Sunday, May 8, 2011

மாணவர் பட்டம் பெற அரசு செலவு ரூ.4 லட்சம்

கீழக்கரை, :
ஒவ்வொரு மாணவரும் பட்டம்பெற, அரசு தலா ரூ.4 லட்சம் வீதம் செலவு செய்வதாக, கீழக்கரையில் நடந்த கல்லூரி விழாவில் அழகப்பா பல்கலை. துணை வேந்தர் சுடலைமுத்து கூறினார்.
கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் பெண்கள் கல்லூரி ஆண்டு விழா சென்ற மாதம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுமையா ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி தாளாளர் ரஹ்மத்துநிஷா தலைமை வகித்தார். கோட்டையூர் சிதம்பரம் செட்டியார் பள்ளி முதல்வர் மஞ்சுவள்ளி மற்றும் சீதக்காதி டிரஸ்ட் செயலாளர் காலித் புகாரி மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அழகப்பா பல்கலை., துணைவேந்தர் சுடலைமுத்து பேசியதாவது:
இந்திய மக்கள் தொகை 121 கோடி பேரில், 60 கோடி பெண்கள். இவர்களில் 30 வயதுக்குட்பட்டவர்கள் 30 கோடி. 2011 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்தவர்களில் 12 சதவீத பெண்களே உயர்கல்வி பெறுகின்றனர். 88 சதவீதம் பேருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.
ஒவ்வொரு தனிப்பட்ட மாணவ, மாணவியர் பட்டம் பெறுவதற்காக அரசு செய்யும் செலவு ரூ.4 லட்சம். பட்டம் பெற்றவுடன் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பணிக்கு அனுப்ப வேண்டும். அவர்களை பணிக்கு அனுப்புவது பணத்துக்காக மட்டுமல்ல தன்னம்பிக்கையை வளர்ப்பதற்காகத்தான். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சீதக்காதி டிரஸ்ட் துணை பொதுமேலாளர் சேக் தாவூத் உள்பட ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.