Friday, May 6, 2011

கீழக்கரை அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர்களை நியமிக்க கோரிக்கை


கீழக்கரை, மே 6&
கீழக்கரை அரசு மருத்துவமனையில், பெண் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை அரசு மருத்துவமனையில் தினமும் 400க்கு அதிகமான நோயாளிகள், சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களில் 40 சதவீதம் பெண்கள். மருத்துவமனையில் பல்வேறு நவீன கருவிகள் உள்ளன. ரத்த அழுத்த பரிசோதனை செய்யும் கருவி இல்லை. எந்த நோயாக இருந்தாலும் முதலிம் ரத்த அழுத்த பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் இந்த மருத்துவமனையில் ஆண் டாக்டர்கள் 5 பேர் பணியில் உள்ளனர். பெண் டாக்டர் ஒருவர் கூட இல்லை. சிகிச்சைக்கு வரும் பெண்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். உடனடியாக இந்த மருத்துவமனையில் பெண் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என கீழக்கரை பகுதி மக்கள் கோரி வருகின்றனர்.
நேற்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த முத்துலட்சுமி கூறுகையில், “ஆண் டாக்டர்களிடம் ஒரு சில நோய்களின் குறைபாடுகளை முழுமையாக கூறுவதற்கு சங்கடமாக உள்ளது. பெண் டாக்டர்கள் என்றால் நோய் குறித்து சகஜமாக கூற முடியும். அவர்களும் பிரச்னைகளை எளிதில் புரிந்து கொள்வார்கள். எனவே இந்த மருத்துவமனையில் பெண் டாக்டர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.
அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி அங்காள ரெட்டி கூறுகையில், “இந்த அரசு மருத்துவமனைக்கு பெண் டாக்டர் ஒருவரை நியமிக்க வேண்டும் என சென்ற மாதம் நடந்த துறை ரீதியான கூட்டத்தின் போது வலியுறுத்தியுள்ளேன். விரைவில் பெண் டாக்டர் ஒருவர் நியமிக்கப்படுவார்“ என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.