அறிவுரை என்ன?

டெங்கு காய்ச்சல உள்ள நோயாளிகளையும், இருப்பதாக சந்தேகப்படுபவர்களையும் உடனடியாக சுகாதார துறைக்கு அனுப்ப வேண்டும். இரத்தம் சேகரிக்கும்போது, அதனை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை சுகாதார ஆலோசகரின் ஆலோசனை பெற்றபின் செய்ய வேண்டும்.

டெங்கு காய்ச்சலை தடுப்பதில் பொது மக்களின் பங்கு என்ன?

பொது மக்கள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை தவிர்க்க முதலில் கொசு உற்பத்தியினை தடுக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

எனவே கொசுக்கள் பறக்கும் வேகம் மிக குறைவாக இருப்பதினால் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சுற்றியிருக்கும் இடங்களை சுத்தம் செய்வதின் மூலம் கொசுக்கள் நீரில் தேங்குவதை தவிர்க்கலாம்.

மிகவும் முக்கியம் – கொசுக்கள் முட்டையிடும் நீர் தேங்குவதை தடுத்தல்

டெங்கு காய்ச்சல் பெருவாரியாக பரவினால் என்ன செய்ய வேண்டும்?

வீட்டைச் சுற்றியுள்ள நீர் தேங்குவதை தவிர்த்தலே மிகவும் முக்கியமான பணியாகும். கொசு மருந்தை தெளிக்க வேண்டும்.

டெங்கு பொது சுகாதாரத்த்தின் பெரிய பிரச்சினையாக உள்ளதா?

ஆம். கடந்த 1999 மற்றும் 2003 ஆண்டுகளில், டெங்கு காய்ச்சலின் பரிசோதனையில் இரத்தம 1gm அதிகமாகியுள்ளது.

Thanks.thanambikkai.com

Tuesday, June 5, 2012

கொழும்பில் திறக்கப்பட்டுள்ள‌ கீழ‌க்க‌ரை உண‌வு விடுதி !

க‌டையின் நிர்வாகி சித்தீக்,






இல‌ங்கை த‌லைந‌க‌ர‌ம் கொழும்பில் கீழ‌க்க‌ரை ப‌குதி உண‌வுக‌ள் கிடைக்கும் வ‌கையில் 'ஸ்பைஸி' என்ற‌ பெய‌ரில் உணவகம் திறக்கப்பட்டு கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ சித்தீக் அவ‌ர்க‌ளால் நிர்வாக‌ம் செய்ய‌ப்ப‌டுகிற‌து.

கொழும்பின் முக்கிய‌ வீதியான‌ பிரிண்ஸ் தெருவில் திற‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌ இக்க‌டையின் நிர்வாகி சித்தீக் கூறுகையில்,

கொழும்பில் ந‌ம‌தூர் ருசிக்கு ஏற்ற‌வாறு உள்ள‌ உண‌வு விடுதிக‌ள் இங்கு மிக‌வும் அரிதாக‌ இருந்து வ‌ந்த‌து அந்த‌ அடிப்ப‌டையில் கீழக்க‌ரை ப‌குதி வீடுக‌ளில் த‌யாரிக்க‌ப்ப‌டும் உண‌வுகளின் ருசி இங்கு கிடைக்குமாறு உண‌வுக‌ள் ந‌ம் க‌டையில் த‌யார் செய்ய‌ப்ப‌டுகிற‌து.

அல்லாஹ்வின் கிருபையால் க‌டை ஆர‌ம்பித்த‌ குறைந்த‌ கால‌த்தில் ஏராளமானோர் ந‌ம் க‌டையின் உண‌வை விரும்பி உண‌வ‌ருந்த‌ இங்கு வ‌ருகை த‌ருகிறார்க‌ள். வியாபரம் செய்து லாபம் ச‌ம்பாதிப்ப‌தோடு மட்டுமில்லாமல் ந‌ம் ஊரை விட்டு பிரிந்து வ‌ந்துள்ள ந‌ம் ம‌க்க‌ளுக்கு ந‌ம‌தூர் வ‌கை உண‌வுக‌ளை கொடுப்ப‌து ம‌ன‌துக்கு ம‌கிழ்ச்சிய‌ளிக்கிற‌து .கொழும்பு வ‌ரும் ந‌ம் ம‌க்க‌ள் எங்க‌ளின் க‌டைக்கு ஒருமுறை வ‌ந்து செல்ல‌ வேண்டும் என்றார்.

பல்வேறு நாடுகளில் பரவி கிடக்கும் ந‌ம‌தூர் ம‌க்க‌ளின் சுய‌ தொழில்க‌ளை ஊக்க‌ப்ப‌டுத்தும் நோக்க‌த்தில் இதுபோன்ற‌ தொகுப்புக‌ள் அவ்வ‌ப்போது வெளியிட‌ப்ப‌டுகிறது.உங்களின் க‌ட்டுரைக‌ளைkee keelakaraitimes@yahoo.com ல் அனுப்பி த‌ர‌லாம்

Monday, June 4, 2012

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு ! இஸ்லாமியா பள்ளிகள் சாதனை ! 480 மதிப்பெண்கள் பெற்று மாணவி முதலிட‌ம் !



எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியாயின .இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவி ஹபீஷா கீழக்கரை அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

அதே பள்ளி மாணவி வ‌ர்ஷினி 478 மதிப்பெண்கள் பெற்று கீழக்கரை அளவில் 2ம் இடம் பெற்றுள்ளார்.
ஹமீதியா மெட்ரிக் பள்ளி மாணவி ஹாஜரா 477 மதிப்பெண்கள் பெற்று கீழக்கரை அளவில் 3ம் இடம் பெற்றுள்ளார்.


இஸ்லாமியா பள்ளிகள்,தீனியா பள்ளி,
மஹ்தூமியா பள்ளி,ஹமீதியா பெண்கள் பள்ளி ஆகியவை 100 சதவீத தேர்ச்சி சாதனை படைத்துள்ளது.


ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் ஹாஜரா 477/500 அதிக‌ மதிப்பெண்ணாகவும் 94சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது.

ஹமீதியா ஆண்கள் உயர்நிலை பள்ளியில் 417/500 அதிக‌ மதிப்பெண்ணாகவும் 93சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது.


ஹமீதியா பெண்கள் பள்ளியில் 453/500 அதிக‌ மதிப்பெண்ணாகவும் 100சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது.

முஹைதீனியா மெட்ரிக் பள்ளியில் பாத்திமா லூப்னா 464/500 அதிக‌ மதிப்பெண்ணாகவும் 94சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது.

ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலை பள்ளி மாணவர் ஹிக்மத்துல்லா 436 பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்.

மஹ்தூமியா பள்ளியில் 450/500 அதிக‌ மதிப்பெண்ணாகவும் 100சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது.

தீனியா பள்ளியிலும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது

இஸ்லாமியா மெட்ரி பள்ளியில் 85 பேர் தேர்வெழுதி அனைவரும் தேர்வு பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

மாணவி ஹபீஷா 480/500 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.478 மதிப்பெண்கள் பெற்று வ‌ர்ஷினி 2ம் இடம் பெற்றுள்ளார். இஷ்ர‌த் பாத்திமா 476 பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளார்.


இஸ்லாமியா உயர்நிலை பள்ளியில் 62 பேர் தேர்வெழுதி அனைவரும் தேர்வு பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவி பாத்திமா சிபியா 458 பெற்று முதலிடம் பெற்றுள்ளார். முறையே 457 மற்றும் 447 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் ,மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர்.