Wednesday, May 18, 2011

கீழக்கரையில் ஆமை வேகத்தில் பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு பணி ! பயணிகள் கடும் அவதி




கீழக்கரையில் ஆமை வேகத்தில் நடைபெறும் பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்க சிறப்பு கூட்டம் நடைபெற்றது. தலைவர் அமானுல்லா தலைமை வகித்தார்.
தீர்மானங்கள் குறித்து தங்கம் ராதா கிருஸ்ணன் பேசினார்.

கீழக்கரை பஸ் ஸ்டாண்டில் தரை தளம் அமைக்கும் பணிகள ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பயணிகள் ஊருக்கு வெளியே ஏர்வாடி முனை ரோட்டில் இறக்கி விடப்படுகின்றனர்.இதனால் பெரிதும் சிரமம் அடைகின்றனர்.நகருக்குள் ரூ50 வரை ஆட்டோவுக்கு கொடுத்து செல்ல வேண்டியுள்ளது.

பஸ்கள அனைத்தும் பஸ் ஸ்டாண்டு அருகிலுள்ள 40 அடி ரோடு வரை வந்து செல்ல வேண்டும் .டிரைவர்கள் ,கண்டக்டர்கள் தங்களது சொந்த தேவைகளுக்கு ,பொருள்கள் வாங்குவதற்கு மட்டும் ஊருக்குள் பஸ்களை ஓட்டி வருகின்றனர்.
எனவே அரசு நிர்வாகம் தலையிட்டு இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். என்பன பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.