Tuesday, May 17, 2011

500 பிளாட் பகுதி மசூதியில் திருட்டு

கீழக்கரை, மே 16: கீழக்கரை 500 பிளாட் பகுதியில் அமைந்துள்ள மசூதியில் சனிக்கிழமை இரவு ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டுள்ளன.


கீழக்கரை 500 பிளாட் பகுதியில் மசூதி உள்ளது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகத்தி்ல் உள்ள இந்த பள்ளியில் சனிக்கிழமை இரவு தொழுகை முடித்துவிட்டு, அந்த அமைப்பின் அப்பகுதி பொறுப்பாளர் அப்பாஸ், வழக்கம்போல அந்த மசூதியிலேயே தூங்கிவிட்டார். அருகில் செல்போனை வைத்திருந்தார்.

அதிகாலை வழிபாட்டிற்காக எழுந்து பார்த்த போது, செல்போனை காணவில்லை. உடனே தனது அமைப்பின் நிர்வாகிகளுடன் மற்ற பொருள்களை சரிபார்த்தபோது ரொக்கம் ரூ. 5ஆயிரம், ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள 3 மைக் செட்டுகள் ஆகியவையும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக கீழக்கரை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.