Saturday, May 21, 2011

கீழக்கரை அரசு கட்டிடத்தில் சமூக விரோத செயல்கள்




கீழக்கரை, மே 21:
கீழக்கரையில் பயன்படுத்தப்படாமல் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில், சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரையின் மையப்பகுதியாக உள்ள வள்ளல் சீதாக்காதி சாலையில், வருவாய்த் துறைக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வருவாய்த் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இயங்கி வந்தது. அதன் பின்னர், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கமாக செயல்பட்டு வந்தது.
கடந்த 5 வருடங்களாக இந்த கட்டிடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. பராமரிப்பு இல்லாமல் பாழடைந்த நிலையில் உள்ள, இந்த கட்டிடத்தை தற்போது குடிமகன்கள் பாராக பயன்படுத்தி வருகின்றனர். கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதிகளை கழிப்பறையும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மேலும் இரவு நேரத்தில் சில சமூக விரோத செயல்களும், இங்கு நடந்து வருவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
சொந்தமாக இந்த இடம் உள்ள நிலையில், கீழக்கரையில் வருவாய்த் துறை அலுவலகம், வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. உடனடியாக இந்த கட்டிடத்தை சீரமைத்து வருவாய்த் துறை அலுவலகத்தை இங்கு மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், �நகரின் மையப்பகுதியில் இந்த கட்டிடம் உள்ளது. இதை விடுத்து வேறு இடத்தில், அதிக வாடகை கொடுத்து வருவாய்த் துறை அலுவலகம் செயல்படுகிறது. 20 ஆண்டுகள் வாடகையாக கொடுத்த பணத்தில் இங்கு புதிய கட்டிடம் கட்டியிருக்கலாம். தற்போது வருவாய்த் துறை அலுவலகம், தனியார் இடத்தில் முதல் மாடியில் உள்ளது. இதனால் அலுவலகத்திற்கு வரும் முதியவர்கள் சிரமப்படுகின்றனர். உடனடியாக இந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டி வருவாய்த் துறை அலுவலகத்தை மாற்ற வேண்டும்� என்று தெரிவித்தனர்.
சமூக ஆர்வலர் இப்ராகிம் கூறுகையில், �இந்த இடத்தில் மின் கட்டண வசூல் மையம் அமைத்தால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்� என்றார்.

3 comments:

  1. kilakarai il ulla anaithu makkalum jadhi faetham intri kural kotuka ventum mukkiyamaka sampantha pattvarkal puthiya MLA
    prop.jawahirulla in kavanththirku kondu sella vendum intha edam mattum illai paliya arasu asspathriku binnallum neraya idam ullthu

    ReplyDelete
  2. ENTHA ARASU EDANGALAI EB PANA VASOOL MAIYAM LIBRARY SUB-REGISTRAR KATATAMKAL KATTA MUYARSHI EDUKALAMAY ENTHA KORIKAI YAI PUDHIYA MLA VAIKIRAN

    ReplyDelete
  3. ENTHA ARASU EDANKALAI EB PANA VASOOL MAIYAM LIBRARY SUB-REGISTRAR KATTATANGAL KATTA MUYARSHI SEYALAMAY * INTHA KORIKAIYAI PUDHIYA MLA AVARKALUKKU SAMARPIKIRAN

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.