Tuesday, May 17, 2011

முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா மகன் தற்கொலை

முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா

கீழக்கரை.மே.17.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த, அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகரும்,அதிமுக சிறுபான்மைபிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவின் மகன் முஜ்பூர் ரகுமான் ராமநாதபுரத்தில் பல்பொருள் அங்காடி வைத்திருந்தார்[33]. இவருக்கும், ராமாநதபுரம் ஈசா பள்ளிவாசலை சேர்ந்த ரஹ்மத் நிஷா (24) என்பவருக்கும் கடந்த 2006ல் திருமணம் நடந்தது.


இடையில் குடும்ப பிரச்னைகள் இருந்து வந்த நிலையில்,கடந்த 2010 செப்.,16ல் ரகமத் நிஷா ராமநாதபுரத்தில் உள்ள அன்வர் ராஜாவின் வீட்டில் விஷம் குடித்து கவலைக்கிடமான நிலையில் கிடந்தார். பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு மயக்கமடைந்தார்என்றும் சொல்லப்பட்டது. உடனடியாக அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிறகு, நேற்று ரஹ்மத் நிஷா தற்கொலை செய்து கொண்ட தகவல் அவரது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

வரதட்சணை தராததால் ரகமத் அடித்துக் கொல்லப்பட்டதாக ரஹ்மத் நிஷாவின் அண்ணன் ஜமீன் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார்.

“குற்றவாளியை கைது செய்யக்கோரி,’ ரஹ்மத் நிஷாவின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கைது செய்தாலொழிய பிணத்தை வாங்க மாட்டோம் என்று போராட்டமும் நடத்தினர். இதைத்தொடர்ந்து, மாஜி அமைச்சர் அன்வர் ராஜாவின் மகன், முஜ்பூர் ரஹ்மான் மீது 306 பிரிவின் படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் அன்வர் ராஜாவின் மகன் முஜ்பூர் ரஹ்மான்(33). இவரது மனைவி இறந்த பின், மனவேதனையுடன் காணப்பட்டார். இதற்கிடையில் ஜெயலலிதாவின் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக அன்வர்ராஜா சென்னை சென்றிருந்தார். வீட்டிலிருந்த, முஜ்பூர் ரஹ்மான் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.